சிறு பிள்ளைக் குறும்பு

காகம் சிரித்தது.
கடவுளின் ஒரே மகனை, அப்புழுவைக் கடித்து
நெளியும் இரு துண்டுகளாக்கியது.வால்பாதியை ஆணுக்குள் திணித்தது,
காயப்பட்ட முனையை வெளியே தொங்க விட்டு.

ஐஸ்கிரீம் தின்பவர்களைப் பற்றிய சிலகுறிப்புகள்

பெரியவர்களும்
பெரியவர்கள்போல வளர்க்கப்படும்
குட்டிக்குழந்தைகளும்
தவறாமல் உடனுக்குடன்
காகிதக்கைக்குட்டையால்
துடைத்துக்கொள்கிறார்கள்

குவாலிடி வீதி

அத்திருமண நாள் விசேஷ நாளாக எஞ்சோவுக்குப் படவில்லை. உற்சாகம் தருவதாக இல்லை. மகளின் முகத்திலும் மகிழ்ச்சியைக் காணோம். இன்னும் கொஞ்சம் அழகாக அலங்காரம் பண்ணிக்கொண்டு பளிச் என்று உடுத்திக் கொள்ளேன் என்று மகளிடம் சொல்லிப்பார்த்தாள். அவள் காது கொடுப்பதாக இல்லை.

அந்தரங்கம் யாவுமே, எப்படி எப்படி…

பொதுவாக மின்னணு அந்தரங்க சமாச்சாரங்களை நாம் அலட்சியப்படுத்துகிறோம் அல்லது அறியாமலிருக்கிறோம். ‘அந்தரங்கமாவது மண்ணாங்கட்டியாவது’ என்று சன் கணினி நிறுவனத்தின் அந்நாளைய தலைவர் ஸ்காட் மெக்நீலி 15 வருடங்கள் முன் சொன்னதை யாரும் பொருட்படுத்தவில்லை. இன்று அதுவே வியாபாரம், சமூகம், தனியார் தொடர்பு, அரசியல் மற்றும் மருத்துவ துறையை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது.

உலக நீர் நாள் – மார்ச் 22

மார்ச் 22-ஆம் தேதியை உலக நீர் நாளாக ஐ.நா நிறுவனம் அங்கீகரித்து நீர் நிலைகள் மாசு படுவதையும், நிலத்தடி நீர் சேகரிப்பின் அவசியத்தையும் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இந்த வருடம் நேஷனல் ஜியோகரஃபிக் இதழும் நீர்நிலைகளைப் பற்றிய தனிக்கவனம் எடுத்து ஒரு சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறது. நீர் மாசுபடுதல், “உலக நீர் நாள் – மார்ச் 22”

பாட்டில் குடிநீரின் கதை

சுத்தமான குடிநீர் ஒவ்வொரு மனிதனின் உரிமை. ஆனால் எல்லா உரிமைகளும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இந்த வெற்றிடத்தை பாட்டில் குடிநீர் உற்பாத்தியாளர்கள் மிகத் தந்திரமாக உருவாக்கி, அதைத் தங்கள் பொருட்கள் மூலம் நிரப்புகிறார்கள். இந்த நடவடிக்கையில் இந்தியா, குறிப்பாக சென்னை எதிர்கொள்ளும் பிரச்சினை என்ன? வேறென்ன, சென்னை உலகத்தின் குப்பைத் “பாட்டில் குடிநீரின் கதை”

மகரந்தம்

அவர்கள் மற்றொரு பயங்கர விஷயத்தை கண்டு பிடிக்கிறார்கள். அவர்கள் என்னதான் முயன்றாலும் நிரந்தரமாக உடலை பதப்படுத்தி அப்படியே கெடாமல் வைப்பது இயலாது (குறைந்தது அன்றைக்கு இருந்த தொழில்நுட்பத்துக்கு) ஆறுமாதத்துக்கு ஒருதடவை அதனை மீண்டும் எடுத்து சுத்தம் செய்து பதப்படுத்த வேண்டும். என்ன செய்வது இந்த போராட்டங்களை அன்றைய பாதுகாப்பற்ற சூழலை, அரசியலை எல்லாம் வைத்து உருவாக்கப்பட்ட நாடகம்தான் “Lenin’s Embalmers”.

மௌனத்தின் ஓசை

“கடந்து போகும் காலத்தை எதிர்த்து போராடும் இரு காதலர்கள் தங்களை இனம் கண்டுகொள்ளும் சமயம். அவர்கள் வாழ்வின் அந்த கடைசி வினாடிகள் தம் உயிரின் மேலானது என அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவை கவித்துவத்திற்காக சொல்லப்பட்ட வெறும் வார்த்தைகள் அல்ல. உண்மையிலே அந்த வினாடிகளுக்குப் பின் அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்”. ஏறக்குறைய இப்படித்தான் பாலச்சந்தர் இந்த பாட்டின் சிச்சுவேஷனை இளையராஜாவிடம் விளக்கியிருப்பார். அந்த உணர்வை இந்தப் பாடலில் இளையராஜா சொல்வதற்கு எடுத்து கொண்ட ஆயுதம் – மௌனம்.

சில ஹாலிவுட் திரைப்படங்களின் அறிவியலும், அறிவியல் எதிர்ப்பும்:1

புகழ்பெற்ற ஹாலிவுட் எதிர்கால/அறிவியல் புனைவு திரைப்படங்களின் அறிவியல் எந்த அளவுக்கு சரியானது அல்லது எந்த தத்துவப் பின்னணியில் அறிவியலை அல்லது எதிர்காலத்தை அல்லது இரண்டையுமே அத்திரைப்படங்கள் எதிர்நோக்குகின்றன?

நூலை மீறும் பொம்மைகள்

தெருவில் கோஷமிட்டபடிச் சென்ற போராளிகள் மீது, காவலர்கள் நாய்களை ஏவிவிட்டு கடிக்க வைப்பது, இரண்டு வெள்ளை இன ஆட்கள் கருப்பினப் பெண்களை உருட்டுக்கட்டையால் தலையில் அடிப்பது போன்ற புகைப்படங்கள் பலத்த அபாயங்களுக்கு நடுவே எடுக்கப்பட்டவை. சில வெள்ளை இன அதிகாரிகள், தங்கள் கல்லூரியில் சேரவிருக்கும் முதல் கருப்பு மாணவரை எப்படித் தாக்குவது என்று சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது மறைந்திருந்து எடுத்த புகைப்படமும் பிரபலமான ஒன்று.

அங்காடித்தெரு – ஒரு பார்வை

தமிழ் சினிமா என்பது டெக்னாலஜியின் துணை கொண்டு நிகழ்த்தப் படும் ஒரு பிருமாண்டமான பொழுது போக்குச் சமாச்சாரம் என்ற விதியில் இருந்து வெளி வந்து, சமூக அவலங்களையும் அதன் யதார்த்தம் கெடாமல் சொல்வதற்கு சினிமா என்னும் மீடியாவையும் பயன் படுத்தலாம் என்பதை நிரூபித்து, முறைசாரா ஊழியர்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிக் கொணரத் துணிந்திருக்கிறார் வசந்த பாலன்.

கொஞ்ச நாளைக்கு மகனாக வந்தவன் – 2

அவன் பிரச்னை நரம்புக் கோளாறு அல்ல, உணர்வுபூர்வமானது. அவனுக்கே இதெல்லாம் தானே பழகிக்கொள்ள நாளெடுக்கும். இப்படித் தடுமாற்றங்களில் அமெரிக்கர்கள் நிறைய வைத்தியச் செலவு செய்கிறார்கள். ஆனால் இந்த உணர்ச்சி அலையெழுச்சிகளுக்கெல்லாம் முழு நிவாரணம் என்பது இல்லை. கொஞ்சமாய் சிறு ஆசுவாசம் கிட்டலாம். திகிலுணர்சசி ரொம்ப உள்ளாழத்தில் ஒளிந்திருக்கிறது, எடுக்கிறது சிரமம். ஆனால் விபரீதப் பொழுதுகளில் சட்டென எழும்பி அது கிடுகிடுவென மேலே வருகிறது.

அந்த ஒரு சம்பவம், எல்லாவற்றையும் இழந்தேன்

தம்பியை தூக்கிக் கொண்டிருந்த என்னுடைய தந்தை வலப்புறத்தில் அவனை வேகமாக தூக்கி எறிந்தார். தாயின் கைகளைப் பற்றிக் கொண்டிருந்த என்னை வலப்புறத்தில் பலமாக வெகு தூரத்தில் தள்ளிவிட்டாள். அதன்பிறகு என்னுடைய பெற்றோர்களின் உடல்கள் தனித்தனியாகப் பிரிந்து கிடந்ததைப் பார்க்கமுடிந்தது. என்னுடைய தாயின் உடலும், தலையும் தனித்தனியாக சிதறிக் கிடந்தன.

பில்லா

மெதுவாகத்தான் படியில் ஏறினேன். ஏறும் போது காலுக்கடியில் என்னவோ இருக்கிறதே என்று நினைப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. வாலை மிதித்திருக்கிறேன். பில்லா அப்படியே ‘குபீர்’ என்று என் மீது பாய்ந்தபோது நான் “ஐயோ” என்று கத்திக்கொண்டு ஓடப் பார்த்தேன். பயத்தில் தடுக்கி விழுந்துவிட்டேன். பில்லா கடித்துவிட்டது.

அந்நிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குத் தேவையா?

மத்திய கேபினெட், அந்நிய நாட்டின் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது குறித்தான சட்டம் ஒன்றைக் கொண்டுவர அனுமதி அளித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அடுத்து நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவு வைக்கப்பட்டு, விவாதத்துக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்படலாம்.

இது தொடர்பாக ஒரு கேள்வி-பதில் விவாதம்.

லாபம் இல்லை என்ற நிலையில் மூவர் மட்டுமே கல்வித் துறைக்குள் வருகிறார்கள். ஒருவர்: அரசு. இரண்டாமவர்: மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற தர்ம சிந்தனையுள்ள தனி மனிதர்கள், அறக்கட்டளைகள், மத அமைப்புகள். மூன்றாமவர்: திருடர்கள், பொறுக்கிகள், அரசியல்வாதிகள். இந்த மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். ஜாலியாக சட்டத்தை ஏய்த்து, பணத்தை கறுப்பு, வெள்ளை, நீலம், பச்சை என்று மாற்றி உள்ளிருந்து வெளியே எடுத்துவிடுகிறார்கள். இந்த மூன்றாம் நிலையில் இருப்பவர்கள்தான் இன்று அதிகமாக கல்வியில் நுழைகிறார்கள்.
லாபம் செய்யலாம் என்ற நிலை வரும்போது நியாய சிந்தனை உள்ள பலரும் கல்வித் துறையில் நுழைவார்கள். திருடர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.