தங்கள் மூதாதையர், காலத்தை வெல்ல, காலமே இல்லாத ஓரிடத்தில் வந்து நிலைபெற்றனர் என்பது மெல்ல மெல்லப் புரியும் தோறும் தேஜாவின் உடல் ஒளி வெப்பமாக அடங்காத அலைகளாக வெளியேறியது. தனக்கு முன் யாரும் இவற்றை உணர்ந்திருக்கிறார்களா என்று தேடி தன் ஆழ்மன அடுக்களில் இறங்கி தங்கள் ஒளிர்கிரகத்தின் நியமங்களில் நகர்ந்தான். அறிந்தவர்களின் மன அலைகள் இன்னும் ஆழத்தில் கிடப்பதை அவன் மனம் கண்டுகொண்டது. ஒருவேளை அவர்கள் எல்லாம் மனவிலக்கம் அடைந்து பிலத்திற்குள் சென்று விட்டார்களோ என்று நினைத்துக் கொண்டான்.
Category: இதழ்-59
தெனாலிராமன் பூனையும், ச்ரோடிங்கர் பூனையும்!
க்வாண்டம் இயற்பியலுக்கு நூறு வயதாகிறது (இன்னும் புரியவில்லை). இத்தாலிய மொழியில் க்வாண்டம் என்றால் ‘எவ்ளோ?’ என்று பொருள். இந்த இயலை ஆரம்பித்து வைத்தவர்களால் விடை காண முடியாத பல கேள்விகள் இருந்தன. யாரும் பார்க்காத போது அதையெல்லாம் துடைப்பத்தால் தள்ளி பீரோவுக்கு அடியில் குவித்துவிட்டுப் போய்விட்டார்கள். உதாரணமாக, ‘ஒளியும் மின் காந்த அலைதான்’ என்று காலையில் சொன்ன அதே வாய், மாலையில் கொஞ்சம் போட்ட பிறகு ‘அது அலை அல்ல, துகள்’ என்று சொல்ல ஆரம்பித்தது.
20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 21
சமகாலக் கட்டிடக்கலை ஜெர்மனியில் 20ஆம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் ஒரு புதிய பொலிவைப் பெறத் தொடங்கியது. வைமா(ர்) (Weimar) நகரில் 1919இல் நிறுவப்பட்ட பாவ்ஹவ்ஸ் (Bauhaus) பள்ளியின் தாக்கம் வலுவானதாக இருந்தது. லூட்விக் மீஸ் வான் டெர் ரோஹ் (Ludwig Mies Van der Rohe) என்னும் கட்டிடக் கலைஞரின் வழிகாட்டுதலுடன் பள்ளியின் பாணி உலகின் மூலைகளுக்கும் பரவியது.
மழை – கவிதைகள்
சத்தம் மழையென பெய்யும்போது
நானும் வீடென நனைகிறேன்.
தாமரை இலையும், மகா நீரொட்டா பரப்புகளும்
வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணிணிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் எனும் நுண்ணுடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்த்தியை நேனோ என்று பெயரிடும் அளவிற்கு நேனோ என்றதும் அறிவியலாளர்களுடன் நேனு நேனு என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் நேனோ டெக்னாலஜி என்கிற அறிவியல் துறை இன்று பிரபலம். இயற்கையை அறிதலுக்கு அறிவியல்சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ டெக்னாலஜி விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள், டெக்னாலஜிகள், இயற்கையில் நம்முலக ஜீவராசிகளிடையே ஏற்கனவே படைப்பில், உபயோகத்தில் இருக்கிறது. இக்கட்டுரைத் தொடரில் இயற்கை தரும் நேனோடெக்னாலஜி சிலவற்றை எனக்குப்புரிந்த அறிவியல் எல்லைக்குள் விளக்கமுற்படுகிறேன். மற்றபடி, கட்டுரையின் வசனநடையும் கோமாளி உடையும், தீவிரத்தை உள்வாங்க ஏதுவாக்கும் குதூஹல மனநிலைக்கான பாவனைகளே.
வெளியே, வெட்டவெளியில்
அந்தி ஆகவிருக்கிறது.நீ இப்போது போகவேண்டும்,
மீண்டும் உன் வழித்தடங்களைக் கண்டுகொண்டு: வயலில் கிடக்கும் துருபிடித்தக் கருவிகள்
மற்றும் ஏரிக்கு அந்த பக்கம் இருக்கும் வீடு, செம்பழுப்பாக,
சதுரமாக சரக்குபெட்டி போல திடமானதாக.
பூபேன் ஹசாரிகா
சமீபத்தில் மறைந்த பிரபல இசைக் கலைஞர் மற்றும் பாடகரான பூபேன் ஹசாரிகாவின் காலத்தால் அழியாத பாடல். அவரின் மறைவிற்கு சொல்வனம் தனது இரங்கலை தெரிவிக்கிறது.
வாசகர் மறுவினை
விவல் அக்கா கதையின் சிறப்பு கடைசி பாராவில் நிகழும் காலமாற்றமும் முடிவும்தான். திட்டமிடப்பட்ட முடிவு வாசகனை ஒரு முட்டுச்சந்தில் விட்டுவிட்டு கதைசொல்லி காணாமல் போவது இயல்பாக நிகழ்கறது. திருமலைராஐன் ஆதாமிண்ட மகன் அபுவில் குரலுயர்த்தாமல் நிறைய தகவல்களைத் தந்திருக்கிறார். வணிக கவனமிருந்தாலும் கூட கிரீடம் (திலகன் மோகன்லால் நடித்தது) போன்ற நல்லபடங்களை (குறைந்த பட்சம் பேத்தலில்லாத்து)மலையாளத்தில் வருகின்றன. தமிழில் அதேபடம் அசிங்கமானது.
மகரந்தம்
சமீபத்தில் டோக்யோவில் பல இடங்களில் கதிர் வீச்சு அளவு ஏற்க முடியாத அளவு உயர்ந்திருப்பதாகத் தெரிய வந்ததும் ஜப்பானியர்கள் கொஞ்சம் அரண்டிருக்கிறார்கள். ஃபூகஷீமா அணு உலை உள்ள ஊரிலிருந்து டோக்யோ ஒன்றும் அருகில் இல்லை. பறவை பறக்கும் விதத்தில் 238.34 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சாலை வழியே சுமார் 274.10 கிலோமீட்டர் அல்லது 297.92 கிலோமீட்டர் தூரம். மைல் கணக்கில் இது 148.1 மைல். சாலை வழி தூரம் 170.31 மைல்களிலிருந்து 185.12 மைல்கள். இவ்வளவு தூரத்தில் எப்படிக் கதிர் வீச்சு கடந்தது என்று இப்போது தலைமுடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.
அனைத்தையும் கடந்ததைப் பற்ற நினைக்கும் கவிஞர்- டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர்
2011 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபெல் பரிசை ஸ்வீடன் நாட்டுக் கவிஞரான டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமருக்கு வழங்கி இருப்பதாகச் சமீபத்தில் செய்தி கிட்டியதும், உலகெங்கும் இலக்கியவாதிகள் நடுவே வழக்கமாக எழும் சலசலப்பு எழுந்தது. இந்தியாவில், தமிழில் இவர் குறித்து ஏதும் அதுவரை பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் மேற்கில் கவிதைகளைப் படிப்பவர் நடுவே ட்ரான்ஸ்ட்ரமர் பற்றி நல்ல தகவலறிவு இருந்ததாகத் தெரிய வந்தது. இதர இலக்கிய வகைகளைப் படிப்பவர்களுக்கு இவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்பதைச் சுட்ட வேண்டும்.
7 பில்லியனும், மாசடைந்த சூழலும்
உலக ஜனத்தொகையின் எண்ணிக்கை 7 பில்லியனை தொட்டு, தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. ‘வருங்காலத்தில் இன்னும் ஜனத்தொகை அதிகமாகும். இவர்கள் அனைவருக்கும் நம்மால் உணவளிக்க முடியுமா?’ போன்ற வேள்விகள் 60-களிலேயே கேட்கப்பட்டு அந்த கேள்விகள் தற்போது அர்த்தமற்று போயுள்ளன. தற்போது நிலவி வரும் வறுமை நிச்சயம் விவசாயத்தின் குறைபாடல்ல. “7 பில்லியனும், மாசடைந்த சூழலும்”
சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4
மிச்சில் எனில் மிச்சம் என்றும் பொருள். எச்சில் என்றும் பொருள். குமுதம் எனில் ஈண்டு ஆம்பல். ஆம்பல் மலரின் அமர்ந்த வாசனை இளம் பெண்களின் வாய் மனத்துக்கு ஒப்புமை. மிசைந்து எனில் உண்பது. ஆனால் தீம குமுதத்து அமுதத்தில் விருந்தாடுகிறான் முருகன். அதை நாங்கள் சொன்னோமா, பிறகேன் எங்கள் சிற்றில் சிதைக்கிறாய் எனும் மென் கோபமும் கெஞ்சலுடன் தொனிக்கும் அற்புதப் பாடல் இது. குமரகுருபரரின் மொழியாளுமையின் உச்சம் இந்தப் பிள்ளைத் தமிழ்.
ஹிஸ் ஹைனஸ் ரவீந்திரன்
‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்தை திருநெல்வேலியின் ‘சிவசக்தி’ தியேட்டரில் ஒரு மாலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. பார்ப்பதற்கு முன்புவரை அந்தத் திரைப்படத்தின் மேல் எனக்கிருந்த ஒரே ஈர்ப்பு, மோகன்லாலும், வயல்கள் சூழ்ந்த ‘சிவசக்தி’ திரையரங்கின் திறந்து கிடக்கும் கதவுகளைத் தாண்டி வந்து நம்மை வருடும் மாலைநேரக் காற்றும்தான். ஒரு கமர்ஷியல் சினிமாவுக்குரிய விறுவிறுப்பான அம்சங்களுடன் கூடிய கதையை சங்கீதப் பின்னணியில் அமைத்து லோகிததாஸ் எழுதியிருந்த திரைக்கதைக்கு மோகன்லாலுடன் இணைந்து நெடுமுடி வேணு, திக்குரிசி சுகுமாரன் நாயர், சுகுமாரி,….போன்றோர் வலு சேர்த்திருந்தார்கள் என்றாலும், ’ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்தின் ஆதார ஸ்ருதி என்னவோ அதன் இசையமைப்பாளர், அமரர் ரவீந்திரன் அவர்கள்தான்.
அந்த கிராமபோன் வாசனை
கர்நாடக சங்கீதத்தில் மணி ஐயர் அந்தக் காலத்துத் தென்தூல்கர் என்று சொல்லவேண்டும். ‘சரசசாமதான’, ‘நாத தனுமனிசம்’, ‘துன்மார்க்கசரா’, ‘எப்போ வருவாரோ’ போன்ற கிருதிகளை அவர் பாடும் விதமே தனி. தன் குரலின் எல்லைகளை அதிகப்படுத்தாமல் மிகத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டு அவசரமாக ராகம் பல்லவி அனுபல்லவி பாடிவிட்டுச் சரணத்துக்குக் குறிப்பாக, கல்பனாஸ்வரங்களுக்கு விரைவார். ஸ்வரங்களை அப்படியே நம் மேல் வர்ஷிப்பார். அதன் உற்சாகம் அரங்கம் பூராவும் நிரம்பும். மதுரை மணி ஐயர் கச்சேரியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர் கச்சேரிகளையும் கேட்க ஆரம்பித்தேன். ராகங்களைக் கண்டுபிடிக்கவும் ஆரம்பித்தேன்.
ஆழ்கடலின் விந்தைகளும், அச்சங்களும்
ஹார்ப் திட்டத்தின் ஒரு குறிக்கோள்- மிகத் தாழ் அதிர்வலைகளை உருவாக்குவதுதான்(ELF அலைகள்). இந்த ஈஎல் எஃப் அலைகள் திரட்சியான பூமியையும், கடல்களையும் ஊடுருவிச் செல்லக் கூடிய ஆற்றல் உள்ளவை. நீரில் ஆழத்தில் மூழ்கி இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களோடு தொடர்பு வைக்க இந்த அதிர்வலைகளை பாதுகாப்புப் படைகள் பயன்படுத்துகின்றனர். இதைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இலக்குகளை அழிக்க முடியும்.
சுகாவின் ’தாயார் சன்னதி’ – ஒரு பண்பாட்டுச் சூழலை முன் வைத்து…
“தாயார் சன்னதி” படிக்கும்போது, பல இடங்களில் ஹாஸ்யம் வெடிக்கிறது. கண்கள் பனிக்கின்றன. மூட நம்பிக்கைகளை போகிற போக்கில் கிண்டல் செய்கிறார். சினிமா என்ற கலவை சராசரி மனிதனின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளதைக் காட்டுகிறார். திருநெல்வேலிப் பண்பாட்டினை நயம்பட கூறுகிறார். பால்ய கால காதல்களை ரசனையோடு சொல்கிறார்.
மலை மீது பயணம் (ஒரு கொண்டை ஊசி வளைவுக் கவிதை)
விரி சிரிப்பை, சுக ஒளியைப்
பரப்பி வரும் சிறு குழந்தை
மழைப் பூக்கள்; பூ மழைகள்.
மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம் – பாகம் இரண்டு
தனக்கு இருபது வயதாகும்போது கண்ணன் அரியக்குடி, செம்பை, ஜிஎன்பி, செம்மங்குடி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்ற ஜாம்பவான்கள் அனைவருக்கும் வாசித்திருத்தார். “என் பக்கவாத்தியம் இல்லாத தண்டபாணி தேசிகரின் கச்சேரியை நீங்கள் கண்டுபிடிப்பது அரிது,” என்கிறார் கண்ணன்.
வைரஸ் – சில முக்கிய விவரங்கள்
பெரும்பாலான நச்சியங்கள் சில குறிப்பிட்ட உயிரினங்களில் குறிப்பிட்ட கண்ணறைகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றன. மூச்சுப்பாதையில் உள்ள கண்ணறைகள் நச்சியத்தால் தாக்கப்படும்போது தடுமண் (சளி) உண்டாகிறது. நச்சியங்களால் கண்ணறைகளுக்கு வெளியே தனித்து வாழ இயலாது.
பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா? – இறுதிப் பகுதி
க்ரெடிட் கார்டுகள் கண்டதுக்கெல்லாம் கட்டணம் வசூலித்து வந்தார்கள். ஆரம்பத்தில் இதற்கு அவர்கள் சொன்ன காரணம், உயர்தர பாதுகாப்பான வலையமைப்பு செலவுகளை மீட்பதற்கே என்பது. இன்று வலையமைப்பு செலவு குறைந்து கொண்டே வருகிறது. கிரெடிட் கார்டு கம்பெனிகள், இடை கம்பெனிகளான processors எல்லோரும் இணைய புரட்சியால் முன்னைப் போல கட்டணம் வசூலிக்க முடியாது என்பதை உணரத் தொடங்கியுள்ளார்கள்.
வெர்மீயர்
காதுகளில் ர்ர்ர் என்ற ரீங்காரம்.ஆழமா? உயரமா?
அது அந்த சுவருக்கப்பாலிருந்து வரும் அழுத்தம்,
யதார்த்தத்தை மிதக்க வைத்து,
தூரிகையை நிலைக்க வைக்கும் அழுத்தம்.
தாந்திரிகம்- யோகம், போகம், அர்த்தநாரீஸ்வரம்
பெண்களுக்கு எதிரான, பெண்மையை அடிமைப்படுத்தும் சமூக அமைப்பாக மேற்கத்திய அமைப்பு இருக்கிறது, அது பெண்ணை ஒரு குழந்தைத்தனமான சார்நிலையில் வைத்திருக்கிறது- மாறாக இந்திய மரபு ஆண் பெண் பேதங்களைக் கடக்க உதவுவதாக இருக்கிறது: இங்கு பெண்ணியம் என்பது ஆண்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒன்றல்ல- தாந்திரிக மரபில் எவரும் முழுமையான ஆண்களாகவும் பெண்களாகவும் இருப்பதாகக் கருதப்படுவதில்லை.