அன்புள்ள நண்பர்களுக்கு, லலிதா ராம் மிருதங்க மேதை பழநி சுப்ரமணிய பிள்ளை குறித்து எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற இசை வரலாற்றுப் புத்தகம் டிசம்பர் மாதத்தில் சொல்வனம் வெளியீடாக வெளிவரவிருக்கிறது என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். துருவ நட்சத்திரம் புத்தகத்தின் வெளியீட்டு விழா 11.12.2011 அன்று சென்னை ராகசுதா “துருவநட்சத்திரம் – புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்”
Category: இதழ்-60
ஆயிரம் தெய்வங்கள் – 16
ஸீயஸ் லெட்டாவுக்கு வழங்கிய தெய்வக்குழந்தையே அப்போல்லோ. கர்ப்பவதியான லேட்டாவுக்கு ஹீரா வழங்கிய துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. பூமியில் குழந்தையை விழச்செய்ய ஒரு துளி இடத்தைக்கூட ஹீரா வழங்கவில்லை. பல இடங்களில் அலைந்து திரிந்து கடைசியாக குவாயில் தீவில் தலைமறைவாய் வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 22
முதலாம் உலகப் போருக்குப்பின்பு ஜெர்மன் நாட்டில் ‘ஓடொ டிக்ஸ்’, ‘ஜார்ஜ் க்ரோட்ஸ்’ (Otto Dix, George Grosz) என்ற இரு ஓவியர்களால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இதை எக்ஸ்ப்ரெஷன் (Experssion) பாணியின் போலி (Pseudo- Expressionist) என்று அடையாளப் படுத்தினர் அன்றையக் கலை திறனாய்வாளர். கடுமையான சமூக விமர்சனம், குறை கூறி வெறுக்கும் அணுகு முறை, தத்துவார்த்த நிலைப்பாடு, இவற்றுடன் தத்ரூபப் பாணி கலந்த ஒரு புதிய உத்தியாக அவர்கள் படைப்புகள் அமைந்தன. இந்த இயக்கத்தில் இரண்டு முக்கிய வழி அணுகல்கள் கவனம் பெற்றன.
மகரந்தம்
பணம் பாதாளம் வரை பாயும் என்று சொன்னவர்கள் அதை சக்தியைக் குறிக்கச் சொல்லவில்லை, அது தொடர்ந்து மனிதரை எத்திசையில் அனுப்பும் என்று குறித்தார்கள் போலிருக்கிறது. ஏதோ ரஷ்யா, சீனாவின் முதலியம்தான் கம்யூனிஸ்டு என்று பெயர் தாங்கிய குற்றக் கும்பல்களின் விளையாட்டரங்கு என்று நினைக்கத் தேவையில்லை. உலகெங்கும் இதே கதைதான்.
ROSA – அறிவியல் புனைவு குறும்படம்
ஒரு அற்புதமான குறும்படம். தவறவிடக் கூடாதது.
மை விலேஜ் இஸ் பம்பை – விவரணப்படம்
பெருநகரங்களில் வசிப்பவரா நீங்கள்? அரக்கப் பறக்க வேலைக்குச் செல்பவரா? நெரிசல் ஏற்படுத்தும் கூட்டத்துடன் பேருந்துகளிலும், ரயிலிலும் பயணம் செய்பவரா? சுற்றிப் பார்க்க மட்டுமே ஓரிரு தினங்கள் வருபவராக இருந்தாலும் பரவாயில்லை. நிச்சயம் இதுபோன்ற விளம்பரங்கள் உங்களின் கவனத்திற்கு வந்திருக்கும். ஒரு மின்னல் பார்வையில் அந்த கருப்பு வெள்ளை விளம்பர ஒட்டிகளை கடந்து சென்றிருப்பீர்கள்!
மொழியின் விதை
மூளையில் மொழி மையங்கள் இருப்பது உறுதியானாலும், மூளை என்பது உடல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும், கட்டளைகளைக் கடத்தும் கட்டுப்பாட்டு மையம் மட்டும் தான். மூளையின் செயல்க்கட்டுப்பாட்டு மையங்களைத் தூண்டும் காரணிகள் அதற்கான புரதங்களே. புரதங்களோ மரபணுக்களால் குறிக்கப்படுபவை. மரபணுக்களே உயிரியல் பண்புகளைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் அடிப்படை அலகுகள். அப்படியானால் மூளையின் மொழிமையங்களின் வளர்ச்சிக்கும், தூண்டுதலுக்கும், இணைப்புக்கும், செயல்பாடுகளுக்கும் காரணமான மரபணுக்கள் எவை?
சீனாவின் நிஜமான மக்கள் புரட்சி
பத்திரிகை சுதந்திரம் இல்லாத சமூகத்தில், பாதிக்கப்பட்டவர்கள் கவனம் பெறுவது கடினம். நேற்று நடந்ததையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்களேன்: நான் CNN-க்குத் தொலைபேசியில் நேர்முகம் தந்திருந்தேன். அதன்பின் திடீரென்று, CNN ஒளிபரப்பு ஓரிரு நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. என் தொலைகாட்சிப் பெட்டி முழுமையாக மௌனமானது. எனக்கு அது முதல் அனுபவம். கடவுளே, நான் பேட்டி கொடுத்ததால்தான் இப்படி நடக்கிறதா, என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்! என்று நான் நினைத்தேன். எந்த ஒரு நாட்டில் இப்படி நடக்கும்? ஒருவேளை க்யூபா, வட கொரியா, சீனா. ஆனால் அவர்களுக்கு என்ன வேண்டும், அவர்கள் எதைப் பார்த்து பயப்படுகிறார்கள்?
பேராலயம்
கருவிழிகள் ரெம்ப வெள்ளையா இருக்கும், கட்டுப்படுத்த முடியாததப்போலவும், நிறுத்த முடியாததப்போலவும் தன்னிச்சையா சுத்திகிட்டிருப்பதப் போலிருக்கும். அறுவருப்பா! அவனப் பார்த்துகிட்டேயிருந்தப்ப, அவனுடைய இடது கருவிழி அவன் மூக்க நோக்கி நகர்ந்துச்சு, இன்னொண்ணு அப்படியே நின்ன இடத்திலேயே நிக்க முயற்சி செய்துச்சு, முயற்சி மட்டும்தான், ஏண்ணா அதுவும் தெரியாம, முடியாம அலைஞ்சுகிட்டிருந்துச்சு.
பேட்மேன் பேல்பூரி
தமிழர்களுடைய குணம் பொட்டுக்கடலை, வேர்கடலை, பொரியை பார்த்தால் உடனே அதில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொள்வது. ஆனால் பேட்மேன் கடையில் அப்படி நாம் எடுத்துப் போட முடியாது. உடனே பேல்பூரியைக் கலக்கும் கரண்டியால் அடித்துவிடுவார். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதைப் போல அவரிடம் தாரளமாகக் கடன் வைக்கலாம், மறுநாள் மறந்துவிடுவார்.
முத்தொள்ளாயிரத்தில் யானைகள்
யானைகள் மெதுவாகவே நகருமென்றாலும் அவற்றுக்கான பிரத்யேகப் பயன்பாடுகள் இருந்தன. ஒரு யானையின் மேல் ஏழு முதல் 10 வீரர்கள் வரை ஏறிப் போர் புரிந்தார்களாம். யானையால் மட்டுமே அத்தனை மனிதர்களைச் சுமக்க முடியும். உயரமான விலங்கு என்பதால் களப்போரில் யானை மேலிருந்து தெளிவாக அம்பு எறிய முடியும். ஆனால் இவற்றைவிட முக்கியமானது, பகைவர்களின் மதிற் சுவர்களை உடைப்பது.
என் நண்பர் ஆத்மாநாம் – ஸ்டெல்லா புரூஸ்
‘என் நண்பர் ஆத்மாநாம்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இக்கட்டுரைகளில் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு விதத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரணம் வந்து போகிறது. தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை எந்தப் பாசாங்கும் இல்லாமல், நேரடியாகச் சொல்லிச் செல்லும் எளிமையும், ஆன்மிக நாட்டமும், தீவிர இலக்கிய வாசிப்பும், வெகுஜன இலக்கியவாதிகளிடம் நாம் சற்றும் எதிர்பார்க்காத விஷயங்கள். ஒருவேளை ஸ்டெல்லா புரூஸ் வெகுஜன இதழ்கள் பக்கம் செல்லாமல், தீவிர இலக்கியம் பக்கமே நின்றிருந்தால், தமிழுக்கு ஒரு சிறந்த இலக்கியவாதி கிடைத்திருப்பாரோ என எண்ண வைக்கிறது இப்புத்தகம்.
கைகழுவப்பட்டவன்
பாவம் டாக்டர் இன்னாசு. மருத்துவ விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் இவரா பைத்தியம்? வெளியில் இருக்கும் படித்த பெரிய டாக்டர்கள்தான் பைத்தியம், என்ற உறுதியான எண்ணம் தெரசாவிற்கு ஏற்பட்டது. அதே நேரம் டாக்டரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று வந்த ஒரு டாக்டரே இவரைக் கேலி பேசியபோது கிட்டத்தட்ட அவர் கழுத்தை நெறிக்கவே செய்து விட்டார் டாக்டர் இன்னாசு; இரண்டு மூன்று காவலாளிகள் சேர்ந்து அவரை எப்படியோ பாடுபட்டு அடக்கினார்கள்.
இரண்டு குளங்கள் மற்றும் சில கவிதைகள்
பிரக்ஞையற்ற பொழுதுகளில்
பறந்து போகிறது
ஒரு சொல்
அல்லது
ஒரு செய்கை.
சிறகால் வருடலாம்
நகங்கொண்டும் கீறலாமெனில்
கூடுகிறது கவனம்
பிரசவித்த பொறுப்பிற்காக.
நேஷனல் ஜியோகரபிக் புகைப்படப் போட்டி
பல்வேறு இயற்கை, மனிதர்கள், இடங்களை அழகிய முறையில் காட்சிப்படுத்தும் புகைப்படங்கள். தவறவிடக் கூடாதவை. அவற்றை இங்கே பார்க்கலாம்.
சொல்வனம் 2011 – புத்தக வெளியீடுகள்
லலிதா ராம் மிருதங்க மேதை பழநி சுப்ரமணிய பிள்ளை குறித்து எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற இசை வரலாற்றுப் புத்தகமும், சுகா எழுதிய ‘தாயார் சன்னதி’ நூலின் இரண்டாம் பதிப்பும் டிசம்பர் மாதத்தில் சொல்வனம் வெளியீடுகளாக வெளிவரக்கின்றன என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
நெரிசல்
தினமும் பல்கிப்பெருகும் போக்குவரத்தால்
பந்தயமாய் மருவிய பயணத்தில்
நொந்து வெந்து புழுவாய் ஊர்கையில்
ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறான்..,
சீனா: பலவித இடப்பெயர்வுகள்
1986களில், கிராமங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி பருவம் சார்ந்த இடப்பெயர்வுகள் 80% வரை இருந்திருக்கிறது. மற்ற இடப்பெயர்வுகள் 47%. இரண்டு பிரிவினரையும் சேர்ந்துப் பார்த்தால் தற்காலிகமாக இடம்பெயர்ந்தோர் தான் மிக அதிகம். முறைப்படுத்தப்பட்ட இடம்பெயர்வுச் சட்டங்கள் இல்லாதிருந்ததாலும் நகரமயம் இன்னமும் சூடு பிடிக்காதிருந்ததாலும் அன்றைக்கு நகரத்திற்கு வேண்டியிருந்த தொழிலாளர்கள் குறைவு. அதனால், கிராமங்களிலிருந்து நகருக்கு இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அப்போதெல்லாம் மிகக் குறைவு. அத்துடன் அன்றெல்லாம், நகருக்கு வருவோர் நகரைவிட்டு வெளியாகிறவர்களை விட அதிக வயதுடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
பேரிசையின் பின்னணி: தவில் கண்ட மாற்றங்கள்
நாஞ்சில் வீட்டுத் திருமணத்தைப் பொறுத்தவரை, எழுத்தாளர்கள் ஒருவரோடு ஒருவர் அளவளாவதற்கான வாய்ப்பை தவில் சத்தம் கெடுத்து விட்டது என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆகவே ஒவ்வொருவராக வெளியேறி வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுடன் உரையாடலில் பங்கெடுத்தாலும், என் காதுகள் என்னை அறியாமல் மண்டபத்திற்கு உள்ளே சென்று கொண்டிருந்தன. அதே சமயத்தில் தவில் ஒலி குறித்த எண்ணமும் வளர்ந்தது. தவில் மிகு ஒலியை எழுப்பும் ஒரு வாத்தியம். ஒரு காலத்தில் கோயிலில் பூசை தொடங்குவதையும் சுவாமி புறப்பாடு தொடங்குவதையும் மக்களுக்கு அறிவிக்க அதற்கு ஒரு தேவை இருந்தது. “தொம் தொம்” என்று அலாரிப்புடன் மல்லாரிக்காக தவில் வாசிக்கும் போது, அது இசை இரசிகனிடம் ஏற்படுத்தும் உணர்வுகளை இன்னவென்று சொல்லி விட முடியாது. மலைக்கோட்டை பஞ்சாமி என்று அழைக்கப்படும் பஞ்சாபகேசபிள்ளை, நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நாச்சியார்கோயில் இராகவபிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேசன் என கடந்த காலத்து வித்வான்கள் தொடங்கி, இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் வலையபட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம், ஹரித்துவாரமங்கலம் பழனிவேல், திருவாழபுத்தூர் கலியமூர்த்தி, திருப்புங்கூர் முத்துக்குமாரசாமி என மாபெரும் தவில் கலைஞர்கள் வரிசை நீள்கிறது. ஆனால் இவர்கள் எல்லோருடைய வாசிப்பையும் தொடர்ந்து கேட்கும் ஒரு இரசிகன், காலந்தோறும் தவில் வாத்தியத்தின் சத்தத்திலும் வாசிப்பிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் புரிந்து கொள்வான்.
நிழல்குத்தில் நுழைந்த பனைமரம்
கதைக்குப் பொருத்தமான சூழலையும், பின்புலத்தையும் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கவில்லை. அறுபது வருடங்களுக்கு முந்தைய உள்கிராமத்தையும், சுற்றுப்புறங்களையும் மறு உருவாக்கம் செய்யவேண்டியிருந்தது. நெடிதுயர்ந்த கரும்பனைகளையும், ஓங்கியுயர்ந்த பாறைக்கூட்டங்களையும் தேடிப் பயணம் செய்தோம். ஆனால், மாற்றத்தி அடையாளங்களாகவும், நவீனமயத்தின் அடையாளங்களாகவும் மாறிய தார் ரோடுகளும், மின்கம்பிகளும், சிமெண்டு போட்ட குடியிருப்புகளும் பனைமரத்தை எரிபொருளாக்கிய செங்கற்சூளைகளுமாகக் கன்னியாகுமரி மாவட்டம் முற்றிலும் மாறிப்போயிருப்பதை நாங்கள் ஏமாற்றத்துடன் புரிந்துகொண்டோம்.
அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘நிழல்குத்து’
1940-களில் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் இந்த விசித்திரமான வழக்கம் இருந்தது. மரணதண்டனை விதிக்கப்பட்ட எல்லோரின் தண்டனையையும் மகாராஜா ரத்து செய்துவிடுவார். அனால் அந்த செய்தி வரும் முன் குற்றவாளி தூக்கிலிடப்பட்டிருப்பான். மகாராஜா மரணதண்டனையை ரத்து செய்வார் என்று எல்லோருக்கும் தெரியும். அதைப்போல, அந்த பத்திரம் வரும் முன் குற்றவாளியைத் தூக்கில் ஏற்றி விடுவார்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும். தெரிந்தே நடத்தப்படும் நாடகம் இது.
காந்திமதியின் தாயார்
அம்மாவின் சமையலை ஊரே மெச்சினாலும் அம்மா என்னவோ ஆச்சியின் சமையலுக்கு முன்னால் தன்னுடையது ஒன்றுமேயில்லை என்பாள். அவளுக்கு தன் தாயார் வைக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன பதார்த்தமும் அவ்வளவு ருசியை அளித்தவை. ‘வெறும் புளித்தண்ணி வச்சாலும் எங்க அம்ம கைமணமே மணம்’. மகள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் போது, அவளுக்குப் பிடித்த ’கத்திரிக்காய் கொத்சு’ செய்து, சோற்றுடன் பிசைந்து சின்னக் குழந்தைக்கு ஊட்டிவிடுவது போல் ஆசைஆசையாக ஆச்சி ஊட்டி விட்டதைப் பார்க்க முடியாமல் அந்த இடத்தை விட்டுத் தள்ளி வந்து அழுதேன்.
பர்வீன் சுல்தானாவின் ஆட்டோகிராஃப்
1976-ஆம் வருடம் பிப்ரவரி மாதம். ஹிந்துஸ்தானி சங்கீத வித்வான் பர்வீன் சுல்தானாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. சென்னை சங்கீத ரசிகர்களின் மத்தியில் அப்போது பர்வீன் சுல்தானா மிகவும் பிரபலமாக இருந்தார். எனக்கும் பர்வீன் சுல்தானாவின் இசைமேல் பெரும் மோகமே இருந்தது. ஒருவித போதையை தந்திருக்கிறது. அவரின் ஆலாபனைகள். இரவில் அறை விளக்கை அணைத்துவிட்டு ப்ளேயரில் பர்வீன் சுல்தானாவின் இசைத்தட்டை ஒலிக்கவிட்டு இருளில் கிடந்த கணங்கள் ஒலியின் அரூப யாத்திரைப் பிரவாகமாய் என்னை ஏந்திச் சென்றிருக்கிறது.
மூன்று கவிதைகள்
என் கவிதை ஒன்று
இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில்
கிடைத்தது
கடற்கரையில்
நானும் ஞானக்கூத்தனும்
பேசிக்கொண்டிருந்தோம்
சுண்டல் வாங்கிப் பிரித்தால்
காகிதத்தில் ஒரு கோடு
ஆத்மாநாம் எனும் வாசகங்கள்
என் தொஸ்தாயெவ்ஸ்கி
தொஸ்தாயெவ்ஸ்கி ஒரு வாசகனுக்கு மிக முக்கியமாக இளைஞனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார். அவரிடம் நீங்கள் உங்களின் இயற்பியல் சந்தேகங்களிலிருந்து உங்கள் காதலர் உங்களிடம் இரண்டு நாட்களாக பேசவில்லை என்பது வரை எதை குறித்தும் புகைபிடித்துக் கொண்டோ, மதுவகத்தில் அமர்ந்துகொண்டோ பேசலாம். உடனே டால்ஸ்டாய் போல கையை உயர்த்திக்கொண்டு உங்களுக்கு அவர் ஆசிர்வாதம் செய்து துன்புறுத்தமாட்டார்.
சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 5
முத்துக்களின் நிறம் எது நண்பர்களே! மனக் கண்ணில் உடனே தோன்றுவது வெள்ளை நிறம். ஆனால் இந்த பிள்ளைத் தமிழ் மூலம் ஒவ்வொரு முத்தின் நிறம் என்ன என்பதை முதன் முதலாய் நான் தெரிந்து கொண்டேன்.