குரங்கில் இருந்து பிறந்து…

படத்தின் துவக்கக் காட்சியில் “விவேகம்” அஜீத் போல் சீஸர் அறிமுகம் செய்யப்படுகிறார். போரில் வெற்றியை அடைகிறார். அதன் பின் ஒவ்வொரு விதமான குரங்கும் அவர் வரும் வழிவிட்டு விலகி, வணக்கம் செலுத்தி, மரியாதையையும் தலைவன் என்னும் மதிப்பையும் உணர்த்துகின்றன. அதன்பின் வரும் இரண்டரை மணி நேரமும் சீஸரின் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. சீஸர் எவ்வாறு தன் குடும்பத்தை இழக்கிறது என்பதில் துவங்கி, மனிதன் போல் கோபம் தலைக்கேறி பழிவாங்கும் வெறி தலைதூக்குவதிற்குச் சென்று, கடைசியில் சிறைபிடிக்கப்பட்டு, தப்பிக்க யோசிப்பது வரை எல்லாம் சீஸர். ”அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்; நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும் பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்; யான்/எனது அற்ற மெய்ஞ்ஞானமது அருள்வாய் நீ” என சீஸர் குரு கவசம்…

கோணக் கணிதம்

பொது சகாப்தத்திற்கு முன் 120ஆம் ஆண்டில் கிரேக்கத்தில் ஹிப்பார்க்கஸ் என்னும் வானவியலாளர் கோணவியலின் சூத்திரத்தை நிறுவினார் என நேற்று வரை எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால், இப்போது பொது சகாப்தத்திற்கு முந்தைய 1762ஆம் வருடத்திலேயே பாபிலோனியர்கள் கோணக் கணிதத்தை அறிந்திருக்கிறார்கள் என்பதை கல்வெட்டு காட்டுகிறது. பித்தேகோரஸ் தேற்றம் சொல்வதற்கு ஆயிரம் “கோணக் கணிதம்”

நீரின் பாதை

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாநிலம் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது. அங்கிருக்கும் மியாமி நகரை நீர் கபளீகரம் செய்யுமா என்பதை நேஷனல் ஜியாகிரபிக் இங்கே படம் பிடிக்கிறது. எவர்கிளேட்ஸ் சதுப்பு நிலத்தின் உபரி நீரை பொங்கி வழியாமல் பாதுகாக்க 3,400 கிலோமீட்டருக்கு கால்வாய் வெட்டியிருக்கிறார்கள். இருந்தாலும் அட்லாண்டிக் சமுத்திரத்தின் உப்புநீர், “நீரின் பாதை”

தானோட்டிக் கார்கள் – சட்டங்களும் ஒழுங்குமுறைகளும்

ஒழுங்குமுறையிலிருந்து எதுவும் ஒரு சட்டமாக மாறுவது என்பது மிகவும் சிக்கலான ஒரு வாகன நிகழ்வு. உயிர் சம்பந்தப்பட்டிருப்பதால், தீர முழுவதும் விசாரித்து முடிவுக்கு வரும் வரை, பல மாநில, தேசிய சட்ட அமைப்புகளில் ஆமை வேகத்தில் நகர்ந்து சட்டமாக மலர்வதற்குள் பல்லாண்டுகள் ஆகி விடுகின்றன. இதே அமைப்புகள் மிக வேகமாக வளர்ந்து வரும் தானோட்டிக் கார்களை எப்படிச் சீரமைக்கப் போகின்றன? தானோட்டிக் கார்களுக்குச் சாலையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லையா? எப்படி கூகிள், டெஸ்லா மற்றும் பல தயாரிப்பாளர்கள் தங்களுடைய கார்களைப் பொதுச் சாலைகளில் சோதனை செய்கிறார்கள்?

ஷப்லீ

என் மனைவிக்கு ஒரு நாய் வேணுமாம். அவளுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கு. குழந்தை நாய் வேணும்னு கேக்கறதா இவ சொல்றா. நாய் வேணும்னு என் மனைவி ரொம்ப நாளாவே கேட்டுக்கிட்டிருக்கா. அதை அவளுக்கு வாங்கித் தர முடியாதுன்னு நான்தான் அவகிட்ட சொல்லியாகனும். ஆனா இப்ப பாத்தா குழந்தை “ஷப்லீ”

பருவகாலப் பரவலியலும் தொழில்நுட்பவியலும்

லட்சகணக்கான ‘ஸ்டொமாடா’ (க்ரேக்க மொழியில் ‘ஸ்டோமா’என்றால் ‘வாய்’) என கூறப்படும் இலைத்துளைகள் மூலம் மரங்கள் கூட, மாறும் சுற்றுசூழலின் விளைவுகளைப்பற்றி பல உண்மைகளைக் கூறுகின்றன. நீர் ஆவி, கரியமில வாயு, மேலும் பிராணவாயு ஆகிய எல்லாமே இந்தத் துளைகள் வழியே இலைகளுக்குள்ளும் வெளியேயும் செல்கின்றன, அதன் மூலம் பிழைத்திருப்பதை ஒரு சவாலாக ஆக்குகின்றன….ஆனால் ஆன்ட்ரூவும் ட்ரெவரும், …மற்றொரு கட்டுரையில், கரியமிலவாயு அதிகரித்துள்ள போது, ஹார்வர்ட் காட்டின் மரங்கள், சிகப்பு ஓக் உள்பட, கூடுதலான செயல் திறனுயுடன் செயல்படுகின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள். வேண்டிய கரியமிலவாயுவை உட்கொள்ள தங்களது இலைத்துளைகளை அவ்வளவு விரிவாகவோ அல்லது அவ்வளவு அடிக்கடியோ அவை திறப்பதில்லை. அப்படியென்றால் மரங்களால் குறைந்த அளவு நீர் உபயோகித்து வேண்டிய அளவு அல்லது தேவைக்கு மேலான அளவு உணவு தயாரிக்கமுடிகிறது என்றாகிறது.

அதிர்ஷ்டசாலிகள்

விரைவுச் சாலையில் மழையில் மாட்டிக் கொண்ட போது
நேரம் மாலை ஆறு பதினைந்து
நில், முதல் கியருக்கு மாறு, மீண்டும் நில்
நாங்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பணியிலிருப்பவர்கள்

மகரந்தம்

மூன்று இதயங்களை தன்னகத்தே வைத்திருக்கிறது. அதில் நீலமும் பச்சையும் கலந்த ரத்தம் ஓடுகிறது. மென்மையான தோல் கொண்டதால் மெல்லுடலிகள் வகையைச் சேர்ந்தவை. தமிழில் பெரிய கணவாய். எட்டு கால்கள் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தில் ஆக்டோபஸ். எத்தனை கால் இருந்தால் என்ன… பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு தீர்த்து வைப்பதில் அறிவாளி. மனிதர் மட்டுமே கருவிகளைக் கொண்டு தன் திறமையை பன்மடங்காக்கும் வித்தை தெரிந்தவர் என்பதை தவிடுபொடியாக்கும் நுண்ணறிவாளர். ஆனால், மனிதர் போலவே ஏமாற்றவும் தெரிந்த மிருகம். அதைத் தவிர தன் நகையுணர்வை வேறு வெளிபடுத்துகிறது. விலங்கு போல் ஒலியெழுப்பும்/பேசும் கலையை அறிந்திருக்கிறது. ஒரு வேளை நமக்குள்ளேயே உலாவும் வேற்றுக்கிரக வாசியோ?

குளக்கரை

செஞ்சிலுவைச் சங்கம் நிஜமாகவே அவ்வாறு தன்னலமற்ற சேவையை வழங்குகிறதா என்பதை ஆராய்ந்தபோது ரெட் கிராஸ் வெறுமனே புறத்தோற்றத்தில் மட்டும் அப்படி பாவ்லா செய்வதாக தெரியவந்திருக்கிறது. பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு நியு ஆர்லான்ஸ் நகரில் வெறுமனே ஷோகேஸ் பொம்மை போல் ஒரு காரை அங்கும் இங்கும் ஓட்டி, நிவாரணத்தில் ஈடுபட்டது போல் சி.என்.என். டிவியில் பிரச்சாரம் மட்டும் செய்தது பல ஆண்டுகள் முன்பு அம்பலமானது. அதன் பின்னும் ஹைதி பூகம்பம் போன்ற பேரழிவுகள் நடந்த சமயங்களில் பணம் வசூல் செய்வதையும், நன்கொடைகளை புதிய நுட்பங்களைக் கொண்டு குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியதை இந்தக் கட்டுரை ஆதாரபூர்வமாக முன்வைக்கிறது. 2011ல் ஹய்தி நாட்டில் நடந்த நில நடுக்கத்திற்குப் பின் ஐம்பது கோடிகளை தானமாக சேகரித்துவிட்டு, மொத்த நாட்டிற்கும் ஆறே ஆறு வீடுகளை கட்டிக் கொடுத்தது போல் …

எம். எல். – அத்தியாயம் 4 & 5

சீதா பவனத்தில் சுப்பிரமணியப்பிள்ளை குளித்து விட்டுத் திருநீறு பூசிக் கொண்டிருந்தார். அவருடைய மூத்த மகன் செண்பகக் குற்றாலம் காலியாக இருந்த குளியலறைக்குத் துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு போனான். அடுப்பங்கரையைத் தாண்டிப் பின்னால் போனால்தான் குளியலறை. அதற்குப் பின்னால் சென்டரல் டாக்கீஸின் பின்புறச் சுவர் நீளமாக ஓடியது. குற்றாலம் அடுப்பங்கரையைத் தாண்டிப் போகும்போது இட்லி அவிகிற வாசனை வந்தது.

நிலாக்காலம் – முதுதந்தை கி.ராஜநாராயணன் அவர்களை வணங்கி..

இந்த இடத்தில்தான் கி.ரா. வின் கதைகளுக்கான தேவை இன்னும் இருக்கிறது. என்றும் தேவைப்படும் வாழ்வின் அடிப்படைகளைப் பேசுதல் இவற்றின் செறிவு. பெரிய நெருக்கடிகள் இல்லாததும், இலக்குகள் அற்றதும், எல்லா லட்சியவாதச் செயல்பாடுகளும் அபத்தமாகத் தெரிவதுமான காலம் என்று சொல்லப்படும் சமகாலத்தில்தான் இலக்கியம் தன் அத்தனை வலுவான கரங்களாலும் மானுடத்தைத் தழுவி ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை அதிகமிருக்கிறது.

நீர் பிம்பத்துடன் ஓர் உரையாடல்

புதுச்சேரி லே போர்த் வீதியின் மத்தியில் கிரேக்க நாட்டு அதீனாவின் முழு உருவச்சிலையை நிறுவி அவளது தலை, இடுப்பு மற்றும் கணுக்கால் பகுதியிலிருந்து அழகிய நீரூற்று வருமாறு வடிவமைத்த பிரெஞ்சு குதிரைப்படையின் முன்னாள் தலைவர் அலக்ஸான்றா தெப்போனேவின் முன்னறையில் கடற்காற்று கடுமையாக வீசினாலும் ஆடாது நிற்பதற்கான கனமான இரும்பு நாதங்கிகளையும் அதைவிட கனமான பர்மா தேக்கு மரச் சட்டகத்தையும் ராணுவ மெடல் போலத் தாங்கி கம்பீரமாக வீற்றிருந்தேன். அப்போது ராபர்ட் க்ளைவ் ஆட்டத்தைத் தாங்கமுடியாது வெர்சயி மாளிகையில் புதுச்சேரி மெத்ராஸ் பட்டிணங்களைக் கூறுபோட்டு பத்து ஆண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை. 1820ஆக இருக்கலாம். பிரெஞ்சுக்காரர்கள் சொல்வது தான் சட்டமாக ஆகியிருந்தது. நான் பெருமிதத்தின் உச்சியில் இருந்தேன். காரணமில்லாமல் இல்லை. கவர்னர் மாளிகை, ஆண்டனியட் ராணி கோபுர மாளிகை, துறைமுக சுங்கவரி காரியாலயம், பாகூர் அடைவைத் தாண்டி இருந்த கோடை வாசஸ்தலமாகிய பெத்தி மேசான் மாளிகை என எங்குமே என்னை விட அழகான ஓவியங்கள் கிடையாது. எனக்கெப்படி தெரியும்? என்னைத் தூரத்திலிருந்து பார்பவர்கள் காண்பவர்கள் நானென்னவோ பலாச்சுளை போல தங்கள் பெரிய விழிகளால் விழுங்குவது போலப் பார்க்கும்போது அவர்களது வாய் தன்னிச்சையாக சொல்வதைத்தான் நானும் உங்களிடம் திரும்பச் சொல்கிறேன்.

வாசிப்பனுபவம் – ஆரோக்ய நிகேதனம்

மஞ்சரியை திருமணம் செய்யும் கனவிலிருந்த ஜீவன் உடைந்துபோகிறார். அவர் கவனம் தந்தையிடம் பரம்பரை வைத்தியத்தைக் கற்றுக்கொள்வதில் திரும்புகிறது. அவருக்கு மஞ்சரியுடன் மணம் குறித்திருந்த நாளில், ஆத்தர் அவருக்கு மனைவியாகிறாள். ஆத்தருக்கு, மஞ்சரியைப் பற்றியும் ஜீவனின் காதலைப் பற்றியும் தெரியும்; அதனால் ஜீவனிடமிருந்து தனக்கு என்றைக்கும் தூய்மையான அன்பு கிடைக்கப்போவதில்லை என்று அவளாகவே முடிவுசெய்து கொள்கிறாள்.

நான்கு கவிதைகள்

எங்கோடி கண்டனை விளித்து

வம்பழந்து

ஊர்ப்பாடு புலம்பி

முதுகு காட்டிக் கொண்டே

வீடு திரும்பும் வழி முச்சந்தியில்

ரத்தம் சொட்டப்பிளந்து கிடந்த

பூசணிக்காய்தான்

இறுதியில் உண்மையைச் சொன்னது

உடல் மிகு தடிப்பு – காரணங்கள், விளைவுகள்

நான் சென்னையில் வளர்ந்த சமயம், குளிர் சாதனப் பெட்டி உள்ள வீடுகள் மிகக் குறைவே. அதனால், நினைத்தபோது எல்லாம்- பசித்தபோது அல்ல-  உணவோ சிற்றுண்டி வகைகளோ கிடைக்காது. சுகாதாரம் பற்றாததால், வெளியுணவுகளைப் பெரும்பான்மையோர் தவிர்த்தனர்.  பெரிய உணவகங்களில் உண்ணும் பழக்கம் பணப்புழக்கம் அதிகமாக உள்ள ஒரு சிலரிடமே இருந்தது. உடல் வீக்கமும் பண வீக்கமும் சேர்ந்தே இருந்தாலும், அவ்வாறு இருந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இன்றைய சூழ்நிலையைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம்

சருகுகள்

’அன்றே நான் இறந்திருக்க வேண்டும். அந்த நாளைக் கடந்திருக்கக் கூடாது. கடந்தேன். ஏன்? ஏன் கடந்தேன்?’ குழம்பினான் அவன். அலைக்கழிக்கும் விதி அவ்வளவு எளிதாக விட்டுவிடுமா? இன்னும் அடிபட்டு, மிதிபட்டுத் துடிக்கவேண்டாமா? செய்வதறியாது திணறவேண்டாமா? நாலுபேர் வாயில் பட்டுத் தெறிக்கவேண்டாமா? பைத்தியம் பிடித்து அலையவேண்டாமா? உடனே சொகுசாக செத்துப்போய்விட்டால் எப்படி? 

ஒரு நொடிச் சிந்தனை

இந்த எச்சரிக்கை உணர்வு,  முதலில் தயக்கமாக உள்ளிருந்தது. தகவல்களை உள்வாங்கும்போது அவை வெளிவராது,  ‘ஏதோ சரியில்லை’ என்ற உணர்வாக உள்ளே பரிணமித்து, பய உணர்வாகவே நின்றிருக்கும். தகவல்கள் அவற்றிற்குச் சாதகமாக இருப்பினும், அதிக உறுதியுடன் முடிவெடுக்க முனையாதிருக்கும். தருக்க நிலையில் வெளிக்காட்டப்படாத உணர்வு பூர்வமான அசொளகரிய நிலையாகவே இருப்பதால், பொதுவெளியில் தங்களது பய உணர்வைப் பகிர்ந்துகொள்ள மக்கள் தயங்குகிறார்கள்.