பசியும் பரிவும்

இளங்கோ கிருஷ்ணன் முக்கியமான இளங்கவிஞர்களில் ஒருவர். இவர் கவிதைகளில் காணப்படும் வசீகரமான சொற்செட்டும் ஒரு கதைத்துணுக்குபோல அமைந்துவிடுகிற வடிவமைப்பும் வாசகர்களை உடனடியாகக் கவனிக்கத் துண்டும் கூறுகள். கவிதையின் பொருள் எழுத்துத்தளத்திலிருந்து மிக இயல்பாக வாழ்க்கைத்தளத்தை நோக்கி நகர்பவையாக உள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் கொண்ட “காயசண்டிகை” தொகுப்பில் நல்ல கவிதைகள் பல உள்ளன.

பஞ்சம்

அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தோட்டத்தை சுற்றிப் போடப் பட்டிருக்கும் மூங்கில் வேலி தங்கம் போல் பிரகாசிக்கும். இந்த வேலிக்கு ஐம்பது கஜம் தொலைவில் ரயில் போகும். இந்த முறை கூட நந்தினியின் நீண்ட தலைமுடி அவள் பின்னால் காற்றாடி போல் படர்ந்திருந்தது. இரவில் படுக்கையில் அவள் கட்டிக் கொள்ளும் பழைய சேலை சுருக்கங்கள் ஏதுமற்ற அவளது உடலில் ஒழுங்கற்று சுற்றப் பட்டிருந்தது. அந்த ரயில் கடக்கும் போது அவளைக் காணாத ஜோடிக் கண்களே இருக்காது எனலாம்.

வாசகர் எதிர்வினை

நமது பாரம்பரியம், நமது சொத்து என எண்ணாத மக்களிடம் இருக்கும் ஒரு கலை புரவலரின்றி அழியும். அதன் நீட்சியே இன்று நாம் காணும் மல்லர்கள். சென்ற இதழில் வெளியான சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி என்ற திரு வைத்தியநாதனின் கட்டுரை நிதர்சனங்களை முன்வைக்கிறது. நம்மால் ஆகாத காரியத்தை சீனா செய்வதன்மூலம் நமக்குக் கிடைக்கப்போகும் பலன்களை பட்டியலிடுகிறார்.

வியத்தலும் உண்டே: அ.முத்துலிங்கத்துடன் ஒரு தினம்

முத்துலிங்கத்துடன் எனக்குப் பிரச்சினை ஏற்பட்டது. அவர் எழுதிய கதைகள் புரிந்தன. ‘பூமிக்கு பாதி வயது’ என்று எழுதிய ‘உண்மை (மட்டுமே) கலந்த நாட்குறிப்புகள்’ சம்பவங்களில் உள்ளடி, காட்டமான கருத்து என்று எதுவும் கிடைக்கவில்லை.

குளிரூட்டப்பட்ட அறையில் நிலவும் தன்மைக்கும் மின்விசிறி மட்டும் இயங்கும் இடத்துக்கும் உள்ள வித்தியாசம் போல் இருந்தது. மின்விசிறி சத்தம் போடும்; வேகமாக சுழலும்; பக்கங்களைப் பறக்கடிக்கும்; காற்றடித்து மேலே பலமாக உரசும்; எனினும் வெப்பத்தைக் குறைக்காமல் வெறும் ஓசையாக மட்டுமே வியர்க்கும். ஏர் கண்டிஷனரோ அமைதியாக இயங்கி சாந்தமாக்கி, சமநிலைக்குக் கொணர்ந்து வெளி வெயில் நிலையை மறக்கடித்து, புதுச்சூழலுக்கு இட்டுச் செல்லும். முத்துலிங்கம் எழுத்து ஏசி எழுத்து.

கிரகர் சோம்சா எனும் கரப்பான்பூச்சி

கவை நிறைய அம்பிருந்தும்
ஏதொன்றையும் பிரயோகிக்க மனம் கூசும் வேடனொருவன்
அம்பினும் கூரிய பசி பாய்ந்து உழன்ற போது…

…மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி

காகிதங்களை நீட்டிய போதெல்லாம் கையெழுத்திடுவது நடிக/நடிகைகளுக்கு அழகு. ஆனால் பிரதமருக்கு அது அழகல்ல. கடந்த சில தினங்களில் உலக நாடுகள் நீட்டிய அனைத்து காகிதங்களிலும் நமது பிரதமர் கையெழுத்திட்டுள்ளார். ”அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது? நாட்டின் எதிர்காலத்தை எந்த அளவிற்கு அது பாதிக்கும்? இந்தியாவின் வளர்ச்சியை இது எவ்வகையில் பாதிக்கும்?”, என்ற எந்த பிரக்ஞையும் அவரை உறுத்தியதாகத் தெரியவில்லை.

மண் உண்ணும் செம்மலும் மாண்புடைத்தே

”அசுத்தம் ஏன் நல்லது” புத்தகத்தை எழுதிய டாக்டர் மேரி ரூபுஷ், நாம் குப்பை மேட்டிலேயே குடியிருக்க வேண்டும் என்று ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால், அவர் பாக்டீரியாக்கள் நமக்கு வெளியேயும், உள்ளேயும், நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் பரவியிருப்பதைச் சரியாகவே சுட்டிக்காட்டுகிறார். பெரும்பாலான நுண்ணுயிர்கள் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்துவதில்லை என்பதோடு, ஜீரண மண்டலம் போன்றவற்றில் குடியிருக்கும் நுண்ணுயிர்கள் நம் ஆரோக்கியத்திற்கு அவசியமான சத்துப் பொருள்களையும் உற்பத்தி செய்கின்றன.

இளையராஜாவுடன் ஒரு ரயில் பயணம்

ரயிலோடு பின்னிப்பிணைந்து அமையும் கதைகளில் அவர் ரயிலை ஒரு கதாபாத்திரமாகவே கருதி இசை அமைக்கிறார். இதை ‘ஆலாபனா’ என்ற தெலுங்கு படத்தின் பின்னணி இசையிலிருந்து எளிதாக அறியலாம். இந்தியத் திரையுலகில் ரயிலை மையமாக வைத்து இசையமைக்கப்பட்ட பாடல்கள், பின்னணியிசைக் கோப்புகளைக் கணக்கில் கொள்ளும்போது இளையராஜாவின் இடம் அதில் நிச்சயம் முதன்மையானதாக இருக்கும்.

பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம்

காய்கள் பழுக்கத் தொடங்கினால் பக்கத்து வீடுகளிலிருந்து பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் அவளை ஏமாற்றிவிட்டு பழங்களைக் கொண்டுபோய் விடுவார்கள். கோபத்தில் கிழவிக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கும்.

மனிதன்+

பரிணாம இட்லிப் பானையில் மெல்ல மூளை வெந்து பக்குவப்படும் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஃபாஸ்ட் ட்ராக்கில் நாமே நம் பரிணாமத்தை அமைத்துக்கொள்ளலாம். இந்தப் போக்கு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. இண்டர்நெட்டில் புகுந்தவுடன் ஒரு தேன்கூட்டின் அறிவு போல் ஒத்து யோசித்து ஒரே மாதிரி செயல்படுகிறோம். ஒரே எம்.பி-3 பாட்டை லட்சம் பேர் பதிவிறக்கம் செய்கிறோம். அதிக நேரம் தூங்காமல் விழித்திருக்க, கவனத்தைக் கூர்தீட்டிக்கொள்ள, மருந்துகள் இருக்கின்றன. (சாப்பிடாதீர்கள்.)