முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்

தமிழில் இருக்கிற மிக முக்கியமான படைப்பாளியாக அவரைக் கருதுவதற்கு என்ன காரணம் என்றால், பாரதி சொன்ன மாதிரி எட்டுத்திக்குகளில் இருக்கும் கலைச் செல்வங்களை அவர் தமிழுக்கு கொண்டு வந்து சேர்க்கிறார். இந்த இரண்டாவது வகைக் கதைகள் பல்வேறு வெளிநாடுகளில் நடக்கிற கதைகள். அது காபூலாக இருக்கலாம். இஸ்லாமாபாத்தாக இருக்கலாம். டொராண்டோவாக இருக்கலாம். ஆனால் இந்தக் கதைகளிலெல்லாம் தமிழ்ப்பாத்திரங்கள் இடம் பெறுவார்கள். கதைசொல்லியோ, கதையிலுள்ள பிரதானப் பாத்திரங்களோ தமிழராக இருப்பார்கள். இது அவரது இரண்டாவது உலகம். அவரது பெரும்பாலான படைப்புக்களை இரண்டாவது வகைக்குள்ளே கொண்டு வந்துவிடலாம்.

மூன்றாவது வகைக் கதைகளும் வெளிநாடுகளில் நடக்கிற கதைகள்தாம். வெளிநாட்டு மண்ணில் வெளிநாட்டு கலாசாரப் பின்புலத்தில் நடைபெறும் கதைகள். ஆனால் இந்தக் கதைகளிலே ஒரு தமிழ் கதாபாத்திரமும் இராது. முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கதாபாத்திரங்கள் இடம் பெறும் தமிழ்க் கதைகளாக அவை இருக்கும். இரண்டாவது வகைக் கதைகளில் தமிழ்ப் பாத்திரங்கள் எனும் ஒரு சின்னப் பாலம் இருக்கிறது. இதில் அதுவும் இல்லை. முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கதாபாத்திரங்களை வைத்து நமக்கு முற்றிலும் அந்நியமான சூழலில் நிகழும் கதைகளை தமிழ் வாசகனுக்கு நெருக்கமான குரலில் அவரால் சிறப்பாகச் சொல்ல முடிகிறது. இந்தக் கதைகளின் வழி மனித மனத்தினுடைய ஆசாபாசங்கள் அடிப்படையிலே ஒன்று என்பதாக எடுத்துக் கொள்ளலாம். கலாசார வேறுபாடுகளை அவர் கொண்டு வந்து சேர்க்கிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சிரமமான வேலையை அவர் லாவகமாகச் செய்து கொண்டிருக்கிறார்.

புனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும்

சயந்தனின் ஆதிரை அண்மையில் வெளிவந்து பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நாவல். நாற்பது ஆண்டுகளுக்குமேலான ஈழத்துப்போராட்ட வாழ்க்கையை அழகியலோடு சொல்லிய நாவல் ஆதிரை. அதுவே ஆசிரியர் ஏற்படுத்துகின்ற நாவலின் மையப்புள்ளியுமாகும். ஆனால் ஆசிரியரின் மரணம் அந்நாவலின் மற்றமைகளை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டும். மலையகத்தமிழரையும் உள்வாங்குகின்ற அந்த நாவலில் முஸ்லிம்கள் என்பவர்கள் மற்றமையாகவே அதில் தெரிவர். அதன் அரசியல் நாவலாசிரியரின் சொந்த அரசியலைப்போலவே எல்லா விமர்சனங்களையும் எல்லாப்பாத்திரங்களினூடு கடமைக்குப் பதிவுசெய்துவிட்டு தமிழ்த்தேசியத்தின் மீதும் புலிகள்மீதும் ஒருவித உறவு கலந்த கரிசனையை வலிந்து ஏற்படுத்தும். இது சயந்தனை விலத்தி ஆதிரையை அணுகும்போது சாத்தியப்படும் மாற்று மையங்கள்.

தானோட்டிக் கார்கள் – தானியக்க வரலாறு

திடீரென்று தானோட்டிக் கார்கள் ஒன்றும் முளைத்து விடவில்லை. பல திரைப்படங்கள் மற்றும் விஞ்ஞானக் கதைகள் இவற்றைப் பற்றிக் கடந்த 60 ஆண்டுகளாகக் கற்பனை செய்து வந்துள்ளன. ஹாலிவுட் திரைப்படமான ஸ்பீல்பர்கின் Back to the Future, Minority Report (2002) திரைப்படங்களில், கார் தானே செலுத்திக் கொள்ளும். அதே போல, Total Recall (1990), Demolition Man, I Robot (2004), The Car (1967) போன்ற ஹாலிவுட் திரைப்படங்களும் தானோட்டிக் கார்களை நல்லனவாகவும், கொடுமை எந்திரங்களாகவும் கற்பனை செய்து பொது மக்களின் சிந்தனையைச் செதுக்கியுள்ளன. இந்தக் கட்டுரை சினிமாவைப் பற்றியது அல்ல – எப்படி, படிப்படியாக கார்களில் தானியக்கம் தோன்றியது என்பதைப் புரிந்து கொள்வதைப் பற்றியது

திணை புதிது

பெண்களுக்கு சக மனிதர்களால் நேரும் துன்பங்களை பேசுவதோடு, இயற்கையால் கூட பெண்கள் வஞ்சிக்கப்படுவதை பேசும் கதையும் உண்டு. தங்கள் மாதவிலக்கு நிரந்தரமாக முடியும் தருவாயில் பெண்களின் மன உளைச்சலை பேசும் கதை ’முழு விலக்கு’. மனித உயிர்களின் விளைநிலங்களாக பெண்கள் மதிக்கப்படுகிறார்கள். ஆனால் தங்கள் உடலில் நிகழும் இம்மாறுதலை கையாளும் அவர்கள் உளவியலை பேசும் கதை.

முத்துலிங்கத்தின் நாட்குறிப்புக்கள்

தன் வரலாற்றையும் தான் அறிந்த வேறொருவரது வரலாற்றையும் புனைவுப்பாணியில் நாவலாக்கித் தரும் போக்கும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் செல்வாக்குப்பெற்று வருகிறது. அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப்பெற்றிருப்பது திரு அ முத்துலிங்கம் அவர்களின் ’உண்மை கலந்த நாட்குறிப்புக்கள். ’உண்மை கலந்த’ என்னும் நூலின் முன்னொட்டே இது ஒரு தன் வரலாறு என்னும் நம்பகத் தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. ’உண்மையோடு பின்னிப் பிணைந்திருக்கும் அந்த நாட்குறிப்புக்களைத் தான் கையாண்டிருக்கும் உத்திகளாலும் நுட்பங்களாலும் செழுமைப்படுத்திப் புனைவு இலக்கியமாக அளித்திருக்கிறார் முத்துலிங்கம்.

அ .முத்துலிங்கம் படைப்புகள்

நான் பல்வேறு கால கட்டங்களில் மீண்டும் மீண்டும் திரும்பிச் சென்று படிக்கும் ஒரு கதை ‘பூமாதேவி’. தனது ஒவ்வொரு பருவத்திலும், அமெரிக்க பண்பாட்டு சூழலில் தனக்கான உலகை மகள் கட்டமைத்துக்கொண்டிருக்கும் காலத்திலெல்லாம் அதனை விலகி நின்று ஆச்சரியத்துடன் பார்க்கமுடிந்த தந்தையால், புராணங்களை அமெரிக்க நடைமுறை வாழ்க்கையின் உதாரணத்திலிருந்து தன்னால் இனிமேல் தன மகளுக்கு புரியவைக்க முடியாது என்று உணரும் நொடியில் அவளை இழந்துவிட்டதாக நினைக்கிறார். தனது மண் சார்ந்த, பண்பாடு சார்ந்த புராணம் அடுத்ததலைமுறைக்கு தொடர்பில்லாமல் போவது ஒரு நீண்ட நெடிய பண்பாட்டு சங்கிலியில் ஒரு தொடர்ச்சியை தன்னால் ஏற்படுத்தமுடியாமல் போனதால் ஏற்பட்ட இயலாமையின் வலியல்லவா அது?

 ஒரு கேள்விக்கு இரு பதில்கள்

ஐந்துவிரல்களுக்குள் அடக்கிவிடக்கூடிய கதைமாந்தர் எண்ணிக்கை, ஒன்றிரண்டு சம்பவங்கள், செறிவான மொழி இவைகளெல்லாம் கூடிவந்தால் சிறுகதை. இன்றைய படைப்பிலக்கியம் பின் நவீனத்துவம், பின்-பின் நவீனத்துவம்(Post-postmodernism) எனப் புதிய புதிய அவதாரங்களை எடுத்தபின்னும், மேலேகண்ட பொதுப்பண்புகள் மட்டும் கைவிடாமற் வைத்துள்ளன. அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளை ஒரு வாசகனாக என்னை நிறுத்தி ‘ ஏன் நேசிக்கிறேன் ?’ என்று என்னை நானே கேட்டுக் கொண்டபோது, எனக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட விடைகள் கிடைத்தன.

களம் புதிது, கதை புதிது, கதையாடலும் புதிது

பணியின் நிமித்தம் உலகம் முழுதும் சுற்றும் வாய்ப்பு பெற்றவர்கள் எழுதும் திறன் அற்றவர்களாக இருப்பார்கள். அதே போல், எழுதும் திறமை பெற்றவர்கள் இது போல் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் சென்று வாழும் வாய்ப்பு கிடைக்காதவர்களாக இருப்பார்கள். ஆனால்,முத்துலிங்கத்துக்கு இந்த இரண்டுமே வாய்த்திருக்கிறது. அது அவருக்குக் கிடைத்த வரம் என்று தோன்றுகிறது.

எல்லைகள் கடந்த எழுத்து

சென்ற ஆண்டு ரெய்த் உரைகளில் க்வாமி அந்தோணி அப்பையா ‘பிழையான அடையாளங்கள்’ எனும் தலைப்பில் விரிவாக உரையாற்றி இருக்கிறார். மனிதன் எல்லாவற்றிலும் ஒரேயொரு அடையாளத்தை மட்டுமே பேணியாக முடியும் என்பதில்லை என கருதுகிறார். ஒரே நேரத்தில் தான் ஒரு கானாக்காரன்னாகவும், ஆங்கிலேயனாகவும், அமெரிக்கனாகவும் இருக்க எந்த தடையும் இல்லை என்கிறார். அடையாள சிக்கல்களுக்கு தீர்வாக உலகம் தழுவிய மானுடத்தை முன்வைக்கும் ‘காஸ்மோபோலிடனிசத்தை’ முன்வைக்கிறார். ‘அமேரிக்கா’ காஸ்மோபோலிடன்களின் கனவு என கூறலாம். முத்துலிங்கத்தின் இலங்கைகாரி காணும் ‘அமெரிக்க’ கனவும் இது தான்.

ஆட்டுப்பால் புட்டு

அ.முத்துலிங்கத்திடம் கவர்ந்தவிடயம் என்று மூன்றைச் சொல்லுவேன். புறவய சித்தரிப்பில் புகுத்தும் கட்டுக்கடங்காத தகவல்களின்/தரவுகளின் எண்ணிக்கை. தேய் வழக்கற்ற, கற்பனையில் அவ்வளவு இலகுவில் எட்டாத உவமைகள். மானுட துன்பத்தை மிக இலகுவாக வேடிக்கையாகச் சொல்லி நகர்ந்துவிடும் வித்தை. இந்த மூன்று விடயங்களும் அவரது அனைத்துச் சிறுகதைகளிலும் இருக்கும். தன்கதைகள் ஊடாக அந்தரங்கமாக அவர்தேடி கண்டடையும் உண்மையென்பது சின்ன தருணத்தின் விரித்தெடுத்த வடிவமாக இருக்கும். அதற்குள் சுழலும் ஏராளமான புறவய சித்தரிப்புகள் கதையை சுவாரசியப் படுத்தும்; வாசிப்பின் இன்பத்தைத் தக்கவைத்துக்கொண்டேயிருக்கும்.

வர்ணனையின் ரசவாதம்

இவரது வர்ணனைகளில் மெல்லிய கேலி, கிண்டல்கள் விரவி இருக்கின்றன. ‘எழுத்தை எழுதிவிட்டு அதைக்கொடியில் காயப்போடுவதுதான் சமஸ்கிருதம் என்று கனகசுந்தரி கேலியாகச் சொல்வாள்’ [கனகசுந்தரி] என்பது ஓர் எடுத்துக்காட்டு. வெறும் கேலியாக மட்டும் இல்லாமல், ‘இலங்கை தேசியகீதத்தை நானும் சாவித்திரியும் சேர்ந்து பாடுவதாகத் திட்டமிட்டு ‘மன்மத ராசா மன்மத ராசா’ என்று முதல் இரண்டு வரிகளைப்பாடினோம். நிறைய அகதிகளை ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டின் தேசியகீதத்தைப் போலவே அது ஒலித்தது. ஒருவருமே கண்டுபிடிக்கவில்லை ஆனால் கைதட்டினார்கள்’ [மூளையால் யோசி] என்று ஒரு கசப்பான உண்மையைக் கேலியாக வெளிப்படுத்தும் அம்சமும் அதில் இருக்கிறது..

அயலகத்து கொம்புத் தேனீ

போர், மேற்கத்தைய கலாச்சரம், வாழ்வு முறை, காதல், பிரிவு, மணம், மணமுறிவு, இச்சைப்படி வாழும் முறை உள்ளிட்ட பலவும் அடங்கியவை. ஆகவே அங்கு நிலவும் அவர்களுக்கான சாதாரண ஒரு விஷயம் கூட நமக்கு புதிதாய் வியப்பாய் வித்தியாசமாய் இருக்கக்கூடும். அப்படியெனில் இவரது எழுத்துக்களை எந்த இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும்? வேறு வகையில் சொல்வதானால் இவரது எழுத்து எழுதப்பட்ட களத்தில் உள்ளவர்களுக்கு சாதாரண கதையாக இருந்துவிடுமா ? இதற்கான விடையை அவரை வாசிப்பவர்கள் மட்டுமே கண்டு கொள்ள முடியும். அதே சமயத்தில் இப்படியான வகை கேள்விக்கு உட்படுத்த முடியும்படியான தமிழ் எழுத்தாளர்கள் நம்மிடம் மிக அதிகம் இல்லை என்பதில்தான் இவரது பங்களிப்பின் இடம் உள்ளது.

கம்பீரமும், தீர்க்கதரிசனமும்; அ.முத்துலிங்கம் எனும் கதையாளன்

முத்துலிங்கம் ஈழத்து அரசியல் பற்றியும் தமிழர்கள் பற்றியும் காத்திரமான எடுத்துக்கூறலைச் செய்யவில்லை என இலக்கியவாதிகள் சிலர் கூறுவதைக் காணமுடிகிறது. வெளிப்டையாகக் கூறுவதில் இருந்து ஒதுங்கிவிட்டு சில இடங்களில் மறைமுகமாகக் கூறியுமுள்ளார். (அதன் வலி எனக்குத் தெரியும் அதனை காசாக்க என்க்கு விருப்பமல்ல” என்று பாலுமகேந்திரா ஒருமுறை சொல்லியுள்ளதை இங்கு ஞாபகமூட்டலாம்.) இச்சிறுகதையில் அதற்கான ஓரிடம் இருப்பதாகக் கருதுகிறேன்.

அ.முத்துலிங்கம்: காலம் வழங்கிய கொடை

அ.முத்துலிங்கம் கதைகள் படிப்பதற்கு அலாதியானவை. அவர் கதைகளின் மிகப்பெரிய சிறப்பம்சம் அயர்ச்சியோ சலிப்போ ஏற்படாத வகையில் நாம் அவற்றைப் படிக்க முடியும் என்பதுதான். அவரது சரளமான நடையில் நாம் தங்குதடையின்றி சறுக்கி விளையாடலாம். நகைச்சுவை அவரது பலம். அவரது எந்தக் கதையையும் சிறு புன்னகை கூட வராமல் நாம் படிக்கவே முடியாது. அதனால்தான் ஜெயமோகன், “அ.முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கை தரிசனத்தை. ‘இன்னல்களும் சிக்கல்களும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுட வாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத் துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே” என்கிறார்.

புதிதைச் சொல்பவர், புதிதாகச் சொல்பவர்

கலையாக்கத்தை ஒரு தொழில்நுட்பம்போல பயின்று பயின்று தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார் முத்துலிங்கம். இருபதாண்டுகளுக்கும் மேல் பழகிப்பழகி இன்று அவருக்கு வசப்பட்டுவிட்ட ஒன்றாக மிளிர்கிறது அந்தக் கலை. இன்று எந்த அபூர்வமான தகவலையும் அவர் அழகானதொரு கதையாக மாற்றியமைப்பதில் வல்லவராக இருக்கிறார். தகவலையும் கலையையும் கச்சிதமான முறையில் ஒன்றிணைத்து புதிதை புதிதாக உருவாக்கும் படைப்பாளிகளில் இன்றைய காலகட்டத்தில் முத்துலிங்கமே முதன்மையான கலைஞர்.

பதியம் – அ.மு.விற்கு ஒரு வாசக கடிதம்

கடவுள் தொடங்கிய இடம் நாவல் மூலம் உங்களை வாசிக்கத் தொடங்கிய தொடக்கநிலை வாசகி நான்.வீட்டிலிருந்து இரண்டுமணிநேர திருச்சி பயணத்திற்கு இரண்டுநாள் திட்டமிடும் எங்களைப் போன்றோர்க்கு சேருமிடம் நிச்சயமில்லாத பயணங்கள் நிறைந்த இந்தநாவல் முதலில் ஏற்படுத்துவது பதட்டத்தை தான்.இயல்பாக ஈழவாசிகள் ஏதோ ஒருநாட்டின் பெயரைச்சொல்லி கிளம்புகிறார்கள்.நாடில்லாதது என்பது “எத்தனைகளின் இல்லாததுகள்”என்று சொல்லும் நாவல்.எனக்குன்னு தனியா ஒருகணிணி இல்லை என்ற முறையீட்டை இந்தநாவலுக்கு பிறகு வைக்க தயக்கமாக இருக்கிறது.

கதை சொல்லியின் ரயில் வண்டி

இவரின் பெரும்பாலான கதைகள் “விவரணம்” செய்யும் பாணியில் இருக்கிறது. அந்த விவரிப்பில் நினைப்பு இருக்கிறது. அந்த நினைப்பில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு, எதிர்பாராத தருணத்தில் உடையும் சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவத்தின் வழியே மீண்டுமொரு நினைப்பு பிறக்கிறது. இவை அனைத்துக்கும் மேலாய், இவற்றை ஒன்றுகோர்க்கும் சரடாய் அங்கதம் இருக்கிறது. அந்த அங்கதத்தில் கூட இங்கிதம் தெறிக்கிறது. இவற்றை அவர் நிகழ்த்தும் களமும் நமக்குப் புதிது. பாத்திரங்கள் பிரான்ஸ், கனடா, ஆப்ரிக்கா என்று அன்னிய மண்ணில் நடமாடுகின்றனர். பீவர் மரங்களையும் தேவதாரு மரங்களையும் ரசிக்கின்றனர். ஆனாலும் வாசிப்பவருக்கு எவ்வித அன்னியத்தன்மை தாராது அப்பாத்திரங்களுடன் நடமாடும் ஒரு தேசாந்திரி போல …

ஆறாம் நிலத்தின் அடையாளம்

அவரது சிறுகதைகளை வாசித்தபிறகு ஏற்படும் உணர்வுக் கொப்பளிப்பில் பலமுறை அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.சிலமுறை லேசாக பகடி செய்ததுமுண்டு.ஒரு மூத்த எழுத்தாளரை பகடி செய்யும் துணிவையும் சுதந்திரத்தையும் தந்தது எது? என பலமுறை ஆச்சர்யமடைந்திருக்கிறேன். அது அவரது படைப்பு மொழியும் அது தந்த நெருக்கமும் என பின்னாளில் உணர்ந்துகொண்டேன்.ஒரு வாசகனாக அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது வாசகர்களின் கடிதங்களுக்கும் தாமதமின்றி உடனுக்குடன் பதில் எழுத்துவதைக் கூறுவேன். உண்மையில் வேறு எந்த மூத்த எழுத்தாளர்களும் அவர் அளவிற்கு வாசகர்களுடன் இணங்கி உரையாடுவார்களா என்பது சந்தேகமே.

மொழி சமைக்கும் நிலம் – அ.முத்துலிங்கத்தின் எழுத்து

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் தத்தமது தேசம், மொழி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலை என்று எல்லா வேறுபாடுகளையும் தாண்டி இந்த மூன்றையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இதற்கான போராட்டமே மனித வாழ்வு. இம் மூன்றையும் ஏதோவொரு விதத்தில் வெல்லும் முயற்சியில்தான் மனிதனின் சகல ஆற்றல்களும் குவிந்து செயல்படுகின்றன. முத்துலிங்கத்தின் புனைவுலகை கட்டியமைத்துள்ள பசி, காதல், மரணம் என்ற மூன்று புள்ளிகளையும் இணைக்கும் ஆதாரமான கோடாகவும் இத் தொகுப்பின் உட்சரடாகவும் அமைந்திருப்பது உயிர்களின் மீதான கருணை என்னும் அம்சமே.

பிற குதிரைகள் எதற்கு

அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும், அவர் எப்படிப்பட்ட அனுபவத்தையும் அங்கதத்துடன் எழுதி ஒரு புள்ளியில் படிப்பவர்களைத் துணுக்குற வைப்பார் என்று. அனுபவங்களா, புனை கதைகளா என்று வரையறுக்க முடியாத எழுத்து அவருடையது. ’ஒன்றுக்கும் உதவாதவன்’ புத்தகத்தின் முன்னுரையிலேயே அ.முத்துலிங்கம் சொல்லி விடுகிறார் “இந்த நூலில் நான் எழுதியிருப்பவை என் சொந்த அனுபவங்களைத் தான். சமையல் குறிப்புகளில் ‘உப்பு தேவையான அளவு’ என்றிருக்கும். அது போல் ‘கற்பனை தேவையான அளவு’”. தமிழ் எழுத்தாளர்களில் முத்துலிங்கம் அளவு உலகைச் சுற்றி வந்தவர்கள் வேறு யாருமில்லை என்று உறுதியாகச் சொல்ல்லாம். அவரது கட்டுரைகளில் ரஷ்ய உடற்பயிற்சி நிபுணர் முதல் கிரேக்கத் துப்புரவு பணிப்பெண் வரை, வியட்நாமில் உடல் எரிந்த சிறுமி முதல் நாட்டியப் பேரொளி பத்மினி வரை பலரும் வருகிறார்கள்.

இதயமா? நுரையீரலா?

இதயத்தின் மேல் சொல்கிறேன் என்று சத்தியம் செய்வதும் ஒரு வழக்கமாகவே இருக்கிறது. இந்திய பண்பாட்டில் இதயத்திற்கு உள்ள அளவிற்கு நுரையீரலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பஞ்ச தசி போன்ற வேதாந்த நூல்கள் பஞ்ச பூதங்களில் ஒன்றான பிராணன் என்று சொல்லப்படும் வாயுவையே தலைசிறந்ததாக சொல்கிறது. புராணங்களோ வாயுவை பகவானாகவே சித்தரிக்கிறது. அனுமநும் பீமனும் வாயு புத்திரர்கள் என்று தெரியாதவர் ஒரு சிலரே. யோக முறையில், பிராணாயாமம் என்று சொல்லப்படும் மூச்சுக்கட்டுப்பாடு மிகவும் இன்றியமையாதது. யோக நூல்களில், பிராணனை ஐந்தாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி வேலை தரப்படுகிறது.

த்ரிவிக்ரமன்

“வாயில் கூழாங்கற்களை வைத்துக்கொண்டு ‘குலேபகாவலி’ எனச் சொல்லும்போது ஒரு சத்தம் வருகிறதல்லவா. அதுதான் அவர் பெயர். நான் எழுத்தில் கொண்டுவர இயலாமல் சாரா என வைக்கிறேன்” (புளிக்க வைத்த அப்பம் ) என சொல்லி அவர் காட்டுவது 3400 வருடங்களாக தொடரும் விரட்டப்பட்ட மக்களின் வாழ்வின் மிச்சங்களை. இவைபோன்று பல உதாரணங்களை அடுக்குவது என் நோக்கமல்ல. இலக்கியவாதிகளில் மிகச்சொற்பமானவர்களே இப்படி மெல்லிய அங்கதத்தின் ஊடே எப்படிப்பட்ட பாரமான பத்தியையும் வாசிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களில் இவரே தலையானவர் என்றும் சொல்லலாம்.

தீராத கதைசொல்லி

இப்போது, நான் இந்தியாவில் இருந்துகொண்டு நியூ யார்க்கில், ரஷ்யாவிலிருந்து அங்கு வந்தேறிய பெண்ணுடன் வேலை செய்கிறேன். நானும் அவளும் சேர்ந்து சீனாக்காரரான எங்கள் ‘லீட்’ ஐப் பற்றிப் பேசிக்கொள்கிறோம். இந்தச் சூழலில், அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்கள் எனக்கு அதே விதமான விகசிப்பையும், புரிதலையும் அளிப்பது மட்டுமல்லாமல், உலகக் கலாசாரங்களை என் தாய் மொழியில் அணுக முடிகின்ற பரவசத்தையும் அளிக்கிறது. எங்கு சென்றாலும், அங்கு நமக்கு நன்கு தெரிந்த நம்ம ஊர் நண்பர், சுற்றி அழைத்து காண்பிப்பதுபோன்ற உணர்வு. அதிலும் ஒரு தேர்ந்த கதை சொல்லி…

பிரிக்கப்படாது – அந்தக் கடிதம்

சில வருடங்கள் ஓடிற்று. ஒரு வரி செய்தியாய் அவர்களின் இருப்பு அறியவரும். எனக்கும் வயதாகி இலக்கியம் தாண்டி, குடும்பம் ஏறிய ஒரு கட்டத்தில் அழைப்பு வந்தது. அவர்களும் மும்பைக்கே குடிபெயர்ந்திருந்தார்கள். அதற்குப்பின் அன்னம்மா ஒரு சில எழுத்தாளர் பெருந்தலைகள், தலை சாய்த்தபின் கூப்பிட்டனுப்புவார். நான் போவதில்லை. ஒரு மெலோ டிராமாவிற்கு மனம் தயாராயில்லை. இலக்கிய இடத்தை மெல்ல ஆன்மீகம் பிடித்துக் கொண்டது. (நன்றி: மாயாதீத சுவாமி)

அ முத்துலிங்கம்: நேர்காணல்

எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் முந்தைய பதிவுகள்: அ. முத்துலிங்கம் நேர்காணல் வாசகர் தேவை : அறிவியல் மறந்துவிட்டீர்களா? : வெ.சா. அஞ்சலி கடவுளை ஆச்சரியப்படுத்து : சிறுகதை வெளிச்சம்: சிறுகதை ஆச்சரியம்: சிறுகதை ஆற்றேன் அடியேன் : இலக்கியம் பற்கள் சாபம்: அனுபவம் கடவுளின் காதுகளுக்கு பாகிஸ்தானில் பறந்த “அ முத்துலிங்கம்: நேர்காணல்”

ஆரம், காரம், சாரம்

சொல்வனத்தின் 166 ஆம் இதழ் ஒரு சிறப்பிதழ். இந்தச் சிறப்பிதழ், பல நாடுகளிலும் நிலப்பகுதிகளிலும் வசித்தோ, பயணித்தோ பெற்ற அனுபவங்கள் வழியே இலக்கியம் படைக்கும் திரு. அ.முத்துலிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழும் பதிப்பாசிரியர்களைக் கொண்ட சொல்வனம் இணையப் பத்திரிகை, இப்படிப் புலம் பெயர்ந்த வாழ்வின் அனுபவங்களை இலக்கியமாக்குவதில் திறன் படைத்தவராகப் பரவலாக அறியப்பட்டிருக்கும் திரு.அ.முத்துலிங்கத்தைச் சிறப்பிக்க எண்ணியது இயற்கை. இந்தச் சிறப்பிதழில் அனேகமாக எல்லாக் கட்டுரைகளும் இதழின் நாயகரது திறன் பற்றிய பாராட்டுகளாக, பலரது பார்வைகளில் அமைந்துள்ளன. இத்தனை பாராட்டுகளாகக் கொடுத்தால் திகட்டாதா, ஒரு ருசி மாற்றத்துக்காகவாவது கார சாரமாக ஏதும் கொடுக்கலாகாதா

மகரந்தம்

உலகெங்கும் பரவியுள்ள ஒரு மத அமைப்பு இந்தியருக்கு அனேகமாக அதன் இயல்பெயரால் தெரிய வந்திராது. மார்மன் இயக்கம் என்பது தொடர்ந்து அமெரிக்காவில் பரவி வருகிறதோடு, அமெரிக்காவின் பெரும் நிதிநிறுவனங்கள், ஹோட்டல்கள், வங்கிகள் என்று பற்பல தொழில் அமைப்புகளையும் ஆள்கின்றது. இதன் கணக்கு வழக்குகள் சாதாரணருக்கு மட்டுமல்ல, அமெரிக்காவின் ஊடகங்களுக்குமே எட்டாத ரகசியங்கள். இதன் சில ரகசியங்கள் இப்போது புலப்படத் துவங்கி உள்ளன. கார்டியன் பத்திரிகை இந்த மார்மன் கிருஸ்தவ இயக்கம் எப்படிப் பல பெருநகரங்களில் ஏராளமான நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறது, அமெரிக்காவின் சில மாநிலங்களில் மார்மன் கிருஸ்தவர்களுக்காகத் தனிநகரங்களையே கட்டத் திட்டமிடுகிறது என்பதை வெளியிட்டுள்ளது. இந்த சர்ச்சுக்கு 2012 ஆம் ஆண்டின் கணக்குப் படி சுமார் 35 பிலியன் டாலர்கள் மதிப்புள்ள கட்டிடங்களும் நிலங்களும் சொந்தமானவையாக இருந்தனவாம். ஆண்டொன்றுக்கு இந்தச் சர்ச்சின் உறுப்பினர்கள் தம் வருட வருமானத்தில் 10% த்தைக் கொடுக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை.

குளக்கரை

எப்படி செஞ்சீனாவின் எழுச்சியில் உலகம் தாய்வானை அலட்சியம் செய்வதோடு, அந்தத் தீவுகள் ஒரு நாடாக இருப்பது கூட சாத்தியம் இல்லை என்று கருதவும் துவங்கி இருக்கிறது என்று வருத்தப்படுகிறார். தாய்வானின் மீது பற்பல நாட்டினர் தொடுத்த தாக்குதல்கள், படையெடுப்புகள் எப்படி அந்த வரலாற்றை மறுபடி மறுபடி அழித்து எழுதின என்றும் சுட்டுகிறார். குறுந்தேசியம், பெருந்தேசியம், பன்னாட்டியம், உலக ஏகாதிபத்தியம் ஆகியனவற்றின் இழுபறிப் போர்களில் சிக்கி மடிபவர் சாதாரணர் என்பதையும் அங்கீகரிக்கிறார். இவரது கட்டுரைக்கு ஒரு மாற்றாக வாசகர்கள் எழுதிய பதில்கள் அமைகின்றன. அவற்றில் இருவர் மிகச் சரியாகவே தாய்வானியர் என்று இன்று கருதப்படுவோரே அத்தீவுகளில் நெடுங்காலமாக வசித்து வந்த பழங்குடியினரை அழித்து ஒடுக்கித்தான் ஆட்சி செய்யத் துவங்கினர், அம்மக்களின் விடுவிப்பையும், அதிகாரத்திலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கும் உரிமைகள் கொடுப்பதையும் கருதிப் பேசாத தாய்வானிய வரலாற்று விவரிப்பு முழுமை பெறாதது என்று சுட்டுகிறார்கள்.