சுமார் 20 வருடங்கள் முன்னால் நண்பர் எனக்கு பீட்டர் காப்ரியேலை அறிமுகப் படுத்தி இருந்தார். குறிப்பாக இந்தப் பாட்டை, இந்த இசைத் தொகுப்பை அவர்தான் எனக்கு ஒரு ஒலிநாடாவாக வாங்கிக் கொடுத்திருந்தார். சூழலில் நிறைய தொழிலாளர்கள் என்பதால் இந்தப் பாட்டு அன்று உடலுக்குள்ளெல்லாம் பயணித்து மனதைப் பிழிந்தது.
Category: இதழ்-35
மீன்கள் அன்றும் இன்றும்
‘மீன்கள் அன்றும் இன்றும்,’ நூலை எழுதியது முனைவர் ச.பரிமளா. தமிழ்ப்பல்கலைக்கழகம் 1991-இல் வெளியிட்டது. சிலர் மணக்கோலத்தில் கூடக் கிழவன் போல் தோற்றம் தருவதுண்டு. அதுபோல, வாங்குபோதே பழம் புத்தகமாகத் தோன்றியது. விலை குறிப்பிட்டிருக்கவில்லை. 280 பக்கங்கள் கொண்ட டெமி அளவிலான நூலுக்கு, கழிவு போக, என்னிடம் ஐம்பத்தி நான்கு ரூபாய் வாங்கினார்கள்.
பொது பண்பாட்டுக்குள் நுழைந்த வானியல்
வேதாந்த துறவியாக இருந்த ஜான் டாப்ஸன் இரவு நேரங்களில் மடாலய சுவரேறி குதித்து தொலைநோக்கி வழியாக விண்மீன்களை பார்த்துக் கொண்டிருப்பார். இந்த தியானத்துக்காக மடாலயத்தை விட்டு செல்ல நேர்ந்தது. அறிவியல் ஒரு ஆன்மிக இசையாக முடியுமா என்றால் மானுடம் உருவாக்கிய எந்த ஆன்மிகக்குறியீட்டைக் காட்டிலும் வலுவான ஆன்ம உணர்வுகளை “பொது பண்பாட்டுக்குள் நுழைந்த வானியல்”
பியானோ
பியானோவுடனான கலைஞனின் உறவென்பது மிகவும் நெருக்கமானது. இருவருக்கும் இடையில் நிகழும் உரையாடலே இசையாக நிகழ்கிறது. பீத்தோவன் தன் காதலியின் நினைவாக உருவாக்கிய இந்த இசைக் கோர்வை தன் காதலியுடனான காலம் தாண்டியும் நிலைத்த உரையாடலாக கருதமுடியும். இசையின் நுணுக்கம் அறிந்தவர்கள் இந்த உரையாடலின் மெல்லிய அந்தரங்கங்களை ரசிக்க முடியும். “பியானோ”
ஆவி கதை
பதினொரு மணி இருக்கும். மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்து டம்பளரைத் தேடினேன். கிடைக்கவில்லை. பாட்டில் மூடியை போர்டின் நடுவில் வைத்து என் விரலை நடுக்கத்துடன் அதன் மீது வைத்தேன். நகரவில்லை. கண்களை லேசாக மூடிக்கொண்டேன். சாமியை வேண்டிக்கொள்ளலாம் என்று யோசித்தேன். சாமிக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்? சாமிக்கும் ஆவிக்கும் ஆகாது என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.
கார்ட்டூன் இதழ் 35
ராகம் தானம் பல்லவி – பாகம் ஐந்து
மேலுள்ள விளக்கம் உங்களுக்கு உபயோகமாகலாம். உதாரணமாய், ” இன்னாராகிய பாடகர் பாடிய திரையிசையை கேட்டிருக்கிறேன், அவருக்கு குரல் போகுங்க” என்று ஒருவர் சொன்னால், அது உண்மையென்றால் இதுவரை அப்பாடல்களை கேட்டவர்கள் அப்படிச் சொல்லவில்லையே, ஒருவேளை அவர்களனைவருக்கும் காது லேதா, இல்லை இசையின் புறவய அங்கத்தை, அகவயமாய் அள்ளித்தெளிக்கும் குறைசொல்பவரின் இசையறிவு செம்மையடையவில்லையா என்பதை பாகுபடுத்தி நீங்களே உணர்ந்துகொள்லலாம். நீங்களே உங்கள் கேள்திறன், அறிவை வைத்துக் கேட்டுச் சரிபார்த்தும் கொள்ளலாம்.
ஆயிரம் தெய்வங்கள் – பகுதி 2
சொர்க்க லோகத்தைக் கண்டுபிடித்த எகிப்திய மதமாகட்டும், கிரேக்க மதமாகட்டும் மன்னர்களுக்கு மட்டுமே சொர்க்கவாசல் தருகிறது. கடவுள் மன்னனை தண்டிப்பதில்லை. மன்னனே கடவுள். இப்படிப்பட்ட அகங்காரத்தைத் தட்டிக்கேட்டதால் தகராறு வந்தது. தவறு செய்தால் மன்னனுக்கும் தண்டனை உண்டு. ஆண்டவனின் ராஜ்ஜியத்தில் ஏழை பணக்காரன் இல்லை. இப்படியெல்லாம் பேசியதால் ஏசுவுக்கு தண்டனை கிடைத்தது.
ஹாலிவுட் உருவாக்கிய மனநோய்
MPD என்பது உண்மையாலுமே ஒரு மனநிலை பிறழ்ச்சி நோய்தானா அல்லது வெறும் ஹாலிவுட் ‘பில்டப்’தானா? அல்லது அதைவிட மோசமாக தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் மனசிகிச்சையாளர்களே இந்த நினைவுகளை உள்செலுத்துகிறார்களா? அன்னியன் திரைப்படத்தில் வருவதுபோன்ற மனப்பிறழ்ச்சிக்கு சாத்தியக்கூறுகள் உண்டா?
மிருதங்கம் – தஞ்சாவூரும் புதுக்கோட்டையும்
மிருதங்கத்தில் கண்கள் உண்டு. வலந்தலையையும் தொப்பியையும் இணைக்கும் எட்டு ஜோடி இடங்களை கண்கள் என்று குறிப்பதுண்டு. அனைத்து கண்களிலும் ஒரே விதமாய் ஸ்ருதி சேர்ந்தால்தான் கேட்க இனிமையாக இருக்கும். நடைமுறையில் அத்தனை கண்களிலும் சீராய் ஸ்ருதி சேர்வது கடினம். அழகநம்பிக்கோ ஒரு கண்ணில் ஸ்ருதி சேர்ந்தாலே, நாதம் வெகு சௌக்யமாய் வெளிப்படுமாம். ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருந்த அழகநம்பியைப் பற்றி சிலேடையாய், “அழக நம்பிக்கு ஒரு கண்ணே போதும்”, கூறியுள்ளனர்.
தெரியாதது
பிரபஞ்சத்தை அறிய முயற்சி. மண்ணாங்கட்டி. ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தாலே சரி என்றுதான் தோன்றுகிறது. என்ன வித்தியாசம்? ஒன்றும் இல்லை. நான் SETI ஆய்வுக்கூடத்தில் வேலை பார்க்கிறேன். அந்த ஆய்வுக்கூடத்தில் ஒரு கழிவறை இருக்கிறது. அதை சுத்தம் செய்யும் ரோபோவிற்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? எதற்கு இருக்கிறோம்? இந்த உலகமே ஒரு அபத்தமா? absurd piece of crap? oh God, தலைவலி… I need a painkiller”
வாசகர் மறுமொழி
சொல்வனத்தில் வரும் தொடர்கள் சிறப்பாகவே இருக்கின்றன. நான் மிகவும் விரும்பிப்படித்த நாஞ்சில்நாடனின் ‘பனுவல் போற்றுதும்’, அருண் நரசிம்மனின் ‘ராகம் தானம் பல்லவி’ இரண்டும் திடீரென்று நின்றுபோனது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தைத் தந்தது. தொடர்கள் இடைவெளியில்லாமல், திடுதிப்பென்று நிறுத்தப்படாமல் வெளிவருவது ஒரு இதழின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். தொடரிலும் தொய்வில்லாமல் இருக்கும். ஆசிரியர் குழு கவனிக்கும் என நினைக்கிறேன்.
காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி
பேரரசர் இராஜராஜ சோழன் தஞ்சையில் தமது பெயரால் ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்ற சிவன் கோயில் எடுப்பித்து 1,000 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இதனையொட்டித் தமிழக அரசின் முன்முயற்சியால் மிகப்பெரும் கேளிக்கைகள், இராஜராஜனோடு தம்மை ஒப்பிட்டுக்கொள்ளும் ஆட்சியாளர்களின் அகம்பாவத்தைத் திருப்தி செய்யும் கூத்து அரங்கேற்றங்கள் எல்லாம் நிகழ்ந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழக வரலாற்றில் இராஜராஜ சோழன் தொடக்கிவைத்த சில போக்குகள், அவை சுட்டிக்காட்டும் நுண்ணரசியல் ஆகியவை பற்றி விவாதிக்கும் ஆய்வே இக்கட்டுரை.
உலைகலனாகுமா தமிழகம்? – இறுதிப் பகுதி
அரசியல் கொள்கைகள் காரணமாக தொழிற்துறை முடங்கிக் கிடந்த நிலையில் ஓரளவு படித்த வங்காளிகள் கூட வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வேலை வாய்ப்பை நாடியும் வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்ளவும் சென்றனர். இதர வங்கத் தொழிலாளர்கள் ஆளும் அரசின் செல்லப் பிள்ளைகளாய் உற்பத்தியைப் பெருக்காமலேயே உண்டி பெருக்கி ஒரு வகையில் வீணான வாழவு வாழ்ந்தனர்.
வழி
கணம்தோறும் நடந்துவிடும்
செயல்களைத் திருத்திக்கொள்ளும்
வாய்ப்பு மறுக்கப்படும்
வழியென்றறிந்து
கவனமாக அடி வைக்கிறேன்
மகரந்தம்
மானுட முயற்சிக்குப் பூமி அளவில் தாக்கம் இருப்பதால்தானே எத்தனையோ மிருகங்கள், ஜீவராசிகளை நாம் அழித்திருக்கிறோம், அது தெரிந்தும் மானுடரால் பூமி அளவில் பாதிப்பில்லை என்ற கருத்து இருக்க என்ன காரணம், எல்லாம் வல்ல கடவுள் என்ற ஒரு கற்பிதம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை இதில் எத்தனை பங்கு வகிக்கிறது?