”எளிதில் எல்லோராலும் இகழப்படுபவையில் எனக்கு ரசனையில்லை. அறச்சீற்றம் இருக்கிறது; ஆனால், அந்த தார்மீகக் கோபத்தை அடையும் அடையும் பாதை மாறுபட்டிருக்கிறது. இரண்டு எதிர்மறை சக்திகளை சித்தரிக்கிறேன்: காலனியம் மற்றும் நிலக்கிழாரியம் (ஃபியூடலிஸம்). வாஜித் மற்றும் டல்ஹவுஸி – ஆகிய இருவரையும் கண்டனம் செய்யவேண்டும். இதுதான் எனக்கிருக்கும் சவால். அந்த கண்டனம் வெறுமனே கூக்குரலாக இல்லாமல், சுவாரசியமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கவேண்டும். இரு அணிகளுக்குமே நல்லனவும் உண்டு; அதையும் சுட்ட வேண்டும். இந்தப் படத்தை நேரடியாகப் பார்க்காமல், கொஞ்சம் பூடகமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.”
Category: இதழ்-146
கன்று மேய்க்க ஒரு கோல் கொண்டுவா!
மலர்களில் மிக உயர்ந்தவை என மனிதர்கள் கொண்டாடும் சிலவகை மலர்களைக் குழந்தைக்குச் சூட்டி அழகுபார்க்க எண்ணுகிறாள் அன்னை. அவன் தன்னுடைய அழைப்புக்கும் ஆசைகாட்டுவதற்கும் மயங்கிவருவான் என எதிர்பார்ப்பது எதனால்? குழந்தை வளரும்பொழுதில், “இப்பொருள் உயர்ந்தது; இது அழகுமிக்கது; இது உனக்கு நல்லது,” என்பதெல்லாம் தாய் கூறித்தான் குழந்தை அறிந்துகொள்கின்றது. இல்லாவிடில், தெருவோரச் செடியில் பூத்துக்குலுங்கும் வண்ணமயமான அந்திமந்தாரையும், அரிதாகக் கிட்டும் செண்பகமலரும் அவனுக்கு ஒன்றுதான். தாய் கூறித்தான் இம்மலர்கள் உயர்ந்தவை, மணமிக்கவை, மிக அரியவை, விலைமதிப்பற்றவை என அறிந்துகொள்கிறான். அவளும் இவற்றையெல்லாம் கூறி அவனை ஆசையாக அழைத்துத் தன் உள்ளப்படி அவன் நடந்துகொள்ளுமாறு செய்கிறாள்!
‘மேகங்கள் போலக் கருத்தநிறம் கொண்டு, அவற்றின் குளிர்ந்த தன்மையையும் உடையவன் நீயல்லவோ குழந்தாய்! ஏழுலகும் உய்ய எங்கள் ஆய்ப்பாடியில் வந்து பிறந்தாய். உனக்கு மணம்மிக்க மல்லிகைப்பூவைச் சூட்டுவேன், வருவாயாக,” என அன்போடு விளிக்கிறாள்.
கருவிகளின் இணையம் – பொதுப் பயனுடைமை உலகம் – பகுதி 14
தண்ணீரின் அளவு எத்தனை என்று பல அரசாங்கங்கள் பலாண்டுகளாக பதிவுகள் வைத்து வந்துள்ளார்கள். ஆனால், கருவிகள், இந்த நீர் சக்கர மேலாண்மையை இன்னும் நன்றாகக் கட்டுப்படுத்த பல விதங்களிலும் உதவும். அவ்வப்பொழுது, அனைத்து உலக நகரங்களிலும், சில நாட்கள் ஏராளமான குளோரின் வாசம் குடிநீரில் நாம் முகர்ந்திருக்கிறோம். இதற்கு என்ன காரணம்? ஒரு புயலோ, அல்லது பெரு மழையோ பெய்தால், நதி நீர் அல்லது ஏரி நீரின் தூய்மை குறைந்ததை மெதுவாக ஒரு வேதியல் நிபுணர் ஒரு சாம்பிள் எடுத்து, அதை ஒரு ஆராய்ச்சிசாலையில் ஆராய்ந்து, தூய்மை அளவு மோசமாகிவிட்டதைப் பற்றி கதறி (☺), மேலாண்மை உடனே, குளோரின் அளவை அதிகரித்து, நிலமையைச் சமாளிப்பார்கள். இதற்கு சில நாட்களாகி விடுகிறது. இங்குதான் கருவிகள், ஆராய்ச்சிசாலையாய், நதியின் பல நிலைகளிலும் நமக்கு நீரில் எத்தனைக் கரைந்த பிராணவாயு உள்ளது, எத்தனைக் கரைந்த மற்ற ரசாயனங்கள் உள்ளன என்று சொல்லிய வண்ணம் இருக்கும். ஒரு கணினி பயன்பாடு, நீரில் தேவையான ரசாயனங்கள் குறைந்தவுடன், உடனே அறிவிக்கும். எதற்கும் காத்திருக்காமல், சில நீர் சுத்த சமாச்சாரங்களை சரிப்படுத்தி விடலாம். குடிநீர் தரக் கட்டுப்பாட்டிற்கு இது ஒரு மிகப் பெரிய உதவியான விஷயம்.
ஈராக்கில் தொழில் தொடங்கலாமா!
ஈராக்கில் போலிஸ் ரிப்போர்ட் பெறுதல் என்பது சாத்தியமே இல்லை. ஒரு சிறு எடுத்துக்காட்டாக இத்தாலியைச் சேர்ந்த ஒரு கம்பனி பாஸ்ராவை ஒட்டியுள்ள ஓரிடத்தில் எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய் அமைக்கும் பணிக்கு வந்தது. அவர்களின் கொடவுனில் இருந்து ஐந்து லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களும், புத்தம் புது ஏர்கண்டிஷனர்கள் பலவும் காணாமல் போயின. எடுத்தவர் யாரெனத் தெரியும். ஆனால், சொல்ல முடியாது. சொன்னால் மறுநாளே கொலை செய்யப்படுவீர்கள். போலிஸில் சென்று பொருட்கள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தால் யார் மீது சந்தேகம் என எழுதிக்கொடுக்கச் சொல்வார்கள். நீங்கள் கொஞ்சம் தைரியமான ஆளாய் இருந்து ஈராக்கியின் பெயரையோ அடையாளத்தையோ சொன்னால் அவர்களே திருடிச்சென்றவனிடம் நம்மை காட்டிக்கொடுப்பதுடன் நாம்தான் திருடி விற்றுவிட்டோம் என்ற திசையில் கேஸைக் கொண்டு செல்வார்கள். மேலும், போலிஸ் பேப்பர் என்ற ஒன்று கிடைக்கவே கிடைக்காது. போலிஸின் அறிக்கை இன்றி காப்பீடு நிறுவனங்களும் இழப்பீடுகளைத் தராது.
இதே நிலைதான் வாகன விபத்துகளுக்கும். முழுக்க முழுக்க கட்டைப்பஞ்சாயத்து முறையே ஏதேனும் விபத்து நேர்ந்துவிட்டால். இஸ்லாமிய முறைப்படி பழிக்குப்பழியாக பதில் கொலை, அல்லது ரத்தப்பணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் உறுப்பினரிடமிருந்து வசூலிக்கப்படும்.
மத்திய கிழக்கில் பிற நாடுகளில் இந்தப் பணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனமே கொடுத்துவிடும்.
பூவரச மரங்கள் இல்லாத நகரம், பயணம்
உயிருள்ள இந்த நிமிடம்
எத்தனை அழகானது ?
இந்த நிமிடத்தில்
முளை வேரிட்ட வித்தொன்று
இரு வித்திலைகளுடன் முளைக்கலாம்
பட்டாம்பூச்சிகள்
“அந்த பொண்ணு செத்து போறதுக்கு முன்னாடி, அவள பாத்த கடைசி ஆள் நீதான்…. “ ‘செத்து” என்ற வார்த்தையை மட்டும் சற்று அழுத்திக் கூறினான். “… அவ அப்பா அம்மா உன்ன பார்க்கனும்னு சொன்னாங்க.” இன்னமும் புலப்படாத ஏதோ பின்விளைவுகளைக் கொண்டு அவன் என்னை அச்சுறுத்துவது போலிருந்தது. மேலும் அவன் என்னைத் தொட்டுக் கொண்டிருக்கையில் என் மீது அவனுக்கு அதிகாரமிருப்பது போலவும் இருந்தது. அவன் பிடியை சற்று இறுக்கியபடியே “அதனால நீ அவங்கள வந்து பார்ப்பன்னு சொல்லிட்டேன். கிட்டத்தட்ட நீ அவங்களுக்கு அடுத்த வீடு மாதிரி தான ?” என்று கூறினான். நான் வேறு பக்கம் பார்த்துக் கொண்டே தலையை ஆட்டினேன் என்று நினைக்கிறேன். அவன் சிரித்தான். மாற்றவே முடியாதபடி எல்லாம் உறுதி செய்யப்பட்டுவிட்டது போலிருந்தது. இருந்தாலும் இதுவும், இந்த சந்திப்பும் கூட இந்த நாளை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு நிகழ்வு என்று எனக்குப் பட்டது. பிற்பகல் பின்னேரத்தில் குளித்துவிட்டு நேர்த்தியான உடையணிய முடிவு செய்தேன். விரயம் செய்வதற்கு இன்னமும் அதிக நேரமிருந்தது. அதுவரையிலும் திறக்கப்படாத கோலோன் பாட்டிலையும் நன்றாக சலவை செய்யப்பட்ட சட்டையொன்றையும் தேடியெடுத்தேன். குளியலறையில் தண்ணீரைத் திறந்துவிட்டுக் கொண்டு ஆடைகளைக் களைந்தேன். கண்ணாடியில் என் உடம்பையே வெறித்திருந்தேன். பார்ப்பதற்கு நான் ஒரு அசுகைக்காரன் மாதிரி தான் இருக்கிறேன் என்பது எனக்கும் தெரியும்; என் தாடையற்ற முகமே அதற்குக் காரணம்.அவர்களால் ஏன் என்று சொல்ல முடியாதென்றாலும், போலீஸ் ஸ்டேஷனில் நான் வாயைத் திற்ப்பதற்கு முன்னதாகவே அவர்கள் என்னை சந்தேகப்பட்டார்கள். ப்ரிட்ஜில் நின்று கொண்டிருந்ததையும் அங்கிருந்து கால்வாய் அருகே அவள் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததையும் கூறினேன்.
நிழலாடும் நினைவுகள்
‘Hyperthymesia ஒரு அரிய வகை நோய். இது வரைக்கும் உலகத்துல 25 பேருக்கு மட்டும் தான் இந்த நோய் இருக்குறது உறுதி செய்ய பட்டிருக்கு. அனந்தன் 26ஆவது பேஷண்ட்.’
‘இதனால உயிருக்கு ஒண்ணும் பாதிப்பு இல்லையே?’ மகாவின் கைகள் நடுங்கின.
‘நோ நோ. மகா நீங்க பயப்பட தேவ இல்ல. Hyperthymesia வந்தவங்களுக்கு அவங்களோட கடந்த கால நிகழ்வுகள் ஒண்ணு விடாம நினைவுக்கு வரும். அவங்க குறிப்பிட்ட தேதியில என்ன பண்ணிட்டிருந்தாங்க, என்ன கலர் டிரஸ் போட்டுருந்தாங்க, யார் யார் கூட இருந்தாங்க இப்டி எல்லா விஷயமும் துல்லியமா ஞாபகத்துக்கு வரும்.’
‘இத குண படுத்த முடியாதா நிர்மலா?’
‘இத்துக்கான ட்ரீட்மெண்ட் இப்போ தான் டெவலப்மெண்ட் ஸ்டேஜ்ல இருக்கு. அடிப்படையா சென்சிடிவ் ஆகாம பாத்துக்குட்டாலே போதும்.’
‘ஞாபகங்கள் நல்லது தானே டாக்டர்?’ கொஞ்சம் நிம்மதியுற்றவலாய் மகா கேட்டாள்.
‘அது மன அழுத்தத்த குடுக்காத வரைக்கும் நல்லது தான்.’
மகா அனந்தனை நோக்கினாள். நிர்மலா அறைக்கு வெளியில் இருந்த சிறிய தோட்டம் போன்ற அமைப்பினை ரசித்து கொண்டிருந்தான் அனந்தன். அங்கு பூத்திருந்த பூக்களும் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சியும் அனந்தனுக்கு இயற்கை தோற்றத்தை அளித்தது. அவன் உதடுகள் மகிழ்ச்சியில் சிரித்து கொண்டிருந்தன.
வேலி
“ ஒண்டு மட்டும் சொல்லுறன் அவள் பூர்வீகம் தீவு. புங்கிடுதீவிலை இருந்து இங்கை வந்து குடியேறினவள். ஆனால் எங்கடை பாட்டன் பூட்டன் எல்லாம் பிறந்து வளர்ந்தது மீசாலையிலை. நாங்கள் இருக்கிற வீடும் வளவும் என்றை அப்பாவுக்கு, அவருடைய அப்பா கொடுத்தது. அதை என்றை அப்பா எனக்கு சீதனமாக எழுதினவர். இனி இந்தக் காணி எங்களுக்குப் பிறகு மகேஸ்வரிக்கு. அதுக்கு முதலிலை காணியை கொஞ்சம் கொஞ்சமாய் பங்கஜம் விழுங்கி போடுவாள் போலக் கிடக்கு. நல்ல காலம் எங்கடை கிணறு பங்குக் கிணறில்லை. இல்லாட்டால் அதிலை வேறு பிரச்சனை வந்திருக்கும்”.
“சரி சரி சரசு. நான் செல்லத்துரையரோடை இதைப்பற்றி பேசுகிறன். அவர் நல்ல மனுசன். நீர் பங்கஜத்தோடை சண்டை பிடிக்கிறதை நிற்பாட்டும்”. பரமு அறைக்குள் சுருட்டொன்றை பற்றவைக்கப் போனான்.
மௌனியின் “அழியாச்சுடர்”
“அழியாச்சுடர் சிறுகதை ஒரு நவீன ஓவியத்தைப்போலவே எழுதப்பட்டுள்ளது. அதன் வடிவம் மட்டுமல்ல அதன் கதைமாந்தர்களும் துல்லியமற்ற சூழலிலேயே நிகழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் பேசும்போது பேச்சு எழுகிறதா எனத் தெரியவில்லை. அவர்கள் அழுகைக்கான காரணங்கள் அவர்களுக்கே தெரிவதில்லை. அவர்கள் காணும் காட்சிகளும் உண்மையா அல்லது கற்பனையா என்பதும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை. அவர்கள் உண்மையில் காட்சிகளை அல்ல அர்த்தங்களை மட்டுமே கண்டுகொள்கிறார்கள். காட்சிகள் மீது அவர்களே ஏற்றிக்கொண்ட ஏதேதோ அர்த்தங்கள். “
வேறு எந்தப் பெயரிலும் அது ஒரு ரோஜா: உம்பர்த்தோ எக்கோ (1932-2016)
ஒரு வரலாற்றாளர் ஒரு ஆவணத்தைப் படிக்கும்போது, அவர் கடந்த காலத்திற்குள் திறக்கும் ஜன்னலுள் பார்க்கவில்லை, முன்பு இருந்த ஒரு சமூக அமைப்பின் ஒரு செய்பொருளைப் பார்க்கவில்லை, ஆனால் தான் அதோடு ஒத்துழைத்தால், ஒப்பேறக் கூடிய ஒரு முடிவைக் கொடுக்க உதவும் ஏதோ ஒரு பொறியமைப்பையே பார்க்கிறார் என்றாகிறது. அந்த முடிவு ஆவணத்தின் படைப்பாளி என்ன சொல்ல விரும்பினாரோ அல்லது விவரிக்க நினைத்தாரோ அதனுடைய சற்றேறக் குறைய ஏற்புள்ள ஒரு பிம்பத்தைக் கொடுக்க வேண்டும் என்றாகிறது. அது ஒரு கூட்டமான மாற்று வாசிப்புகளுக்கும் இடம் தரக்கூடும், சிலவை மற்றவற்றை விட ‘மகிழ்வு’ தரக்கூடியனவாக இருக்கலாம். ஆனால் நாம் பெறும் பொருள் கச்சிதமாகப் பொருந்துவதாகத் தோற்றமளித்தாலும், நாம் எழுத்தாளரின் நோக்கங்களைக் கைப்பற்றி விட்டதாகக் கொண்டு விட்டதாகவோ, அல்லது ஒரு விவரணையாளர் என்ற அளவில் அவருடைய தரத்தைச் சரியாக மதித்து விட்டதாகவோ கொள்ள முடியாது. எனவே கடந்த காலத்தைப் பற்றி உறுதியான எந்த முடிவுகளையும் அடைவது பற்றி நாம் நிச்சயம் கொள்ள முடியாது- அதை விட, அதில் ஒளிந்திருக்கும் இரும்பு விதிகளை அதிலிருந்து கைப்பற்றி விடுவதாக நவீனத்துவர்கள் அடித்துப் பேசுவது சாத்தியமே இல்லை. நாம் செய்யக் கூடியதெல்லாம், நமது அறிவின் விசாலத்தை வைத்துக் கொண்டு அதிலிருந்து சாத்தியமான விவரணைகளைக் கட்டமைப்பதுதான்.
இது வரலாறுக்கும் புனைவுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டைத் தெளிவாகவே ஒழித்து விடுகிறது.
சின்ன அண்ணாமலையின் இரு நூல்கள்- 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்', 'கண்டறியாதன கண்டேன்'
அப்போது ராஜாஜியுடன் இருக்கிறார் ஒருவர். அவர் கேள்வி கொண்ட பார்வையுடன் ராஜாஜியைப் பார்க்க, ராஜாஜி அவரிடம், “வந்தவர், ஸ்ரீ சிவஷண்முகம் பிள்ளை. ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர். என் கேள்விக்கு அவர் தன் பிறந்த வகுப்பைக் காட்டி ஒரு பலவீனமான காரணத்தைச் சொல்வாரோ என நினைத்தேன். அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தன் பலத்தைச் சொல்லி ஆதரவு கேட்டார். நிச்சயம் அந்தப் பதவிக்கு இவர்தான் தகுதி என்று உறுதி செய்து கொண்டேன்” என்கிறார்.
காளையும் காளை சார்ந்ததும்…..[அஸ்ஸாமிய சிறுகதை]
சரோஜா பாட்டி , காளிபரி என்ற இடத்துக்கு முதலில் சென்று காளையைத் தேடிப்பார்த்தாள். நகரத்தின் அந்தப் பகுதியில் காளைக்கு நிறைய பக்தர்களும் ரசிகர்களும் இருந்தார்கள். அவர்கள் அதனிடம் மரியாதை கொண்டவர்கள்;அன்போடு உபசரிப்பவர்கள். அங்கே அதைக் காணாமல் பின்னும் தேடிக்கொண்டு ஆற்றங்கரைப்படித்துறைக்குச் சென்றாள் அவள். காளையின் கூட்டாளிகள் சில பேரை அங்கே பார்க்க முடிந்தது. ஆனால்….அந்தக்காளை மட்டும் எங்கும் தென்படவில்லை.
மகரந்தம்
அப்படி ஒரு நாட்டில் மருந்து நிறுவனங்கள் புற்று நோய் மருந்துகளை, இரண்டே அளவுகளில்தான் தயாரிக்கிறார்களாம். அவையோ ஆட்களின் உயரம், வயது, எடை ஆகியனவற்றுக்குத் தக்கபடி முழு அல்லது குறைந்த அளவுகளில்தான் கொடுக்கப்பட முடியும். இவை ஊசி மருந்துகள் என்பதால் ஒரு முறை ஒரு புட்டியை ஊசியால் துளைத்து மருந்தை வெளியே எடுத்து விட்டால் மறுபடி அந்த மருந்து பாட்டிலில் எஞ்சியதை எடுத்துப் பயன்படுத்த முடியாது, சட்டப்படியும் மருத்துவ விதிகளின்படியும் அது குற்றம். எனவே ஏராளமான புட்டிகளில் உள்ள மீதி மருந்து அப்படியே குப்பையில் வீசப்படுகிறது
குளக்கரை
அமெரிக்கப் பண முதலைகள் மக்களை எப்படி எல்லாம் எத்துகின்றன? அதற்கென்று ஒரு மொத்த மாநிலமே இயங்குகிறது. பெரும் நிறுவனங்கள் இங்கு வரி கேட்காத அமைப்பாக மாநிலத்தையே ஆக்கி வைத்திருக்கின்றன. இங்கு லெட்டர்பாட் நிறுவனங்கள் ஏராளம். ஒரு தபால் பெட்டி எண் மட்டும் வைத்துக் கொண்டு, இந்த மாநிலத்தைத் தம் பதிவு அலுவலக முகவரியாக அறிவித்து விட்டு லாபங்களுக்கு சல்லி டாலர் கூட வரி கொடாமல் நிறுவனங்கள் தப்பிக்க வழி இருக்கிறது.