கு.ப.ரா.வின் ‘சிறிது வெளிச்சம்’ – ஒரு குறிப்பு

நமது அன்றாட அனுபவத்தை மீறிய ஒரு கணம் கண்டடைய முடிவதே புனைவை விசேசமாக்குகிறது. அதில் நாம் அறிந்ததைத் தாண்டிய ஒரு அறிதல் இருக்கிறது. நம் தின வாழ்வில் சல்லிசாகத் தெரிகிற முடிவுகள் அங்கு புது அர்த்தத்தை அளிக்கும். அப்படி ஒரு முடிவை ஒருவர் எடுக்க நேர்ந்தால் அவரை விட மூடன் யாருமில்லை என நாம் சொல்லக்கூடும். ஆனால் மொழியும், புனைவு தருக்கமும் நம்முன் திறக்கும் உண்மையைவிட அக்கணத்தில் எதுவும் அழகு கிடையாது. அதை நாம் அறியும்போது வேறொரு அனுபவமாக மாற்றி நம்முடையது என சொந்தம் கொண்டாடத் தொடங்குகிறோம்.

வில்லியம் காஸின் ஐம்பது இலக்கியத் தூண்கள் – (பாகம் நான்கு)

கல்லூரி முதல் வருடம் வரையிலும் நான் ஸ்டைனைப் படித்திருக்கவில்லை என்றாலும் தயாராக இருந்தேன். எந்த உரைநடையுமே என்னை இவ்வளவு பலமாகத் தாக்கியதில்லை. .. புத்தகத்தின் மையக்கதையான ‘மெலங்க்தா’ – வைப் படித்துவிட்டு அவர் எழுதியதனைத்தையும் எப்படி தீவிரமாக கவனிக்காமல் இருக்கமுடியும்? அதைப் படிக்கையில் எனக்கேற்பட்ட கிளர்ச்சி கிட்டத்தட்ட காய்ச்சலையே வரவழைத்து விட்டது. அதிகாலை ஒரு மணிக்கு அதைப் படித்து முடித்தவுடன் (அதைப் படிப்பதற்கே நினைத்திராத நான், வசீகரத்தால் ஏமாற்றப்பட்டு அதனுள்ளிழுக்கப்பட்டேன்) மீண்டும் முதலிலிருந்து படிக்கத் தொடங்கினேன்…. என் இலக்கியப்பணி மணந்து கொள்ளப்போகும் பெண்ணை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்பதையும் அறிந்து கொண்டேன். அதன் விளைவாக என் மணிப்பர்ஸ் எப்போதுமே மூன்று பெரும் முகங்களை சுமந்திருக்கிறது: வெர்ஜீனியா உல்ஃப், கொலெட் மற்றும் கெர்ட்ரூட் ஸ்டைனின் முகங்கள். ஒரு சினிமா படைவீரன் திரைப்பட பதுங்கு குழியில் கேட்பது போல் நீங்களும் கேட்பீர்களானால் அவற்றை வெளியே எடுத்து உங்களுக்கும் காண்பிப்பேன்.

விடை

ஓர் இடைச்சிறுவன் கலனில் நீர் கொண்டு வந்தான். அவனிடம் அமெரிக்கர் ஹாய் என்றார். அவன் ஹாய் வில்லியம் என்றான். நான் பாதிக் கலனை காலி செய்தேன். வில்லியம் மூன்று மிடறு அருந்தி விட்டு அச்சிறுவனிடம் நன்றி தெரிவித்து கலனை திருப்பித் தந்தார்.
‘’எப்போது வீடு திரும்புவதாய் உத்தேசம்? கையில் உள்ள பணம் தீர்ந்த பின்பா?
அக்கேள்வியின் நேரடித் தன்மை என்னைச் சீண்டியது. இவர் தன் எல்லையைத் தாண்டுகிறார்.
‘’உங்கள் கணிப்பு என்ன? நான் வீட்டாரை பயமுறுத்தவே வெளியேறியிருக்கிறேன் என்றா? நான் வீடு திரும்ப மாட்டேன்.’’
‘’சித்தார்த்! நீ புத்திசாலி. என் கணிப்பு நிறைவேறினால் மகிழ்வேன். நிறைவேறவில்லை எனில் பெரிதும் மகிழ்வேன்’’

அது

தேவகி, சண்முகசுந்தரத்திடம் நக்கலாக ஏதோ சொல்ல அந்த சனியன் எப்டியோ செத்து ஒழியிட்டும்… வுடு.. சண்முகசுந்தரம் தீர்ப்பெழுத.. அவனுக்கு மரணத்தண்டனை என தீர்ப்பெழுதும்போது இத்தனை சத்தமில்லை.. கமுக்கமாக.. காதோடு காதாக.. நீலத் திமிங்கிலத்தை போல ரகசியமாக.. எல்லாரும்.. எல்லோரும் எதிரிகள்தான்.. நான்.. நான் மட்டுமே நிஜம்.. அவனும் நிஜம்.. எங்களோட அன்பு நிஜம். என்னைச் சிறை வைத்து விட்டு அவனைக் கழுத்தறுத்துக் கொன்ற இவர்கள்தான் பொய். இவர்களை விட்டு விலக வேண்டும். விலகி எங்கோ செல்ல வேண்டும். ஏறி… மேலேறி.. மூன்று தளங்களைக் கடந்து மொட்டை மாடிக்கு வந்தும்… பத்தாது.. பத்தாது.. இன்னும் இன்னும் உயரம் என்றது அது தன் பெரிய வாயை அசைத்து.. அங்கிருக்கும் தண்ணீர் தொட்டியின் விளிம்பு.. விளிம்பு வரை.. அதற்கு மேல் வேண்டாமாம்.. விழக்கூடாதாம்.. ஆமா.. விழக்கூடாது.. எதிரிகளைக் கொல்ல வேண்டும்.. இப்போது எல்லாருமே நீலத் திமிங்கிலத்துக்குள்.. ஒளிந்து கொண்டு… என்னை.. அவனை.. வலுக்கட்டாயமாக கடவுளே.. கடவுளே..

கம்பலை

‘துன்பமும் சந்த ஒலியும் கம்பலை’ என்கிறது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு. இராஜகோபாலனிடம் சொன்னேன், “எப்பிடிப் பார்த்தாலும் ஆயிரம் வருசமா நம்மள்ட்ட இந்தச் சொல் புழங்குகிறது,” என்று. பிங்கல முனிவரின் தந்தை அல்லது குரு எனக் கருதப்படுகிற திவாகர முனிவரின் திவாகர நிகண்டு, தமிழின் முதல் நிகண்டு. அதுவும் கம்பலை எனும் சொல்லுக்கு மேற்சொன்ன பொருள்தான் தருகிறது.
 ‘இலக்கியச் சொல்லகராதி’ என்று நம்மிடம் ஒன்றுண்டு. சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளை (1855- 1922) தொகுத்தது. 2009 -ம் ஆண்டில் சந்தியா நடராஜனால் மீள்பதிப்பு செய்யப்பட்டது. அந்த அகராதி கம்பலை- துன்பம், ஒலி, நடுக்கம், பயம் என்கிறது.

திரும்புதல்

“இன்னக்கி கீர்த்தி கேக்கறா, பாரதி ஏன் அப்படி செஞ்சார்ன்னு?”
“என்னத்த கண்டுட்டாளாம் அந்த விசாலாட்சி?”
“வீட்டப்பாத்துக்காம பாட்டு எழுதிக்கிட்டு இருந்திருக்காரு. வேலக்கிபோவாமங்கறா,” என்று சொல்லிவிட்டு, “ஆமா…விசாலாட்சி தான்,”என்று கண்களை விரித்து ஜெஸி சிரித்தார்.
“ம். அவகிட்ட என்ன சொன்னீங்க?”, என்று காலை மாற்றி கம்பியில் நீட்டினேன். ….
“இல்லம்மா ….அவரு பத்திரிக்கையில வேல செஞ்சாருன்னு சொன்னேன்.அதுக்கு அவ,போங்க டீச்சர்.. அவருக்கு எத்தன மொழி தெரியும்!அரசாங்க வேலையில எவ்வளவு சம்பளம்! அவருக்கு பிடிச்ச பாட்ட எழுதறேன்னு யாரு பேச்சயும் கேக்கலயாம். சினிமாபடத்தில பாத்தேன்.அந்தம்மா அழுதுகிட்டே இருக்காங்க,”ங்கறா

எம். எல். – அத்தியாயம் 15

உலகமே நம்பிக்கையில்தானே இயங்குகிறது? எல்லோரும் தங்களுக்கு விருப்பமானவற்றை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வாழுகிறார்கள். கண்மூடித்தனமாக எதையாவது பற்றிக்கொள்ள வேண்டும், அதை நம்ப வேண்டும். அது அவர்களை வாழத்தூண்டுகிறது…. சுப்பிரமணிய பிள்ளை அந்தக் குடும்பத்தையும், கடையையும் ஒழுங்காக நிர்வகித்தால் போதும் என்று வாழ்ந்து வந்தார். …அவருடைய பக்தியே குடும்பத்தையும், அந்தச் சீதாபவனத்தையும், கடையையும் முன்னிட்டே இருந்தது…. மேலமாசி வீதியில் கோபால் பிள்ளை கடந்த கால அரசியல் நினைவுகளிலும், நிகழ்கால அரசியல் உலகிலும் வாழ்ந்துகொண்டிருந்தார். அவருடைய மூத்த மகன் ராமசாமியும், இளைய மகன் பிச்சையாவும் எப்படியாவது வாழ்க்கை ஓடினால் போதும் என்று இருந்தார்கள்.
சாரு மஜும்தாரும், அப்புவும் ரஷ்யாவிலும், சீனாவிலும் நடந்தது போல் இந்தியாவிலும் புரட்சி வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். …அப்புவும் கண்மூடித்தனமாக சாரு மஜும்தாரை அப்படியே பின்பற்றினார்.

குளக்கரை

இன வெறுப்பும் அடிமைத்தனமும் நவீன வாழ்வின் தோன்றல்கள் அல்ல. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதும் சுரண்டுவதும் சமூக யதார்த்தமாகவும், குறிப்பிட்ட இனத்தைத் தழைக்க வைக்கப் போடப்படும் ‘நியாயமான’ சட்டங்களாகவும் பல நூற்றாண்டுகளாக நம்மிடையே நிலவி வந்துள்ளன. அமெரிக்காவின் கறுப்பின மக்களின் வரலாறு அப்படிப்பட்ட ஒன்றுதான். குறிப்பாக தெற்குப்பகுதிகளில் அடிமைத்தனத்தை அழித்த பின்னரும் தங்கள் மேலாதிக்கத்தைக் கைகொள்வதற்காக ஒப்பந்தக்கூலிகளாக மிரட்டியும், ஏமாற்றியும், குற்றம்சாட்டியும் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களின் வரலாறு மிகக்கொடூரமானது.

சகுந்தலாவுடன் ஒரு மதியப்பொழுது

வனஜ்யோதனா காட்டுச் செடிகள்; ஹரினா –அந்த மான், என் தோழிகள் அனசூயா, பிரியம்வதா ; இவர்களோடு நாட்கள் கடந்தன. கௌதமியின் தாய் போன்ற கவனிப்பு; தந்தையான கன்வரிஷியின் அன்பு. எல்லாம் துஷ்யந்தன் வரும்வரை
அவன் வந்தான்.
ஊடுருவ முடியாத தன்மைக்கு ஆளானேன். இருவந்திகை,என் தோழிகள் தாய் போலான கௌவுதமி, தந்தை ஸ்தான கன்வரிஷி எல்லோரும் மின்னொளியாக மறைந்து விட்டனர்.அது மட்டுமில்லை. நானும்கூட காற்றில் மறைந்து போனேன் தோழி !உன்னால் அதை நம்ப முடிகிறதா?காதலுணர்வை எடுத்துச் சொல்லும் தைரியம் எனக்கில்லை. அது பொதுவான உணர்வில்லை, எல்லா விளக்கமும் அதை பலம் குறைந்ததாக்கி விடும்.

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – விளக்கம்/ பயன்கள்

தங்க விஷயத்தை நாம் இங்கு விவாதிக்க மாட்டோம். ஆனால், மற்ற இரண்டு தடைகளுக்கும் வங்கிக் கணக்கு இல்லாமை மிகவும் முக்கிய காரணம். அத்துடன், வங்கிகள் படிவங்களாலேயே (forms) இந்தியர்களை பயமுறுத்தி வந்துள்ளனர். 2014 –ல் தனியார் வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்த அனுபவம் அலாதியானது. நான் இந்தியப் பிரஜையல்லாதது இந்த விஷயத்தை மேலும் சிக்கலாக்கியது. என் வாழ்வில் ஒரே நேரத்தில் ஏறக்குறைய 100 கையெழுத்துக்கள் போட்டது இந்த விஷயத்தில் தான்!

கடினமான நாவல்களைப் புகழ்ந்து – வில் செல்ஃப்

என் படைப்புகளும்கூட எவ்வாறு உள்வாங்கப்பட்டன என்பதில் ஒரு விஷயத்தை கவனித்தேன். என் படைப்புகளுக்கு மட்டுமல்ல, ஐமர் மக்ப்ரைட் முதலான “நியூ டிஃபிகல்ட்” வகை எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் இது பொருந்தும்- விமரிசகர்கள் எங்களைப் புகழ்ந்தபோதும், எங்கள் பிரதிகளோடு ஒரு எச்சரிக்கை வாசகத்தைச் சேர்க்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறார்கள். ‘கடினம்,’ என்று சொல்கிறார்கள்- கூடவே அச்சுறுத்தும் உள்ளர்த்தமாய், -ஓர் எதிரொலி, டெர் ஸ்டெப்பென்வுல்ஃபின் தாக்கமாய் இருக்கலாம்-, “இந்தப் புத்தகம் அனைவருக்குமானது அல்ல,” என்கிறார்கள்.

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 7

“ஆதித்யா எங்களுக்கெல்லாம் மேலே” என்று சொல்லிக் கொண்டிருந்தவர்! அவர் எங்களிடம் என்ன எதிர்பார்த்தார் நாங்கள் எதைப் பூர்த்தி செய்யவில்லை என்று இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை. பணம் என்றால் இயன்ற அளவு செலவழிக்கத் தயாராகவே இருந்தோம். விஜயதசமி என்றால் நாங்களே உபயோகிக்காத சாமானாக வெள்ளியில் நாதள்ளாவில் வாங்கிக் கொடுப்போம். “பையனை இஞ்சினீரிங் படிக்க வெச்சா செலவழிப்பேளா இல்லியா? அந்த மாதிரி நினைச்சுக்க வேண்டியது தான்” என்பார்.