அமெரிக்க ராணுவத்தினர் அடாவடி ஆக்கிரமிப்புக்களுக்காக வெளி நாடு செல்லும்போது MRE (அப்படியே சாப்பிடத் தகுந்த உணவு) என்ற பட்டைச் சாதப் பொட்டலங்களைக் கொண்டு போவார்கள். போர் முனையில் ஃபிரிட்ஜ் இல்லாத இடத்தில்கூடக் கெட்டுப் போகாமல் இருக்க, அதிகக் காற்றழுத்தத்தில் சூடாக்கிக் கிருமி நீக்கம் செய்வார்கள். இந்த டெக்னாலஜியையும் நாசா உபயோகித்துக் கொள்கிறது. அமெரிக்க நாக்கு போர் முனையில் கூட சுடச்சுட சாப்பாடு கேட்கிறது போலிருக்கிறது.
Category: இதழ்-33
கார்ட்டூன் – இதழ் 33
ஆண்பெண் போட்டி
பெண் வீட்டுக்குவந்தா செல்லுலே அரட்டை, இல்லாட்டா காதிலே ஐ-பாட். நாலுதடவை கத்தினாத்தான் திரும்பிப் பாப்போ. பையன் கம்ப்யூட்டர் முன்னாலே உக்காந்தான்னா ஒரே இரைச்சல். ரெண்டுபேரும் எது கேட்டாலும் நீ பேசறது ஒண்ணும் புரியலியேன்னு முகத்தை வச்சுப்பா. ஷேக்ஸ்பியர்லேர்ந்து பெர்னாட் ஷா வரைக்கும், நாம படிக்காத இங்க்லீஷா?
ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர்
ஒரு நாளின் எந்த மணித்துளியிலும் வெடிகுண்டு வெடிக்கலாம். கலவரம் நிகழலாம். நிச்சயமற்ற தருணங்கள். வலி கொடுக்கும் நிகழ்வுகள். இந்த புகைப்படங்களை பார்க்கையில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையின் பலியாடுகள் ஈராக்கியர்கள் மட்டுமல்ல என்று புரியும்.
இரண்டு கவிதைகள்
பால் மறக்காது
பசியும் அடங்காது
பற்றி உறிஞ்ச முன்னும்
பிஞ்சு உதடுகளைப்
பதறப் பதற
முலையினின்றும் பிடுங்கி
மூலையில் எறிந்த தாய்
02. மீண்டெழுந்த நாட்டுப்புற இசை
செல்லோவை இசைக்கும் முறையும் மிக வித்தியாசமானதுதான். இரண்டு கால்களுக்கு நடுவே வயலினைத் தலைகீழாகப் பிடிப்பது போல் பிடிக்க வேண்டும். செல்லோவைப் பிடிப்பது மட்டுமல்ல இசைப்பதும் ஆரம்பகட்ட ரசிகர்களுக்குச் சிக்கலானதுதான். கிட்டத்தட்ட நம் முகமிருக்கும் உயரத்துக்கு எந்தவித பிடிமானமும் இல்லாமல் இடது கை அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். தந்தியை இசைக்கத் தொடங்கினால் முழு கையை அங்குமிங்கும் ஓடிப் பிடிப்பது போல் தோற்றமளிக்கும். ஒரு ஸ்டைலான வாத்தியக்கருவியைப் போல் பார்த்தவுடன் நம்மை ஈர்க்காதது என்னவோ உண்மைதான்!
வாசகர் எதிர்வினை
ஏ.ஆர்.ரஹ்மான் இப்போட்டிகளுக்காக அமைத்திருக்கும் பாடல் மிகவும் மோசமாக இருக்கிறது, அதை மீண்டும் வடிவமைக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே சொல்கிறார் காமன்வெல்த் போட்டிகளின் கமிட்டியில் பணியாற்றும் வி.கே.மல்ஹோத்ரா. இதைவிட ஒரு கலைஞனை அவமானப்படுத்தவே முடியாது. ரஹ்மானின் பாடல்கள் கேட்டவுடனே பிடிக்கக்கூடியவை இல்லை. ஆனால் தொடர்ந்து கேட்பதன் மூலம் அப்பாடல்கள் பெரிய வெற்றியைப் பெறக்கூடியவை.
வெறும் பலகையும், இரும்புத் திரையும்
மனித இயல்பு அடிப்படையில் களங்கமில்லாதது: எதுவும் போதிக்கப்படாத குழந்தைப் பருவத்திலும், நாகரீகத்தின் சுவடுகள் பதிக்கப்படாத வனவாசத்திலும் மனிதன் உள அளவில் அடையக்கூடிய வல்லமைகள் அளவிறந்து இருக்கின்றன என்ற கருதுகோளை நம்மில் பலர் ஏற்றுக் கொள்வோம் என்று நினைக்கிறேன். தரமில்லாத கல்வி அவனது அறிவை மேம்படுத்தத் தவறுகிறது, நாகரீகமயமாதல் தொழில்நுட்பச்சார்பை அதிகரிக்கின்ற காரணத்தால், அதன் தீவினையாய் அது மனித மனதை வக்கிரப்படுத்துகிறது என்ற வாதம் இந்தக் கருதுகோளின் நீட்சியே.
நவீன கால கிரிக்கெட் – விளையாட்டல்ல
இந்த ஊழல் விவகாரங்கள் இத்தோடு களையப்பட்டுவிடுமா என்றால் இல்லை என்பதுதான் சோகமான நிதர்சனம். கிரிக்கெட் இப்போது இருக்கும் தன்மையில் தொடர்ந்து விளையாடப்படுமானால் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடையாது. கிரிக்கெட்டின்சூழமைப்பே முற்றிலுமாக மாறிவிட்ட நிலையில் ஆட்டத்தின் விதிகளும் தன்மைகளும் அப்படியே இருப்பதில் என்ன நியாயம்?
மிருதங்கம் – ஒரு பறவைப் பார்வை எழுப்பும் பல கேள்விகள்
இன்றிருக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, சங்க காலம் முதலே தமிழகத்தில் தாள இசைக் கருவிகள் பல இருந்தன என்பதும், அவை ஆடலுக்கும், திருமணம் போன்ற விழாக்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன என்பதும் தெளிவாகின்றன. மராட்டியர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் தோலிசைக் கருவிகளும், அவற்றை முழக்கும் முறைகளும் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தன.
அக்கமகாதேவியின் வசனங்கள்
நிலையான வாழ்வுக்கு மல்லிகார்ஜூனனே அடைக்கலம் என்று சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால் அவ்விதமான எண்ணத்தோடு வாழ்க்கையை எதிர்கொள்வது எளிதான செயலல்ல. வேதனையானது. நெருப்பில்லாத சூட்டில் வெந்து கருகுவதுபோல. வடுவில்லாத காயத்தல் நொந்து கலங்குவதுபோல. எவ்விதமான புவியியல் இன்பமும் இல்லாமல் வாடிவதங்குவதுபோல.
அனிமேஷன் திரைப்பயணம்: 04 – தொழில்நுட்ப வரலாறு
மனித சினிமாக்களின் மிகப் பெரிய எதிரி ஹீரோ மற்றும் இமேஜ் சமாச்சாரங்கள். அப்படி, இப்படி இருந்தாலும் கூட ஷாருக்கான் மற்றும் ரஜனிக்காக படம் ஓடுவதைப் போல அனிமேஷனில் எதிர்பார்க்க முடியாது. அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஸ்டார் வால்யூ எல்லாம் கிடையாது. முதல் விஷயம் ’திரைக்கதை’. அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமான திரைப்படங்களை விட மிகத் தெளிவாகக் கதை சொல்லப்பட வேண்டும்.
மகரந்தம்
தோரியத்தின் ஒரே பிரச்சினை அதில் மிஞ்சும் பொருள்களை வைத்து அணுகுண்டு தயாரிக்க முடியாது. இந்த ஒரு காரணத்துக்காகத்தான் உலக அணுசக்தியில் தேர்ச்சி பெற்ற நாட்டின் அரசுகள் தோரியத்தைப் பயன்படுத்தாமல், அதைவிட பன்மடங்கு கடினமான முயற்சியிலேயே கிட்டக் கூடிய யுரேனியத்தைத் துரத்தினார்கள். இப்போது நம் தேவை குண்டுகள் அல்ல, மின்சக்தி.
பெண்ணின் நெருப்பு
கண்ணகி கற்பனையும் வரலாறும் கலந்து ஒரு நீங்காத தொன்ம நினைவாக தமிழ் மனதில் வாழ்கிறாள். சலேம் சூனியக்காரி விசாரணைகளையும், சந்தையையும், அடிப்படைவாத கிறிஸ்தவத்தையும் கொண்ட அமெரிக்கப் பண்பாட்டில் ஒரு கண்ணகி வழிபாட்டை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதன் மலினப்படுத்தும் பண்பாட்டில் அடக்கப்படும் பெண்மையின் மீதான ஆண்-சமுதாயத்தின் அச்சப்பார்வை, கூடிப்போனால் க்கேரி அல்லது ஃபயர்ஸ்டார்ட்டர் போன்ற பயமுறுத்தும் திரைப்படங்களாக மட்டுமே வர முடியும்.
வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 3
விக்கிலீக்ஸ்ஸீன் கசிவுகள் அமெரிக்காவில் பெரும் மாற்றத்தையும், அரசின் கொள்கைகளில் பெரும் மாறுதலையும், ஒரு பெரும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று நம்பிக் கொண்டிருந்த ஜூலியன் அசாங்கேயின் எண்ணத்தில் மண் விழுந்ததும் இல்லாமல், அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டம் வேறு பாய்ந்திருக்கிறது. கற்பழிப்புக் குற்றச்சாட்டில் அவரைப் பிடித்து உள்ளே வைப்பதும் வெளியில் விடுவதுமாக ஸ்வீடன் அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. ”நான் நம்பிய நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் அரசின் சார்பாக அடக்கி வாசித்து மக்களை வஞ்சித்து விட்டார்கள் நாங்கள் மோசம் போய் விட்டோம்” என்று விக்கிலீக்கினர் தனியாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இசைமேதையின் புகைப்படம்
பிற்பாடு இசைவகுப்புகளில் ஹார்மோனியம் வாசிக்கும் போது ராகங்களை இனங்கண்டு எளிதாக பயில முடிந்ததற்கு சிறுவயதிலிருந்தே கேட்டுக் கேட்டுப் பழகியிருந்த ஜி.ராமனாதனின் பாடல்களே காரணமாயிருந்தன. குறிப்பாக சாருகேசி. ’ஆடமோடிகலதே’ என்னும் தியாகராஜ கீர்த்தனையை பாடமாக எழுதிக் கொண்டு மலைத்தபடியே சாருகேசியை வாசிக்க முயலும் போது மெல்ல பிடிபட ஆரம்பித்தது. என்ன ராகமென்றே தெரியாமல் ஏற்கனவே வாசித்துப் பழகியிருந்த ‘வசந்தமுல்லை போலே வந்து’ பாடலின் ஸ்வரங்களுக்குள் விரல்கள் சென்று திரும்பின. வெற்றிலை புகையிலையைத் துப்பிவிட்டு வந்து உட்கார்ந்த இசையாசிரியர் கிருஷ்ணன்ஸார் சொன்னார். ‘அப்பிடியே மன்மதலீலையை வென்றாரும் வாசிச்சுரு. வெளங்கிரும்.’ நிமிர்ந்துப் பார்க்க தைரியமில்லாமல் ஹார்மோனியத்திலேயே தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தேன்.
நாசகார வலை
அன்று இரவு வீடு திரும்பியதும் கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். பிரபல இணையதளம் ஒன்றில் அவள் செய்திருந்த விளம்பரத்தைக் கண்டதும் எனக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. ”ஆரோக்கியமான இளம் பெண்ணின் உடல் உறுப்பு(கள்) விற்பனைக்குத் தயார். கார் வாங்க இருப்பதால், காரை ஓட்டுவதற்கு இடைஞ்சல் இல்லாத வகையில் எந்த ஓர் உறுப்பும் விற்கப்படும். தொடர்பு கொள்ளுங்கள், பேசுவோம்..”
ஐம்பது மனிதர்கள், ஒரு கேள்வி
பல்வேறு தளங்களைச் சேர்ந்த ஐம்பது மனிதர்களிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி. பதில்களில் தொனிக்கும் உணர்வுகளும் பலதரப்பட்டவை. அந்த கேள்விக்கான உங்கள் பதில் என்ன?