எடைப் புதிருக்கு விடை என்ன?

ஊதிய உடலை இளைக்க வைப்பது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கே கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கிறது. இதற்கு வழக்கமாகச் சொல்லப்படும் அறிவுரை என்னவென்றால் ‘உட்கார்ந்து தீனி தின்னாதே; ஓடியாடு; உடற்பயிற்சி செய்’ என்பதாகும். ஆனால் காலம் காலமாக நிலவி வரும் இந்தப் பொன்மொழி இப்போது பொலிவிழந்து வருகிறது என்கிறார், க்ரெட்சென் ரெனால்ட்ஸ்

பேரன்பின் தேவதை வருகை

யாவர்க்கும் மகிழ்வைத் தரும்
மந்திரங்களை உதிர்த்தது
பின்னர்
தவறவிட்ட விலைமதிக்கமுடியாதவொன்றை
தேடிச் செல்வது போல
மிகத் துரிதமாகத் தன் நிலம் நாடி
தொன்ம பயிர்நிலங்கள் தாண்டி
மீண்டும் பறந்தது

பெங்களூர் to பெங்களூரு

எம்.ஜி.ரோடு, கமர்ஷியல் ஸ்ட்ரீட் பிளாட்பாரங்களில் சன்னாவை தட்டையாக்கி, எலுமிச்சை சாறு வெங்காயம், கொத்துமல்லியுடன் கலந்து, பேப்பரை ஜோக்கர் குல்லா மாதிரி செய்து சென்னா மசாலா என்று தருகிறார்கள். சாப்பிட நன்றாக இருக்கும். சாப்பிட்டபின் நாக்கின் மேல் பகுதி சதை கொஞ்சம் உரியும் அவ்வளவு தான். வீட்டில் கிளி வளர்த்தால் இதை கொடுக்கலாம் சீக்கிரம் பேச்சு வரும்.

பனிச்சறுக்குப் பயணம்

எல்லா ஆரம்பங்களும் ஒன்றுதாம். அனைத்தும் மறக்கப்படுகின்றன.
நீங்கள் செய்துள்ளது மறத்தல். அதை மீட்க முடியாது.
இப்போது அல்லது எப்போதுமாய். உள்ளுக்குள் நீங்கள்
போட்டுள்ள வார்ப்பு அது.

புத்திசாலியான முட்டாள்-II

1970களில் யூரி கெல்லர் ஒரு மகத்தான நிகழ்வாக அலையடித்தார். “மன சக்தியால்” அவர் கரண்டிகளை வளைத்தார். முத்திரையிடப்பட்ட உறைகளிலிருந்த சித்திரங்களை “ஞானப்பார்வையால்” கண்டறிந்து வரைந்தார். பிரிட்டனின் மிகச்சிறந்த அறிவியலாளர்கள் அவருடைய அதீதமன ஆற்றல்களுக்கு சான்று பகர்ந்தனர். ஜேம்ஸ் ராண்டி என்கிற தொழில்முறை மாயாஜால நிபுணர் கெல்லரை போலவே கரண்டிகளை வளைக்கும் வரை. ஆனால் ராண்டி அந்த வித்தைக்கு அதீதமனசக்தி தேவையில்லை என்பதையும் தேர்ந்த கையசைவுகளும் பார்ப்பவர்களின் கவனத்தை சிதறடித்து அதனை செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்பதுமே அவசியம் என விளக்கிய போது அறிவியலாளர்களின் முகங்களில் ஈயாடவில்லை.

பயங்கரவாதத்தின் ரணங்கள் – 26/11

26/11 என குறிப்பிடப்படும் அந்த பயங்கரவாத போர் இந்தியாவின் மீது நிகழ்த்தப்பட்டு ஓராண்டு முடியும் இத்தருணத்தில் உலகளவிலும், ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் அந்நிகழ்வின் பாதிப்பு குறித்து பேச வேண்டியது அவசியம். இந்திய சமூகத்தின் தனி ஒரு மனிதனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பையும் அசைத்துப் பார்த்திருக்கிறது. நமது அரசு அமைப்புகளின் தடித்தனத்தையும், தவறுகளையும் வெளிக்காட்டியிருக்கிறது. கூடவே நம் சமூகத்து குறைபாடுகளையும்.

ஆடு

மணியக்காரனின் வீட்டின் முன்னால் ஆடுகள் கட்டிப்போடப்பட்டிருந்தன. இந்த ஆடுகளை யார் அறுத்துத்தருவார்? எல்லோரும் மரசெருப்பே போட முடியுமா? யாருக்கும் தோல் செருப்பு வேண்டாமா? தோல் எடுத்து தந்தால் கீழ் சாதியா? மாமிசம் சாப்பிடுபவனெல்லாம் கீழ் சாதியா என்று அவள் மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. திடீரென்று திரும்பி நெடுமாறன் என்ன சாப்பிடுறான். வெறும் பருப்புசாதம் சாப்பிட்டுட்டு சண்டை போடப்போவானா என்று கிழத்தி நாகம்மையை கேட்டாள்.

புரிந்து கொள் – 3

ஒரு பயங்கரக் கும்பல் வாஷிங்டன் மாநகரத்து மெட்ரோ ரயில் அமைப்பை வெடி குண்டு வைத்துத் தாக்க்த் திட்டமிட்டிருந்தது சி ஐ ஏ இயக்குநருக்குத் தெரிந்திருந்தது. இருந்தும் அவர் அந்த வெடிகுண்டுத் தாக்குதலை நடக்க விட்டார். அதைச் சாக்காக வைத்து, மிகக் கடுமையான எதிர் நடவடிக்கைகளை அக்கும்பலின் மீது செலுத்த நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவது அவர் திட்டம். இறந்த பல பயணிகளில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் இருந்தான்.

விதைகளின் கதைகள்

இந்தியாவின் பாரம்பர்ய நெல் விதைகளை அந்நிய சக்திகளுக்கு வழங்கியது உண்மையானால் அது போற்றக்கூடிய விஷயமாகத் தெரியவில்லை. அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட இந்திய நெல்ரகங்கள் in Situ-வாகக் காப்பாற்றப்பட்டு உலகில் எந்த நாட்டிலாவது சாகுபடி செய்யப்பட்டிருந்தால், அதைப் பாராட்டலாம். யாருக்கும் பயனில்லாமல் அமெரிக்க விதை வங்கிகளில் உகந்த குளிர்சாதன வசதியுடன் நைட்ரஜன் நீர்ம ஆவிக்குள் முடங்கிக் கிடந்தால் யாருக்கு என்ன லாபம்? ஒரு காலனி நாடாக இருந்த இந்தியாவிலிருந்து இந்தியச் செல்வங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்குக் கொள்ளை போனது சரி. 20-ம் நூற்றாண்டில் இந்திய விடுதலைக்குப்பின் நிகழ்ந்த விதைக்கொள்ளைக்கு என்ன சொல்லித்திட்டுவது?

உள்நாக்குகள் மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள்

உடனே எதுவும் பதிலளிக்க முடியாமல் சிறிது நேரம் மகள் உள்நாக்கு அமைதியாக இருந்தது. சிறிது நேர யோசனைக்குப் பிறகு, “”ஒரு நல்ல தலைமையை உருவாக்க முடியாத, இவர்தான் தலைவர் என்று ஒருவரைக் காட்டமுடியாத எந்தக் கூட்டமும் எதிலும் வெற்றிப்பெற்றதாக சரித்திரம் இல்லை. நம்மில் தலைமைக்கே சாத்தியம் இல்லை என்கிறபோது, நமக்கான தேவைகளை எப்படிச் சாத்தியப்படுத்த முடியும்?”

நேஷனல் ஜியாகிரஃபிக் புகைப்படப் போட்டி

உலகின் பிரபலமான புகைப்படப் போட்டிகளில் ஒன்று வருடந்தோறும் நேஷனல் ஜியாகிரஃபிக் நிறுவனம் நடத்தும் புகைப்படப்போட்டி. ஆரம்பநிலை ஆர்வலர்களிலிருந்து தேர்ந்த கலைஞர்கள் வரை பங்குபெறும் இப்போட்டிக்கு உலகெங்கிலுமிருந்து புகைப்படங்கள் வந்து குவிகின்றன. அப்படிக் குவிந்த புகைப்படங்களிலிருந்து சில நல்ல புகைப்படங்களை பாஸ்டன்.காம் சேகரித்து வெளியிட்டிருக்கிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.

வாசகர் எதிர்வினை

இதுவரை ராமன் ராஜாவின் கட்டுரைகளை படித்து படித்து மகிழ்ந்து வந்தேன். எனக்கு ராமன்ராஜா அறிமுகம் ஆனதே சொல்வனத்தில்தான். இந்த வார கட்டுரை அவரது நகைச்சுவைத் திறனுக்கும் அவரது அறிவியலை ஜனரஞ்சகமாய் சொல்லும் பாங்குக்கும் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு என்பேன்.

பதிமூன்றாம் எண்ணும், உற்சாக நம்பிக்கைகளும்

சிறுவயதிலிருந்து தொடர்ந்து அழுத்தி உந்தப்பட்டு, பிராபல்யத்தை நோக்கிப் பயணிக்கும் ஒவ்வொருவருமே சந்திக்கும் மனவலியை அகாஸி சந்தித்திருக்கிறார். இதே மனவலியை நாம் இப்போது தொலைக்காட்சிகளில் நடைபெறும் பாட்டுப்போட்டிகள், நடனப்போட்டிகள் வழியாக நம் குழந்தைகள் மீதும் சுமத்திக் கொண்டிருக்கிறோம். வெற்றிபெற்ற குழந்தைக்குக் கிடைக்கும் பிராபல்யம், பணம், விளம்பரங்கள் வழியாக ஒவ்வொரு குழந்தை மீதும் நாம் ஒரு பெரிய பாறாங்கல்லைப் போன்ற மன அழுத்தத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

தாராசுரம் கோயிலில் கார்ல் சாகன்

பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த விஞ்ஞானத்தின் பார்வையையும் இந்திய தொன்மங்களின் பார்வையையும் ஒப்பிட்டு பேசுகிறார் கார்ல் சாகன்

மகரந்தம்

டார்வின் பலவிதங்களில் மிகவே வித்தியாசமான அறிவியலாளர். இன்றைய சூழலில் டார்வின் அவரது ஆராய்ச்சி பயணத்துக்கு நிதி கேட்டிருந்தால், அறிவியல் செயல்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் இன்றைய விதிகளின் படி அது நிராகரிக்கப்பட்டிருக்கும் என வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். டார்வினின் வாழ்க்கை ஒரு பாசமிக்க கணவனாக, பெரும் அன்பு கொண்ட தந்தையாக, எதிலும் பொருந்தாத ஒரு மாணவனாக, பெற்றோரால் வேலைக்காகாது என நினைக்கப்பட்ட மைந்தனாக இருந்தவர்.

வடுவூர் துரைசாமி ஐயங்காரின் ’வித்யா சாகரம்’

நாவலில் இருந்து அந்தக் காலக் கட்டத்தில் நிலவிய பல சமூகச் செய்திகளை நாம் ஊகித்து அறிய முடிகிறது. முக்கியமாக, ஜமீன்தார்கள் போன்ற பணக்காரர்களிடமும், ஆதிக்க ஜாதிகளிடமும் தாசிகளின் செல்வாக்கு, தாசிகளின் ஆதிக்கத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றன இந்த நாவலின் மூலம் தெரிய வருகின்றன.

சிவப்பு மை

”திரு வூ? நம்ம எல்லாரும் ஹாயா உட்கார்ந்துகிட்டு அழகழகான பாறைகளையும் மேகக் கூட்டங்களையும் விதவிதமா வரைஞ்சுகிட்டு தாலாட்டிக்கிட்டு, அக்கடான்னு கெடந்தமானா, இந்த ராஜ்ஜியம் என்ன கதியாவும்?”

“குலாபி டாக்கீஸ்” திரைப்படத்தை முன்வைத்து

கன்னட சமூகத்தில் ராஜ்குமாரும், இருக்கிறார்தான். அவரை தெய்வமாக்கிய கன்னட சினிமாவும் சினிமா ரசிகர்களும் உண்டுதான். அவருக்கு கன்னட அரசியல் தலைமையும் தலை வணங்குகிறார்கள்தான். ஆனால் அங்கு கிரீஷ் காஸரவல்லிக்கும் இடம் இருக்கிறது. பி.வி.காரந்துக்கும், கே.வி.சுப்பண்ணாவுக்கும் இடம் இருக்கிறது. ஆனால் இங்கு அம்மாதிரி யாருக்குமே இடம் இருப்பதில்லையே? நமக்கு ரஜினிகாந்தும், கமலஹாசனுமே, எல்லாமாக, காஸரவல்லியிம், ராஜ்குமாருமாக இருக்கிறார்களே. எத்தகைய கலாசாரத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம்? காஸரவல்லியின் குடும்பம் யக்ஷகானாவுடன் நெருங்கிய உறவு கொண்டது. கே.வி.சுப்பண்ணாவும் காஸரவல்லியின் உறவினர் தான். ஆனால் காஸரவல்லியோ, கே.வி.சுப்பண்ணாவோ, யக்ஷகானா தான் நவீன கன்னட நாடகத்திற்கும் சினிமாவுக்கும் உறபத்தி ஸ்தானம், யக்ஷகானாவை பிரதி செய்து கோமாளித்தனம் பண்ணுவது தான் எங்கள் பணி என்று கிளம்பவில்லையே? ஏன், நாம் மட்டும் இப்படி?