F-22 ராணுவ விமானி ஒருவர், அந்த விமானத்தின் ஒரு பகுதி சுவாசக் காற்றை நச்சுக் காற்றாக மாற்றுகிறது, அது தனக்கு ஆபத்தை தருவதாக சொல்கிறார். இந்த காரணத்திற்காக விலை அதிகமான ஒரு விமானத்தை மாற்ற முடியுமா? சத்தம் போடாம இரு என்று அமெரிக்க ராணுவம் சொல்கிறது. அவரை ராணுவ ஒழுக்கத்தை மீறியதாக குற்றம் சாட்ட முயற்சி நடக்கிறது. ஒரு வழியாக ‘Whistleblower Act’ மூலம் அவரை இப்போதைக்கு காப்பாற்றியிருக்கிறார்கள். இதில் இருக்கும் ஒரு விஷயம் : விலை உயர்ந்த ராணுவ தளவாடத்திற்கு பதிலாக ஒரு மனித உயிரை விலை பேசலாம் என்ற எண்ணம். சமூகத்திற்கு முதலியம் அளிக்கும் சிந்தனை இது.
Category: இதழ்-70
ஆயிரம் தெய்வங்கள் – தேசீயஸ்
ஹீராக்ளீஸ் தெய்வத்திற்கு எவ்வளவு வலிமை உள்ளதோ அதே அளவு வலிமையும் வல்லமையும் உள்ள தேசீயஸ் ஏதேன்ஸின் ஹீராக்ளீஸ் என்று அழைக்கப்படுகிறான். தேசீயஸ் ஜனனத்தைப் பற்றிய மாறுபட்ட கதைகள் உண்டு.
பெண்கள், பெண்கள்!
“பின்னாடி பாத்தீங்களா அந்த மூணு வூடும் கட்டுனது எங்க அப்பாதான். அப்போல்லாம் நான் குட்டிப் பாப்பாவா இருந்தேன். அந்த வீட்டு மாமா மூணு பேருமே ஏரோப்ளேன் ஓடுமே அங்க வேலை பாக்கறாங்க. அந்த வீட்டுல கூட நான் வெளையாடியிருக்கேன்.”, நாங்கள் கேட்கிறோமா என்கிற அக்கறையின்றி அவள் சொல்லிக் கொண்டே போனாள்.
கைக்கு எட்டிய வானம் அல்லது காட்சிப்பிழை அல்லது ஜூஜூ தவளை சொன்னகதை
பதற்றமும் பயமும் அதிகரிக்க அம்மாவின் வசைகளுக்கு நடுவே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தான் என தெரியாமல் மீண்டும் உள்அறைக்கு சென்று அமர்ந்துகொண்டான். ஏன் பதற்றம் அதிகரிக்கிறது என சட்டென புரியாமல் போனது. தன்னையறியாமல் அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். புத்தகத்தை விரித்ததும் அதில் தெரிந்த எழுத்துக்கள் நீரில் ஓடும் மலர்கள் போல ஒடியதில் அவன் கண்கள் கண்ணீரில் மிதப்பதை உணர்ந்தவனாக லேசான கோணல் வாயுடன் கவனித்தான்.
24 மணி நேரம்
ஒரு 24 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளிலும் உள்ள மக்களின் வாழ்வை பதிவு செய்யும் ஒரு படத் தொகுப்பு இங்கே.
வாசகர் மறுவினை
பிரபஞ்சம் தொடர்பாக நான் கொண்டிருந்த எண்ணக்கரு, தெளிவாகவும் கோவையாகவும் வாசிப்பதற்கு எளிதாகவும் விளக்கி எழுதப்பட்டிருப்பதனைக் காண்கையில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
அர்னல்டூர் – ஐஸ்லேன்ட் குற்றப் புனைவு எழுத்தாளர்
ஐஸ்லேன்ட் என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன? எங்கும் பனி படர்ந்த பிரதேசம், கடுங் குளிர், மக்கள் தொகையும் குறைவாக உள்ளதால் அதன் தனிமையும் வெறுமையுமே நம் நினைவுக்கு வருகின்றன. மற்றபடி அந்நாட்டை பற்றி நமக்கு அதிகம் தெரியாது, அந்த நாட்டு இலக்கியம் குறித்தும் நாம் பெரிய அளவில் அறிவதில்லை. ஆனால் இந்நாட்டிற்கு நீண்ட இலக்கியப் பாரம்பரியம் உண்டு.
குமரி மாவட்டச் சான்றோர் சமூக வரலாற்றில் ஆராயப்பட வேண்டியவை
கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மார்த்தாண்ட வர்மன் வேணாட்டு (திருவிதாங்கோடு) அரசாட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பு நிகழ்ந்த பூசல்களை விவரிக்கின்ற ஒட்டக்காரன் கதையில் மாறச்சன், அனந்த பத்மநாபன் என்ற சான்றோர் குல வீரர்கள் முதன்மையான இடம்பெறுகின்றனர். அதேபோன்று மார்த்தாண்ட வர்மனுக்கு எதிரிகளான பப்புத் தம்பி, ராமன் தம்பி ஆகியோருக்குப் படைத்துணை புரிந்தவர்கள் வலங்கைச் சான்றோர் என்று தம்பிமார் கதைப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் வலங்கை உய்யக்கொண்ட ரவிகுல க்ஷத்திரியர்கள் என்று அழைத்துக்கொண்ட சான்றோர் குலப் பிரிவினர் ஆவர்.
மூப்பு
காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறதுதான். நான் பார்த்து பழகிய, பழகிப் போன உருவங்களில் மாற்றம் வரும்போது அதை சட்டென்று எதிர்கொள்ள முடியாமல் திணறித்தான் போகிறேன். வாத்தியாரைத் தொடர்ந்து என்னைத் திணறவைத்தது, எழுத்தாளர் ஜெயகாந்தனின் தோற்றம்.
அமெரிக்க-பாகிஸ்தான் உறவு – எங்கே செல்லும் இந்தப்பாதை?
சொல்லப்போனால், நல்ல அரசாக இருப்பதற்காக அல்ல, பயங்கரவாத அரசாக இருக்காமலிருக்க தொடர்ந்து பில்லியன் கணக்கில் டாலர்களைக்கொட்டு என்று மிரட்டி கப்பம் வசூலிக்கும் நாடாக பாகிஸ்தான் ஆகியிருக்கிறது. இது உண்மையில் அமெரிக்க ஆதிக்கத்தின் வீழ்ச்சியையே சுட்டுகிறது. அமெரிக்காவிற்கு எதிராக பல சக்திகளைத் திரட்டி அமெரிக்காவைத் தடுமாற்றத்திலேயே வைத்திருப்பதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று வருகிறதென்றால் அதற்குக்காரணம் கடந்த பத்தாண்டுகளில் அடிவாங்கியிருக்கும் அமெரிக்கப்பொருளாதாரமும், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களால் அயர்ச்சியடைந்திருக்கும் அமெரிக்க மனோநிலையும்தான்.
சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 13
தமிழில் சதகம் எனும் இலக்கிய வகை எழுவதற்குச் சில நூற்றாண்டுகள் முன்னரே, வடமொழியில் சதகம் எனும் இலக்கிய வகை தோன்றி இருந்தது. ‘வடமொழியில் உள்ள சதகங்கள் தர்மம், காமம், மோட்சம் ஆகிய பொருட்களை விலக்கி, நூறு சுலோகங்களால் தனித்தனியே அமைக்கப்பட்டவை. தர்மத்தைக் கோரும் சதகங்கள் நீதி சதகங்கள் என்றும் காமத்தைக் கூறும் சதகங்கள் சிருங்கார சதகங்கள் என்றும் மோட்சத்தைக் கூறும் சதகங்கள் வைராக்கிய சதகங்கள் என்றும் பெயர் பெற்று விளங்குகின்றன. பெருங்கவிஞன் பர்த்ருஹரி எழுதிய நீதி சதகமும் சிருங்கார சதகமும் வைராக்கிய சதகமும் கி.பி. ஆறாம் நூற்றாண்டாகும்.
பூனை குறுக்கே நடந்தால்… : மேக்னெட்டோரிஸப்ஷன்
பூனை குறுக்கே நடந்தால் அபசகுனம். வடக்கே தலை வைத்து படுத்தால் உடல் நலத்திற்கு கேடு. இவ்விரண்டு சமூக நம்பிக்கைகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். எனக்களிக்கப்பட்ட இவற்றின் அன்றாட ’விளக்கங்களும்’, சார்ந்த என் அறிவியல் தேடல்களையும், புரிதல்களையும் அனுபவக்கல்வி தடவி இக்கட்டுரையில் விவரிப்போம்.
அணு ஆற்றலின் அரசியல் – இறுதிப் பகுதி
ஃபுகுஷீமா பேரிடர் ஜப்பானிய மக்களுக்கு அணு ஆற்றலை நம்பியிருக்கும் தம் நிலை , கொள்கை உருவாக்கத்தில் அரசாங்கத்தின் ஆதிக்கம், இன்னும் பல விஷயங்களிலும் நன்மை தீமைகளை ஆராய்ந்து சிந்திக்க ஒரு “வாய்ப்பை”க் கொடுத்திருக்கிறது. இன்னொரு வகையில் சொன்னால், ஃபுகுஷீமா பேரிடர் போன்ற பெருநாசத்துக்குக் காரணமான பழைய அமைப்பைத் தொடர்வதா, அல்லது முன்னேற உதவும் ஒரு புது அமைப்புக்கு மாறிச் செல்வதா என்ற முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் ஜப்பானை நிறுத்தியுள்ளது.
ஜிப் லாக்கில் அரை நாள்
மண்புழுவை தெய்வம் போல மதிக்கவேண்டும் என்பது தெரியவில்லை. அதை உபாதை செய்யக் கூடாது என்று பெரியவர்கள் அடித்துச் சொல்லிக் கொடுப்பார்கள். எந்தப் பூச்சியையும் கொல்லக் கூடாது என்பதும் வீட்டில் சொல்லித் தருவார்கள். பல்லிகள் வீடெங்கும் உலா வரும். சமையல் உள்ளில் மட்டும் அவற்றை உலாவ விடுவதில்லை. சாமி உள் எனப்படும் பூஜை உள்ளில் பல்லிகளுக்கு பூரண சுதந்திரம். அங்கு கரப்புகள் அவ்வப்போது நடமாடும் என்பதால் இருக்கலாம். நம் ஊர் சாமிகளுக்கும் கரப்புகளுக்கும் ஏதோ கரிசனம் கலந்த உறவு.
‘சாதாரண மனிதன்’ – நூல் வெளியீடு
சென்ற வாரம் மே முதல் தேதி மணிக்கொடி எழுத்தாளர் காலம்சென்ற திரு சிட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஆங்கில வடிவம் வெளியிடப்பட்டது. திரு நரசய்யா அவர்கள் தமிழில் எழுதிய சாதாரண மனிதன் என்ற நூலை சிட்டியின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.
கவிதைகள்
அந்த வளையம் ,
அழுத்தமாகத் தாழிடத்
தோதாக -தன்னை
இழுத்துப் பிடித்துக்கொள்ளும்
விரல்களின்
ஸ்பரிசத்துக்காகவே
காற்றில் அசைந்து அசைந்து
முனகுகிறது.
பூண்டு – ஒரு கவிதை
சொல்ஜாலம் அதிகம் இல்லாமல், சொல்லால் மனிதர் எப்படி விடுவிக்கப்பட முடியும், எதார்த்தம் சூழலில் எத்தனை கடுமையாக இருந்தாலும் ஒரு சொல் ஜாலம் ஏதோ செய்து விடுவிப்பைக் கண நேரமாவது கொணரும் என்று சொல்லும் கவிதை. இக்கவிதையை எழுதியவ்ர் ஒரு பஞ்சாபி. அதை வாசிப்பவர் ஓவியம்/ கலை ஆகியவற்றைப் பற்றி “பூண்டு – ஒரு கவிதை”