யானியின் ’புகழுரை’

யானி(Yanni) உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர். மேற்கத்திய செவ்வியல் சார்ந்த இவரது இசைக் கோர்வைகள் மூலம் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். மானுடத்தின் உள்ளுறைந்த உன்னதங்களை போற்றும் வகையில் “புகழுரை”(Tribute) எனும் மைய-நோக்கில் அமைக்கப்பட்ட இசைக் கோர்வை அவரது அற்புதமான ஆக்கங்களில் ஒன்று.

எலெக்ட்ரிக் எறும்பு – இறுதிப் பகுதி

நியூயார்க் மாநகர் இரவில் ஒளித் தெப்பமாய் மின்னியது, கலங்கள் சுற்றி எங்கும் திரிந்தன, அதிர்ந்தன, ராத்திரி வானிலும், பகல்களிலும், வெள்ளங்களூடேயும், கடும் வறட்சியூடேயும் பரபரத்தன. வெண்ணெய் உருகி திரவமாக அவனுடைய நாவில் பரவியது, அதே நேரம் மோசமான நாற்றங்கள், சுவைகள் அவனைத் தாக்கின: கசப்பான விஷங்களும், எலுமிச்சைப் புளிப்பும், கோடைப் புற்களின் நுனிகளும் இருப்பதை உணர்ந்தான்.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 2

கலையும் கைவினையும் அங்கு ஒருங் கிணைந்து வளரத்தொடங்கின. அது, இங்கிலாந்தில் நிகழ்ந்த கலை கைவினை சார்ந்த எழுச்சி (Arts and Crafts Movement)உடன் ஒப்புநோக்குதற்குறியது. அங்கு பல தொழிற்கூடங்கள் நிற்மாணிக்கப்பட்டு, கைவினைக்கலைகள், பீங்கான் பண்டங்கள் உருவாக்கல், பட்டு நெசவு போன்றவற்றில் ருஷ்யாவின் தொன்மையான கருப்பொருள்களும், கற்பனையும் இடம் பெற்றன.

செல்வராஜ் ஜெகதீசன் – கவிதைகளின் நேரடித்தன்மை

செல்வராஜ் ஜெகதீசன் தொடர்ந்து நேரடியான கவிதைகளையே முயன்றிருக்கிறார். கவிதையுலகுக்கு புதியவர்கள் கவிதையை வாசிப்பதில் இருக்கும் சிக்கல்களை இவரது கவிதைகளில் காண முடிவதில்லை. கவிதையின் நேரடித்தன்மை அல்லது எளிமைத்தன்மையை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்; அவை கவிதைகளே அல்ல வெறும் காட்சிகள் மட்டுமே என்று விமர்சிப்பவர்களும் உண்டு.

காத்திருப்பு

சிலந்தியின் எச்சில்தடத்தின் மையத்தில்
நிலைகொண்டிருந்தது சிலந்தியின் கர்வம்
சிலந்திக்கும் பெண்ணுக்குமான போட்டியில்
கடந்துவிடுகிறது ஓர் யுகம்
காற்றடிக்கத் தொடங்குகிறது

ஆதலினால் காமம் செய்வீர்

மனோரி கரையில் இறங்கியவர்களை மீன்காரர்கள், ஆளுக்கொரு மீனை கையில் வைத்துக்கொண்டு விலைசொல்லிக் கொண்டிருந்தார்கள். எதிலும் கவனம் செலுத்தாமல் இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். தூரத்தில் அவர்களுக்காகவே அவதரித்து காத்திருந்தது போல் ஒரு பாறை இருந்தது. மணி ஒன்பதைத் தொட்டிருந்தது. இருவரும் வாகாய் பாறைமேல் உட்கார்ந்தார்கள். கடல் காற்று அவர்களை வருடிக் கொண்டிருந்தது.

இணையத்துடன் போராடும் விளம்பரத்தாள்கள் – இறுதிப் பகுதி

செய்தித்தாள்களுக்குக் கிடைக்கும் விளம்பரங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியும் இப்போது இணைய நிறுவனங்களுக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறது. 2008-இல் முதன்முறையாக வட அமெரிக்காவில் இணைய விளம்பர முதலீடு அச்சு விளம்பர முதலீட்டை விட அதிகரித்தது. இங்கிலாந்தில், கூகிள் இணையதள விளம்பர வருமானம் 2009-இல் அந்நாட்டில் உள்ள அத்தனை அச்சு செய்திதாள்களின் விளம்பர வருமானத்தைவிட அதிகரித்தது. சமீபத்தில், செல்பேசி விளம்பரங்களில் நூறு கோடி டாலர்கள் ஈட்டியுள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது!

போதையில் சிதையும் ரியோ

போதை மருந்து அனைத்து நாட்டிலும் பிரச்சனை தான். ஆனால் போதை மருந்துக் கடத்தல்காரர்களின் இரண்டு குழுக்கள் தெருவில் துப்பாக்கியுடன் சண்டையிட துவங்கினால்? பிரஸிலின் ரியோ நகரில் கடந்த வாரம் இத்தகைய விஷயம் நிகழ்ந்தது. பொதுமக்களின் உயிரிழப்பை தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய அதிரடி சோதனையில் மேலும் “போதையில் சிதையும் ரியோ”

உயிர், மாற்று உயிர் -1

உயிர் அல்லது ”உயிருடன் இருப்பவை” என்றால் என்ன? நம் உலகிலேயே நாம் அல்லாத உயிர்கள், மாற்று உயிர்கள் (alternate life) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாம் கரிமவேதியியல் பாதி பரிணாம உயிரியல் மீதி என்று கடவுள் பாதி மிருகம் பாதியாய் கலந்து செய்த கலவை. இன்று ஹோமோஸேப்பியன்ஸ் என்று அறியப்படும் நம் மனிதகுலத்தின் மூதாதையரும், மனிதக்குரங்கின் மூதாதையினரும் ஒரே பொது ஆதி-மனித-குரங்கு-மூதாதையினரிடமிருந்து தோன்றியவர்கள். இந்த உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் புரிதலை (கொம்பேறித்தாவும்) குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்கிற சினிமா பாட்டில் விளக்கியுள்ளோம்.

சிறிது சினிமா

சுதந்திர நாளன்று ரயில்வே ஸ்டேஷனில் வரும் வெற்றி கோஷங்களும், பொதுமக்கள் உரையாடல்களும் அபத்தக் களஞ்சியம். இதற்கெல்லாம் சிகரம் ‘சத்தியமூர்த்தி வாழ்க’ தான். ஆசாரியாரும் சத்தியமூர்த்தியும் வண்டியில் வருவதாக வேறு பேசிக் கொள்கிறார்கள். 28-3-1943ல் இறந்து போன சத்திய மூர்த்தியின் ஆவிதான் அங்கு வந்திருக்கக் கூடும். அந்த அளவில் ம.ப.(மதறாசப் பட்டணம்)வும் ஒரு ம.ப. (மர்மப் படம்) ஆகிவிட்டது.

கே.வி.மகாதேவனும், கர்நாடக இசையும்

மேற்கத்திய இசையின் பல கூறுகளை இசையமைப்பாளர்கள் கற்றுக்கொண்டு அவற்றைத் திரையிசையில் புகுத்துவது வழக்கமானது. இக்காலகட்டத்தில்தான் கே.வி.மகாதேவனின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. கர்நாடக இசையின் ராகங்களின் அழகைச் சிதைக்காமல், அவற்றின் பாவங்கள் வெளிப்படும் வகையில், மாறிவரும் நவீனத் திரையிசைச் சூழலுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகும் வகையில் அவர் பாடல்கள் அமைக்க ஆரம்பித்தார்.

மகரந்தம்

நம் ஊரில் படமெடுக்கும்போது சிரி சிரி என்று சொல்லித் தொல்லை கொடுப்பார்கள் இல்லையா? ஈன்னு சிரிடா என்று குழந்தைகளைச் சொல்வார்கள். பெரியவர்களை என்ன சொல்வது என்று தயங்கிக் கொஞ்சம் சிரிங்க சார், அம்மா என்பார்கள். மேற்கில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு விதமாகச் சிரிக்கச் சொல்கிறார்களாம்.