நார்பாட்டனும், நம்ம பாட்டனும் !

தீர்க்காயுசாக வாழ்ந்திருந்த நம் கொள்ளுத் தாத்தா – எள்ளுப் பாட்டி கொடுத்துவிட்டுப் போன நல்ல ஜீன்கள் இருந்தாலும், இந்த எபிஜெனடிக் செய்திகள்தான் கடைசியில் வெல்லும். ஒருவர் வேளா வேளைக்கு உண்டு உறங்கி உடற்பயின்று ஒழுங்கான வாழ்க்கை வாழவில்லையென்றால், அவர் குழந்தைகள் கருவுறுவதற்கு முன்னமே அவர்கள் தலையில் ‘குண்டு, பொதுக்கை, அற்ப ஆயுள்’ என்று எழுதப் பட்டுவிடும்.

ஆங்கென் நட்பு

சுவரில் மோதிய வண்ணம்
கசிவைத் தேடியவண்ணம்
மெல்ல பசியத் தொடங்குகிறது அறை
புல்வெளியின் மணத்தோடும்
பசும் குழந்தையொன்றின் பால் மணத்தோடும்

இராமேஸ்வரமும், சனீஸ்வரனும்

அவருக்கு திடீரென்று சென்னையில் மகனும், மருமகளும் நன்றாக இருக்க வேண்டுமே என்ற கவலை வந்தது. இது வழக்கம்தான். நான்கைந்து முறை குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கையில் யாருக்காவது ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் அவரைப் பற்றிக்கொண்டு ஒரு நாள் முழுவதும் கூட அலைக்கழித்ததுண்டு. ஒரு தரம் சின்ன வயசில் டெல்லிவரை போனவர் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையோ என்று தோன்றியதால் மறு நாளே திரும்பி வந்தார். அப்பாவுக்கு அப்போது ஒன்றும் இல்லை. இந்த சம்பவத்தை நினைத்து மனதில் திடீரென்று தோன்றும் பயத்தை தர்க்கரீதியாக விட்டுவிட முயற்சிப்பார்.

காதலாவது கத்தரிக்காயாவது

கத்தரிக்காய் வாங்கும்போது, அதில் பூச்சி இருக்கிறதா என்று பார்த்து வாங்குவீர்கள் தானே? நான் எவ்வளவுதான் பார்த்துப் வாங்கி வந்தாலும், வீட்டில் வந்து அதை வெட்டும்போது, மனைவியிடம் திட்டு நிச்சயம். பல கத்தரிக்காய்கள் உள்ளே சொத்தையாக இருப்பதைப் பார்க்கலாம். இனிமேல் இந்தப் பிரச்சனை இருக்காது. வந்துவிட்டது மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்- BT-Brinjal!

மகரந்தம்

இணையத்தின் தற்போதைய காய்ச்சல் Google Buzz. நட்சத்திர நடிகர்களின் புதுப்படங்களை போல “நல்ல ஓப்பனிங்”. ஆனால் இது நீண்ட வெற்றியை பெறுமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும். ஒன்று கவனித்தீர்களா, கூகிள் நிறுவனத்தின் பல தயாரிப்புகளும் செயல்முறையில் ஒருபோல இருக்கும்! கூகிள் நிறுவனத்தின் Talk, Buzz, Wave போன்றவை ஒரே குடும்பத்தில் அடங்கிவிடும். ஒரே சேவையை அளிக்க அது ஏன் இத்தனை தயாரிப்புகளை வெளியிடுகிறது?

ஜெத்ரோ டல்(Jethro Tull) – செவ்வியல் இசைக் கோர்வை

ஜெத்ரோ டல் இசைக்குழுப் உலகப் புகழ் பெற்றது. அவர்களின் செவ்வியல், கலப்பிசை ஆக்கங்கள் பல இசை ரசிகர்களையும் கிறங்கடிக்கிறது. “Divinities: Twleve Dances with God” என்ற இசைத்தொகுப்பில் இருந்து ஒரு ஆக்கத்தை இங்கு அளிக்கிறோம். இந்த இசைத்தொகுப்பு குறித்த ஒரு கட்டுரை ஒன்றையும் இங்கே வாசிக்கலாம்.

மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்

வீரியமிக்க
மின்னலடிக்கும்போதெல்லாம்
திரள்முகில் வானில்
இராநிலாத் தேடி யன்னலின்
இரும்புக் கம்பிகளைப் பற்றியிருக்கும்
பிஞ்சு விரல்களை அழுது கதற
விடுவித்துக் கொண்டோடுகிறாள்
குழந்தையின் தாய்

தேநீர்

தமிழ் பண்பாட்டின் நாட்டுப்புறக் கலையான ‘கூத்து’க்கு இணையான சீன ‘ஓபெரா’ வகையான நாடகங்கள் சீனத்தின் தேநீரகங்களில் நடக்கும். பேய்ஜிங்கின் தென் பகுதியில் தியன்ச்சியோ என்ற வட்டாரத்தில் இருக்கும் ஒரு கட்டடம் முழுக்க மரத்திலானது. இது 1933ல் கட்டப்பட்டுள்ளது. இன்று இந்தக் கட்டடத்தில் இயங்கும் தேநீரகத்திற்குள்ளிருக்கும் மேடையில் அப்பகுதியில் நிலவிய நாட்டுப்புறக் கலாசாரத்தைக் குறித்து அறிந்திட இங்கு நடக்கும் நாடகங்கள் உதவுகின்றன.

தாவரங்களுடன் பேசிய அற்புத விஞ்ஞானி – கார்வர்

ஒரு தோட்டக்கலை நிபுணராக அமர்ந்து கார்வர் யோசித்தபோது மிகவும் வளம் இழந்த மண்ணுக்கு ஏற்ற பயிர் என்ற வகையில் வேர்க்கடலையே அவர் கண்முன் நின்றது. ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறநாட்டில்?’ என்று எம்.ஜி.ஆர் பாடியது போல் இந்தக் கார்வரும் ‘என்ன வளம் இல்லை இந்த வேர்க்கடலையில், ஏன் செய்ய வேண்டும் பருத்தியை சாகுபடி?’ பாட்டுப்படித்தார். ஷூட்டிங் முடிந்தவுடன் எம்.ஜி.ஆர். தூங்கியிருப்பார். கார்வர் கையில் கடலையை வைத்துக்கொண்டு ஏழு இரவுகள் ஏழு பகல்கள் தூங்காமல் ஆய்வு ஆய்வு ஆய்வு என்று ஆராய்ந்தார்.

வண்ணமிகு இந்தியா

இந்தியாவின் பல்வேறு முகங்களைப் பிரதிபலிக்கும் வகையில் Boston.com சில அற்புதமான புகைப்படங்களைத் தொகுத்து அளித்திருந்தது. அவற்றை இங்கே பார்க்கலாம்.

புரிந்து கொள் – 6

என் பெயரை ரெய்னால்ட்ஸ் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நான் இத்தனை மாறுதல்களையும் செய்து தயார் நிலையில் இருந்தேன். அவனுடைய அடுத்த வாக்கியம் என் அழிப்புக்கான கட்டளையாகத்தான் இருக்க வேண்டும். இப்போது என் புலன்களின் உள்ளெடுப்பு நூற்றி இருபது மில்லி-வினாடித் தயக்கத்துடன் நேர்கிறது. நான் மனித புத்தி பற்றிய என் முந்தைய ஆராய்வை மறுபடி சோதிக்கிறேன், அவன் சாதித்தது சரியாக இருக்குமா என்று தெளிவாகச் சோதிக்கிறேன்.

தொடரும் பயணம்

அத்தொடக்க காலத்தில், இலக்கிய பூர்வமாக எனக்கு மிக அருகில் இருந்தவர்கள் க.நா.சுப்ரமண்யமும், செல்லப்பாவும் தான். இருவரும் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தை, இல்லை பெரும் மாற்றத்தைக் கொணர்ந்தவர்கள். இந்த இருவரும் சேர்ந்து அமைத்த பாதையில் தான் நான் என் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறேன். இந்த இருவரிடமும் நான் கொண்ட கருத்தொற்றுமையும் நிறைய. கருத்து வேறு பாடுகளும் நிறைய.

நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம்?

தலைமை அறிஞர்களாக விளங்கிய இவர்களின் வார்த்தைகளை உதிரி சமூக விஞ்ஞானிகளும் வழிமொழிய வேண்டிய நிலை ஏற்பட்டது. வழிமொழிந்து நின்றவர்கள் JNU போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பும், மேற்கு நாடுகளிலிருந்து அழைப்பையும் பெற்றனர். மதச்சார்பின்மைவாதிகளின் ஆதிக்கம் மெல்ல மெல்ல தன்னுடைய உள்ளார்ந்த தணிக்கையை உருப்பெருக்கிக் கொண்டது. எந்த ஆய்வுகள் பதிக்கப்படவேண்டும், அரசின் நிதி உதவி எதற்கு ஒதுக்கப்படவேண்டும், எந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படவேண்டும் போன்றவற்றை இந்த உள்ளார்ந்த தணிக்கை முடிவு செய்தது.

ஆயிரத்தில் ஒருவன்: சர்ச்சைகளும் சரித்திரமும்

சமீபத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் தொடர்பாக எழுந்த வரலாற்றுச் சர்ச்சைகள் குறித்துத் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன நிறுவனரும், ஆய்வாளருமான எஸ். இராமச்சந்திரன் அவர்களின் கருத்தினை அறிய விரும்பினோம். சொல்வனத்துக்காக அவருடன் உரையாடியவர் ஆய்வாளர் ஜி. சாமிநாதன். “இந்தியாவைப் பொருத்தவரை படைப்பிலக்கியங்கள், திரைப்படங்கள் குறித்த சர்ச்சைகள் எழுவது இயல்பே. வரலாறு என்று வரும்போது இருவிதப் பார்வைகள் இருந்துதான் தீரும். அதனால் சர்ச்சைகள் எழுவது இயல்பே. ஆனால், அது சரியான சித்திரிப்பா, பொருத்தமற்ற வரலாறுக்கு முரணான சித்திரிப்பா என்றுதான் நாம் பார்க்கவேண்டுமே தவிர சோழர்களை இழிவுபடுத்தும் விதத்தில் காட்சிகள் அமைந்துள்ளன என்றெல்லாம் சொல்வது தவறாகும்… …இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சரித்திரக் காட்சிகளின் சித்திரிப்பு என்பது சில இடங்களில் தர்க்கபூர்வமாக அமையவில்லை என்ற விமர்சனம் எனக்கும் இருக்கிறது.”

மாதிரிக் கணிப்பில் பிழையின் எல்லை

“நீ ஒரு பொழுதும் விஞ்ஞான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் விரும்பியதை நீ வெறுத்தாய். உனக்கு எப்போதும் குழந்தைகள் வேண்டும். இதெல்லாம்… வேண்டும்.” அவள் குப்பைக்கூளமாக இருந்த முன்புறத்தை சுட்டினாள். டேவிட் சென்று பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டன. பணம் அனுப்புகிறான். போதவில்லை.