வரலாற்றோடு ஒரு ஒப்பந்தம்: வாக்னரும் நானும்

இசை வரலாறை வாக்னருக்கு முன் வாக்னருக்குப் பின் எனப் பிரித்ததில் பீத்தாவன் போல முதன்மையான சிம்மாசனத்தில் இசை உலகம் அவரை வைத்துள்ளது. அதே சமயம், இஸ்ரேல் நாட்டில் அவரது இசையை ஒளிபரப்புவதற்கு தடை உள்ளது. சொல்லப்போனால் யூத இனத்தினர் அனைவருக்கும் வாக்னர் மிகப் பெரிய எதிரி. அவரது இசையை வீட்டில் கேட்பதற்கு கூட பல யூத குடும்பங்கள் அனுமதிப்பதில்லை. அதிகமாக ரசிக்கப்படும் இசையைக் கொடுத்த அவரை அதே அளவு மக்கள் வெறுக்கக் காரணம் என்ன?

ஹோலி – இந்தியாவின் வண்ணங்கள்

இந்தியாவின் பன்மைத் தன்மையை, கலாச்சார மேன்மையை இன்றளவும் வலியுறுத்தி வரும் ஹோலி பண்டிகையின் புகைப்படத் தொகுப்பு இங்கே.

மழை விளையாடும் குன்று

படைப்பின் அடிப்படை இயல்பு உணர்ச்சி. ஒட்டுமொத்த மானுட வாழ்வின் உணர்ச்சி அது. ஒரு காட்சியை நம்பகத்தன்மையோடு உருவாக்கி, அதன் பின்னணியில் அந்த உணர்ச்சியைப் படியவைக்கிறார்கள் படைப்பாளிகள். கிட்டத்தட்ட ஒரு கிணற்றைத் தோண்டி, அதில் ஊற்றைச் சுரக்கவைப்பதுபோல. பொருத்தமான ஒரு படிமத்துக்காக வேட்கைகொண்ட விலங்குபோல அவர்கள் மனம் அலைந்தபடியே இருக்கிறது.

ஆயிரம் தெய்வங்கள் – ஹேடஸின் நரக சாம்ராஜ்ஜியம்

இறந்தவர்களின் ஆன்மாக்கள் ஹேடஸ் நரக சாம்ராஜ்ஜியத்தில் நீதி விசாரணைக்கு ஆளாகின்றன. மூன்று நீதிபதிகள் கொண்ட டிரிப்யூனல் – அதாவது மைனாஸ், அயாக்கஸ், ராடமைந்தஸ் ஆகிய மூவரும் தீர்ப்பு வழங்கும் உரிமை உள்ளவர்கள். வரலாற்றில் ராடமைந்தஸ் பெயரில் கோட் ஆப் க்ரீட்டன் லாஸ் என்று புராதன கிரேக்க நகர அரசுகளில் நீதி பரிபாலனச் சட்டங்களாகச் செயல்பட்டன.

தானம்

நாம் விளையாடித் தான் பார்க்க வேண்டும் வாழ்க்கை விளையாட்டு. பேச வைக்க வேண்டும். சிரிக்க வைக்கவேண்டும். இதெல்லாம் எதற்கு என்பவர்களுக்கு அதெல்லாம் எதற்கு என்பது தான் என் பதில். இப்படிப் பட்டவர்களை தொடாமல் விட்டுச் செல்வது யாருக்கும் நல்லதில்லை. நாமாக முந்திக் கொண்டு எங்கோ திறந்திருக்கும் துவராத்தைக் கண்டு பிடித்து கசிவுண்டாக்க்கி கடலைக் கொண்டு வந்து விட வேண்டும்.

என்று தணியும் இந்த எண்ணை தாகம்? – இறுதிப் பகுதி

பல நாடுகளிலும், ஆற்றல் சேமிப்பு முயற்சிகள், வேறு வழியின்றி மேற்கொள்ளப் படுகின்றன. இதில், முழு மனதுடன், எந்த அரசாங்கமும் இயங்குவதாகச் செய்தி இல்லை. இதற்கு காரணம், தேவையான சக்தி உற்பத்திக்காக தடுமாறும் அரசாங்கம் ஒவ்வொன்றும், ஏதோ ஒரு வித்ததில் சக்தி விரயத்தால் பயனடைகிறது. பெட்ரோல் விலை உயர்வதால், விற்பனை வரி மூலம் அரசாங்கம் பயனடைகிறது. குடிமக்கள் கட்டுப்பாடின்றி சக்தியை வீணடித்தால், சக்தி கட்டணத்திலோ, அல்லது வரியிலோ அரசாங்கம் பயனடைகிறது.

அணு ஆற்றலின் அரசியல்

ஃபூகுஷீமா அணு உலை விபத்து நடந்து ஓராண்டு இந்த வாரம் பூர்த்தியாகிறது. இக்கட்டத்தில் இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது : நாசமடைந்த அணு உலைகள் காற்று, நிலம், நிலநீர் மற்றும் கடல் நீரில் கதிர்வீச்சைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அணு உலை எரிபொருள் மேலும் உருகுவதைத் தடுப்பதற்காக டெப்கோ குளிர்விக்கும் அமைப்புகளைச் சீர்திருத்தி, அணு உலைகளைச் சுற்றிப் பாதுகாக்கும் புதிய தடுப்புச் சுவர்களை எழுப்பி விட்டதென்பது உண்மைதான். ஆனால், இந்தக் குளிர்விக்கும் அமைப்புகளும் தடுப்புச் சுவர்களும் எளிதில் பழுதடையக் கூடியவையாகவும் பல குறைகளோடும் இருப்பதால் அவற்றால் கதிர்வீச்சு வெளியே கசிவதையும் சரிவரத் தடுக்க முடியவில்லை

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 9

தமிழ் இலக்கிய வளங்களின் உச்சங்களில் ஒன்று கடை திறப்பு. போருக்குச் சென்று, அமர் முடித்து, வெற்றிக் களிப்பில் வீடு திரும்புவர் வீரர்கள். நாட்டு மக்கள் வழி நெடுக அவ்வீரர்களைக் கொண்டாடுவர். ஆனால் பிரிவுத் துயர் உழன்ற இல்லக் கிழத்திகள், உள்ளே ஆர்வத்தோடும் வெளியே சினத்தோடும் வீட்டுக் கதவுகளைத் தாழித்துக் கொள்கின்றனர். அவர்கள் ஊடலைத் தீர்க்கவும் அடித்த கதவங்களைத் திறக்க வேண்டுவதுமான பாடல்கள் கொண்ட பகுதி கடை திறப்பு. கடை திறப்பு என்பதை Shop Opening என்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது. 54 பாடல்கள் இப்பிரிவில். காமம், கற்பனை, உவமை, சந்தம், கவிச்சுவை செறிந்தவை.

கோலின் டெக்ஸ்டர் – ‘இன்ஸ்பெக்டர் மோர்ஸ்’

இன்ஸ்பெக்டர் மோர்ஸ் தொடரில் உள்ள சுவையான நகைமுரண் என்னவென்றால் டெக்ஸ்டரின் பாத்திரப்படைப்பே நாவல்களின் மையக்கருவிலிருந்து நம் கவனத்தைத் திசைதிருப்பிவிடும். அந்த அளவுக்கு மோர்ஸ் இந்த தொடர் முழுவதும் வியாபித்துள்ளார். மோர்ஸ் எப்படிப்பட்ட ஆசாமி? இதை ஒற்றை வரியில் சொல்ல முடியாது. இன்ஸ்பெக்டர் மோர்ஸ் கதாபாத்திரத்தைப் பெரும்பாலும் தன்னையொத்த விருப்பு வெறுப்புகள், குணநலன்கள் கொண்டவராகவே டெக்ஸ்டர் சித்தரித்திருக்கிறார்.

வேசி வீட்டுத் திண்ணை

வேசி ஒவ்வொருவரின் பரிசுப்பொருளையும் பார்த்தாள். ரமணசிங்கா கையிலிருந்த இலவங்க எண்ணெயின் மணம் அந்த இடம் முழுவதும் வீசியது. வேசி எண்ணெய் வாங்கி நுகர்ந்து பார்த்தாள். காரம் கொஞ்சம் இனிப்பும் கலந்த மணம் இருந்தது. அன்றைய தினம் குணசேனா தேர்வு செய்யப்பட்டார். மற்றவர்கள் பரிசுப்பொருட்களை வைத்துவிட்டு அவரவர் வீடு நோக்கி சென்றனர்.

கடற்குதிரை

பழக்கூழாலோ,கண்ணாடிக் குழம்பை ஊதியோ வடிவமைத்த
சதுரங்கக் குதிரைகளா?
குமுறும் ஆழியில்
பக்கவாட்டில் மட்டுமே தெரியும்
தன்னிரக்கக் கோமாளிகள்.

“ரிக்யு” – தேனீரின் பாதையில் இரு கலைஞர்கள்

தனித்துவம் வாய்ந்த ஜப்பானின் உருவாக்கக் காலகட்டத்தின் முக்கிய ஆளுமைகளான ரிக்யுவுக்கும், ஹிதேயோஷிக்கும் இடையேயான சிக்கலான உறவும் இதனாலேயே சரித்திர முக்கியத்துவம் பெறுகின்றன. அதைச் சித்தரிக்கும் அதே அழகியல் செழுமையுள்ள ஒரு திரைப்படம் முக்கியமான ஜப்பானிய இயக்குனர் ஹிரோஷி தேஷிகாஹராவின் “ரிக்யு”.

மகரந்தம்

நன்கு பயின்ற, கல்வியிலும் தொழிலிலும் வெற்றி கண்ட சீன இளைஞர்கள் நாட்டை விட்டு நீங்கி மேற்குக்கு குடி பெயர்வதையே நாடுகிறார்கள். ஏன்? அவர்களைப் பொறுத்தவரை சீன அரசாங்கத்தை நம்பி எதையும் செய்துவிட முடியாது. தடாலடியாக எதையாவது செய்து அவர்கள் எதிர்காலத்தை சீன அரசு குழியில் தள்ளிவிடும் என்று நினைக்கிறார்கள்.