நியு யார்க் நகரத்தில் இந்திய வம்சாவழி ஓவியர்களின் கலைப்படைப்புகளை கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள். அது குறித்த பதிவை நியுயார்க் டைம்ஸில் பார்க்கலாம். கீழே இருக்கும் படைப்பின் பெயர்: “கலத்தில் இருப்பதும் நதியில் கிடைக்காததும்” (What Does the Vessel Contain That the River Does Not?)
Category: இதழ்-130
மோப்ப எலி
ஆப்பிரிக்காவில் இருக்கும் நிலக்கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க எலிகளைப் பயன்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள். காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை தன்னுடைய மோப்ப சக்தியினால் எலிகள் கண்டுபிடித்து, அவர்களை குணப்படுத்த உதவின. இப்போது, அடுத்த கட்டமாக, கண்ணிவெடிகளை அடையாளம் காட்ட உதவுகிறது. மனிதர்களுக்கு நாள் முழுக்க எடுக்கும் சிரமமான வேலையை, நொடிப் பொழுதில் சுண்டெலி “மோப்ப எலி”
மகரந்தம்
மலம் கழிக்க உலகின் வளர்ந்த நாடுகளில் பெருவாரியில் மக்கள் பீங்கான் குடுவை ஒன்றின் மீது அமர்ந்து இருந்து கடனை முடிக்கின்றனர். இந்தியரில் பெருவாரியினர் இன்னும் தரை அளவில் குந்தி இருந்துதான் மலம் கழிக்கின்றனர். இந்தியாவிலும் நகரங்களில் மத்திய வர்க்கமும், உயர் நிலை மக்களும் நாற்காலியில் அமர்வதை ஒத்த நிலையில் இருந்து கழிப்பதைச் செய்வதை இப்போது வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர். முதியோர் நிறைந்த குடும்பங்கள் இப்போது அதிகரித்து வருவதால், அவர்களால் முன் காலம் போல குந்தி இருந்து மலம் கழிப்பது முடியாத நிலையில் இப்படி நாற்காலி அமர்வு முறை அவர்களுக்கும் பழகி அதுவே வசதி என்பது போல ஆகி விட்டது. இந்தச் செய்தியில் ப்ராக்டாலஜி என்கிற துறை சார்ந்த மருத்துவர்கள் மனிதக் குடல்வால், ஆசனவாய் ஆகியவற்றின் நலனைப் பராமரிக்க உதவும் மருத்துவர்கள். இவர்களில் சிலர் …
குளக்கரை
இப்பொழுது ஹைத்தி பூகம்ப நிவாரண நிதிக்காக ஐநூறு மில்லியன் (கிட்டத்தட்ட மூவாயிரத்து இருநூறு கோடி ரூபாய்) நன்கொடை பெற்ற செஞ்சிலுவைச் சங்கம், அந்த நாட்டில் வெறும் ஆறே ஆறு வீடுகளைக் கட்டிக் கொடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், கணக்கு காட்டும்போது ஒரு இலட்சத்தி முப்பதாயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்ததாக செஞ்சிலுவைச் சங்கம் சொல்லி இருக்கிறது. அப்படியானால், ஆயிரக்கணக்கான வீடுகளும், மருத்துவமனைகளும், பள்ளிகளும், இன்ன பிற கட்டமைப்புகளும் உருவாக்குவதற்காக சேகரித்த அரை பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்னவாயிற்று? ரெட் கிராஸ் நிறுவனம் பதில் சொல்ல மாட்டேன் என்று மறுத்து இருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கத்தைப் போலவே நிதி திரட்டிய பிற அமைப்புகள் 9,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்து இருப்பதையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
குணமும் குடிமையும் குற்றமும்
ஒரே முன் பல் மட்டும் தெரிய “அந்த அழகு மலை பசங்க கூட இன்னி உன்னப் பார்த்தேன்? ” என்று நான் பக்கத்தில் சைக்கிளை வைத்துக்கொண்டு நிற்கும் போதே பாஸ்கியை நோக்கி உறுமிய குரலை ஒரு காலத்தில் கேட்டு கேட்டுப் பழகிவிட்டு இப்போது, “நல்லா இருக்கிங்களா தம்பி?” என்ற குரலைக் கேட்கும் போது அத்தனை சங்கடமாக உணர்ந்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டேன். நன்கு குழைந்த சாதம் போலிருந்தது.
உழுதுண்டு வாழ்வோம்!
புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப் பட்ட கடந்த 24 வருடங்களில், இந்தியாவின் பொருளாதார நிலை, பெருமளவு மாறியுள்ளது. வறுமை குறைந்து, கல்வியறிவு பெருகி, சமூக வளர்ச்சியின் பெரும்பாலான குறியீடுகள் முன்னேற்றப் பாதையில் செல்கின்றன. ஆனால், இந்தக் கால் நூற்றாண்டில் மாறாத ஒரே விஷயம், வேளாண்மைத் தொழிலின் லாப நிலை. பணப்பயிர்களை உழவிட்டு, கடன் பட்டு, கடன் கழுத்தை நெருக்க, சுருக்குக் கயிற்றை நாடும் விவசாயிகளின் எண்ணிக்கை குறையாததே! இதே காலகட்டத்தில், ஒரு முக்கிய வேளாண் பொருளான பாலின் உற்பத்தி 55 மில்லியன் டன்னிலிருந்து, 140 மில்லியன் டன்னை எட்டியுள்ளது (கிட்டத்தட்ட 300%). இதற்கீடான ஒரு உணவு உற்பத்திச் சாதனை உலகில் அதிகம் இல்லை. பால் உற்பத்தியில் நஷ்டமேற்பட்டு, ஒரு உழவர் கூட தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தியில்லை. பால் உற்பத்தி செய்யும் உழவர்களில் பெரும்பாலோனோர் 2-3 மாடு / எருமைகள் வைத்து பால் உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகள்தாம்.
இந்த முரண்பாடு எப்படி நிகழ்ந்தது?
இந்தியாவின் மிகப் பெரும் பால்பொருட்கள் உற்பத்தி நிறுவனமான அமுல், இந்த ஆண்டு 20,000 கோடி வியாபாரத்தை எட்டியுள்ளது.
கண்ணப்ப தம்பிரானுடன் நேர்காணல்
தெருக்கூத்துங்கற கலை எப்போதிருந்து ஆரம்பம் என்கிற விஷயங்களைக் கேட்கிறீங்க. எங்க பாட்டனார் வீராசாமி தம்பிரான், அவருக்கு … வீராசாமி தம்பிரானுக்கு மாந்திரீகங்கள் தெரியும், மாந்திரீகத்திலே, எங்க ஊர் ஏரியை, யார் ஜலத்தின் பேர்ல நடந்து வருவாங்கன்னு போட்டியிட்டாங்க. அதிலே எங்க பாட்டா, ஜலத்தின் மேலே போய்ச் சேர்ந்துட்டாங்க. அப்போ அனத காலத்து ஆட்சியிலே என்ன பரிசு வேணும்னு கேட்டாங்க., எனக்கு 60 கிராம மிராசு வேணும்னு கேட்டார். அதிலே 60 கிராமம் அவருக்கு விட்டாங்க. மிராசு வருஷந்தோறும் வீட்டுக்கு வந்து சேர்ந்துடும். அவரு தோல் பொம்மை விளையாட்டும் செய்தார். கிராமங்கள்லே ஏதானும் விசேஷம் நடந்தா, அவர் போய் விளையாட்டு காமிப்பாரு. இதுக்கு வந்து மக்கள் எல்லாம் சாதம் கட்டிகிட்டு வெளியூர் கிராமத்திலேயிருந்து வந்து பார்ப்பாங்க. அப்படி இருக்கும்போது குழந்தைகள் நாலு பேரும் தலையெடுக்கவும் ‘கம்ஸ ஸம்ஹாரம்’கிற ஒரு கூத்து, அதை பாகவத கீர்த்தனைகளாலே ஏற்படுத்தி நடத்தினாரு. அதை நடத்தி வந்தாரு. அப்புறம் பிள்ளைங்கள்ளாம் வயசுக்கு வந்த உடனே …
எண்ணெய்யும் தண்ணீரும்: விடாக்கண்டன்களும், கொடாக்கண்டன்களும்
பக்கத்தில் உள்ள படத்தை நீங்கள் எங்காவது பார்த்திருக்கலாம். அதில் இருப்பது ஒரு இளம் பெண்ணா அல்லது ஒரு வயது முதிர்ந்த பாட்டியா என்பது நீங்கள் படத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்த விஷயம். பூமியில் எவ்வளவு எண்ணெய்யும் எரிவாயுவும் ஒளிந்திருக்கின்றன என்பதும் நாம் அலசும் விதம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் முதலிய விஷயங்களைப் பொறுத்து பாட்டியிலிருந்து இளம்பெண்ணாக மாறிக்கொண்டிருக்கிறது! நாம் ஐந்தாம் வகுப்பில் தெரிந்து கொண்டதுபோல், இருந்து அழிந்த உயிரியல் எச்சங்கள் பூமிக்கடியில் புதைந்து போனபின், பூமியின் உள்ளே நிலவும் வெப்பமும், அழுத்தமும் பல்வேறு ரசாயன மாற்றங்கள் வழியே அவற்றை சமைத்து கச்சா எண்ணெய்யாகவும் எரிவாயுவாகவும் மாற்ற பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆகும் என்ற புரிதலில் மாற்றம் ஏதும் இல்லை.
அளவாய் வேண்டுதல்
ஒன்றிரண்டு வித்தியாசமாக இருக்கும். ஒரு முறை ஊரே சேர்ந்து “எங்கள் கிராமத்துக்கு சர்க்கார் நல்ல ரோடு போட்டுத்தர வேண்டும்” என எழுதித் தொங்கவிட்டியிருந்தார்கள். அடுத்து ஒராண்டுகள் பார்த்துவிட்டு அது நடக்காது என ஊரில் உள்ள அனைத்து சாதி மக்களும் “சாலை மறிப்பு போராட்டம்” செய்தார்கள். இப்போராட்டம் ஊடகம் முழுக்க பரவ அது செய்தித்தாள், டி.வி என வந்துவிட்டது. அதற்க்கப்புறம் நல்ல தார்சாலை போட்டுக்கொடுக்கப்பட்டது. மக்களில் பல பேர் அளவு ஆத்தாவை நம்பவில்லை என்றாலும், சில பேர் இவ்வாறு பேசிக்கொண்டார்கள் “என்ன தான், ஆத்தாவால, ரோடு போட்டுக் கொடுக்க முடியலைன்னாலும், ஊர்ல உள்ள எல்லா சாதி மக்களையும் ஒண்ணா சேர்த்து போராட வைச்சிருக்கா. அது போதும்.”
அம்பாஸடர்ஸ் க்ளப் – புத்தக அறிமுகம்
1991 ல் பாரதம் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்த காலத்தில், உலகில் பல நாடுகள் இதே போன்ற சிக்கல்களை எதிர்கொண்டன. அர்ஜெண்டினா போன்ற நாடுகள் பெரும் பண வீக்கத்தால் மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தின. ரஷ்யா பல சிறு நாடுகளாக வெடித்துச் சிதறி, உணவுப் பற்றாக்குறையைச் சந்தித்தது. ஆனால், இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தம், மக்களை நேரடியாக அவதிக்குள்ளாக்கவில்லை. படிப்படையாக ஏழ்மை குறைந்து, நாடு வளமுற்றது. இதை ”மத்திமப் பாதை” என்னும் பெயரில், டாவோஸில் நடந்த வருடாந்திரப் பொருளாதார உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் முன் வைத்தார். அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து …
பெர்ஸோனா என்னும் பயனர் ஆளுமை
சுருங்கச் சொன்னால் இந்த பெர்ஸோனா என்பது ஒரு பயனரின் ஆளுமை. முந்தைய அத்தியாயத்தில் சொல்லப்பட்ட ’பயனரின் மனநிலை மாதிரி’ யுடன் (Mental model) எல்லாவிதத்திலும் தொடர்புடையது. ஒரு வலைத்தளத்தை உபயோகிக்கும்போது இருக்கும் பயனரின் மனோபாவத்தை இது கோட்டிட்டுக் காட்டும். அவர்களின் முடிவெடுக்கும் திறன், தொழில்நுட்பம் பற்றிய பயனரின் பார்வை மற்றும் அணுகுமுறை, வாழ்வியல் முறை பற்றிய தெரிவுகள், தெளிவுகள், அவர்களின் அன்றாட பொதுவான நடவடிக்கைகள், வழக்கங்கள் என எல்லாவற்றையும் தெளிவான முறையில் காட்சிப்படுத்துவதாக அது இருக்கும். அது தவிர பயனர்கள் வாழும் பிராந்தியம் பற்றிய குறிப்புகளையும் கொண்டதுதான் இந்தப் பெர்ஸோனா.
தெருக்கூத்து – பகுதி 4
இத்தகைய உயிரோட்டமுள்ள, தனித்தன்மையுடைய ஒரு நாடக மரபு கவனிக்கப்படாமல் விட்டுவிடப்பட்டுள்ளது ஒரு துரதிருஷ்டவசமான விஷயம். உண்மையில் அனைத்து நாட்டார் கலைகளுக்கும் இதே கதிதான், அவற்றில் பலவும் மறக்கப்படும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. தெருக்கூத்து போன்ற சில ஆங்காங்கே சில இடங்களில் இன்னும் பிழைத்திருக்கின்றன. அவை கலை வெளிப்பாடு களாக, நாடகம் அல்லது நடன வடிவம் என்று கருதப்படுவதினால் அல்ல, சடங்குகளாக அவை பிழைத்திருக்கின்றன. இந்த வடிவங்கள் அவர்களுடைய இனத்தில்/ சமூகத்தில் அவ்வூர் தெய்வங்களுக்கான சடங்குகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதால் அவற்றை விழாமல் தாங்கி, அவற்றை ரசிப்பவர்கள்…
பாரத் தர்ஷன்
வரலாற்றில் அண்ணாஜியைப் போன்றவர்கள் அபூர்வம். அவரை தூரத்திலிருந்து பார்க்க நேர்ந்தால் கூட பெரும் பேறு என எண்ணிக் கொண்டோம். கல்லூரி மாணவர்கள் சிலர் அவரைச் சந்திக்க வந்திருந்தனர். சுவாமி விவேகானந்தரைப் பற்றி அண்ணா பேசிக் கொண்டிருந்தார். அடுத்து எங்களை அனுமதித்தனர். நெடுஞ்சாண்கிடையாக என் முழுதுடலால் அண்ணா ஹசாரேஜி அவர்களை வணங்கினேன். அண்ணாவை வணங்கியவன் என்பதே எனது தகுதி. கண்களில் நீர் நிரம்பியது. மகாத்மாவை நாங்கள் நேரில் பார்த்ததில்லை உங்களுடைய ரூபத்தில் காண்கிறோம் என்றேன். எத்தனை பேர் இதனைச் சொல்லி அவர் கேட்டு சலித்திருப்பார். எவ்வளவு சலித்தாலும் எத்தனை பேர் திரும்ப திரும்ப சொன்னாலும் அது உண்மையல்லவா! எங்கிருந்து வருகிறீர்கள் என…
வாழ்க்கைக்கு மிக அருகிலானது
தன் சக அதிகாரிகளிடம் கதை சொன்னபோது ரயபோவிச் இதைச் சொல்லியிருப்பான் என்று நினைக்கிறீர்களா- இருட்டு அறை லைலாக், பாப்லர் மற்றும் ரோஜா மணம் கமழ்ந்திருந்தது என்று? அந்தப் பெண் தன்னை முத்தமிட்டபோது பெப்பர்மிண்ட்டின் தூண்டல் போல் கன்னம் வெம்மையாகிச் சிலிர்த்துக் கொண்டது, என்று ரயபோவிச் சொல்லியிருப்பான் என்று நினைக்கிறீர்களா? ஆனால் ஒரு கதையின் ஜீவன் அதன் மிகையில் இருந்தால், அதன் அதீதங்களில் இருந்தால், சீர்மைக்கும் வடிவ நேர்த்திக்கும் அப்பாற்றபட்ட விஷயங்களின் கலவரத்தில் இருக்கின்றது என்றால், ஒரு கதையின் ஜீவ-மிகை அதன் நுண்விவரங்களில் இருக்கிறது என்றும் சொல்ல முடியும். பெப்பர்மிண்ட் பற்றிய நுண்விவரம், ரயபோவிச் தன் கன்னத்தில் உணரும் சிலிர்ப்பு, நமக்காக தங்கி நிற்கிறது; அந்த இடத்தை நாம் தேய்த்துக் கொண்டால் போதும். நுண்விவரங்களே ஒரு கதையை அந்தரங்கமானது ஆக்குகின்றன. கதைகள் நுண்விவரங்களால் ஆனவை; நாம் அவற்றில் சிக்கிக் கொள்கிறோம்.
பிட்காயின் 101
பிட்-காயினால் எதை வேண்டுமானாலும் வாங்க இயலும். ஒரு துண்டு பீட்ஸா முதல் அதிஆடம்பரமான விலையுயர்ந்த மாட மாளிகை வரை என்ன பொருள் வேண்டுமோ, அதை நீங்கள் பிட்காயினை (bitcoin) விலையாகக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். பிட்காயினின் மதிப்பு ஒரு சில டாலரில் துவங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். சில சமயம் பிட்காயின் பற்றிய தகவல்கள் துப்பறியும் நாவல் போல் இருக்கும்; பல சமயங்களில் பிட்காயின் பற்றிய சாத்தியங்களை அறியும்போது மின்சாரத்தைக் கண்டுபிடித்தபோது ஏற்படும் அதிசயம் உண்டாகும். ’தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!!’ என இறைவரைச் சொல்வது போல், எங்கெங்கு காணினும் பிட்காயின் என…
தத்துவத்தின் பெறுமானம் என்ன?
தத்துவப் படிப்பு நிச்சயமான விடைகளுக்காக மேற்கொள்ளப் படுவதில்லை, மாறாக அது எழுப்பும் கேள்விகளுக்காகவே பயிலப்படுகிறது. இந்த கேள்விகள், சாத்தியமானவற்றைக் குறித்த நம் கருத்தாக்கங்களை விரிவாக்குகிறது. நமது அறிவார்ந்த கற்பனையை வளப்படுத்துகிறது. மனதின் பரீசீலிக்கும் தன்மையை தடுக்கும் மூர்க்கமான தீர்மானங்களை குறைக்கிறது.எல்லாவற்றிற்க்கும் மேலாக பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை சிந்தனை செய்யும் மனதை மேன்மை அடையச் செய்து அது பிரபஞ்சத்தினோடு ஒன்றாகும் தன்மையை நோக்கி நகர்த்துகிறது.
வழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்
நாஞ்சில் சொற்கள்மீது தீராக் காமம் கொண்டவர். ஒரு புதுச் சொல்லைக் கண்டால் மிகவும் மகிழ்ந்து அதைத் தம் படைப்பில் பயன்படுத்தி வெளிக்கொணர்பவர். அதே நேரத்தில் நிறைய சொற்கள் பயன்பாடு இல்லாமல் போய்விட்டனவே என்று வருத்தமும் கொள்பவர். அந்தச் சொற்களெல்லாம் வீணாய்க் கிடக்கிறதே என்று வருந்தித்தான் இப்படி எழுதுகிறார்.
நியூ மீடியாவின் தாக்கம்
We Media” என்ற அதிகார பூர்வமான அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும்படி அமெரிக்கன் பிரஸ் சென்டர், ஷேய்ன் போமேன், க்ரிஸ் வில்லிஸ் என்ற இரு பத்திரிகையாளர்களிடம் பணித்திருந்தது. செய்திகள் பரவும் அல்லது அளிக்கப்படும் முறைகளில் ஒவ்வொரு நுகர்வோரும் பங்களித்துக்கொண்டிருக்கின்றனர் என்று இந்த பேப்பர் கூறுகிறது. ஆன்லைன் ஜர்னலிஸம் ரெவ்யூ ஆசிரியர் ஜே. டி.லசிகா எடிட் செய்த இந்தப் பேப்பர், பொது மக்களின் பங்களிக்கும் ஜர்னலிஸம் இன்று மக்களின் வாழ்முறையையும் மாற்றி வருகிறது என்று குறிப்பிடுகிறது. இன்றைய தலைமுறையின் வாழ்க்கையும் இணையத்தைச் சுற்றியே பிணைந்திருந்து பயனீட்டாளரே பங்களிப்பவராகவும் மாறிவிடும் காலக்கட்டத்தை இந்த ஆராய்ச்சி விளக்குகிறது.
புராணங்கள்
புராணம் என்ற சொல், கடந்த காலம் என்று பொருள்படும். கடந்தகாலத்துக்குரிய பல்வேறு நிகழ்வுகளைப் பேசுவதாலேயே இப்பெயர். பண்டைய மற்றும் இடைக்கால இந்து சமய வழக்கங்கள், தொன்மங்கள், வரலாறு, புவியியல், அரசவம்சங்கள், அண்டவியல் மற்றும் இலக்கியம் குறித்து அறிஞர்களுக்கும் பாமரர்களுக்கும் விரிவான தகவல்கள் கொண்ட கலைக்களஞ்சியங்களே புராணங்கள். புராணங்களின் நோக்கம் மற்றும் நிகழ்காலத் தேவை குறித்து இருவகை பார்வைகள் உள்ளன. வேதங்களில் உள்ள உயர்ந்த தத்துவங்களை கதைகளைக் கொண்டும் சம்பவங்களைக் கொண்டும் விளக்குவதுதான் புராணங்களின் ஒரே நோக்கம் என்று சொல்பவர்கள் உண்டு. புராணங்கள் பாமரர்களுக்கே உரியன என்று இவர்கள் கருதுகின்றனர்.
முத்ரா மூலமாக நிதிச்சந்தைகளை உள்ளிணைப்பது
சமீப காலகட்டங்களில் வட்டி விகிதங்கள் மெதுவாக இறங்கி வருகின்றன. வங்கிகளிடமிருந்து கடன் பெறும் பெருநிறுவனங்கள் ஆண்டிற்கு 12%க்கும் குறைவான வட்டியில் நிதிகளைப் பெற முடிகின்றன. ஆனால், என்னுடைய பழக்காரியும் காய்கறி விற்பவனும் நாளொன்றுக்கு அரை சதவிகித வட்டியில் கடன் வாங்குகிறார்கள். ஆண்டிற்கு 180% வட்டி கொடுக்கிறார்கள். என்னுடைய பெட்டிக்கடை முதலாளி ரூ. 50,000 என்று கடன் பத்திர ஒப்பந்தம் போட்டு ரூ. 45,000 பெறுகிறார். அதன் பிறகு நாளொன்றுக்கு ஐநூறு ரூபாய் வீதமாக நூறு நாளுக்குத் திரும்ப செலுத்துகிறார். (வருட வட்டி விகிதம் 40 சதவீதத்திற்கு மேல் ஆகும்.) என்னுடைய நாவிதர் சீட்டுப் பணத்தின் மூலம் நான்கு சதவிகிதம் மாதாமாதம் வட்டி கொடுக்கிறார். (வருட வட்டி 48 சதவீதமாகும்.)
கவிதைகள்
மின்சாரம் இல்லை
நொடிக்கு நொடி
புழுக்கம் அதிகமாகிறது
உடலெங்கும்
வியர்வையின் ஈரம்
கொசு என்னை உணவாகக்
கொள்கிறது