எஸ்.வி.ராமகிருஷ்ணன்

ஹைதராபாதில் வசித்துவந்த எழுத்தாளர் திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் நேற்று (09-02-2011) காலை காலமானார். சுங்க ஆணையளாராக இந்தியாவின் பல பகுதிகளிலும் வேலை பார்த்து ஓய்வு பெற்ற திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். இந்தியாவின் வரலாற்றை சுவாரசியமான நடையில் தன்னுடைய செறிவான அனுபவத்தோடு பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். சொல்வனத்தின் வளர்ச்சியிலும், தரத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த எஸ்.வி.ராமகிருஷ்ணன் பல “எஸ்.வி.ராமகிருஷ்ணன்”

பீம்சென் ஜோஷி

எனக்கு நினைவு தெரிய முதன்முதலாய் நான் கேட்ட ‘ஹிந்துஸ்தானி’ குரல் பீம்சென் ஜோஷியுடையதாகத்தான் இருக்கும். ‘மிலே ஸுர் மேரா தும்ஹாரா’ என்ற குரலைக் கேட்கும்போதுதான் ஞாயிறு காலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானதாக அர்த்தம். பல இந்திய மொழிகளும் ஒலிக்கும் அந்தப்பாடலில் தமிழ்ப்பாடலைக் கேட்கும்போது, சுற்றியிருக்கும் எல்லோரிடமும் ஏதோ தாங்களே பாடுவதுபோல ஒரு “பீம்சென் ஜோஷி”

வரலாற்றின் துணையோடு ஒரு பயணம்

பண்டைய இந்தியாவில் புதியவர்களைச் சந்திக்கும்போது `தாங்கள் எந்த நதியுடன் தொடர்புடையவர்?’ எனக் கேட்கும் வழக்கம் இருந்ததாம். தண்ணீரை வணிகமாக மாற்றியதில் அரசுக்கும், பல நாட்டு தொழிற்சாலைக்கும் இருக்கும் தொடர்பை விளக்குகிறார். பல தகவல்களுக்கு நடுவே தினம் 6,350 லட்ச லிட்டர் கங்கை நீர் தொழிற்சாலைகளுக்கு திருப்பப்படுகிறது எனும் தீற்றல் செய்தி திடுக்கடைய வைக்கிறது.

ஆடுகளத்தில் சிதையும் பண்பாடு

இடைவேளை வரை உற்சாகமாகப் பயணிக்கும் படம் இடைவேளைக்குப்பின் படுத்துவிடுகிறது. இடைவேளைப் பகுதியிலேயே இனி என்ன நடக்கும் என்று யூகிக்க அல்ல நிச்சயமாகவே சொல்லிவிடமுடிகிறது. முழுப்படத்திற்கும் காசு கொடுத்துவிட்ட காரணத்தால் அரைப்படத்தில் எழுந்து போகாமல் இருக்க நேரிடுகிறது.

நான் வளர்கிறேனே மம்மி

உள்ளே போனதும், சட்டையைக் கழற்றி, தன் கையை உயர்த்தி, அக்குளைக் காட்டியது. “முடி முளைச்சிருக்கா?” எனக்குப் புரிந்துவிட்டது. வெளியே வந்து, “இவுங்களுக்கும் growing up classes நடக்க ஆரம்பிச்சிருச்சா?” என்றேன் விஜியிடம். “ஆமா, நாலு நாளா ஒரே இம்சை.”

தெலுங்கு மக்கள் மனதில் கே.வி.மகாதேவன்

தெலுங்குக் கவிஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் சாஹித்யதிற்கு மேலும் மெருகூட்டியது, கே.விஸ்வநாத், பாபு போன்ற சிறந்த இயக்குனர்களின் பார்வையைப் புரிந்து கொண்டு அவர்கள் படங்களை தன் இசையால் சிறப்பித்தது, நாட்டார் இசை, மரபிசை இரண்டிலும் சிறந்த பாடல்களைத் தந்தது போன்ற காரணங்களால் கே.வி.மகாதேவன் தெலுங்கு மண்ணில் பெரிதும் கொண்டாடப்பட்டதொரு இசையமைப்பாளராகத் திகழ்ந்தார்.

ப்ளூகிராஸ் இசை – ஓர் அறிமுகம்

இது வெறும் நடன இசை கிடையாது. குறிப்பாக நடன இசை என்று இப்போதெல்லாம் நம்முன் வைக்கப்படும், நாம் வெறும் பழக்கத்தால் தலையசைக்கும், அழுத்தி வாசிக்கப்பட்ட தாள இசை கிடையாது. இது இசைக்கருவியின் அற்புதமான ஒலியையும், அதை வியக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தும் மேதைமையையும் கூட தாண்டிய ஒன்று. நாள் முழுக்க கடினமான உடலுழைப்பில் உழன்றுவிட்டு, மாலையில் திறந்தவெளியைத் தேடிப்பிடிக்கும் ஆத்மாவின் அக வெளிப்பாடு இந்த இசை.

மத்தியக்கிழக்கில் வேகமாகப் பரவும் கலகம்

துனிஷியா, லெபனான், எகிப்து என்று தொடர்ந்து மக்கள் கலகம் மத்தியக் கிழக்கு நாடுகளில் பரவி வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பிரச்சனை. சுதந்திரம், பொருளாதாரம், மதம், இன்னும். கீழே இந்த மூன்று நாடுகளிலும் நடைபெற்ற கலகத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

கம்யூனிஸ திரைத்தணிக்கை குறித்து கிரிஸ்தாஃப் கீஸ்லாஸ்கி

போலிஷ் திரைப்பட இயக்குநர் கிரிஸ்தாஃப் கீஸ்லாஸ்கி (Krzysztof Kieślowski) தனது திரைப்படங்கள் மூலமாக உலகத்தை கவர்ந்தவர். இவரது வண்ணங்கள்(Colors) திரைத்-தொடர், வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை திரைப்படங்களில் அழகியலையும், வாழ்க்கை குறித்த கண்ணோட்டங்களை ஒரு புதிய தளத்திற்கு கொண்டு சென்றவர். கம்யூனிச போலாந்தில் திரைத்துறையினர் சந்தித்த கட்டுப்பாடுகளை அறிந்து கொள்ளும் “கம்யூனிஸ திரைத்தணிக்கை குறித்து கிரிஸ்தாஃப் கீஸ்லாஸ்கி”

விஞ்ஞானக் கணிணி – இறுதிப் பகுதி

1990 களில் விஞ்ஞானிகள் ஜினோம் வரிசைபடுத்தலில் சரித்திரத்தில் முதன் முறையாக ஈடுபட்டு தீவிரமாக உழைத்து வந்தார்கள். மிக அதிகமான கணினி திறன் இதற்கு தேவைப்பட்டது. 15 வருடங்களுக்கு அரசாங்கமும் தனியார் ஆராய்ச்சியாளர்களும் மரபணு வரிசைபடுத்த முக்கிய காரணம், யாரிடம் புத்திசாலித்தனமான மென்பொருள் வழிமுறைகள் (அல்கரிதம்), விசேஷ கணினிகள் மற்றும் சோதனை வசதிகள் உள்ளது என்பதே.

வாசகர் எதிர்வினை

புத்தகத்தைப் பற்றி பேசும் போது, அதன் வடிவமைப்பையும் பற்றி சிலாகிப்பது அவசியமாகிறது. முன் அட்டை முதல் பின் அட்டை வரை நல்ல வடிவமைப்பு. சிரத்தை கண்கூடாக தெரிகிறது. வண்ணதாசன் சாருடைய அணிந்துரை அம்சமானது. ஏக்நாத்தின் ‘ பூடம் ‘ சிறுகதைத் தொகுப்பிற்கு பிறகு, தன் வளமான மொழியை விடுத்து அச்சு அசல் திருநெவேலி தமிழில் அவர் எழுதி தந்திருக்கிற அணிந்துரை இதுவாக தான் இருக்க வேண்டும்.

திருப்பூர் புத்தகக் கண்காட்சி, சுந்தர ராமசாமி விருது – அறிவிப்புகள்

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது.

பிஸ்கட்டு, பழம்

சாப்பாட்டுக்கு அலைந்து, பிச்சை எடுத்து, திருடி…, போன‌ புதிதில் சேர்க்கை ச‌ரியில்லை. வாழ்க்கையில் சாதிக்காமல் ஒரு கடிதம் எழுதவும் மனம் இல்லை. போலிஸில் மாட்டி அப்புறம், ஓர‌ள‌வுக்கு ப‌ய‌ம் தெளிந்து, டில்லியிலிருந்து மும்பை, அங்கிருந்து பங்களூரு என்று வ‌ந்து, கூலி வேலை செய்து இன்றைக்கு ஒரு முதலாளியிடம் ஆட்டோ ஓட்டுகிறேன்.

உயிரின் கதை – 3

“இப்பிரபஞ்சம் என்பதுதான் என்ன?” -என்ற கேள்விக்கு நாம் வைத்திருக்கும் பதிலை அடிப்படையாகக் கொண்டு நம்மைச் சுற்றியுள்ள எந்த விஷயத்தையும் நாம் இரண்டு விதமாகப் புரிந்து கொள்ள முடியும். வரலாற்றுக் காலந்தொட்டு ஒன்றுக்கொன்று எதிரான முற்றிலும் வேறான இரு பதில்கள் இக்கேள்விக்கு விடையாக வைக்கப் பட்டுள்ளன. நம் புலன்களால் அறிய முடிகிற பொருள்களால் ஆகியது என்பது ஒரு பதில். நம் புலன்களால் அறிய முடியாதவற்றால் ஆகியது என்பது இரண்டாவது பதில்.

பிறந்த நாள்

குழந்தையின் தாய்மாமனின் மடியில் வைத்து சரட் சரட்டென்று பிஞ்சுத்தலையை மழிக்கத் துவங்கும்போது குழந்தையுடன் சேர்ந்து அருகில் நின்று கொண்டிருக்கும் அதன் தாயும் கண்ணீர் சிந்துவாள். மற்ற உறவினர்கள் காற்று புக இடமில்லாமல் நெருக்கமாக எட்டிப்பார்த்தபடி சூழ்ந்து நிற்பார்கள். ஒருசிலர் கையில் கிலுகிலுப்பை, பலூன், விசில் போன்றவற்றை வாங்கி வந்து அழுது கொண்டிருக்கும் குழந்தையின் முன்னால் வந்து அதன் தாய்மாமனின் காதில் ஊதுவார்கள்.

தட்சிணாமூர்த்தி பிள்ளை

காரைக்குடி பிரதர்ஸ் கச்சேரியில தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம். வர்ணம் முடிஞ்சு, ரெண்டாவது கிருதி வாசிக்கும் போதே மிருதங்கம் மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சி. பாட்டு வாசிக்கும் போதே பிள்ளை இன்னொரு மிருதங்கத்தை எடுத்து பக்கத்துல நிமிர்த்தி வெச்சு, தபலா மாதிரி தொப்பிக்கு ஒரு வாத்யம், வலந்தலைக்கு ஒரு வாத்யமா வாசிச்சார். காரைக்குடி பிரதர்ஸுக்கு கேட்கக் கேட்க ஒரே ஆனந்தம். பாட்டு முடிஞ்சதும் தீர்மானம் வெச்சு முடிக்கப் போனவரைத் தடுத்து, “பிள்ளைவாள்! அப்படியே ஒரு தனி வாசிக்கணும்”-ன்னார் காரைக்குடி சுப்பராம ஐயர். கணக்கு வழக்குல எல்லாம் நுழையாம, டேக்காவும், குமுக்கியுமா வாசிக்க வாசிக்க கூட்டம் கூத்தாட ஆரம்பிச்சிடுச்சு. அப்படி ஒரு வாசிப்பை ஜென்மத்தில் கேட்டதில்லை.

மகரந்தம்

பர்மா, இலங்கை போன்ற தேசங்கள் கூட இந்தியாவை துளியும் மதிப்பதில்லை. உறுதியற்ற அரசும், சுயநலவாத தலைவர்களும் ஒரு தேசத்திற்கு பெற்று தரும் ஆகப்பெரும் மரியாதை இது. பிற அரசாங்கங்களை விட்டுத்தள்ளுங்கள். ஒரு ஆஸ்திரேலிய இசைக்குழு தனக்கு ”All India Radio” என்று பெயரில் உலவுகிறது. இந்திய அரசின் முக்கியமான அங்கமான, அதன் ஒலிபரப்புத் துறையின் பெயரை தனக்கு சூட்டிக்கொள்ளும் திமிர்த்தனத்தையும், இந்த பெயரை பதிவு செய்து தனக்கான உரிமையை உறுதி செய்யத் தெரியாத இந்திய அதிகார வர்க்கத்தின் அரியாமையையும் எண்ணி எண்ணி வியக்கத்தான் முடியும்.

கமகம்

அசைவோ, இயக்கமோ இல்லாமல் ஒரு ஸ்வரத்தைத் தனித்துத் தட்டையாக இசைப்பதையே சங்கீத பரிபாஷையில் “மொட்டை ஸ்வரம்” என்கிறார்கள். இந்திய மரபிசையில் ஸ்வரங்கள் தனித்தனியான, தட்டையான, வரையறுக்கப்பட்ட அதிர்வெண்ணில் (frequency) ஒலிப்பவை அல்ல. ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் அது இசைக்கப்படும் ராகத்தையும், அமைப்பையும் பொருத்து அசைவு உண்டு. இந்த அசைவையே ‘கமகம்’ என்று மேலோட்டமாக வரையறை செய்யலாம். முதல்முறையாக இந்திய மரபிசையைக் கேட்கும் மேற்கத்தியக் காதுகளுக்கு எடுத்தவுடனே தனித்துவமாகவும், வித்தியாசமாகவும் தெரிவது நம் மரபிசையின் கமகங்கள்.