பத்திரிகையாளருக்கு அழகு என்பது நேரடியாகக் களத்தில் இறங்கி, சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து உரையாடி, இரு பக்கமும் சென்று, தன் சொந்தக் கண்ணால் கண்டதை தத்ரூபமாக விவரிப்பது. ஆனால், வருங்காலத்தில் அதற்கு தேவை இராது. உங்கள் கண்ணில் ஒரு கருவியை அணிந்துகொண்டால், எங்கே போக வேண்டுமோ, அங்கே போகலாம். எவருடன் பேச “போர்க்கள நடிப்பு”
Category: இதழ்-161
ஆஸ்கார் விருதுக்கு கருதப்பட வேண்டிய 16 படங்கள்
ஹாலிவுட் படங்களில் கருப்பர்களுக்கு முக்கிய கதாபாத்திரம் தருவதில்லை; அப்படியே ஆப்பிரிக்க அமெரிக்கர்களை நாயகர்களாகக் காட்டினாலும், எதிர்மறை கதாபாத்திரங்கள் மட்டுமே தருகிறார்கள் என்பது சென்ற வருட ஆஸ்கார் விருதுகளின் போது முக்கியமான நடைமுறை சிக்கலாக முன்னிறுத்தப்பட்டது. அதன் மூலம் சிறுபான்மையினரையும் பெண்களையும் தற்பால்விரும்பிகளையும் நடுநாயகமாகக் கொண்ட படங்களை எடுப்பதில் எல்லோரும் “ஆஸ்கார் விருதுக்கு கருதப்பட வேண்டிய 16 படங்கள்”
"என் பெயர்”
முன்பெல்லாம் கிராமங்களில் ‘பொட்டல்’லேர்ந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள்” எனும் தகவல் சொன்னால் போதும். அந்த ஊரில் இருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள். இன்ன மாதத்தில் வந்திருப்பதால், விவசாயத்திற்கு மடை திறந்து விடச்சொல்லி கேட்க வந்திருக்கிறார்கள் என அனைத்தும் புரிந்துவிடும். ஏனெனில் அப்போது அநேகரும், ஊரை பிரதிநிதித்துவப்படுத்தினர். பின்னிட்டு, ஊர் பெயர் போதாது. குடும்பப் பெயர் சொன்னால் விளங்குவதாக இருந்தது. இப்போது குடும்பப்பெயரை விட சொந்தப்பெயரே அடையாளத்திற்குப் பயனாகிறது. அதற்கு முகவரியாகவே குடும்பப் பெயர். இதிலும், பெண்களிடம் செய்த சர்வேயில்…
அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுதி எனும் சகுனியும்
நவீன யுகத்தில் மத்திய கிழக்கு என்றுமே அமைதிப் பூங்காவாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய நிலைமை போல் படு மோசமான நிலை எப்போதுமே இல்லை. ஈராக்கிலும், லிபியாவிலும் சிரியாவிலும், யேமனிலும் உள்நாட்டுப் போர், முழுவீச்சில் கொழுந்துவிட்டெரிகிறது. எகிப்திலும், தெற்கு சூடானிலும், துருக்கியிலும் ஆங்காங்கே கலவரங்களும் கிளர்ச்சிகளும் முளைத்து தழைத்தோங்கி வளர்கின்றன. சென்ற பல ஆண்டுகளில் வந்து போன, உள்நாட்டு கலகங்களின் எச்சங்கள் இன்றைய அள்விலும் அல்ஜீரியாவிலும், ஜோர்டானிலும், லெபனானிலும், சவூதி அரேபியாவிலும், டூனிஸியாவிலும் ஸ்திரமின்மையை நிரூபித்து அஸ்திவாரத்தை ஆட்டிக் கொண்டிருக்கின்றன. ஈரானிற்கும் சவுதி அரேபியாவிற்கும் நடுவில்…
அசிங்க அரசியலின் வெற்றி
ஆரம்பித்ததிலிருந்து ட்ரம்ப் ஒரு கோமாளியாகத்தான் பார்க்கப்பட்டார். அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும், எதிராளியைத் தாக்கும் முறைகளும், அரசியல் பண்பாடு அறவே அற்ற, முன்யோசனை இல்லாத கருத்துக்களும் இந்தியாவுக்குப் புதிது அல்ல. நம் அரசியல்வாதிகள் நம்மை அதற்குப் பழக்கியிருக்கிறார்கள். ஆனால் மேற்குலகில் அரசியல் சாக்கடை இருந்தாலும் பொதுவில் நாகரீகம் இருக்கும். ஆனால் ட்ரம்ப் அதைப் பறக்கவிட்டு தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் பாணியில் பிரச்சாரம் செய்தார். அவர் கடசியினரே அவரை ஓரம் கட்டினர். ஆனால் மர்மமான முறையில் எல்லா முக்கியமான கட்சி உள்தேர்தல்களில் ட்ரம்ப் முதலிடம் வந்தார். வேறு வழியே இல்லாமல் குடியரசுக் கட்சி அவரை அதிபர் வேட்பாளராக்கியது. எப்படி இந்த வெற்றி சாத்தியமானது?
இதற்குத்தானா ஆசைப்பட்டது அமெரிக்கா?
மைனாரிட்டி இன மக்கள், பெண்கள், இளம்வாக்காளர்கள், கறுப்பர்களை குறிவைத்து அவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து ஹிலரி பேசி வந்ததை வெள்ளை இன மக்கள் குறிப்பாக ஆண் வாக்காளர்கள் ரசிக்கவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன…செனட் மற்றும் காங்கிரஸில் மெஜாரிட்டி பெற்றிருக்கும் ட்ரம்ப் கட்சியினர் நீதித்துறையையும் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து விட்டால் அரசியல் சட்டங்களையும் தங்கள் விருப்பப்படி மாற்ற இயலும். அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தால் அவர்களை தடுக்கும் சக்தி ஜனநாயகக் கட்சிக்கு இல்லை என்பதும் கவலைதரும் செய்தி.
மகரந்தம்
புகைப்படங்களில் வேண்டிய பலவிதமான மாற்றங்களை செய்ய மென்பொருட்களுக்குக் குறைவில்லை. அதேபோல காணொளிகளில் எடிட்டிங் செய்து மாற்றங்களை உருவாக்க முடியும். கைப்பேசியில் கூட இந்த மாற்றங்களைச் செய்ய முடிவதால் பொழுதுபோக்குக்காக பலரும் படங்களை எடிட் செய்து வலைத்தளங்களில் பகிர்வதை பார்த்து வருகிறோம். ஆனால், ஒலித் துண்டுகளை எடிட் செய்து கொலாஜ் போல ஒன்று உருவாக்குவது சவாலாகவே இருந்துவந்தது. இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு சில ஒலித்துண்டுகளை மாற்றம் செய்யலாம் ஆனால் மொழிக்கும் ஒலிக்கும் இருக்கும் தொடர்பை எடிட் செய்யமுடியாது. அடோபி எனும் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் பிராஜெக்ட் வோக்கோ எனும் மென்பொருள் வழியில் ஒலிக்கும் மொழிக்கும் …
அ. முத்துலிங்கம் நேர்காணல்
ஆங்கிலேயர்களில் ஒரு வழக்கம் உண்டு. வைன் குடிப்பதற்கு ஒருவித கிளாஸ். சாம்பெய்னுக்கு வேறு ஒரு கிளாஸ். பியர் என்றால் கைப்பிடி வைத்த பெரிய கிளாஸ். விஸ்கிக்கோ, பிராந்திக்கோ வேறொன்று. எந்தப் பாத்திரத்தில் குடித்தாலும் சுவை ஒன்றுதானே. ஆனாலும் எப்படி பருகுவது என்பதற்கு ஒரு முறை உண்டு. கதை மனதில் உருவாகியவுடன் ஒரு சிக்கல் வரும். யார் கோணத்தில் சொல்வது? ஒருமையிலா, பன்மையிலா? தன்மையிலா படர்க்கையிலா. இவற்றை தீர்மானித்தபின்தான் வடிவத்தைப் பற்றி சிந்திக்க முடியும், ஒரு சிறுகதை மனதில் தோன்றிய பின் அதை எப்படியும் சொல்லலாம். ஆனால் சரியான வடிவத்தில் அது வெளிப்படும்போது உயர்வு பெறுகிறது. படைக்கும் பொருளே வடிவத்தையும் தீர்மானிக்கிறது
ஸஃபாரியின் இறுதி நாள் – ங்கொரொங்கோரொ
சிங்கம் என்னும் பெயருக்குப் பின்னால், கம்பீரமும், பயமும், வேட்டையும் மரணமும் இணைந்திருக்கிறது. ஆனால், உண்மையில் சிங்கம் என்னும் பெரும்பூனையின் வாழ்வு மிகச் சிக்கலானது. அவை தமக்கு எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழ்கின்றன. அதற்குள்ளாகவே, ஆண் சிங்கங்களுக்கு தந்தைமை உரிமைகள் பற்றிய தகராறுகளில், குட்டிகள் கொல்லப்படுகின்றன. பாதி சிங்கக் குட்டிகள் இரண்டாண்டுகளுக்கு மேல் வாழ்வதில்லை. இதையெல்லாம் தாண்டி, தனது எல்லைக்குள் விலங்குகள் சிக்காமல், பசியில் மரிக்கும் சிங்கங்களுமுண்டு. அப்படியானால், சிங்கம் என்னும் விலங்குக்கு ஏன் மனிதருள் இவ்வளவு மதிப்பு? 10000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனுக்கு அடுத்தபடியாக அதிகமாக பூமியில் வாழ்ந்த பாலூட்டி சிங்கம் தான்…
ஒருமை
ஒருமைப்பாடு என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள். சொல் ஒருமைப்பாடாகவும், செயல் தனிமைப்பாடாகவும் இருக்கிறது. ஒருமை என்றாலே போதும். union, unity எனும் பொருள் வந்துவிடும். வார்த்தைதான் வார்த்தைப் பாடு. கடமைதான் கடப்பாடு, பண்புதான் பண்பாடு, மேன்மைதான் மேம்மாடு. ஒருமைதான் ஒருமைப்பாடு. தேசீய ஒருமைப்பாட்டைக் கட்டிச் செறிவாக்க என்றே, நடுவண் அரசு சில நவீன கல்விக் கொள்கைகளை, மாநிலத்துக்கு ஒரு கொள்கை என மறு சீரமிப்புச் செய்து, தேசத்தைப் பன்மைப்பாடு செய்யும் சிதைப்பாட்டுக்கு முயன்று வருகிறது. விதி வலியது. பிடர் பிடித்து உந்த நின்றது.
உலக வரலாறு, ஆறு கோப்பைகள் வழியாக..
உலகின் முழு வரலாற்றை ஒரு ஆறு கோப்பைகள் வழியாக சொல்லிவிட முடியாதுதான். அதுவும், இந்த நூல் முக்கியமாக மத்திய கிழக்கிலிருந்து மேற்காய் இருக்கும் உலகின் வரலாற்றையே அதிகமும் விவரிக்கிறது. முழுமையான வரலாறு என்று இதை ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை மிக சுவாரசியமாய் விவரிக்கிறது. மேலே சொன்ன கார்ல் பாப்பரின் கூற்றைப்போல எல்லா வரலாறும் பெரும் வரலாற்றின் ஒரு அம்சத்தைப் பற்றியதுதானே?
மரங்கள் தூங்குமா?
பூவுக்குள் இருக்கும் மகரந்தம் உலர்வாக இருந்தால், பூச்சிகள் உடலில் எளிதாக ஒட்டிக்கொண்டு மகரந்தச் சேர்க்கை நடைபெறும். இரவில் மூடிக்கொள்ளுதல் மூலம் அது தன் மகரந்தத்தை பனியில் இருந்தும், குளிரில் இருந்தும் காத்துக்கொள்ள முடியும். தாவரத்தின் இலைகள் மூடிக்கொண்டு இரவு கீழ்நோக்கி தொய்யும்போது, தாவரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் விலங்குகளை, அவற்றை வேட்டையாடும் விலங்குகளைக் காட்டிக்கொடுத்துவிடும்
தோல்வியின் பாடல், காத்திருத்தலின் காட்சிகள் கவிதைகள்
உள்ளங்கைகளைத் தேய்த்து
கன்னங்களில் வைத்துக்கொண்டு
நான் காத்துக்கொண்டிருக்கிறேன்
பனி மூடிக்கிடக்கும் அந்த அந்த
காவிரியிலிருந்து கங்கை வரை – மோட்டார் சைக்கிள் பயணம்
காவேரி தாலாட்டும் பிரதேசம். அழகிய சிறு வயல்களில் நெல்லும், கரும்பும், மல்லிகையும், சாமந்தியும் பாகலும் காவேரி நீரருந்தி மணியாக சோலையாக மலராக காயாக பெருகும் நிலக்காட்சியை பல நாட்கள் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கண்டிருக்கிறேன். பாபநாசத்திலிருந்து ராஜகிரி, கபிஸ்தலம், சுந்தர பெருமாள் கோவில், சுவாமிமலை மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு அப்பாவின் ஹீரோ ஹோண்டா சிடி 100 பைக்கில் பெட்ரோல் டேங்க் மேல் அமர்ந்து பயணிப்பேன். செல்லும் ஊர்களைப் பற்றி அவற்றின் வரலாறு பற்றி நாட்டு நடப்புகள் குறித்து அப்பா என்னிடம் ஏதேனும் கூறியபடி வருவார். நான் முக்கியம் என நினைக்கும் விஷயங்கள் குறித்து பேசுவேன். காவேரியில் புதிதாக தண்ணீர் வரும். வெம்மணல் பரப்பின் மீது நீர் பாயும் போது மணல் துகள்களுக்கு இடையே உள்ள காற்று குமிழிகளாக கொப்பளிக்கும். குபுக் குபுக் என்ற சத்தம் பேரோசையாக எழும். ஆற்றில் பள்ளமாக உள்ள பகுதிகளில் நுரைக்கும் புது வெள்ளம் பாய்ந்து சென்று நிரம்பும். சிறு கிராமங்களின் கடைத்தெருக்களில் மக்கள் கூடி நின்றிருப்பர். கொள்ளிடக் கரையில் வெல்லம் காய்ச்சுவார்கள். வெல்லத்தின் மணம் அப்பிராந்தியம் முழுவதும் இருக்கும். அங்கு பணி புரியும் மனிதர்கள் எங்களை இன்முகத்துடன்…
ஷோபாசக்தியுடன் ஒரு மாலை
வெகு இயல்பாக உரையாட ஆரம்பித்த சக்தியின் கண்கள் அலைபாய்ந்தபடியே இருந்தன. கைகளில் தேநீர் கிளாசை எடுப்பதும் உறிஞ்சுவதும்கூட ஒரு பதட்டத்திலேயே நடந்ததுபோலத்தான் எனக்குத்தெரிந்தது. அது அவரது புலிவாழ்க்கையின் எச்சமாக இருக்கக்கூடும் என்பது என் ஊகம். இங்கு தேநீர் மட்டும்தான் கிடைக்கும் என்று எம்கே குமார் சொன்னபோது புரிந்துகொண்டவர் தான் பகலில் குடிப்பதில்லை என்றார். ஹேங் ஓவருக்காக அடுத்தநாள் காலையில் கொஞ்சம் குடிப்பது கணக்கில்வராது என்பது அவர் கருத்து. அதை எங்க ஊரில் ‘தெளிதண்ணி’ என்போம் என்றேன் நான். கேட்டு சிரித்துக்கொண்டார்.