சிதலும் எறும்பும் மூவறிவினவே

இந்தப் பரிசோதனைகள் அனல் பறக்கும் விவாதங்களைக் கிளப்பின: எறும்புகளால் காற்றில் வரும் ஓசைகளைக் கேட்க முடியுமா? அல்லது பியானோவைப் போன்ற திடப் பொருள்களின் வழியாக உருவாக்கப்படும் அதிர்வுகளை மட்டுமே அவற்றால் உணரமுடியுமா? அவை தங்களுக்குள் ‘பேச’, ஒலிகளை மேற்கண்ட எந்த வழியிலேனும் எந்த அளவுக்கு உபயோகிக்கின்றன? இவை பற்றிய உண்மைகளை நாம் இன்னமும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம்.

வாசகர் எதிர்வினை

பொதுவாக இதுபோன்ற அறிவியல் கட்டுரைகளை தாண்டிச் செல்லவே நான் விரும்புவேன். அதையே முதல் இரண்டு இதழ்கள் வெளியான போதும் செய்தேன். ஆனால் மூன்றாம் இதழில் அப்படி என்னதான் இருக்கிறது எனப் படிக்க முற்பட்டபோது எவ்வளவு அருமையான கட்டுரைத் தொடரை இழக்க இருந்தேன் எனத்தெரிந்தது.

சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி?

பிரிவினை மற்றும் உரிமை கோரலுக்கான பொறி எந்தப் பகுதியிலாவது தோன்றினால், அதைச் சமாளிப்பதற்கு சீனர்கள் பயன்படுத்தும் வழிமுறை ஒன்றே தான் – கோரிக்கையாளர்களைக் கடுமையாகத் தாக்கி ஒடுக்குவது, தொடர்ந்து தாக்கி ஒடுக்குவது. உறுதியுடன் தாக்கி ஒடுக்குவது. திபெத்தில் அவர்கள் செய்வதைப் போல.

ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 2

‘நான் அன்று பார்த்த பறவைகள் என் நினைப்பில் தங்கிவிட்டன. என் வாழ்வின் ஜீவாதாரமே அவர்கள் தான். இந்த உலகத்தில் இசை, கலை, இலக்கியம் போன்ற எதுவுமே எனக்கு முக்கியமில்லை. இந்த பறவைகள் காண்பித்த காட்சி, அதன் சத்தம் மட்டுமே போதும்’

அமெரிக்காவில் ஜெயமோகன்

அரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.

மூதாதையர்களின் தாகம்

ஹம்பியைக் குறித்ததொரு புகைப்படக் கட்டுரையை அதன் வரலாற்றோடு சேர்த்து எழுதினேன். அதை ஒரு பிரபலமான புகைப்படப் பத்திரிகைக்கும் அனுப்பி வைத்தேன். அவர்கள் அந்த வரலாற்றையெல்லாம் நீக்கி விட்டு, புகைப்படத் தொழில்நுட்பத்தைக் குறித்து எழுதித் தருமாறு கேட்டார்கள். ஹம்பியின் வரலாற்றை நீக்கிவிட்டு அந்தக் கட்டுரையைப் பிரசுரிக்கவே தேவையில்லை என்று நிர்தாட்சயண்மாக மறுத்து விட்டேன்.

மகரந்தம்

சில ஆங்கில வலைத்தளங்களின் முக்கியமான, சுவாரசியமான, பல்துறை சார்ந்த படைப்புகளின் தொகுப்பு இப்பகுதி. இந்த இதழில் இடம்பெறும் பகுதிகள்: மனம் பிறழ்ந்த கலைமனம், கணிணித் தகவலில் ஒரு துளி “சிவம்” – இன்னும் பல.

மைசூர்ப் பட்டணத்து மல்லர்கள்

குஸ்திக் கலை மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு காலத்தில் தாம் மல்லராக இருந்ததாகப் பிறரிடம் சொல்லிக்கொள்வது அவருக்கு அவமானமாக இருந்தது. தன்னுடைய கம்பீரமான கலைவடிவம் ஒன்றை மறந்துவிட்டு, தளுக்கு நிறைந்த நகரமாக இன்று தன்னைக் காட்டிக்கொள்ளும் மைசூரில், நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் ஒருவரிடம் நான் பேசிய சந்தர்ப்பம் அது.

அலை

பெரியம்மையிடம் கேட்டேன். ஏன் சொல்லாம கொள்ளாம போயிட்டீங்க? இருபது வருஷம் இருக்குமா என்றாள். நான் ரொம்ப யோசித்து இருக்கும் என்றேன். இப்ப வந்து ஏம் போனீங்கயேங்கேல. நினைப்பு தட்டமாட்டேங்கே என்றாள்.

கனவுகளின் நிதர்சனங்கள்

வள விநியோகம், அதிகாரப் பகிர்வு போன்றவை இந்த புதிய முயற்சிகளின் அடிநாதமாக அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலானவை, அந்நோக்கங்களின் எதிர்மறைப் புள்ளியை சென்றடைவது வரலாற்றின் ஆகப்பெரும் முரண்நகை.

வீகுர் இனப்பிரச்சனையின் ஒரு வேர்

இயல்பிலேயே தங்களுக்கென தனி அடையாளத்தையும், கலாச்சார ரீதியாக தனித்துவம் பெற்றிருந்த உய்குர்கள், எக்காலத்திலும் தங்கள் மீதான சீன அரசின் அடக்குமுறையை சிறிதும் விரும்பவில்லை. வரலாற்றில் உய்குர் மக்கள் அவர்களின் கலைதிறனுக்காக பெரிதும் புகழப்படுபவர்கள்.

அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – ஓர் அறிமுகம் – பகுதி 1

மனிதர்களை ஒரு பொதுவான தளத்தில் வைத்து எடை போடும் போது இரண்டு நிலையினராக பிரிக்க முடியும். அறிவு சார்ந்து இயங்குபவர்கள், உணர்வு சார்ந்து இயங்குபவர்கள். பெரும்பாலும் நாம் அனைவருமே இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் பல்வேறு விகிதாசாரங்களில் இயங்குகிறோம்.