உலகின் மோசமான கணிப்பொறி வில்லன்கள்

டைம் பத்திரிக்கை இதுவரை வெளியான ஆங்கில அறிவியல்-புனைவு திரைப்படங்களின் மிக மோசமான கணிப்பொறி வில்லன்கள் குறித்த வரிசையை வெளியிட்டுள்ளது. திரைப்படங்கள் குறித்த குறிப்புகளும் உண்டு. முழு வரிசையையும் இங்கே காணலாம்.

வினை

வயது வித்யாசம், வேலை வித்யாசம், கல்யாணம் ஆன பெண்மணி போன்ற பகுத்தறிவின் பாற்பட்ட நினைவுகள் அவனுக்கு எழாமலில்லை. ஆனாலும் தான் ரொம்பப் பாதுகாப்பான இடத்திலிருந்து குறி பார்க்கிறோம் என்ற நிச்சயமும், அடிப்படையில் ஒரு இளைஞனான தனக்கு இருக்கும் அட்வான்டேஜ்களும், இது போன்ற சூட்சுமமான வாய்ப்பைக் கண்டு பிடித்த தன் திறனும் அவனை கர்வம் கொள்ள வைத்தன.

புரிந்து கொள் – 5

என் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் ஒருவனுடன் கலந்து பேசுவதும், எனக்குத் தோன்றாத ஒரு புதுக் கருத்தை அவனிடம் பெறுவதும், எனக்குக் கேட்காத சுஸ்வரங்களைக் கேட்கக் கூடியவனைக் காண்பதும் எத்தனை இன்பம் கொடுக்கக் கூடிய அனுபவங்கள்! அவனுமே இதைத் தான் விரும்புகிறான். இந்த அறையை விட்டு இருவரில் ஒருவன்தான் உயிரோடு வெளியே போகப் போகிறோம் என்பது எங்கள் இருவருக்குமே மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஒலி/ஒளி மயமான எதிர்காலம்

வளரும் நாடான இந்தியாவிற்கு பாட்காஸ்ட் ஒரு மிக முக்கியமான தொழில்நுட்பம். படிப்பறிவு என்ற சொல்லுக்கே சவால் விடுகிற தொழில்நுட்பம். படிக்காதவர்களை மாற்றுவதற்கு முன் அவர்கள் கேட்காதவர்களா என்று சற்று யோசிப்போம். பார்வையற்றவர்களும் இதனால் பயனடையலாம். என் பார்வையில் இந்திய வெளியீட்டளர்கள் இதைப் பற்றி அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. கைபேசி தொழில்நுட்பத்தை விலை குறையச் செய்த நிறுவனங்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்.

பொங்கப்படி

வெள்ளையடிப்புக்கு அடுத்ததாக பொங்கலை ஊருக்குள் கொணர்பவை பனங்கிழங்குகள். பனங்கிழங்கின் வாசனை பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு மாதம் வரை ஊரை விட்டு லேசில் போகாது. அவிக்கப் பட்ட, அவித்து காய வைத்து பின் உரலில் போட்டு இடிக்கப்பட்ட, ஆச்சிமார்களின் கைவண்ணத்தால் தேங்காய், இஞ்சி சேர்த்து உருண்டையாகப் பிடிக்கப்பட்ட பனங்கிழங்குகள் இன்னும் இன்னும் என் நினைவில் மின்னுகிறவை.(ஒரு வாரம் வரை பல்லில் சிக்கியிருக்கும் பனங்கிழங்கின் நாரும் இதில் அடக்கம்.) பனங்கிழங்குகளின் பலாபலன்களும் விசேஷமானவை. ‘பனங்கெளங்க யாராவது வேண்டாம்பானாவே? ஒண்ணே ஒண்ணு தின்னு பாரும். காலைல நீரு எந்திரிக்கவே வேண்டாம். அதே எந்திரி எந்திரின்னு சொல்லிரும்லா!’

வார்த்தைப் பாடாகிவிட்ட தமிழ் வாழ்க்கை

வார்த்தைகள் நம் தமிழ் வாழ்க்கையில் அர்த்தமிழந்து போயின. அவை எதையும் சொல்லாத வெற்று ஒலிகள். ஆனால் சொல்லிவிட்டதாக ஆணைகள் பிறக்கின்றன. ஒரு பயங்கர ஆக்கிரமிப்பு சக்தியாகிவிட்டன வார்த்தைகள். ஆணைகள் இன்றியே ஆணையாக உணரும் மந்தைத் தனம் தமிழருக்குப் பழகிவிட்டது. வார்த்தைகளால் நம் அலைக்கழிக்கப்படுவதைச் சொல்லும் அகஸ்டஸின் கவிதை மிக நீண்டது. அவரது கவிதை மொழி அவருக்கே உரியது.

மகரந்தம்

1979 இலிருந்து 2001 வரையான காலகட்டத்தில் ஏராளமான கப்பல்கள் நடுக்கடலில் மூழ்கினவாம். ‘79 இலிருந்து 1995 வரை யூரோப்பியக் கப்பல்களில் மட்டுமே, வருடத்துக்கு இரண்டு. 1995க்குப் பிறகு வருடத்துக்கு ஒன்பது. இதென்னடா புதுப் பிரச்சினை என்று சில யூரோப்பிய நாடுகள் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றன. ஸ்காலியா என்கிற இத்தாலிய இயற்பியல் பேராசிரியர், இந்த மர்மத்தை முடிச்சவிழ்த்து விட்டதாகச் சொல்கிறாராம். எல்லாம் பணம் பண்ணுகிற வேலைதாங்க.

சூன்ய விளையாட்டு

என் இன்னொரு கால்மீது
எட்டுப்பேர் பிரமிட் செய்கிறார்கள்.
எனக்கு முன்னேயிருப்பவனின்
நாய் செத்த நாற்றத்தை
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்
என் பின்னேயிருப்பவன்
என்னைச் சினையாக்கத் துடிக்கிறான்
பொறுத்துக்கொண்டிருக்கிறேன்.

பூவா தலையா

ஒருவழியாக ராத்திரி பத்து மணிக்கு பேனரில் இருந்த தலைவர் உயிர்பெற்றுப் பேசத் தொடங்கினார். பேனரில் இருந்த அனைவரின் பெயரையும் குறிப்பிட்டபின், “தாய்மார்களே, பெரியோர்களே… அலைகடலென திரண்டு வந்திருக்கும் அன்பு நெஞ்சங்களே… வாழ்த்துச் சொன்ன.. ” என்று ஆரம்பித்துவிட்டு, எதிர்கட்சிக்கு ஏகப்பட்ட சவால் விட்டு, ஏதேதோ பேசிவிட்டு இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்” என்று சொன்னபோது பதினொன்றை. கூட்டம் மெல்ல கலையத் தொடங்கிய போது, கோயிலுக்குப் பின்புறம் பிரியாணி வாசனையை சாராய வாசனை அடிக்கத் தொடங்கியது.

ரே லிஞ்ச் – நவ யுக இசைக் கலைஞன்

ரே லிஞ்ச் (Ray Lynch) என்ற அற்புதமான இசை கலைஞனின் ஆகச்சிறந்த படைப்பொன்று. தொல்லியல் இசை, நவ யுக இசை போன்ற பிரிவுகளில் தனது இசை ஆக்கங்களை வெளியிட்டிருக்கிறார். கேட்டு மகிழுங்கள்.

உரிமை இழப்பின் பதிவுகள்

“இரண்டு ஏக்கர் நிலம்” வழக்கமான இந்திய திரைப்படங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டே துவங்குகிறது. காய்ந்து, பாளம் பாளமாக வெடித்துப் போன நிலம். ஒரு இலை கூட இல்லாத உயிரற்ற ஒரு மரம். விவசாயிகள் துன்பத்தில் வாடுகிறார்கள். அடுத்த காட்சி சட்டென திசை மாறுகிறது. மேகத்தை கிழித்தபடி பெய்யும் மழை. விவசாயிகள் மழையில் நனைந்து, தங்கள் துன்பம் தீர்ந்ததென்று மகிழ்ச்சியில் ஆடி பாடுகிறார்கள். திரைப்படம் பயணிக்கப் போகும் திசை குறித்த எந்த ஒரு முன்முடிவையும் பார்வையாளன் மேற்கொண்டுவிட முடியாது. மிக நுட்பமாக ராய் தனது பார்வையாளனை வழிதவற வைக்கிறார்.

ஈரானில் குடிமக்கள் இதழியல்

ஈரானில் நிலைகளைப் பற்றி முப்பதாண்டுகளாக மேம்போக்காவே செய்திகளைக் கொடுத்து வந்த மேலை நாட்டுப் பத்திரிகைகள், டெஹ்ரானில் இன்று ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு என்ன வழிகளில் எழுந்தது என்று கவனிக்கத் தவறி விட்டன. கடந்த ஜுன் மாதம் நடந்த தேர்தலில் மோசடி நடந்து விட்டது என்பதற்காக ஈரானியர்கள் தம் உயிரையும் உடலையும் பேராபத்துக்கு ஆளாக்கி எழுச்சியை நடத்தவில்லை, முப்பதாண்டுகளாகச் சந்தித்த மிருகத்தனம், அவமதிப்பு, மேலும் பெரும் அவலங்கள் ஆகியவற்றுக்கு எதிராகவே போராடுகிறார்கள் என்று எழுதுகிறார் ஈரானியப் பெண்ணியக்க வாதியும், பேராசிரியருமான ஹைதெ தரகாஹி.

அதனால்தான்…

‘பப்ளிக் ஸ்கூல் போனப்புறம் கூட்டு, ரசம்னு நம்ம சாப்பாடு எதையும் தொடமாட்டான், பாத்திண்டே இரு!’ என்று அனுபவப்பட்ட சரோஜா எச்சரித்தது சரிதான் போலிருக்கிறது. சூரன் கின்டர்கார்டன் போகத்தொடங்கி ஒருமாதம்கூட ஆகவில்லை, அதற்குள் இட்லி தின்ன முரண்டுபிடிக்கிறானே.

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல்

அடையாள, இலக்கிய மற்றும் குழு அரசியலில் இருக்கும் ஈடுபாட்டில் வெறும் கால்பங்கு நல்ல பல படைப்புகளை உருவாவதிலும் அவற்றை மேலும் மேம்படுத்தி வளர்த்தெடுப்பதிலும் இருந்தாலே போதுமானது. சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு உத்திரவாதம் கிடைத்துவிடும். இதற்கெல்லாம் இப்போதைக்கு ஆசை மட்டும் தான் படலாம். மாற்றங்கள் ஏற்படுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.