ஒவ்வொரு ஆச்சிக்கும் ஒவ்வொரு பெயர்

‘குட்டை’ ஆச்சிக்கான பெயர்க் காரணம் அவளது உயரத்தைப் பார்த்தாலே நமக்கு தெரியும். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே என்னை விட குட்டையாக இருந்தாள். ‘ஏச்சி, பாத்தியா! நான் ஒன்ன விட ஒயரம்’ என்பேன். ‘இருக்கட்டுமெய்யா. இதுலதான் பேத்தியாமாருகளுக்கு சந்தோசம். நீ பொறந்த ஒடனெ பார்வதிம்மா என் கைலதானெ ஒன்னய குடுத்தா’ என்று சொல்லி எட்டி என் கன்னத்தைப் பிடித்து முத்திக் கொள்வாள்.

வாசகர் எதிர்வினை

தொடர்ச்சியாக வரலாறு, அறிவியல் புனைவு போன்றவற்று நீங்கள் இடமளிப்பது முக்கியமானது. நீங்கள் எப்படி எழுத்தாளர்களை கண்டுபிடித்து எழுத வைக்கிறீர்கள் என்பது மிக ஆச்சரியமாக உள்ளது. சொல்வனம் தமிழ் தீவிர எழுத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கப் போகிறது என்பது எனது ஊகம்.

தொப்பிக் கலாசாரம்

மேற்குலகில் பல்வேறு காலகட்டங்களில் நிலவிய தொப்பி கலாசாரத்தின் போக்குகள் குறித்த ஒரு புகைப்பட ஆவணத்தை இங்கே காணலாம்.

மனித நாகரிகங்களை சமைத்த நியூரான்கள்

மனித குலத்தின் வரலாறு பல்வேறு பழம் நாகரிகங்களைத் தனக்குள் கொண்டுள்ளது. இந்த நாகரிகங்கள் உருவாகப் பல்வேறு சூழலிய காரணங்களை நாம் அறிந்திருக்கிறோம். சிக்கலான சமூக இயக்கங்களை நுண்ணறிவால் அறிந்து, அதற்குத் தகுந்த நாகரிகங்களை உருவாக்க உதவிய சில நியூரான்கள் குறித்து பிரபல நரம்பியல் மருத்துவர் வி.எஸ்.ராமசந்திரன் தன் துறை “மனித நாகரிகங்களை சமைத்த நியூரான்கள்”

நீடு எஞ்சுதலும், நவீனத்துவமும்

உரைநடையை எப்படிக் கவிதையின் அமைதியோடு எழுதுவது, அதே நேரம் அதில் ஒரு இசைத் தன்மையை எப்படிக் கொணர்வது என்று துவக்க காலக் கவிஞர்கள் கவனத்தோடு செயல்பட்டனர். சந்தத்தை உரைநடையோடு இணைக்கும் முயற்சி அது. மேற்கில் என்ன காரணங்களுக்காக மாடர்ன் பொயட்ரி என்ற உரு பரவியது என்பதை யோசித்து, அதே வகைக் காரணங்கள் தமிழில் இல்லாதபோதும், ஒரு சில ஒற்றுமைகளை பெரும்தளத்து அளவில் தமிழ்க் கவிஞர்கள் உணர்ந்தனர். அதாவது, சமூக, பண்பாட்டு, இலக்கிய மரபிலிருந்து விடுபடுதல் ஒரு முதல் கட்ட நகர்தல்.

பட்ஜெட் 2010 – ஒரு பேட்டி

2010ஆம் ஆண்டின் நிதி அறிக்கை (budget) பற்றிச் சில கேள்விகளை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (பெங்களூரு) பேராசிரியர் திரு. ரா.வைத்தியநாதனுடன் உரையாடினோம். பெருகிவரும் தாராளமயமாக்கல், கிராமப் புற வளர்ச்சித் திட்டங்கள், விவசாயம், உள்கட்டுமானம் போன்ற துறைகள் மீது இந்த பட்ஜெட்டின் கவனம் குறித்து உரையாடல் நீண்டது. “தனியார் மயமாக்குவது என்பது அதனளவிலேயே ஒரு இலக்காக ஆக முடியாது. அது ஒன்றும் மந்திரக் கோல் அல்ல. நம் அமைப்பும் மிகவும் குழப்பம் நிறைந்த ஒரு அமைப்பு. தவிர அரசு நிறுவனங்களைச் சரியான மதிப்பு போட்டு விற்பது என்பதும் எளிய செயலல்ல.”

ப்ளூம் பெட்டகம்- ஒரு பொக்கிஷப் பெட்டகமா?

பத்து வருடங்களுக்கு முன், நாஸாவுக்கு ப்ராஜக்ட்டுகள் செய்துவந்த அரிஸோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Dr.K.R.ஸ்ரீதரன் தனியாக “ப்ளூம் எனர்ஜி” என்றொரு நிறுவனம் ஆரம்பித்து இத்துறையில் ஆராய்ச்சிகள் செய்து வந்தார். இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் படு ரகசியமாகவே இருந்து வந்தன. அதன் காரணமாகவே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இந்நிறுவனத்தைச் சுற்றி இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 24-ஆம் தேதியன்று கலிபோர்னியா மாநில ஆளுநர் அர்னால்ட் ஷ்வாட்ஸ்நேகரின் உற்சாகமான வரவேற்புடன் ப்ளூம் பெட்டகத்தை (Bloom Box) உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதரன்.

சந்தேகம்

மிக நீண்ட பிரயாணத்தினிடையில் தனித்த திக்குகளில்
துடைத்துக் கழுவியதுபோல என்னை நினைக்கக்கூடும்
எங்களுக்குச் சொந்தமான இறந்தகாலத்தின் அடியிலிருந்து தோன்றிவரும்
சிறு துயரத் துளியொன்று நிலத்தில் விழக் கூடும்

பயணங்கள், புத்தகங்கள்

“இது என்ன?” என்று ஆர்வமாகக் கேட்க, “முதலைக் கறி,” என்றார்கள். கஜேந்திர மோட்சம் நடந்த இடம் இதுவாகக் கூட இருக்கலாம். என்னுடன் கூட இருந்தவர் நான் முழிப்பதை பார்த்து “மே ஐ ஹெல்ப் யூ?” என என்று விசாரிக்க, “நான், வெஜிடேரியன்” என்றேன் அப்பாவியாக. அதனால் என்ன என்று சாம்பாரில் நீந்திக்கொண்டு இருந்த முதலையைப் பாத்திரத்தில் கரையோரம் தள்ளிவிட்டு சாம்பாரை மட்டும் எடுத்து என் தட்டில் போட வந்தார். ‘ஆதிமூலமே!’ என்று நடுங்கியேவிட்டேன்.

கண்டவர் விண்டிலர், விண்டவர் ஸ்கான் எடுத்திலர் !

குகைக்குப் போய்க் கல்லால் அடைத்துக்கொண்டு மாதக் கணக்கில் தனியாக உட்கார்ந்திருந்தால், புற உலகத்தின் எல்லாக் காட்சிகளும் செய்திகளும் – பற்பசை விளம்பரங்கள் உட்பட – ரத்தாகி, மனத்திற்கு அதிக பட்ச சலிப்பு (boredom) ஏற்படுகிறது. அந்த நிலையில் க்ளூக்கோஸ்-ஆக்ஸிஜன் பற்றாக் குறையும் சேர்ந்துகொண்டு மனம் கெக்கரே பிக்கரே என்று கற்பனை செய்து கொள்ள, கண் எதிரே சங்கு சக்கர உருவங்கள் தெரிந்தாலும், அசரீரிக் குரல்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.

மகரந்தம்

மனிதர் எப்போது எழுதப் படிக்கத் துவங்கினார்? மனிதர் பரிணாம ரீதியாக வளர்ந்து மேலெழுந்தார் என்பதையே நம்பாதவர் மேற்கில் ஏராளம். அவர்கள் விவிலிய நூல் சொல்வதுதான் இறுதி வரலாறும், ஒரே வரலாறும் என்று நம்பும் மக்கள். ஆனால் மனிதர் 40 ஆயிரம் வருடங்களாகவே எழுதப் படித்து வந்திருக்கிறார்.

தந்தைக்குக் கடன்

“சூதாட்டம் என்று இந்தக்காலத்தில் தனியாக எதுவுமில்லை. ஆனந்த் ஒரு கம்பெனி ஆரம்பிக்கப்போகிறான். அதில் வெற்றி நிச்சயமா? இல்லையே. வெள்ளிக்கிழமை காலையில் நீ தூக்கத்தைக்கெடுத்து, குளிரில் இரண்டுமணிநேரம் நின்றாய். குறைந்த விலைக்கு வாஷர்-ட்ரையர் கிடைக்காமல் போயிருந்தால்… இழப்பைத் தவிர்க்க நினைத்தால் எந்த முயற்சியிலும் இறங்கமுடியாது.”

டாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஞானோதயம்

ரசாயன உரமிட்டதால் இவரது பயிர்கள் நல்ல கரும்பச்சை தட்டியது. அவ்வளவுதான். பூச்சித்தாக்குதல் தொடங்கின. பயிர்களுக்கு ஏராளமான நோய்கள் வந்தன. மளமளவென்று மேலே ஏறி விண்ணைத் தொட எண்ணியவர் நிற்கமுடியாமல் நிலை குலைந்து மண்ணில் சாய்ந்தார். அந்த அளவுக்கு நஷ்டம். நாலாவது நிக்கோலசின் புதல்வர்தான் நமது கதாநாயகர். அவர்தான் டாக்டர் ஜோ.நிக்கோல்ஸ்.

மறுபடி

பள்ளிக்கூடத்திலிருந்து ஸ்டெல்லாவுக்கு காலையில் ஒரு கடிதம் வந்தது. கவுன்ஸிலரை சந்திக்க வரவேண்டும் என்று கோடிட்டிருந்தது. ஆஸ்திரேலியாவின் பள்ளிக்கூடங்களில் ஒரு மாதிரியான அந்நியத்தனத்தை உணர்ந்திருந்தாள் ஸ்டெல்லா. அவள் காலத்து இந்திய பள்ளிக்கூடங்கள் போல ஒட்டடையே அடிக்காத, குப்பை எங்கும் வெளியில் கிடக்க, அழுக்கும் அசிங்கமுமாய் இருக்கவில்லை. அதனால்தானோ என்னவோ ஒரு அன்னியத்தன்மை வந்ததாக ஸ்டெல்லா உணர்ந்திருந்தாள்.

செயற்கை இரட்டைகளும், இயற்கைப் பன்மையும்: வெங்கட் சாமிநாதன் கட்டுரையை முன்வைத்து

ஆரியர் என்கிற தந்தை-வழி சமுதாயத்தின் ஆண் தெய்வங்கள் கொண்ட வேதங்கள், அதன் அடிப்படையிலான பண்பாடு எனும் கருத்து ஒரு புறம்; திராவிடத் தாய் வழி சமூகம்- தாய் தெய்வ வழிபாடு மறுபுறம் என்ற கருத்து மறுபுறம். இப்படி ஒரு இரு துருவத்தில், binary இல்தான் நம் பார்வை தொடங்கி, பிறகு ஒரு ஒருமையைத் தேடுகிறது. எனவே எந்த இந்து மரபிலும் இந்த இரட்டையைத் தேடப் பழக்கப்பட்டுவிட்டோம்.

ஆழ்கடலில் தேடிய முத்து

வேலை முடிந்து சோர்ந்து இரவு உணவு சாப்பிட அமர்ந்தால் வரும் பெருவாரியான தொலை பேசி அழைப்புகள் காப்புரிமை, தொலைபேசி, வீட்டு சேவைகள் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் கால் செண்டர் தொல்லை. முக்கியமாக, இவர்கள் ஒரு சிந்தனையில்லாமல் உருவாக்கிய பட்டியலிலிருந்து அழைக்கும் பத்தாம் பசலிகள். பல்வேறு அசட்டு அழைப்புகளில், சில அழைப்புகள் எப்படி சரியாக இருக்கிறது? டேட்டா மைனிங்கின் இன்னொரு முகத்தை பார்ப்போம்.