பொதுவாக, அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமான திரைப்படங்களை விட மிகத் தெளிவாகக் கதை சொல்லப்பட வேண்டும். மிக நேர்த்தியான திரைக்கதை அவசியம். குத்து மதிப்பான ஸ்க்ரிப்டை வைத்துக் கொண்டு ஸ்பாட்டில் பார்த்துக்கொள்ளலாம், நடிப்பை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற
பேச்சுக்கே இடம் கிடையாது. சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அனிமேஷன் கூட்டு முயற்சியின் உச்சம். வழக்கமான சினிமாக்களில், படப்பிடிப்பு முடிந்தவுடன் காட்சிக்கேற்பப் பின்னணி இசை சேர்ப்பார்கள். அனிமேஷன் திரைப்படங்களில் இசையமைப்பாளர் தொடர்ந்து குழுவுடன் ஒத்துழைக்க வேண்டும். எவரேனும் சற்று சறுக்கினால் அதோகதிதான்.
Category: இதழ்-21
உலகின் மிகப்பழமையான மரங்கள்
Slate.com உலகின் மிகப்பழமையான மரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2000 வருடங்கள், 4000 வருடங்கள் என சர்வசாதாரணமாகக் குறிப்பிடப்படும் இம்மரங்களின் பழமையும், வயதும் ஆச்சரியமளிக்கின்றன. புகைப்படத்தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
கூட்டம்
கூட்டங்களுக்கு ஒரு விதமான anonymity கிடைத்துவிடுகிறது. Anonymity கிடைத்த இவர்கள் யாரை வேண்டுமானாலும் அடிக்கிறார்கள், உடைக்கிறார்கள். குடித்திருப்பதால் இவர்களுக்குக் குறி தவறுவதில்லை.
பிற மனிதர்கள்
பைசாசம் அவன் உயிரை அக்கக்காகப் பிரித்து எடுத்தது. கணம் கணமாக, படுமோசமான ஒவ்வொரு சம்பவத்தையும். இதெல்லாம் ஒரு நூறு வருடம் நீடித்தாற்போலிருந்தது, இல்லை இல்லை, ஆயிரம் வருடங்கள் போல நீண்டது- அவர்களுக்கென்ன அந்த சாம்பல் நிற அறையில், கால நெருக்கடி என்று ஏதும்தான் இல்லையே, எல்லா நேரமும் இருந்ததே. இறுதியில் அவனுக்குப் புரிந்தது, அந்தப் பைசாசம் சொன்னது சரிதான். உடலால் சித்திரவதைப்பட்டது எவ்வளவோ அன்பாக இருந்தது.
வைரம்
தீவிரவாதிகள் விற்கும் வைரங்களுக்கு ‘ரத்த வைரங்கள்’ (Blood Diamonds) அல்லது ‘மோதல் வைரங்கள்’ (Conflict Diamonds) என்று பெயர்.உலகை ரத்தக் களரியாக்கியே தீருவேன் என்று முனைந்திருக்கும் ஒசாமாவின் கூட்டம் கூட இந்த வைரக் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக வதந்தி உலவுகிறது. ஆயுதங்கள் வாங்க பணத்தை நாடு விட்டு நாடு மாற்றுவது கடினமாக இருக்கிறது, ஒரு சிறு பொட்டலம் வைரம் கடத்துவது எளிது, அதன் மதிப்பும் சந்தையில் ஏராளம். அதனால் கிட்டும் ஆய்தங்களும் ஏராளம்.
யூத இன அழிப்பும் இசையின் வரலாறும்
சிம்பான்ஸிகளின் நெருப்பு நடனத்தின் ஆதாரமாக நிச்சயம் இசை இருந்திருக்கும். இசைக்கருவிகளின் வடிவம் குறித்த கவலை இங்கு அவசியமில்லை. தாங்கள் வளர்த்த அக்னியின் நாவசைவுகளில் அவர்கள் அடைந்த மனஎழுச்சியை தங்கள் நடன அசைவுகளில் வெளிப்படுத்தினர். அதன் ஆதார தாளம் நிச்சயம் அவர்கள் அகத்தில் ஒலித்திருக்கும் தானே! பரிணாம வளர்ச்சியின் ஊடாக மனித குலத்தின் அழகியல் திறனின் உச்சமாக இசை திகழ்கிறது.
வழித்துணை நாய்கள்
கண்பார்வை இழந்த வீரர்களுக்கு மருத்துவம் செய்து கொண்டிருந்த ஒரு மருத்துவர் ஒரு நாள் ஒரு பார்வையிழந்த வீரருடன் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது யாரோ கூப்பிடவே தன்னுடைய நாயை அந்த வீரருக்குத் துணையாக விட்டுவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்க்கையில் அவருக்கு மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில், அந்த நாய் போர் வீரரைப் பள்ளம்-மேடு பார்த்து ஜாக்கிரதையாக ‘வாக்கிங்’ கூட்டி சென்று கொண்டிருந்தது.
சிதார் கலைஞர் ரவிஷங்கர்
பிரபல சிதார் கலைஞர் ரவிஷங்கர் தனது மகளுடன் நிகழ்த்தும் இசை நிகழ்ச்சி ஒன்று. “ஆனந்த் கல்யாண்” எனும் ராகத்தை விரிவாக வாசித்து கேட்போரை கிறங்கடிக்கிறார்.
ஹெட்லீ, மதானி – The Departed
புனே பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பிலும் ஹெட்லீயின் பங்கு இருப்பதாக இப்போது சந்தேகிக்கப்படுகிறது. ஹெட்லீயை இந்தியாவுக்கு வரவழைத்து விசாரணை செய்யவும் இந்தியா முயற்சிக்கும் என்றும் தெரிகிறது. ஆனால் என்ன செய்துவிடமுடியும் இந்தியாவால்? மும்பை தாக்குதலில் உயிரோடு பிடிபட்ட, அதற்கான வீடியோ ஆதாரம் உள்ள அஜ்மல் கசாபை விசாரிப்பதையே இந்தியா இன்னும் ஒழுங்காகச் செய்து முடிக்கவில்லை. அவன் ஒரு சிறுவன், அதனால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் கசாபுக்காக வாதாடக்கூட நம்மூரில் ஆட்கள் இருக்கிறார்கள்.
மகரந்தம்
சீனா உலக மகா சக்தியாகிக் கொண்டிருக்கிறது என்று ஒரு சாரார் எக்காளமிடுகிறார்கள். இந்தியாவிலேயே இந்தியா மோசம், சீனா நம் தலைமை என்று அரசியல் கோஷத்தைக் கொண்ட மனிதர்கள் கட்சிகள் நடத்துகிறார்கள். சுய வெறுப்பு இந்தியரிடம் அத்தனை உள்ளது. சீனர்கள் தம்மை உலகத் தலைமைக்கானவர்கள் என்று பல நூறாண்டுகளாகவே கருதி வருகிறார்கள். சீனா உண்மையில் எங்குள்ளது? உலகத் தலைமையருகேவா, அல்லது ஏற்கனவே தலைமையைக் கைப்பற்றி விட்டதா?
கொஞ்ச நாளைக்கு மகனாக வந்தவன் – 1
நான் விருந்தளிக்கிறவன் அல்ல. நான் அவன் அப்பா. இல்லாத அவன் அப்பா நான்தான். அவன் தொட்டுணர்ந்த அப்பா. அவனைவிட்டு விலகியிருப்பதான என் பாவனையில், அவனது இதயத்துக்கும், ஆத்மாவுக்கும் வஞ்சனை செய்தேன் நான். ஆனாலும் உள்ளூற நான் அவன்சார்ந்த நெருங்கிய இணைப்பைக் கொண்டிருந்தேன், அதையிட்டு மேலதிகம் அக்கறையான சிந்தனையைச் செலுத்தவில்லை.
வரலாற்றில் அடியோட்டம் தேடும் பழமலய்
பண்பாட்டுக்கலகங்களை தனி வாழ்க்கையில் மட்டுமல்லாமல் இலக்கியத்திலும் கேட்கிறார்கள்.அந்த வாழ்க்கை நோக்கும், அந்த மொழிநடையும் தான் செல்வாக்கில் இருக்கின்றன. அது வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கிறது. இது இங்கே மட்டுமில்லை. உலகமெங்கிலும் தென்படுகிற சமாச்சாரம் தான். நமது வாழ்க்கையே பின்நவீனத்துவமாகத்தானே மாறிப்போறிப்போயிருக்கிறது? இது பழமலய்க்குப்புரியாது. புரியாமலிருப்பதே பழமலய்யின் பலம்.
தேடல்
நிச்சயமற்ற தருணங்களால் நிரம்பிய இந்த வாழ்க்கையில் நம்மால் எவ்வளவு திட்டமிட முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. திட்டமிட்டா எல்லாமும் இங்கே நிகழ்கிறது? பொறியியல் சேர்ந்ததிலிருந்து, அமெரிக்கா வந்து, பர்ஸ் போனது வரை எதுவுமே அவன் திட்டமிடவில்லை. யாரோ பி.ஈ. படி என்றார்கள். ஈ.சி.ஈ.க்கு நல்ல மதிப்பு என்றார்கள். ஜி.ஆர்.ஈ. எழுது என்றார்கள். வி.எல்.எஸ்.ஐ.க்கு உடனே வேலை என்றார்கள். இவன் இங்கே இருக்கிறான்… ஆம்பிளிபியரோடும், டெலிவரி பொருட்களோடும், தொலைந்த பர்சோடும் போராடிக்கொண்டு!