அன்றைய கூத்து நிகழ்ச்சி திரௌபதியின் திருமணத்துடன் நிறைவடையும். மறுநாள் திரௌபதியின் திருமணம் மீண்டும் கொண்டாடப்படும், அதாவது தென்னிந்தியக் கோவிலில் இத்தகைய கோவில் விழாக்களில் நடக்கும் அனைத்து சம்பிரதாயச் சடங்குகளுடனும் அது நடைபெறும். கோவிலின் கர்ப்பக்கிருகத்தில் திரௌபதியின் சிலைக்கருகே அருச்சுனன் சிலையும் வைக்கப்படுகிறது. அனைத்துத் திருமணச் சடங்குகளும், அம்மனின் கழுத்தைச் சுற்றித் தாலி கட்டுவது உட்பட அனுஷ்டிக்கப்படுகின்றன. மறுபடியும் அந்தச் சிலை கிராமத்தை சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு, கிராமம் முழுவது விழாக்கோலம் கொள்கிறது. பிறகு அம்மன் கோவிலுக்குத் திரும்புகிறாள். இங்கே பண்டைய காலத்து அம்மன் மற்றும் காவல் தெய்வத்தை திரௌபதி அம்மனுடன் இணைப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது .காவியம் (பிரசங்கி), நாடகம் (தெருக்கூத்து) மற்றும் சடங்கு (அம்மன்) என்பவற்றின் …
Category: இதழ்-129
வளம் – வாழ்வு – வளர்ச்சி
தற்சார்பு விவசாயம் வளர வேண்டும். ரசாயன உரப்பயன்பாட்டை நிறுத்திவிட்டு இயற்கை இடுபொருட்களை விவசாயிகள் அவரவர் தோட்டங்களில் இயற்கை இடுபொருள் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். உபரி உரங்களை முழுக்க முழுக்க அரசுத்துறை உற்பத்தி செய்து யூரியா, பாஸ்பேட், பொட்டாசியம் என்று தனியார் வழங்கலுக்கு மாற்றாக பாக்டீரியா, சூடோமோனஸ் போன்ற பாக்டீரியா காளான் உரங்களை திரவ வடிவிலோ கரிப்பொடி கலந்தோ விநியோகிக்கலாம்.
ஓகே கண்மணி: உரையாடல்
ஒ.கே. கண்மணி இரண்டாம் ரகம். ஐஃபோன் பிரியர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரி விஷயங்கள்தான் படம் முழுக்க உலா வரும். ஐஃபோனில் எல்லாமே வழுக்கிக் கொண்டு போகுமாறு அமைத்திருப்பார்கள். உயர்தர appகளை மூன்றாவது தரப்பைக் கொண்டு வழங்குவார்கள். ஒ… காதல் கண்மணியில் அந்த விஷயங்கள் எல்லாம் செமையாக உருவாக்க ஏ.ஆர் ரெஹ்மான், பி.சி. ஸ்ரீராம் போன்ற மூன்றாவது தரப்பு கட்டமைக்கிறது. காதுக்கினிய இசை, கண்ணுக்கினிய ஒளிப்பதிவு, சிந்திக்கவேத் தேவைப்படாத இடைமுகம் போல் ஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பு – எல்லாம் எளிமைவிரும்பிகளுக்கு, இந்தக்கால ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு சொர்க்கம்.
பதாகை சிறுகதை போட்டி
பதாகை இலக்கியத்தளம் 2015க்கான சிறுகதைப் போட்டியை அறிவித்து இருக்கிறது. க. மோகனரங்கனும் பாவண்ணனும் நடுவர் குழுவில் இருக்கிறார்கள். சொல்வனம் வாசகர்களும் எழுத்தாளர்களும் இங்கே சென்று விவரங்களை அறியலாம்…
கடலில் எண்ணெய்க் கசிவு
கடலில் எண்ணெய்க் கசிவினால் ஏற்படும் விளைவுகள் என்ன? எண்ணெயில் இருக்கும் எடையில இலேசான பொருட்கள் ஆவியாகி காற்றில் கலந்துவிடும். அல்லது இயற்கையான உருமாற்றம் மற்றும் உயிரியல் தரவீழ்ச்சி (bio degradation) ஏற்பட்டு மறைந்துவிடும். ஆனால் அதிலுள்ள கனமான பொருட்கள் கடலிலேயே தங்கி, கடல் வாழ் உயிரினங்களின் உடலில் எண்ணெய்ப் பூச்சாகப் படிந்து விடுவதால், சுலபமாக நகர முடியாமலும், உணவு தேட முடியாமலும், மூச்சு முட்டியும் பல உயிரினங்கள் மடியும். அதுவும் பெட்ரோலியத்தில் பலவித நச்சுப் பொருட்கள் (toxic components) இருப்பதால் அவற்றை உட்கொள்ளும் உயிரினங்கள் இறந்து போவதொடல்லாமல் புதிய உயிர்கள் பிறப்பதையும் அவை தடுத்துவிடும். இதனால் பல உயிரினங்கள் நாளடைவில் மறைந்து போகும் அபாயம் இருக்கிறது.
மன மன மன மென்டல் மனதில்
மன மாதிரி பற்றிய ஆய்வு ஒன்றில், இருபதுக்கும் மேற்பட்டவர்களிடம் ஒரு தாளைக் கொடுத்து ஒரு காபி கோப்பையையும், சாசரையும் (Cup and saucer) அதில் வரையுமாறு சொன்னபோது அனைவருமே சொல்லி வைத்தாற்போல் ஒரு சாசரை வரைந்து அதன் மேல் கோப்பையை வரைந்து, கோப்பையின் கைப்பிடி வலது புறமாக இருக்கும்படி வரைந்தார்களாம். அவர்களில் ஓரிருவர் மட்டுமே கைப்பிடியை இடதுபுறமாகவோ அல்லது கோப்பையையும் சாசரையும் டாப் ஆங்கிளில் தெரியுமாறோ வரைந்தார்களாம். இன்னொரு விஷயம், யாருமே இரண்டையும் தனித்தனியாகக் கூட வரையவில்லை. ஆக கப் அண்ட் சாசர் என்றதுமே நமக்கு இருக்கிற மன மாதிரி இப்படித்தான் இருக்கிறது. கோப்பையின் கைப்பிடியை வலது பக்கமாக வரைவதுகூட நம்மில் பெரும்பான்மையானவர்கள் வலதுகைப் பழக்கம் உடையவர்கள் என்பதனால்தான்.
புட்டுக்குழல்
“அப்பிடி எந்தா செலவு”
“நல்லா கேட்டிய.நா வாரேன்னு தெரிஞ்சாலே என் வீட்டுக்காரிக்கு மொதல்ல தெங்காசிக்கு போயி சாப்புடணும்.படம் பாக்கணும்.பெறவு பஜார்ல போயி சப்பு சவர்னு அள்ளிக் கெட்டிக்கிடுவா.வீட்டுக்கு வந்ததும் சீட்டு,வாரவட்டி,மஞ்ச மசால் எல்லாம் முடிஞ்சதும் மிச்சம் இருக்கத சரக்கெடுக்க கொண்டு வரலாம்னு பாத்தா ஊர்ல கெடக்க அவ்ள படுக்காளிப்பயலுவளும் குடிக்கணும்பானுவ.வேங்கி குடுக்காம இருக்க முடியுமா? பெறவு சரக்கெடுக்க எவன்ட்டயாது கடந்தான் வாங்கணும்.நல்ல வேளக்கி இந்ததடவ கொஞ்சம் பழய பித்தள கெடந்துது”
சீன மொழிக் கவிதை உலகம் : ஓர் அறிமுகம்
லி பை சீன மொழி இலக்கிய உலகில் சிறந்த கவிஞராக மதிப்பிடப் படுபவர்.ஆயிரக் கணக்கான கவிதைகளை எழுதியவர்.கவிதைகளின் மிக உயர்ந்த கறபனைத் திறத்திற்காக எல்லோராலும் அறியப் பட்டவர். நட்பு,இயற்கையின் செறிவு,தனிமையின் தன்மை என்று பல கருக்களை கவிதைப் பொருளாக்கிக் கொண்டவர். டாங் வம்ச கால கட்டம் சீன இலக்கியத்தின் ’ பொற்காலம் ’என்று மதிப்பிடப் படுகிறது. லி பை அக்கால கட்டத்தைச் சேர்ந்தவர். என்பது குறிப்பிடத் தக்கது
கண்ணப்பத் தம்பிரான்
1960-களின் இடையில், 65-66 அல்லது சற்று முன் பின்னாக இருக்கலாம் – டெல்லியில் ஒருநாள் மாலை ரவீந்திர பவனின் புல்வெளியில், தாற்காலிகமாக எழுப்பப்பட்டிருந்த மேடையில், கண்ணப்பத் தம்பிரானும் நடேசத் தம்பிரானும், பாரதத்திலிருந்து ஒரு காட்சியை, காரமான வாதப் பிரதிவாதங்களும், துவந்த யுத்தமும் நிறைந்த ஒரு காட்சியை, நடித்துக் காட்டிக் கொண்டிருந்தனர். வாள் சண்டையும் வீராவேசமான கிரிகைகளும், உரத்த குரலில் சொற்போரும் நிறைந்த அந்தக் காட்சி, ஓர் நிகழ்வுக்கு எத்தனை உக்கிரமும், வீரமும், ஓர் உச்சநிலைக்கு எடுத்துச் சென்று அந்த உச்சத்திலேயே சுமார் 40-45 நிமிடங்கள் வரை சரிவில்லாது அக்காட்சியின் விறுவிறுப்பை நீடிக்க செய்ய முடியும் என்பதற்கான நிதர்ஸன நிரூபணமாக அது இருந்தது. அன்று எனக்கு நடேசத் தம்பிரானும் சரி கண்ணப்பத் தம்பிரானும் சரி, அவர்கள் பேண வந்த தெருக்கூத்து என்ற வகை நாடக வெளிப்பாடும் சரி, எல்லாம் புதியன. முதல் அறிமுகமே அதுதான். அந்த இருவரும் பெரிய கலைஞர்கள், அவர்கள் பேணும் வெளிப்பாடுக் கலை என்பது அந்த மாலை எனக்குள் ஆழப் பதிந்துவிட்டது. எந்தப் புத்தகமுமோ, எந்த அறிஞரின்/ ஆராய்ச்சியாளரின்/ வெள்ளைத்தோல் நிபுணரின்/ கலைஞரின் சிபாரிசுமோ தேவையாக இருக்கவில்லை.
இறைவனின் இருப்பிடம்
சுன்னி பெரும்பான்மை மக்கள் வசிக்கும் இந்த நாட்டில் பெண்களுக்கு கண்டிப்பாக நிறைய சுதந்திரம் இருக்கிறது. தெருக்களில் சிறுமிகள் சிறுவர்களோடு சேர்ந்து கால் பந்தாடிக்கொண்டிருப்பதை சாதாரணமாக காணலாம். ஹிஜாப் எனப்படும் தலை மற்றும் மார்பை மறைத்து போடப்படும் துப்பட்டா கணிசமான பெண்கள் அணிந்திருந்தனர். பர்தா எண்ணிக்கையில் மிக மிக குறைவு . பள்ளி கல்லூரிகள் கணிசமானவை இரு பாலர் கல்வி நிலையங்கள். எங்கள் விடுதிக்கு முன் இருந்த மருத்துவ கல்லூரி பேருந்து நிலையத்தில் நம்மூரை மிஞ்சும் அளவுக்கு கடலை வறுபட்டு கொண்டிருந்தது. பெண்கள் கார், ஸ்கூட்டர் என பல ரக வாகனங்களில் தனியாக பயணிக்கின்றனர். நான் பார்த்த வரையில் எல்லா விதமான வேலைகளிலும் அவர்கள் ஈடுபடுவது போல்தான் தெரிகிறது.
இன்றைய ஈராக் – ரம்மாதி நகரம் வீழ்ந்தபின்
ஐஎஸ் பிடியில் இருக்கும் யசிதி இனப்பெண்கள் படும் கொடுமைகளைத்தவிர. குர்துகள் குறித்து சமீபத்தில் செய்திகள் எதையும் படித்திருக்க மாட்டோம், ஏனெனில் குர்திஸ்தானின் பெஷ்மெர்கா படைகள், ஐஎஸ் படைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர். அவர்களின் பகுதிக்குள் (குர்திஸ்தான்) நுழைய முயலும் எந்த ஐஸ் படையும் சுத்தமாக அழிக்கப்படுகிறது. ஐஎஸ் செய்த அத்தனை கொடூரங்களையும் பெஷ்மெர்காவும் தன்னிடம் சிக்கும் ஐஎஸ் படைகளுக்குச் செய்கிறது. அதனால், குர்திஸ்தானை ஒட்டிய பகுதிகளில் எந்த புது நிலப்பகுதியும் இழக்கப்படவில்லை. ஓரளவுக்கு ஈராக்கின் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன பெஷ்மெர்கா படைகள்.
வேதாங்கங்களும் உபவேதங்களும்
வேதாங்கங்களின் முதல் உறுப்பான சீக்ஷா, ஓசை நயம் மற்றும் உச்சரிப்பு முறையை நெறிப்படுத்துகிறது. சீக்ஷா வேதங்களின் நாசியாகக் கருதப்படுகிறது. நாம் சுவாசிக்கவும் நம் பிராணனைக் காத்துக் கொள்ளவும் நம் நாசி உதவுவதுபோல் சீக்ஷா வேத மந்திரங்களின் ஜீவ சக்தியைக் கட்டிக் காக்கிறது. வேத மந்திரங்களின் பலனை முழுமையாய்ப் பெற அவற்றை முறைப்படி சரியாக உச்சரித்தாக வேண்டும். அசைகளின் ஓசை மற்றும் ஒலிப்பைத் தூய முறையில் காத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை வரையறை செய்வதால் சீக்ஷா முக்கியத்துவம் பெறுகிறது. உச்சரிப்பில் எழும் எந்த ஒரு சிறு பிழையும் விரும்பத்தகாத, அல்லது எதிர்மறை பலன் கொடுக்கக்கூடும். எனவே வேத புருஷனின் ஆறு உறுப்புகளில் வேதாங்கமே பிரதானமாக மதிக்கப்படுகிறது. ஒவ்வொரு அக்ஷரமும் எவ்வளவு உயர்ந்து அல்லது தாழ்ந்து ஒலிக்கப்பட வேண்டும்…
மகரந்தம்
கடந்த நூற்றைம்பது வருடங்களாக அமெரிக்காவின் மேற்குப் புற மாநிலங்களில் ஏராளமான நகரங்கள் கட்டப்பட்டு, பெரும் மக்கள் திரள் அங்கு குடியேறியது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் இந்த மக்கள் திரள் சேர்ந்தது. இந்தத் திரள் நகரங்களில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், கலிஃபோர்னியாவைப் போன்ற அரைப் பாலை நிலங்களில் திசை திருப்பிக் கொணரப்பட்ட பெரும் ஆற்று நீரை வைத்து பெருமளவில் விவசாயம் நடந்தது. அமெரிக்காவில் இன்று விற்கப்படும் ஏராளமான காய்கறிகள், பழ வகைகளில் பெரும்பாலானவை கலிஃபோர்னியா அல்லது அது போன்ற மேற்குப் புற மாநிலங்களில் விளைந்தவை. சமீபத்தில் உலகெங்கும் திடீரென்று மாறி வருகிற தட்ப வெப்ப நிலைகளால் …
சின்னதாய், த்ரில்லிங்காய், ஒரு புன்னகைப் புரட்சி – தமிழ் சினிமா
பேசாத படங்கள், பேசும் என்கிற அடைமொழியோடு பாடும் படங்கள், பேசு பேசென்று பேசிய படங்கள், புராணிகப் படங்கள், சரித்திரப் படங்கள், கத்திச் சண்டை, கத்தாமல் சண்டை போட்ட படங்கள், சமூகப் படங்கள், குடும்பப் படங்கள், காதல் படங்கள், மர்மப்படங்கள், நகைச்சுவைப் படங்கள், பிரசாரப் படங்கள் என்று வகைப் படுத்தியோ, கால கட்டங்களை வைத்தோ பார்த்தாலும் எல்லாம் கலந்த கலவையாக யதார்த்தம் என்கிற பெயரில் யதார்த்தத்துடன் சம்பந்தப் படாத படங்களே அநேகம்.
கவிதை
பூட்டிய கதவுக்குப் பின்னால்
காத்திருக்கிறது
பிசுபிசுக்கும்
தனிமை திரவம்
ஹிஜாப் அணிந்த பெண்ணின் பார்வையிலே…
முஸ்லீம் மதத்தில் அதற்கு பல்வேறு பெயர்கள் இருக்கின்றன. நிகப் எனலாம்; பர்க்கா எனவும் சொல்லலாம்; அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட ”ஹிஜாப்” எனவும் குறிப்பிடலாம். முக்காடு போட்டுக் கொண்டு, முகக்கண்ணை மறைத்துக் கொண்டு தன் குழந்தையையும் இந்த உலகையும் பார்க்கும் இஸ்லாமியப் பெண்ணின் பார்வை எப்படி இருக்கும். இங்கே படம் பிடித்து “ஹிஜாப் அணிந்த பெண்ணின் பார்வையிலே…”
தற்கொலை செய்து கொள்வதா? வேண்டாமா?
தத்துவம் விடை கொடுக்கும் பல கேள்விகளில், தலையாயது என்னவென்றால், ‘நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா… இல்லையா?’ என்பதுதான் என்றார் ஆல்பர்ட் காம்யூ. அவரைப் பற்றிய குறும்படம்:
எண்ணெய்யும் தண்ணீரும்: கடவுள் பாதி, மிருகம் பாதி
மூன்று வருடங்களுக்கு முன் கலிஃபோர்னியாவில் நடந்த ஒரு கான்பரன்ஸ்சுக்கு ஒரு விரிவுரை வழங்கப்போயிருந்தேன். பிணையத்தின் போக்குவரத்தில் அதிவேகமாக பயணம் செய்யும் விதம்விதமான குட்டி டிஜிட்டல் பொட்டலங்களை அடையாளம் கண்டுபிடித்து மேலாண்மை செய்வதை பற்றிய என் பேச்சைக்கேட்க கூட்டம் ஒன்றும் அலை மோதவில்லை. ஆனால் அதே மாநாட்டில் இன்னொரு உரை வழங்கிய ஈலோன் மஸ்க்குக்கு (Elon Musk) என்னையும் சேர்த்து நிறைய கூட்டம். டெஸ்லா மோட்டார்ஸ் என்ற முழுக்க முழுக்க மின்சாரத்தில் ஓடும் கார்களை தயாரிக்கும் கம்பெனியின் உயர் அதிகாரியான அவர் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மின்சாரக்கார்கள் எப்படி உலகையே எதிர்காலத்தில் மாற்றப்போகின்றன என்பதுதான் அவரது உரையின் சாராம்சம் என்றாலும்…
ஆர் அபிலாஷின் நாவல்-'ரசிகன்'
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு புது ஹீரோவும் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கான வளர்ச்சிப் பாதையில் ஒரு குறிப்பிட்ட ரோலை கட்டாயம் செய்திருப்பார். அது, தன் தாயைக் கொன்று தங்கையைக் கெடுத்து குடும்பத்தை அழித்தவனை பழிவாங்கும் பாத்திரம். இதற்கு விதிவிலக்குகள் உண்டு எனிலும், இதை ஒரு பொதுவிதியாகச் சொல்லுமளவு நம் நாயகர்கள் கணிக்கக்கூடிய பாதையில்தான் பயணித்திருக்கின்றனர். இதைப் போலவே தீவிர தமிழ் இலக்கியத்தில் அநேகமாக எல்லா எழுத்தாளர்களுமே ஒரு சீரழிந்த அறிவுஜீவி/ கலைஞன் குறித்த நாவலோ அல்லது சிறுகதையோ எழுத வேண்டும் என்று இருக்கிறது போல. சு.ரா ஆரம்பித்து, ஜெயமோகன் தொடர்ந்து, ராமகிருஷ்ணன் மற்றும் பலர் எழுதியது இப்போது அபிலாஷின் முறை.
கொடும்பாலையில் மறுபடி துளிர்க்கும் ஜோராஸ்ட்ரியனியம்
உலகின் இரு பெரும் செமிதிய மதங்கள் சகிப்புத்தன்மை அற்றவை என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவற்றில் ஒன்று, இப்போது காருண்யம் என்பதே உலகுக்குத் தான் அளித்த கொடைதான் என்று பாவலா செய்து உலகரங்கில் தொடர்ந்து பெரும் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அத்தகைய பிம்பம் நிலவத் தேவையான ஊடகப் பிரச்சாரங்கள், உலகைக் கொள்ளை அடித்துக் கொழுத்த செல்வந்த நாடுகளான யூரோப்பிய நாடுகளின் உதவியுடன் ஆசிய ஆஃப்ரிக்க நாடுகளில் பாகனியத்தைப் பூண்டோடு அழிக்கத் தன் பிரச்சாரகர்கள் மூலம் பொய்களே நிறைந்த பிரச்சாரங்கள் என்று எல்லா வகை முயற்சிகளையும் செய்து வருகிறது. இன்னொன்று துவக்கத்திலிருந்தே கத்தியை, பெருங்கொலைகளை, ஆக்கிரமிப்பை, போரை, வன்முறையை நம்பி உலகெங்கும் பரவி இருக்கிறது, இன்றும் அதே வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது, வெற்றி பெற்ற போர்த்தந்திரத்தை எதற்காகக் கைவிட வேண்டும் இல்லையா?
இணையப் போர்: சீனாவின் 'பெருந்தீயரணும்' 'பெரும் பீரங்கியும்'
பண்டைப் பெயரைத் தழுவி சீனாவிற்குள் இணையத் தணிக்கைக்காகச் சீன அரசு இப்போது உருவாக்கியதே Great Firewall – சீனாவின் கணினிகளைக் காக்க எழுப்பிய ‘பெருந்தீயரண்’ என்ற மென்பொருள் அமைப்பு. இதை மின்வெளிக் குற்றங்களை (Cyber Crime), அஃதாவது இணையத்தின் மூலம் நடக்கும் குற்றங்களைத் தடுக்கச் சீன அரசாங்கத்தில் பயன்படுத்துகிறார்கள். பண்டைய சுவர் ‘அன்னியரை’ உள்ளே நுழைய விடாமல் தடுத்த அரண் என்றால் இன்றைய அரண் சொந்த மக்கள் உலகோடு தன்னிச்சையாக உறவாட விடாமல் தடுக்கும் அரண்.