ஒளி – அலையும் துகளும்

இந்திய விஞ்ஞானியாகிய எஸ். என். போஸ் (1894-1974), போஸான்கள் என்று அவரை கௌரவிக்கும் வகையில் அழைக்கப்படும் துகள்களின் புள்ளியிய விசையியலை (statistical mechanics) பயன்படுத்தி நேரடியாகவே இந்தச் சமன்பாட்டைத் தோற்றுவித்தார். இவ்வொளித் துண்டங்கள் (ஃபோடான்கள்), போஸ் – ஐன்ஷ்டைன் புள்ளியியல் விதிகளுக்கு உட்படும் போஸான்களாகவும் இருக்கின்றன. ஆற்றல் துண்டம் என்ற கருத்துருவை உள்ளடியே உள்ள ஒன்றாக ஐன்ஷ்டைன் துணிந்து கருதி, வெகுகாலமாக விடையற்ற புதிராய் இருந்த வேறொரு கேள்விக்கு விளக்கம் கண்டார்: அதுதான் ஒளிமின் விளைவு (photoelectric effect).

அகச்சிவப்பு படங்கள்- எட்வர்ட் தாம்ஸனின் வினோதப் பார்வை

கண்ணுக்குத் தெரியாதத்தை அகச் சிவப்பு ஒளிப்படங்கள் (infra-red photos) மூலம் உணரவைக்கிறார் எட்வர்ட் தாம்ஸன். அகச்சிவப்புக் கதிர்கள் வானத்திலிருந்து புகைப்படம் எடுக்கப் பயன்படுகின்றன. மருத்துவத்தில் உடலிலுள்ள கோளாறுகளை இரத்தக் குழாய்களை வெப்பத்தினால் விரிவடையச் செய்து, வலிகள், வீக்கங்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவின என்பதை ஆவணமாக்கி நினைவு கூற வைக்கிறார்: The “அகச்சிவப்பு படங்கள்- எட்வர்ட் தாம்ஸனின் வினோதப் பார்வை”

ஒளி இடுக்கி-கண்டு பிடித்த இயற்பியலாளர் ஸ்டீவன் சூவுடன் ஒரு பேட்டி

இயற்பியலில் கண்டு பிடிப்புகளுக்காக 1997 இல் நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் சூ, கலிஃபோர்னியா பல்கலையின் பெர்க்லி நகர வளாகத்தில் தொலைக்காட்சி நிகழ்வொன்றுக்குக் கொடுத்த பேட்டி இது. ஸ்டீவன் சு சீன வம்சாவளியைச் சேர்ந்தவர், ஆனால் அமெரிக்காவில் வளர்ந்து கல்வி பயின்றவர். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி “ஒளி இடுக்கி-கண்டு பிடித்த இயற்பியலாளர் ஸ்டீவன் சூவுடன் ஒரு பேட்டி”

கொரங்கி

மணி அடித்தவுடன், முதல் ஆளாக எழுந்து ஓடினேன் வீட்டை நோக்கி. தினமும் பள்ளியிலிருந்து வீடு வர 45 நிமிடம் ஆகும். ஆனால் இன்று 20 நிமிடத்தில் வீடு வந்தடைந்தேன்.
வீட்டு முன் ஒரே கூட்டம். பார்த்த எனக்கோ கை, கால் எல்லாம் நடுங்கியது, அக்காவுக்கு என்ன ஆச்சோ என்று.
அப்பா, மாமா, சித்தப்பா, பெரியப்பா என்று வெளியில் நின்ற அனைவரையும் விலக்கிக் கொண்டு உள்ளே சென்றேன். அம்மா, சித்தி, அத்தை, பெரியம்மா, ஆச்சி எல்லாரும் நின்று கொண்டிருந்தனர். அக்காவை மட்டும் காணவில்லை.

செயற்கை நுண்ணறிவு: 3

குரங்கை விட மனித இனத்தின் அறிவு உயர்ந்து இருப்பதில் முக்கியமானது என்ன்வென்றால், நம்மால் வேகமாக சிந்திக்க இயலும் என்பதல்ல, நம்மால் தரமாக சிந்திக்க இயலும் என்பது தான். குரங்குகளின் சிந்தனை வேகப்படுத்துவதன் மூலம் மட்டும் அது மனிதனாகப் பரிமாண வளர்ச்சி அடைய முடியாது. அதன் சிந்தனையில் தரத்தில் பாய்ச்சல் நிகழ வேன்டும். இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், குரங்குகள், மனிதர்களையும் கட்டிடங்களையும் வேறுபடுத்திப் பார்க்க இயன்றாலும், மனிதர்கள் தான் கட்டிடங்களைக் கட்டினார்கள் என்று புரிந்து கொள்ள இயலாது. ஏன், அந்த வகையில் கற்பனை செய்யக் கூட இயலாது. இது தான் சிந்தனைத் தரத்தின் வேறுபாடு.

ஸ்பினோஸா ஏன் இன்றும் பொருட்படுத்தக் கூடியவராக இருக்கிறார்?  

அப்ரஹாமிய மதங்களுக்குப் பொதுவாக உள்ள தேவபிதாவை மறுப்பதைத் தன் அடித்தளமாகக் கொண்டது ஸ்பினோஸாவின் தத்துவம். ஸ்பினோஸாவின் கடவுள், மனித அனுபவ உணர்தல்கள் அனைத்தையும் கடந்த, எல்லாப் பாதுகாப்பையும் கொடுக்கும் தேவதையின் உளநிலை, ஒழுக்க குணங்கள் எதுவும் இல்லாத ஒரு கருத்துரு. ஸ்பினோஸாவின் ‘அறம்’ (1677ஆம் வருடத்தியது) என்னும் தத்துவச் சாதனையான புத்தகத்தில் உள்ள ‘தேவன்’ அன்பு செலுத்தும் ஒரு நபர் அல்ல. அதற்கு நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் அல்லது உணர்ச்சிகள் எவையும் கிடையாது.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் தீராத பிரச்சினைகள்; இந்திய அணியின் டூர் சர்ச்சைகள்

இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில், ஜிம்பாப்வே போன்ற வலிமையற்ற அணியுடன் மோத நேர்கையில், எதிரணிகள் பொதுவாக, திறமைகாட்டுகின்ற ஆனால் சர்வதேச அனுபவமற்ற வீரர்களை சோதிப்பதற்காக அணியில் சேர்ப்பது வழக்கம். அதைத்தான் இந்திய கிரிக்கெட் போர்டும் செய்தது. அதே சமயத்தில் ஜூலை-ஆகஸ்டில் வரவிருக்கும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4 -மேட்ச் டெஸ்ட் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். அதனால், கிட்டத்தட்ட ஓய்வின்றி இந்தியாவுக்காகத் தொடர்ந்து விளையாடிவரும் அனுபவ வீரர்களுக்கும், அத்தகைய தொடருக்குமுன் போதிய ஓய்வு கொடுப்பது உத்தமம் என நினைத்திருக்கவேண்டும்.

என்னுடன் ஒரு நேர்முகம் – சால் பெல்லோ

நாவல் இருக்க வேண்டிய இடத்தில், அதற்குப் பதிலாக “படித்தவர்கள்” அதைப் பற்றி என்ன கூறமுடியும் என்பதே முன்னிலையில் இருக்கிறது. நாவலைக் காட்டிலும் இதைப்போன்ற “படித்த” சொல்லாடல்களே சில பேராசிரியர்களுக்கு உவப்பாக இருக்கிறது. தேவாலயப் பிதாமகர்களில் ஒருவர் வேதாகமத்தை எதிர்கொண்ட மனோபாவத்துடன் இவர்கள் புனைவை எதிர்கொள்கிறார்கள். ஆதாமும் ஏவாளும் புதரடியில் ஒளிந்து கொண்டிருக்கையில் கடவுள் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்ததை நாம் உண்மையிலேயே கற்பனை செய்ய வேண்டுமா என்று அலெக்சாண்டிரியாவின் ஒரீஜென் (Origen) கேட்டார்.

முப்பத்தெட்டு மேதைகள்

ஒருநாள் உடல்நலமில்லாத சமயத்தில் தம்பியை அழைத்து கோவிலுக்குச் சென்று உடல்நலமில்லாத செய்தியைத் தெரிவிக்கும்படியும், சொற்பொழிவைக் கேட்பதற்குத் திரண்டிருந்தவர்கள் ஏமாற்றமடையாமல் இருக்கும்பொருட்டு ஒன்றிரண்டு பாடல்களைப் பாடிவிட்டு வரும்படியும் சொல்லி அனுப்பிவைத்தார். தம்பியும் அப்படியே செய்தான். இரண்டு பாடல்களை மனமுருகும் வகையில் பாடினான். பாட்டைப் பதம்பிரித்து, நன்றாகப் புரியும்படி அவன் பாடிய விதம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் அவர்கள் அவனிடம் அப்பாடல்களுக்குப் பொருள் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்கள். அவனும் பாடல்களின் பொருளை விரிவாகச் சொல்லத் தொடங்கினான்.

தீரா பாரிஸ் பக்கங்கள்…

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த மாற்றத்தை – தனி மனித, சமூகங்களில் இருந்து தேசங்களின் தலைவிதிகளை வரை நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றத்தை பின் புலத்தில் கொண்டிருப்பதே இந்த நூல் வழக்கமான புலம் பெயர்வு ஆவணங்களிலிருந்து விலகித் தெரிவதற்கு முக்கிய காரணங்களாக எனக்குத் தோன்றுகிறது.
நூலில், ஒரு பாண்டிச்சேரி தமிழர் செல்வத்திடம் கேட்ட கேள்வியையையும் அதற்கு செல்வம் அவர்களின் பதிலையும் குறிப்பிட்டு கட்டுரையை முடிக்கலாம் என நினைக்கிறேன்.
தூதரகப்பக்கம் அறிமுகமாகிக்கொண்ட பாண்டிச்சேரி தமிழர் கேட்ட கேள்வி முதலில் வேடிக்கையாக இருந்தாலும், வேடிக்கை இல்லை.

பக்கிரிப் பிள்ளையும் உப்புப் பருப்பும்

தளவாய்ப்பேட்டையில் வாழ்கையில் புரட்டாசி மாதங்களில் விரதம் இருப்போம். காலையில் சோறு குடிக்காமல் பெருமாபாளையம் பெருமாள் கோவிலுக்குப் போய் வந்த பின்பு மதியச் சோத்துக்கு குழம்புக்குப் பதிலாக பருப்பு இருக்கும். பருப்பு எனில் வெறும் பருப்பல்ல. கடுகு, கறிவேப்பிலை கொண்டு தாளிக்கப்படும் அது “உப்புப் பருப்பு” என அழைக்கப்படும். சுடுசோற்றில் உப்புப் பருப்பையும் நெய்யையும் கலந்து (காலை பட்டினிக்குப் பின்பு) கட்டினால் அது அமிர்தம் என அழைக்கப்படும். அந்த உப்புப் பருப்பு வடித்த நீரில் செய்யப்படும் ரசம் – அமிர்த ரசம்.
 
”எப்படி இருக்கு?” என்றார் வாசி. “அற்புதம்” என்று சொன்னேன். உணவினூடே அவரின் பாட்டனார் (எள்ளா கொள்ளா தெரியவில்லை) தென் ஆப்பிரிக்கா வந்த கதையைச் சொன்னார். “சின்னப் பயனா இருக்கும் போது அவருக்கு யாரோ இங்க வந்தா மண்ணுல மம்பட்டியப் போட்டுத் தோண்டுனா தங்கம் கிடைக்கும் சொன்னாங்கன்னு வந்தாராம்”. உப்புப் பருப்புக்கப்பறம் இது ரெண்டாவது க்ளூ, நெம்ப ஸ்ட்ராங்கான க்ளூ . இனி பொறுப்பதில்லை தம்பீன்னு அந்தக் கேள்வியைக் கேட்டேன். “உங்க சர் நேம் என்ன?”
 
“கோவேண்டர்” இதற்கு அடுத்த கேள்வி கேட்பது வேஸ்ட் என்றாலும் கேட்டேன் – “எந்த ஊர்?” – “கோயமுத்தூர் பக்கம். ஆனால், என்ன ஊர் என்பது தெரியாது.”

கானமழை பொழிகின்றான்…

வாசிப்பில் ஆழ்ந்தவனின் சிவந்தகண்கள் தன் இசையில் இணைந்து இயைந்து மயங்கிக் கிறங்கிக் கோணி எங்கோ நோக்குகின்றன; சிவந்தவாய் குழலை ஊதுவதற்காகக் காற்றை உறிஞ்சுகிறது; புருவங்கள் வளைந்து காண்கின்றன. அவற்றில் வாசிப்பின் மும்முரத்தால் சிறுவியர்வை படர்ந்திருக்கிறது. இப்படி ஒரு குழலூதுபவனைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இத்துணை மும்முரமாக ஒருவன் குழல் இசைத்தால் என்னவாகும்? பிரபஞ்சமே தன் சுழற்சியை மறந்துநிற்கும். பறவைகள் குஞ்சுகளுக்கு உணவளிப்பதனையும் மறந்து, தமது கூடுகளைத்துறந்து வந்து காட்டில் பரவிக்கிடக்கின்றன. மேய்ச்சலுக்கு வந்த மாடுகள் தமது கால்களைப்பரப்பிக் கொண்டும், தலையைத் தாழ்த்திக்கொண்டும் காதுகளைக்கூட அசைக்காமல் அந்த இசையைக் கேட்டபடிக்கு நின்றனவாம்.

பிரிட்டனும் யூரோப்பும் – அடுத்தது என்ன?

பிரிட்டன் யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியவுடன், உலகப் பொருளாதாரம் மாபெரும் சிக்கலைச் சந்திக்கும் என்றும், யூரோப் மட்டுமல்லாது உலக அளவிலும் நாடுகளின் உறவுகளிலும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்றும் பல ஆருடங்கள் கூறப்பட்டன. அதன்படியே முதல் சில நாட்களில் முக்கியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது என்னவோ உண்மைதான். ஆனால், சீக்கிரமே சுதாரித்துக்கொண்டு பங்குச் சந்தைகள் மீண்டுவிட்டன. பல சந்தைகளின் குறியீடுகள் ஓட்டெடுப்புக்கு முந்தைய அளவை எட்டியதோடுமல்லாமல், அதையும் தாண்டி முன்னேறத் தொடங்கியுள்ளன. இது சுட்டுவது என்ன?

கருவிகளின் இணையம் – வாய்ப்புகள் – பகுதி 21

வணிகத் திறனாளர்கள் மற்றும் செயற்கைத் திறனாளர்கள் (business and artificial intelligence specialists) – கருவிகள், மனிதர்களைப் போல இயங்குவதில்லை. இத்துறைகளில் உள்ள நெடுங்காலக் கனவு, சீராக உருவாக்கப்பட்ட தரவுகள். மனிதர்கள், குறைகள் நிறைந்த தரவுகளை உற்பத்தி செய்பவர்கள். அத்தோடு, மனிதர்கள் அரசியல் கைதிகள் – தரவுகள் சொல்வதையும் மீறிச் செயல்படுபவர்கள். இத்தனைக் காலம், மனிதர்களை ஒட்டியே உருவாகிய இத்துறைகள், எந்திரங்கள் உருவாக்கும் தரவுகளை ஆராய்ந்து முடிவுகளை முன்வைக்க வேண்டும். அரசல் புரசலான முன்வைப்புகள் ஒத்து வராது.

குளக்கரை

அமெரிக்கர்கள் தொடர்ந்து ’சீனா உடையும், நொறுங்கிச் சின்னாபின்னமாகும்’ என்று கனவு காண்பதில் நேரம் கழித்துக் கொண்டிருக்கையில், சீனா அண்ட சராசரங்களையும் எப்படி ஆள்வது என்று கனவு கண்டு கொண்டிருக்கிறது. வளர்ந்த ஏகாதிபத்தியம் தன் உந்து சக்தியை இழந்தபின் எப்படிக் காலம் கழிக்கும் என்பதற்கு அமெரிக்கா உதாரணமென்றால், வளர்ந்து உலக அதிபத்தியத்தைப் பிடிக்க முயலும் ஏகாதிபத்தியம் எப்படி நடந்து கொள்ளும் என்பதற்குச் சீனா உதாரணம் எனலாம். இரண்டுமே தொடர்ந்த அரசியல், ராணுவ, பொருளாதார சூதாட்டத்தில்தான் அதிகாரத்தை வென்று/இழந்து, மறுபடி வென்று வருகின்றன, வந்தன.

மகரந்தம்

மிருகக் காட்சி சாலை என்பது மிருகங்களை மனிதர்கள் பார்க்கும் இடமா அல்லது மனிதர்களை மிருகங்கள் பார்க்கும் இடமா என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஃபிலடெல்பியாவிலுள்ள மிருகக்காட்சி சாலை இதை உண்மையாகவே பரிசோதித்துப் பார்க்க நினைத்திருக்கிறது. மிருகங்களை ஓரிடத்தில் அடைத்து வைக்காமல், அவைகளுக்கென்று தனிப்பாதைகள் ஏற்படுத்தி (மூடப்பட்ட, பாதுகாப்பான பாதைகள் தான்) அவற்றை அந்தப் பாதைகளில் உலவ விட்டிருக்கிறார்கள். தலைக்கு மேல் நடமாடும் மிருகங்களைப் பார்த்து மக்களும் மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். ஆனால்அங்கு வரும் மனிதர்களைப் பார்த்து மிருகங்கள் என்ன நினைக்கின்றன ?