ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே

கண்ணுக்குத் தெரியாத ஏஜெண்டுகளால் நாம் கட்டுப்படுத்தப்படுகிறோம் என்ற நம்பிக்கை நம்மை ஆவிகளின் உலகுக்கு அப்பாலும் இட்டுச் செல்கிறது. உயிர்களை மேலிருந்து கீழாக (ஒரு படியமைப்பில்) படைத்த ஒரு ’புத்திசாலித்தனமான வடிவமைப்பாளன்’கூட நம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஏஜெண்டே.

வன்முறையின் வித்து – இறுதிப்பகுதி

மாஓவின் அடுத்த சுய-விளம்பரம் 1960-களில், சீனாவில் கொடிய பஞ்சம் நிலவிய காலகட்டங்களில், பெரிய அளவில் நடைபெற்றது. அந்த வருடத்தில்(1960) மட்டும் 20 மில்லியன் மக்கள் பசியால் மடிந்தனர். அதே காலகட்டத்தில், மாஓ பிறநாடுகளில் இருந்த இடது-சாரி அமைப்புகளுக்கு பணத்தை வாரி வழங்கி, வேற்று நாட்டு மக்களிடமும் தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்த முயன்றார். இந்த காலகட்டம் தான் ஆராய்ச்சியாளர்களால் மிகுந்த கவனத்திற்கு உட்படுத்தப் பட வேண்டியதாக கருதுகிறேன்.

ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 1

1914 ஆம் ஆண்டு சிபேலியஸ் தன் இரண்டாம் ஒத்திசைவை அமெரிக்காவின் மேடைகளின் ஒலிக்கவிட்டார். தனக்கு முன்னாலேயே தன் புகழ் அமெரிக்க மண்ணை மிதித்திருந்ததைக் கண்டு சந்தோஷம் அடைந்தார். ஆனால் அடுத்த பதினைந்து ஆண்டுகளில் மக்களும், இசை விமர்சனங்களும் தன்னை மறந்துவிடுமென அவர் நினைத்து பார்த்திருக்கமாட்டார்.

எமன்

எங்கள் வீட்டின் நான்கு குடித்தனங்களுக்கும் சொர்க்கம் நிச்சயம் மேலேதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீட்டின் மொட்டை மாடிதான் எங்கள் சொர்க்கம். பெரிய திடல் மாதிரி அது இருக்கும். நாலு பக்கமும் மூன்றடி உயர கைப்பிடிச் சுவர் மொட்டை மாடியை ஒரு குளம் மாதிரி காட்டும். சிறுவர்கள் விளையாட்டு மைதானம் அதுதான்.

அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – இறுதிப் பகுதி

குளோபல் வார்மிங் என்ற அறிவியல் கருதுகோள் இன்றைய உலக அரசியலின் ஒரு பகுதியாக வெற்றிகரமாக நிறுவனப்படுத்தப்பட்டு விட்டது. குளோபல் வார்மிங் என்ற பெயரில் வெளியிலிருந்து வரும் அத்தனை அழுத்தங்களையும் பாரதம் நிராகரிக்க வேண்டும்.

சில்வர் டோன்ஸ்

பாடகர்கள்,வாத்தியக் கலைஞர்கள் என்று எத்தனையோ பேர் அந்தக் குழுவில் இருந்தாலும் அந்த வயதுக்கேயுரிய ரசனையோடு எனக்கு டிரம் வாசிப்பவரின் மீதுதான் காதல். அகலக் காலர் வைத்த சட்டை பித்தான்களை திறந்து விட்டு கழுத்துச் சங்கிலி தெரிய ஸ்டைலாக குச்சிகளை சுழற்றியபடியே
அவர் டிரம் வாசிக்கும் போது டிரம்முடன் சேர்ந்து என் மனமும்
அதிரும்.

மகரந்தம்

எயிட்ஸ் மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா? தென்-கொரிய இளைஞர்களை பொருளாதாரத் தேக்கம் எந்த அளவில் பாதித்திருக்கிறது? அமெரிக்கர்கள் தொலைத்த முக்கியமான ரகசிய ஆவணங்கள் என்னவானது?

வெட்டவெளியில் மோதும் உடுக்கையொலி

ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் சிவராம காரந்த் கன்னடத்தில் எழுதிய நாவல் இது. காலம் கடந்து வந்திருந்தபோதிலும் இன்றைய சமூகத்தின் கரிய நிழல் நாவலில் படிந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். தீர்வில்லாத அக்கேள்விக்குச் சமூக விடுதலை மட்டுமே சரியான தீர்வை வழங்கமுடியும். ஒடுக்கப்பட்ட தலித்துகளை முதன்முதலாகப் பிரதானமான கதைப் பாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு என்று இந்த நாவலைச் சொல்லலாம்.