உறங்காமல் எண்ணங்கள் கலைந்தாலும்
உறங்கியெழுந்து முற்றிலும் புதிதாய் ஒன்று வளர்ந்தாலும்
ஏற்றுக்கொள்வேன்.
இரவு நீள நீள
உறங்காமல் வளர்த்த பித்தை
நுண்ணொடி அயர்ந்தே மாந்து விழிக்கையில்
அழித்து சிரிக்கிற காலம்
Category: இதழ்-170
திபெத் எப்படி நசுக்கப்படுகிறது- தலாய் லாமாவின் வாழ்நாளிலேயே
திபெத்தில் எதிர்ப்பாளர்களை வெளி உலகில் அர்த்த புஷ்டியோடு ஆதரிக்கும் ஒரு குரலாக ஓஸரின் குரல் இருக்கிறது. அதே போல, தனக்கு மிக்க ஆபத்து வரும் என்ற போதும், சீனாவின் ஒரே நோபெல் அமைதிப் பரிசை வென்றவரான லியு ஷியாஓபோ வை சிலாகித்துப் பேசி இருக்கிறார். ஒருக்கால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார அடுக்கில் இவருக்கு இருக்கும் யாரோ சில சக்தி வாய்ந்த ஆதரவாளர்களால்தான் இவர் சிறையில் அடைக்கப்படாமல் தப்பி இருக்கிறாரோ என்னவோ.
இவ்வளவு பெரிய சீனா எப்படி ஒரே நாடாக இருக்கிறது?
பொருளாதார வளர்ச்சி என்றால் மண்டை காய வைக்கும் கணிதமும் பொருளியல் அளவாக்கங்களும் கொண்டு விளக்குவார்கள். இவர் சரித்திரமும் சேர்த்துக் கொண்டு சீனாவின் 19ஆம் நூற்றாண்டின் பட்டு ஏற்றுமதியையும் 20ஆம் நூற்றாண்டின் வங்கி வளர்ச்சியையும் ஆராய்கிறார்: தொடர்புள்ள கட்டுரை: What would count as an explanation of the “இவ்வளவு பெரிய சீனா எப்படி ஒரே நாடாக இருக்கிறது?”
கனவுகளும் பழங்கதைகளும் மெல்ல மறையும் காலம்
ஐயங்களும் சோர்வுகளும் இல்லாமல் இல்லை பொதுவுடமைக் கட்சியின் வேலையில். அவளுக்கிருக்கும் பயங்களையும் பாரபட்சங்களையும் மீறி வரவேண்டியிருக்கிறது. சிறு வயதில் சிங்கப்பூரில் குண்டு விழுந்தபோது தன்னைச் சிங்கப்பூரில் இருந்த வீராங்கனையாக, எல்லோருக்கும் உதவுபவளாக, தன் தலையில் குண்டு விழுவது குறித்து அஞ்சாத ஒருத்தியாக தன்னைப் பாவித்துக்கொண்டவள் அவள். “அச்சமில்லை, யச்சமில்லை அச்சமென்ப தில்லையே; உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று பரதியார் பாடலைப் பாடியவாறு வீர சாகசம் புரிவதாகக் கற்பனை செய்தவள். ஆனால் ஓர் இளம் வயதுப்பெண்ணாக இருக்கும்போது பலமுறை அவளுக்கு அச்சம் வருகிறது
நந்தகுமார் கவிதைகள்
அங்கு வெளிச்சங்கள்
ருசி கெட்டிருந்தன
இருளைத் துழாவி
நீலம்
திட்டுத் திட்டாய்
படிந்திருந்தது
சாபங்களின் பெருங்கூச்சல்
திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்லும் சமூக வரலாறு
தமிழக வரலாற்றை ஓரளவுக்குத் தொகுத்த எழுத உதவும் சான்றுகளாக இருப்பவை கல்வெட்டுகளும் செப்பேடுகளும்தான்… பிற்காலச் சோழ வரலாற்றில் ஒரு மைல்கல் என்று இதைச் சொல்லலாம். லெய்டன் செப்பேடுகளோடு சேர்ந்து பிற்காலச் சோழர் வரலாற்றை முழுமையாக்கியதன் பெரும்பங்கு இச்செப்பேடுகளுக்கு உண்டு. வரலாற்றுச் செய்திகளைத் தவிர அக்காலச் சமூகம், அதிகாரவர்க்கம் ஆகியவற்றைப் பற்றியும் இது போன்ற செப்பேடுகளின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.
முதலாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்ட இந்தச் செப்பேட்டில் 31 ஏடுகள் உள்ளன. அதில் முதல் 10 ஏடுகள் சமஸ்கிருதத்திலும் அடுத்த 21 ஏடுகள் தமிழிலும் உள்ளன. இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், அக்காலச் செப்பேடுகள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டவை என்பது. சமஸ்கிருதப் பகுதியில் பெரும்பாலும் அரசர்களின் வம்சத்தைப் பற்றியும் அவரது பெருமைகளைப் பற்றியும் கண்டிருக்கும். தமிழ்ப்பகுதி தானமாக வழங்கிய பகுதிகளையும் அதனை நிர்வகிக்கும் வழிமுறைகளைப் பற்றியும் விரிவாகக் குறித்திருக்கும்.
கடை நொடியில் ஈடேற்றம்
“இந்த கதையைப் படிக்கின்ற ஒவ்வொரு முறையும் , என் உலகம் , ஒரு வலிய, மைக்ரொஸ்கோப்பால் பரிசீலிக்கப் படுவதை உணர்கிறேன்” என்கிறார் Zade Smith என்னும் நாவலாசிரியர். கதையில் இலியிச் ஒரு நீதி அரசர். (ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ரஷ்ய நாட்டவர் வில்லனாகச் சித்தரிக்கப் படுவது போல, டால்ஸ்டொயின் புதினத்தில் முக்கிய பாத்திரமாக நீதியரசர் இருக்கிறார் என்றால் அது டால்ஸ்டாய் தன் ஆன்மிக மதிப்பீட்டின் படி, வில்லனுக்கு சமமான இடத்தை நீதியரசருக்கு வழங்கியிருப்பதாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்று கட்டுரையாளர் கருத்து தெரிவிக்கிறார்) .
திருத்தத் துறை
என் அமர்வுக்கான அறைக்கதவை நாங்கள் நெருங்கும்போது நடைப் பகுதியின் மறு கோடியில் நிகழும் தள்ளுமுள்ளு என் கவனத்தை ஈர்க்கிறது. அங்கே மிகையுணர்ச்சியுடன் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண் மனநோயாளி பாதுகாக்கப்பட்ட அறையில் இருந்து வெளியேற்றப் படுவது தெரிகிறது. எனக்கு பயத்தில் இதயம் தொண்டைக்கு வந்து விடுகிறது.
“தொடர் குற்றவாளி; பல்வேறு அதிக பட்ச தண்டனைகள்“ – என் அறைக்கதவைத் திறந்து கொண்டிருக்கும் நர்ஸ் குறிப்புரைக்கிறாள்.
“வலிக்குமா?” – நான் கேட்கிறேன்.
ரங்கூன் – விஷால் பரத்வாஜின் திரைப் பயணம்
மக்பூல், ஒரு வயதான தாதா, அவனின் இளம் மனைவி, அவளின் காதலன் என மூவரின் கதை. வழக்கமான கதைகளில் வருவது போல, தோற்றம் எழுச்சி, உச்சம் வீழ்ச்சி எனக் கட்டம் கட்டி, கதை சொல்லாமல், நடுவிலிருந்து துவங்கி, முரண்கள் மோதல்கள் வழியே ஒரு காட்டாறு வீழ்ந்து, கரைமீறி உருவாக்கும் அழிவைச் சொல்லும் படம். வழக்கமாக, மூத்திரப் பை தாங்கும் வரை முதல் பாகம், உணர்வெழும் காதை முடிந்ததும் நகைச்சுவை அல்லது பாடல் எனப் பார்த்துப் பழக்கப்பட்ட மனம், இது போன்ற ஒரு திரைக்கதைக்கு மாற சிரமப்பட்டது. படம் பார்த்து முடிந்து அமைதி கவிழ்ந்த சில மணி நேரங்கள் கழிந்த பின் பேச்சில், மகள் மதுரா, படத்தில் கான்ஸ்டபிள்களாக வரும் ஓம்பூரியும், நஸ்ருதீன் ஷாவும், மக்பெத்தில் வரும் சூனியக்காரர்கள் எனக் காட்டித் தந்தாள். அவர்கள் பெயர் – பண்டிட் / புரோகித்.. வெடித்துச் சிரித்தேன். மக்பூலின் ஷேக்ஸ்பியர் அடிப்படை புரியாமல் பார்த்தாலும், அது தன்னளவில் முழுமையான படமாகத்தான் இருக்கும்.
செங்காந்தளின் ஒற்றை இதழ்
திண்ணையின் கீழே காலைப்போட்டு ஆட்களைப் பார்த்து அமர்ந்தாள் அம்மாயி.
“ஏவீட்டாளுக்கு நீர்மால எடுக்கப் போனது யாரு?”
“தீப்பந்தம் பிடிச்சக் கை எங்க?”
“பாடைத்தூக்கினத் தோளு எது?”
“கொல்லிவச்ச மகராசன் எவன்?”
மீண்டும் அவர்கள் மனசுகூட்டி வாதம் துவங்குமுன் அம்மாயி,
“இது எம்மனசுக்கு மட்டும் உண்டான ஒண்ணு. கழுத்துல மாட்டிருக்கணுமா?கழட்டி எறியணுமாங்கறது…” என்றபடி எழுந்தவள் தாழ்வாரக் கூரையிடித்துத் தள்ளாடினாள்.
மகரந்தம்
யாரோ ஒரு ‘புரட்சியாளர்’ சொன்னாராமே, ‘த மீக் ஷல் இன்ஹெரிட் த எர்த்’ என்று. அதைக் குறித்து யோசித்திருக்கிறவர்களுக்குத் தோன்றி இருக்கலாம். இந்த வாக்கியம்தான் என்னவொரு கனமான அர்த்தங்களை உள்ளே மறைத்திருக்கக் கூடும் என்று. … எல்லாப் போர்களிலும், நெஞ்சு நிமிர்த்தித் தீரனாகச் செல்லும் அப்பிராணிகள் முதல் கட்டக் கொலை வீச்சில் அனேகமாகக் கொல்லப்பட்டு விடுவார்கள். த மீக், அதாவது தயங்கித் தயங்கிச் செல்லும் மிச்சப் பிராணிகள் கடைசியில் என்ன எஞ்சுகிறதோ அதைத் தம்முடையதாகக் காணலாம் என்று ஓர் அர்த்தம் இதில் கொள்ள முடியும். இறுதிக் கணக்கில் திமிங்கிலம் கடலை ஆள்வது போலத் தோன்றினாலும், அதன் இருப்பே ப்ளாங்டன் போன்ற நுண்ணுயிர் பல்கிப் பெருகுவதில்தான் இருக்கிறது.
’தானோட்டிக் கார் ஐபேடுக்குச் சக்கரம் வைத்தது போன்றது’
மேற்குலகில், சாலையில் ஒரு விபத்து நடந்தால், சம்பந்தப்பட்ட இரு வாகனங்களும் (இரு வாகன விபத்து என்று கொள்வோம்) அங்கேயே நிறுத்திவிட்டு, போலீசாரை வரவழைக்க வேண்டும். விசாரணை நடத்திய போலீஸ் அலுவலர், தன்னுடைய அறிக்கையின் நகலை இரு வாகன உரிமையாளருக்கும் கொடுத்து விடுவார். யார் மீது தவறு என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும், வாகனச் சேதத்தை, தவறுக்கேற்றாற் போல, சம்பந்தப்பட்ட ஒரு வாகன உரிமையாளரின் காப்பீடு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். இதற்கு முக்கியமான ஆதாரம், போலீசாரின் அறிக்கை. இந்த அறிக்கையைக் கூர்ந்து கவனித்தால், கவனி – சீரமை – முடிவெடு – செயலாற்று என்னவென்று எளிதில் புரிந்துவிடும்.
ஓவியர் ஹொகுஸாய் கண்காட்சி
கட்ஸுஷிகா ஹொகுசாய் (Katsushika Hokusai – 葛飾 北斎) 1760 முதல் 1849 வரை வாழ்ந்த ஜப்பானிய ஓவியர். அவரின் இறுதி முப்பதாண்டுகளில் வரைந்த சித்திரங்களின் கண்காட்சியை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் கவனப்படுத்துகிறது. அவரின் அந்திமக்காலத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்: ”சொர்க்கம் மட்டும் இன்னுமொரு பத்தாண்டுகளுக்கு என்னை வாழ வைத்தால்…” என்று “ஓவியர் ஹொகுஸாய் கண்காட்சி”
கவிதைகள்: ராமலக்ஷ்மி, ஆதி கேசவன், சரவணன் அபி
காலைப் பனித்துளி அளவிலான
சிறிய வினாக்களுக்கோ
விடாது பெய்யும் அடைமழையாக
சரளமாக அளிக்க இயன்றது
விரிவான விடைகளை