லீ ஜியாபெள – அமைதியின்மை தந்த அமைதிப்பரிசு

இந்த வருடம் நோபல் அமைதிப்பரிசு லீ ஜியாபெள என்ற சீனருக்குக் கிடைத்திருக்கிறது. யார் இந்த லீ ஜியாபெள? பரிசு பெறும்விதமாக இவர் என்ன செய்தார்? உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றைப் பெற்ற இவரை சீன அரசாங்கம் சிறையில் அடைத்திருக்கிறது. இவருக்கு நோபல் பரிசு கொடுத்ததையும் கடுமையாக எதிர்க்கிறது. நோபல் பரிசு குறித்த அறிவிப்பு சீனாவில் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. பரிசு அறிவிப்பு செய்த BBC, CNN போன்றவை உடனடியாக முடக்கப்பட்டன. ஏன்? இதிலிருந்து நாம் சீன அரசைக் குறித்து என்ன தெரிந்து கொள்ள முடிகிறது? நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

காமன்வெல்த்: கோலாகலமாய் முடிவுறும் குழப்பம்

பளுதூக்கும் போட்டியில் தங்கம் வாங்கிய ரேணு பாலா வீடு திரும்ப எந்தவித போக்குவரத்து ஏற்பாடும் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரக் காத்திருப்புக்குப்பின் ஒரு ஆட்டோ பிடித்து வீடு போய் சேர்ந்தார். இந்தக் கஷ்டங்களுக்கு இடையிலும் தங்கள் திறமையை நிரூபித்து வரும் இந்திய வீரர்களின் மன உறுதியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

இசைவழி ஓடும் வாழ்க்கை – பகுதி 2

ஒளரங்கசீப் தன் சபையிலிருந்த சங்கீத மேதைகளைப் பாடவிடாமல் பல்லாண்டுகள் தடை விதித்திருந்தான். நாஜிக்கள் ஐரோப்பியரல்லாத மற்ற அனைவரின் இசைக்கும் தடை விதித்திருந்தனர். கம்யூனிஸ நாடுகளில் ‘இயக்கப் பாடல்கள்’ தவிர மற்ற அனைத்து இசைவகைகளையும் தடை செய்திருந்தனர். தண்டிப்பும், சிறைச்சாலைகளும், கட்டாய உழைப்பு முகாம்களும், நொறுக்கப்பட்ட பியானோக்கள், வயலின்கள், உடைக்கப்பட்ட விரல்கள், அறுக்கப்பட்ட குரல் நாண்கள் – எதுவும் இசையை ஒழிக்க முடியவில்லை.

மான்பூண்டியா பிள்ளை

கஞ்சிராவில் விடாமல் சாதகம் செய்து, மிக வேகமான உருட்டுச் சொற்களைக் கூட தெளிவாகவும் இனிமையாகவும் வாசிக்கும் திறனை பெற்றார் மான்பூண்டியாப் பிள்ளை. அவர் கற்பனைக்கு உதித்த நடை பேதங்கள், மொஹ்ராக்கள், கோர்வைகள் ஆகியவை அதற்கு முன்னால் எவருக்குமே தோன்றாத புது வழியில் அமைந்திருந்தன. அவர் வாசிப்பைக் கேட்டவர்கள் எல்லாம், “கர்நாடக இசையில் ராகங்களின் நுணுக்கங்களை எல்லாம் வெளிக் கொணர தியாகபிரம்மம் தோன்றியது போல, லய நுணுக்கங்களை உலகத்தாருக்கு எடுத்துச் சொல்லத் தோன்றியவர் இவர்”, என்று கூறி மகிழ்ந்தனர்.

மாஃபியாக்களை எதிர்க்கும் சிஸிலிய மக்கள்

இத்தாலி என்றாலே நமக்கு மாஃபியா நினைவு வருவது சகஜம். மேலும் ஃபாசிஸம், முசோலினி இத்தியாதிகளோடு, ரோம், வாடிகனின் ஊழல்கள், டான் ப்ரௌன் நாவல்கள் என்று பல இருண்ட அத்தியாயங்கள் நினைவும் வரும். ஒரு காலத்தில் இத்தாலி என்றால் அழகுப் பெட்டகங்களான பெண்கள் – சோஃபியா லொரென், ஜினா லோலாப்ரிகெடா, “மாஃபியாக்களை எதிர்க்கும் சிஸிலிய மக்கள்”

வலைவெளியில்: உடுமலை.காம்

இணைய தளங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் புதிய பகுதி: தமிழில் நல்ல தரமான புத்தகங்களை வாங்குவதற்கான சிறந்த தளமாக இருக்கிறது உடுமலை.காம். உடுமலைப்பேட்டையிலிருந்து இந்நிறுவனம் இயங்குவதால் இத்தளத்திற்கு இப்பெயர். இத்தளத்தில் புத்தகங்களை எழுத்தாளர் வாரியாகவும் வகைகள் வாரியாகவும் தேட வசதியிருக்கிறது. இந்தியாவுக்குள் 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் தபால் செலவு ஏதும் இல்லாமல் இலவசமாகவே அனுப்பி வைக்கிறார்கள்.

மகரந்தம்

ஒரு விலங்குக்கு சுயபிரக்ஞை இருக்கிறதா என்று கண்டுபிடிக்கச் செய்யப்படும் பரிசோதனை அதன் சருமத்தில் ஒரு இடத்தில் வண்ணமடித்து அதன் முன் கண்ணாடியை வைப்பது. அந்த விலங்கு கண்ணாடியை பார்த்து தன் சருமத்தில் அந்த குறிப்பிட்ட வண்ணமடித்த பகுதியைத் தொட்டால் அதற்கு சுயபிரக்ஞை உண்டாம்.

வலையில் சிக்கித் தவிக்கும் அச்சுத்தொழில்

பல நூறு ஆண்டுகளாக ஆளுமை செய்து வந்த அச்சுத்தொழில் ‘இணைய புரட்சியால்’ கலக்கம் கண்டுள்ளது. இக்கட்டுரையை நீங்கள் படிப்பதே இத்துறையின் அதி வேக முன்னேற்றத்தால். அச்சு மீடியாவில் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் அடங்கும். இவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ, இவர்கள் சற்று தடுமாறும் நிலையில்தான் உள்ளார்கள். தொழில்நுட்பத்தை வியாபாரரீதியாகப் புரிந்து கொண்ட நிறுவனங்களே வெற்றி பெருகின்றன.

பந்தி

கல்யாணவீட்டுப் பந்தியில் பரிமாறும் வேலையை பெரும்பாலும் கல்யாண வீட்டுக்காரர்களேதான் கவனித்துக் கொள்வார்கள். அதை ஒரு கடைமையாகச் செய்யாமல் உரிமையுடன் இழுத்துப் போட்டுக் கொண்டு ஓடியாடி வேலை செய்வதை மனசும், உடம்பும் நிறைந்து மணமக்களின் பெற்றவர்கள் பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். ‘நம்ம கோமு கல்யாணத்துக்கு வேலாயுதம் மாப்ளே அலைஞ்ச அலைச்சல மறக்க முடியுமா? கடைசி பந்திவரைக்கும்லா நின்னு கவனைச்சுக்கிட்டான்!’

குணங்குடியார் பாடற்கோவை

எல்லோரும் நாத்திகம் பேசும்போது ஒற்றைத் தனியாளாய் எதிர் நின்று வாதாடுபவர் இருளப்பப் பிள்ளை பெரியப்பா. சிலசமயம் திருவனந்தபுரம் வாசம். எனவே, ‘கேரளாக் கொம்பையா’ எனப்பட்டப்பெயரும் உண்டு. வெற்றிலை – பாக்கு – புகையிலைப் பழக்கமும், பீடிப்புகையும் உண்டு. அவர்தான் சித்தர் பாதை பயின்றவர். சீட்டுக்களி இல்லாதபோது, ஆள் சேராதபோது உற்சாகமான மனநிலையில், அவர் தொண்டை திறந்து கம்பீரமாகப் பாடுவது மஸ்தான் சாகிபு பாடல்கள்.

களமும், ஐந்து கவிதைகளும்

உன் பழைய கடிதங்களை எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
உன் முகவரியை உறையில் விட்டு விட்டு
ஊரைத் தெருவை உன்னைக் கிழித்தெறிந்து விட்டது
காலம்

வாசகர் மறுமொழி

காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி, மிக அழகாக எழுதிய ஒரு ஆய்வுக்கட்டுரை. எத்தனை தகவல்கள். முற்றிலும் புதியது.நானும் காந்தளூர்ச்சாலை குமரி எல்லை என்று நினைத்திருந்தேன். முற்றிலும் வேறுபட்ட ஒரு ஆய்வு. நான் அறிந்த சரித்திரத்தின் படி திருவனந்தபுரம் என்பது வெகு சமீபத்திய நகரம். ஒரு நானூறு ஆண்டுகள் இருக்கலாம் எனபதுதான். அதிலும் வேணாடு அரசர்கள்தான் அதை தலைநகராக கொண்டு ஆண்டனர்.

விஷ்ணுக்ராந்தி

இன்று ஏதோ சாடிலைட் என்கிறார்கள், மேலே இருந்து படம் எடுக்கும் என்கிறர்கள், அதை வைத்து மொத்த வரைபடம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அவன் பார்த்தது கிடையாது. ஏதோ இண்டெர்னெட் ஓட்டவேண்டுமாம். ஆனால் பழய காலத்தில் எப்படி மகாராஜா இங்கு தான் கோட்டை வேண்டும் என்று தீர்மானித்தார். இங்கு தான் குளம் வேண்டும் என்றார்.இங்கு ஊர் அமைத்தார். எப்படி முடியும்.

நண்பேன்டா..!

கிட்டத்தட்ட அதே போல் இருந்த என்னுடன் முதல் பெஞ்சில் அமர்ந்தான். மேல் காகிதம் பிரிந்ததும் ஒட்டும் self adhesive tape போல இருவரும் ஒட்டிக் கொண்டோம். 200 மீட்டர் தள்ளி இருக்கும் பள்ளிக்கு சைக்கிளில்தான் செல்வேன் என்னும் வீம்பு கொண்ட விடலைப் பருவம். பின்னே எம் குலப் பெண்டிருக்கு முன்னே கால்நடையாகச் செல்வது இழுக்கல்லவா?

Oktapodi – அனிமேஷன் குறும்படம்

இரு அழகிய ஆக்டபஸ்களின் காதல் வாழ்க்கையில் நேரும் திடீர் திருப்பம். பிரிந்த ஆக்டபஸ்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனவா? இந்திய வணிக சினிமாவுக்கு ஏற்ற கதை தான். இந்த கதையை அற்புதமான அனிமேஷனை கொண்டு உருவாக்கிய கலைஞர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்த குறும்படம் பல திரைப்பட விழாக்களில் கலந்து “Oktapodi – அனிமேஷன் குறும்படம்”