இலக்கிய குடிமை என்பது மிக எளிய விஷயம். நீ இருக்கவும் செழிக்கவும் இடம் கொடுக்கும் சூழலில் மாசுபடுத்தாதே. நீ வாழும் இடத்தில் மலம் கழிக்காதே. உன் மக்களுக்கு சில நன்மைகள் செய். நீ இருக்கும் இடம் வரும்போது இருந்ததைவிட நல்ல இடமாக விட்டுப்போ. எதற்கு இல்லை என்றாலும் நீ இருக்கும் இடத்தை அழகான, சுவாரசியமான, ஆரோக்கியமான இடமாக வைத்திருப்பது உனக்கே நல்லது. இதில் ஒட்டுண்ணிகள் போலிருப்பவர்கள் பற்றி…
Category: இதழ்-134
கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்
பாலில் தயிர் ஊற்றி உறவு ஊற்றுகிறோம். உறவு ஊற்றுதல் என்பது யாரிடம்? கிருஷ்ணனிடம் தானே? அவ்வாறு அவனிடம் உறவு கொள்ளுதலே முடிவு நிலை. அதுவே பேரானந்தம். தயிர் (ததி) ஆகும் நிலை. தத்யோன்னம் என்பது வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானது. அதனைப் பெருமாள் கோவிலில் விநியோகிப்பதன் நோக்கமே இந்தப் பேரானந்த முடிவு நிலை பெறுவதை உணர்த்துவதற்காகவே தான்.
சித்தன் போக்கு
“மலையத் தோண்டியா…அதுவும் இந்த மலையையா…” என்று சத்தமா சிரிக்க ஆரம்பிச்சார் அவர். எங்களுக்கெல்லாம் ஒரே எரிச்சலாப் போச்சு. “எதுக்குய்யா இப்படி சிரிக்கிறீங்க” அப்படின்னு என்னோட அசிஸ்டெண்ட் கேட்டான். சிரிப்பை நிறுத்தி எங்களை கூர்ந்து பார்த்த அவர், “கோரக்கர் மச்சமுனின்னு அம்புட்டு பேரு வந்து போற மலையை நீங்க தோண்டி ஆராய்ச்சி பண்ணப் போறீகளோ” என்று ஒருவித கேலியுடன் எங்களை பார்த்து சொன்னபடி பெருங்குரலில் பாட ஆரம்பிச்சார். அந்த அத்துவான பிரதேசத்துல, கொட்டுற மழையில, அந்த பூமிலேந்து குப்புன்னு கிளம்புற வாசத்துல, அவரோட குரலும் சேர்ந்து அப்படியே என்னமோ மயக்கமா கிறங்கடிச்சுச்சு…
எண்ணெய்யும் தண்ணீரும்: நிரந்தர சொர்க்கம்
நிகோலா டெஸ்லா பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்து மறைந்த ஒரு சுவாரசியமான மனிதர். செர்பியாவில் பிறந்து வளர்ந்து பின்னால் அமெரிக்காவில் தாமஸ் எடிசனின் கம்பனிக்கு வேலை செய்து, அதன்பின் எடிசனின் மிகப்பெரிய போட்டியாளராவும் மாறியவர் இந்த விஞ்ஞானி. இவர் வரலாறும், கொள்கைகளும், பணி புரிந்த விதமும், செய்த ஆய்வுகளும் வினோதமானவை. அவருடைய லட்சியங்களில் ஒன்றாக சொல்லப்படுவது உலகில் உள்ள எல்லோருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் இலவச மின்சார விநியோகம் செய்வது! இலவசம் என்றால், நிறைய வரிகளை விதித்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயை வைத்து இலவச மின்சாரம் வழங்குவது மாதிரியான அரசாங்க திட்டம் இல்லை. யார் தயவையும் நம்பாமல், தன்னுடைய கண்டுபிடிப்புகள், கருவிகள், திட்டங்கள் முதலியவைகளை மட்டுமே கொண்டு எல்லோருக்கும் தேவையான அளவு இலவச மின்சாரம் தருவது பற்றி இவர் யோசித்துக்கொண்டிருந்தார். அவர் கனவு நனவாகி இருந்தால் இந்த எண்ணெய் எரிவாயு துறையே தேவையற்ற ஒன்றாக போயிருக்கக்கூடும்!
ரயில் சிநேகம்
கண்முன்னால் தொலைவில் ஏதோ பச்சைத்தீற்றலாகப் பறந்தது. அதுவரை காவி நிறத்தில் இருந்த வண்டி, பச்சையும், மஞ்சளுமாக மாறின. வைகை எக்ஸ்பிரசை முதன் முதலில் பார்த்த Ecstasy-ஐ இன்று வரை ஈடு செய்வது Pink Floyd-ன் Comfortably Numb-ல் வரும் கடைசி இரண்டு நிமிட கிதார் இசைதான்.
அச்சமற்ற, சின்ன டோஸ்டர்
டூஸ்ஸான்ட் தன் ஃப்ரிட்ஜிடம் சண்டைக்குப் போனார். அதுவோ மர்மமான முறையில் முற்றிலும் காலியாக இருந்தது, இத்தனைக்கும் அன்று காலையில் அது முழுதும் நிரம்பியதாகவே இருந்தது. சற்றுப் பொறுக்கவும், கிட்டத்தட்ட காலியாக இருந்தது: அதில் சக்தி தரும் பானப் பை ஒன்று பின்னாலே இருந்தது. முந்தின தினம், மிக்க உற்சாகத்துடன் சிரித்தபடி மெட்ரோ நடைமேடையில் வருவார் போவாருக்கெல்லாம் அந்த பானப் பையைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிடமிருந்து அவர்தான் அந்தப் பையை வாங்கி இருந்தார். அவள் எல்லாருக்கும் அந்தப் பையைக் கொடுத்திருந்தாள். “எதற்காக என்னுடைய எல்லா உணவையும் நீ தூக்கி எறிந்தாய்?” அவர் அந்த ஃப்ரிட்ஜிடம் கேட்டார்.
கார்ஸன் கழிமுகம்
காலையில் மீண்டும் நடந்தேன் குன்றுகளின் மீது
கடலை நோக்கி,
பின்னர் நேராகத் திரும்பி
அலை அலம்பும் கரைவழிச் சென்று
நிர்மூலமான தலைவரையைச் சுற்றித்
திரும்பி வந்தேன்
கழிமுகத்தின் கரை வழியே
இறுதி அஞ்சலி: திரு. ஆ.ப.ஜெ அப்துல் கலாம்
அவரது இல்லத்திலிருந்து பேக்கரும்பு வரை சென்ற ஊர்வலத்தில் ஹிந்துக்கள்,கிருஸ்தவர்கள்,முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்கள் கலந்து கொண்டனர்.அவரது இறுதி ஊர்வலத்தில் பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் ஆகிய முழக்கங்கள் ஒலித்தன.இந்திய வரலாற்றில் கலாம் அவர்களுக்கு செலுத்தப்பட்ட இறுதி மரியாதை முக்கியமான மிகச் சிறப்பு வாய்ந்த அத்தியாயமாகும்.அவ்விதத்தில் அவர் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு அளித்த பங்களிப்புகளை விஞ்சியுள்ளது.
சூழல் விழிப்புணர்வில் இரு மைல்கற்கள்
இருபதாம் நூற்றாண்டை விடவும் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சூழல்விழிப்புணர்வு தொடர்பான பேச்சுக்கள் அதிகம். சூழல் விழிப்புணர்வு ஊர்வலம், மராத்தான் ஓட்டம், பள்ளிச் சிறுவர்கள் பங்கேற்பு என்று எவ்வளவோ சொல்லலாம். கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், எம் எல் ஏ, எம்.பி க்கள், சூழல் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். பற்றாக்குறைக்கு பாரத பிரதமரின் “தூயபாரதம்” கோஷமும் நல்ல பக்கபலம். இவ்வளவு இருந்தும் கூட தூய்மையான குடிநீருக்கு வழியில்லை.
பிரெஞ்சுக் குடும்பம்
நவீன பிரெஞ்சுக் குடும்பம் -கலப்பு குடும்பம் – சமூகத்தின் எதிர்பார்ப்பைத் துச்சமாகக் கருதுகிறது. தனிமனிதனின் உடல் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, மனிதத்தின் ஒழுங்குகளை கலைத்துப்போட்டிருக்கிறது. இரத்த உறவுகள்கொண்ட பிள்ளைகள், தம்பதிகள் ஆகியோரிடமே சிற்சில சமயங்களில் அசாதரண பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறபோது, உடம்பின் இச்சையை மாத்திரம் கணக்கிற்கொண்டு ஒழுங்கைச் சிதைத்து கட்டமைக்கப்படும் நவீன குடும்ப அமைப்பு ஆணாதிக்கமோ பெண்ணாதிக்கமோ அல்ல உணர்ச்சிகளின் ஆதிக்கம்- ஆபத்தானது.
வாசகர் மறுவினை
தமிழ் இசை மரபு கட்டுரை சிறப்பாக இருக்கிறது. நல்ல மொழி பெயர்ப்பு. பல சொல்லாக்கங்கள் பல பத்தாண்டுகளுக்கு முந்தைய மொழிப் புழக்கத்திலிருந்து வந்தவை, அதெல்லாம் மொழிபெயர்ப்பாளர் உஷா வைத்யநாதனின் பிரக்ஞையில் இன்னும் இருக்கின்றன என்பதே எனக்கு அதிசயமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. ‘பாரிய மனோவசியம்’ என்பது அப்படி ஒரு சொல். திரு.வெ.சா இதை எல்லாம் என்றோ தமிழுக்கு மாற்றி இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவருக்குக் கிட்டி இருக்கும் பிம்பமே மாறி இருக்கும்.
சரடு விடுவது
கையில் ஒரு சுத்தியலும் சில ஆணிகளும் இருந்தாலும் என்ன செய்வீர்கள்? Zenyk Palagniuk இதை படைத்திருக்கிறார். இருநூறு மணி நேரம் உழைத்து இதை உருவாக்குவதற்கு 24 கி.மீ. நீளத்திற்கான இழைநூல்களும், பதின்மூன்றாயிரம் ஆணிகளும் தேவைப்பட்டிருக்கிறது.
பவளமல்லியின் வாதை & மௌன முள்
மௌனம் ஒரு ஆட்கொல்லியல்ல யெனினும்
மௌனம் ஒரு கூரிய முள் போல
ஒரு செடி எதற்காக முள் தாங்கி நிற்கிறதோ
அதற்காகவே மௌனித்திருக்கிறான்
மகரந்தம்
உங்களுக்கு மட்டுறுத்தனர்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது? வலைவெளியில் நம்முடைய கருத்துகளும் புகைப்படங்களும் மறுமொழிகளும் கண்காணிக்கப்பட்டு தணிக்கைக்கு உள்ளாகின்றன என்று அறியாத வரைக்கும் மட்டுறுத்தலில் நமக்கு எந்தவிதமான எதிர்ப்பும் இருக்காது. நமக்கு எதிரான எண்ணங்கள் தங்குதடையின்றி வெளியானாலோ, நம்மை அவதூறு செய்யும் பதிவுகள் ஓரிடத்தில் உலாவினாலோ, அந்த இடத்தில் மட்டுறுத்தலைக் கோருவோம்; முன்வைப்போம். அதே சமயம் நம்முடைய எழுத்துக்களோ, படங்களோ, பின்னூட்டங்களோ வெளியாகாமல் தடை செய்யப்பட்டால், சென்ஸாருக்கு உள்ளானால் சுதந்திரவெளியை முழங்குவோம்; கட்டற்ற இணையவெளியை நாடுவோம்.
குளக்கரை
ஸிலிகான் பள்ளத்தாக்கு உலகத்தின் போக்கை வெகுவாக மாற்றி அமைத்து இருபது, முப்பது ஆண்டுகள் ஆகி விட்டன. உலகம் வெறி கொண்ட சூறாவளி போல எங்கோ தலைதெறிக்க ஓடுகிறது போல ஒரு பிம்பம் நம் மனதில் தோன்றினால் நாம் வயது அதிகமானவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். தலை தெறிக்க ஓடினால்தான் ‘முன்னேற’ முடியும் என்று ஸிலிகானின் பக்தர்கள் பூரணமாக நம்புகிறார்கள். அந்த பக்தர்கள் நடுவே ஒரு புதுக் கூட்டம் எழத் துவங்கி இருக்கிறது. இந்தக் கூட்டம் என்ன வகைத்தது என்று இந்தக் கட்டுரை நுணுகி ஆராய்கிறது. படித்துப் பார்த்து …..ஹ்ம்… ஆமாம், அச்சப்படுங்கள்…
மண்டாலா ஓவியங்கள்
மண்டாலா என்றால் சமஸ்கிருதத்தில் “வட்டம்” என்று அர்த்தமாகும். காலச்சக்கரம் என்றும் மண்டாலா ஓவியங்களை அழைக்கிறார்கள். இந்து மதத்திலும் பௌத்தத்திலும் இவை வழிபாட்டு முக்கியத்துவம் பெற்றவை. மிகுந்த பொறுமையுடன் கணித சாஸ்திரங்களையும் தியான நியமங்ளையும் பின்பற்றி பத்து நாள்களில் இவை முழுமையடைகின்றன. காலை முதல் மாலை வரை ஏழு புத்த “மண்டாலா ஓவியங்கள்”
கவனத்தைக் கட்டும் கயிறு
சிந்தனைக் குவியத்தைக் கூர்மையாக்குவது எப்படி? என்றோ, சிந்தனை சிதறாமல் இருக்க பத்து முறைகள் என்றோ அவர் இதை அணுகவில்லை. மாறாக , மருத்துவம், மூளை, நரம்பு மண்டலம், நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கம், மூளையில் சில வேதிப்பொருள்களின் இயக்கம், நாம் நடைமுறையில் செய்யக்கூடிய செய்முறைகள் அவற்றின் அறிவியல் காரணங்கள், பயன்கள் என எடுத்துக்காட்டுகளுடன் காட்டிச் செல்கிறார். “இதுல பத்து செயல்முறைகள் இருக்கு. அதன்படி செஞ்சீங்கன்னா, ஒரு மாசத்துல மனம் குவித்தலில் பெரும் வெற்றி பெருவீர்கள்” என்றெல்லாம் அலட்டாத, யதார்த்தமான, அறிவியல் கூறுகள், ஆக்கக்கூறுகள் நிறைந்த ஒரு புத்தகம் இது.
எம்எஸ்வி – இசையும் காலமும் பகுதி 2
இந்தப் படத்தில் உள்ள இன்னுமொரு ஹிந்துஸ்தானி பாணி பாடல் இன்றும் இசை ஆர்வலர்களைக் குழப்புகிறது- இரவும் நிலவும், என்ற மகத்தான வெற்றி பெற்ற பாடலைச் சொல்கிறேன். இது என்ன ராகம்? விஷயம் தெரிந்தவர்கள் தொடர்ந்து இது குறித்து விவாதித்து வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் இது திலக் காமோத் ராகம் என்று உறுதியாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் வி.வி. சுப்ரமணியம் உரையாற்றும்போது ஒரு முறை, இதன் ராகம் குறித்து மதுரை கிருஷ்ணனிடம் பேசியதாகச் சொன்னார். இந்தப் பாடல் ஷியாம் கல்யாண் ராகத்தில் அமைந்தது என்று மதுரை கிருஷ்ணன் சொன்னாராம்.
கருவிகளின் இணையம் – ஒரு பருந்துப் பார்வை – பகுதி 2
இந்த நிகழ்வுகளில் தடிமனாகக் காட்டியிருப்பவை, கருவிகள் – மனிதர்களை விட ஏராளமாக அவை பேசுவதைப் போலத் தோன்றினால், அது உண்மையே. நம்முடைய உரையாடல்களில், சமயம், இடம் மற்றும், மனிதரை அறிந்து, அதற்கு தகுந்தவாறு உரையாடுகிறோம். கருவிகள் எதையும் பொருட்படுத்தாமல் பேசித் தள்ளும். அட, எப்பொழுது கருவிகள் பேசின? யாருடன் பேசின? எதன் வழியாகப் பேசின? இந்த உதாரண நிகழ்வுகளைக் கொண்டே என்ன நடந்தது என்று விரிவாகப் பார்ப்போம்.