சிகரெட் அட்டைகள் தான் என் அம்மாவின் கிரடிட் கார்டு
சைக்கிள் தான்
என் அப்பாவின் ஜெட் வாகனம்
Category: இதழ்-126
பங்களாதேஷ் பயணம் – 2
ஏப்ரலில் நான் மீண்டும் டாக்காவும் சிட்டகாங்-கும் போக தீர்மானமாயிருந்தது. தற்போது நடக்கும் வன்முறைகளால், பயணத்தைத் தள்ளிப்போட்டுவிட்டேன். சிட்டகாங் போய் அங்கிருந்து காக்ஸ் பஜார் என்ற கடற்கரை நகரில் விற்பனைத்துறையின் கூட்டம் நடத்த முடிவாயிருந்தது. உலகின் மிக நீளமான, தொடர்ந்து நீண்டிருக்கும் கடற்கரை என்று புகழ் பெற்றது காக்ஸ்பஜார் 120 கிமீ நீளத்திற்கு அழகிய மணல் பரப்பும், பொன்னான சூரியோதய, அஸ்தமன காட்சிகள், அருமையான மக்கள் என்று டாக்காவில் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். Beautiful Bangladesh என்ற அடைமொழியுடன் அரசு எப்படியும் அதனை தாய்லாந்தின் பட்டாயா, இலங்கையின் கால்லெ போல சுற்றுலா வரும் வெளிநாட்டவர் குவியும் இடமாக்க வேண்டுமென நினைக்கிறது.
எண்ணெய்யும் தண்ணீரும்: மனிதரில் இத்தனை நிறங்களா?
அந்த வாரம் படகு பயிற்சிக்கு பதில், என் தவறுக்கு தண்டனையாக சாப்பர் பாதுகாப்பு பற்றி நான் எல்லோருக்கும் ஒரு வகுப்பு எடுக்க வேண்டும் என்று FPS முடிவு செய்தார்! ஒரு தண்டனையாக கொடுக்கப்பட்டாலும், தலையை தொங்கப்போட்டுக்கொண்டு இருந்த எனக்கு என்னவோ அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக பட்டது. நான் ONGCயில் சேர்வதற்கு முன்னால் ஹெலிகாப்டர் வடிவமைப்பு ஆய்வகத்தில் ஒரு வருடம் பணி புரிந்தவன் என்பது FPS உட்பட பெரும்பாலும் யாருக்கும் தெரியாது!
பயனர் அனுபவம் – ஒரு அறிமுகம்
நீங்கள் இப்போது ஒரு வலைத்தளத்தை முதன் முதலாக உபயோகிக்க வருகிறீர்கள். எனில் உங்களால் அவ்வலைதள சேவையை நீங்களாகவே எளிதாகக் கற்றுக்கொண்டு, மிக விரைவாக இயக்க முடிகிறதா?. தவறுகள் செய்யாமல், தடுமாறாமல், தெளிவாக உபயோகிக்க முடிகிறதா? மேலும் மறுமுறை அதே வலைதளத்தைப் பயன்படுத்தும்போது,அதன் வடிவமைப்பையும், அதன் நேவிகேஷன் (Navigation) அம்சங்களையும் தெளிவாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறதா?
யாமினி கிருஷ்ணமூர்த்தி
யாமினி நடனம் ஆடுவதற்கென்றே பிறந்தவர். அது அவருடைய (passion) பேரார்வமாகவும் இருந்துள்ளது. அந்தப் பேரார்வம் அவருடைய அர்ப்பணிப்பைக் கொண்டுவந்துள்ளது. வாழ்வில் மற்ற அனைத்தையும் முக்கியமற்றதாக பின்னுக்குத் தள்ளி, தியாகம் செய்து, அதைத் தியாகம் என்றே கருதாத அளவிலான விழைவு அது. இந்த விழைவே அவரை நாட்டியத்தின் உருவாய் வடித்துள்ளது. இந்திய மரபின் சிறந்த வகைப்பட்ட ஆன்மீகத் தாபம் இது: யாகத்தீயில் நடனமாடும் பிழம்புகளுக்குத் தன்னை ஆஹுதியாய் அர்ப்பணிப்பது. இது பேரின்பமான ஒன்று.
குளக்கரை
காமிக் புத்தகங்கள் இந்தியாவில் பல காலமாகவே பிரபலமானவை. ஆனால் இந்திய காமிக் புத்தகங்கள் பெரும்பாலும் புராணங்கள், இந்திய வரலாற்றின் நாயகர்கள், சில மர்மக்கதை/ சாகசக்கதைகள் என்ற வகையோடு நின்று விடுகின்றன. சாகச/ மர்மக் கதைகள் எக்கச் சக்கமாக விற்கின்றன என்பதைச் சமீபத்து புத்தகக் கண்காட்சியில் தெரிந்து கொண்டேன். ஒரு கடையில் அவர்கள் கொண்டு வந்த பிரதிகள் எல்லாம் தீர்ந்து அடுத்த கட்டுப் பிரதிகளுக்கு முன்பணம் செலுத்தத் தயாரானவர்கள் கூட இருந்தார்களாம், நண்பர் சொன்னார்.
மகரந்தம்
இருபதாண்டுகள் முன்பு வரை எதுவாக இருந்தாலும் தொலைபேசி வழியாகவே சாத்தியப்பட்டது. அதன் பிறகு இணையம் மூலமாக, எந்தக் கணினியில் இருந்து வேண்டுமானாலும், இது போன்ற காரியங்களை சாதிக்க முடிந்தது. இப்பொழுது எல்லோருடைய கைபேசியிலும் நூற்றுக்கணக்கான Apps எனப்படும் செயலிகள், இதே விஷயத்தை எளிதாக முடித்துக் கொடுக்கின்றன. ஆனால், வெகு விரைவில் ஆப்பிள் ஐபோன் முதல் ஆண்டிராய்ட் கருவிகள் வரை, எதை எடுத்தாலும் ஃபேஸ்புக் மூலமாகவே பாட்டுக் கேட்பது முதல் பங்கு வர்த்தகம் வரை செய்ய முடியும். இணையம் எளிதாகக் கிடைக்காத ஆப்பிரிக்கா போன்ற இடங்களிலும்
சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி
’குண்டாற்றுக்கு அந்தப் பக்கம் நீ ஜமீந்தார் என்றால், இந்த பக்கம் நான் – உனக்கெதுக்கு தாரை தப்பட்டை’ என்று மேலக்கோட்டை கவுடர் ஜமீனை கேட்கும் அங்கப்பதேவரை, அங்கப்பர் என்று எழுதியிருந்தால் அல்லது முத்தையாத்தேவர் என்கிற ராஜாவை ’தாயோளி’ என்று திட்டி செருப்பால் அடிவாங்கிய தாசில்தார் நடராஜ ஐயரை நடராஜன் என்றூ எழுதியிருந்தாலோ அல்லது சோழமூக்கன் வழிவந்து பல தலைமுறைகளாக பிள்ளைமாராக வாழ்ந்த மேகநாதம்பிள்ளையின் அக்குடும்ப ரகசியம் உடைந்து போனபின்பு அக்குடும்பத்தில் கட்டிக் கொடுத்து வாழ்த்த பெண்கள் திருப்பி அழைத்துக் கொள்ளப் படுவதை, முத்தையா தேவரை கட்டிக் கொண்ட ஜெயலட்சுமி தனது குடும்பத்துடனான உறவுகளை அறுத்துக் கொள்வதை, ஜெயலட்சுமியின் அத்தை ராஜாவை (முத்தையாதேவரை) த் திட்டும்போது…
நேற்று நினைத்தேன் – ஜெயகாந்தன்
நேற்று நான் நினைத்தேன்; இந்தக் காற்று மண்டலமான பூமியிலேயே ஒரு நாள் என் சுவாசத்துக்குக் காற்றில்லாமல் நான் மரித்துப் போவேன். அப்போது புயற்காற்று என் உடலைப் புரட்டி அலைக்கழித்தாலும் எனது சுவாசகோசங்களை இயக்க முடியாதே !
மாயத்தோற்ற ஊக்கிகள்
சில வகையான வேதிப்பொருட்களை உட்கொள்ளும்போது, அவை மூளையை அடைந்து கிட்டத்தட்ட இதேவகையான மாயத்தோற்றங்களை உருவாக்கும் இயக்கங்களை மூளையினுள் தூண்டுகின்றன. இவ்வகை வேதிப்பொருட்கள் மாயத்தோற்ற ஊக்கிகள் (Hallucinogen\ psychedelic) எனப்படுவன. 1960-களின் தொடக்கத்தில் இந்த வேதிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில், இவை மருத்துவத்தில் வலி நிவாரணியாகவும், மனநோய் சிகிச்சைக்கு மருந்தாகவும் உபயோகப்படும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் ஜெயகாந்தன்- காணொளி
பர்மாவின் செட்டியார்கள் – கட்டுரை எதிர்வினையும் பதிலும்
பிரிட்டிஷ்காரர்களை செட்டியார்கள் பின்தொடரவில்லை என்பது வரலாற்று ரீதியாக சரியான பார்வையல்ல. பிரிட்டிஷ்காரர்களை பின்தொடர்ந்தே செட்டியார்கள் பர்மாவில் கால் வைக்கிறார்கள். சரியாகச்சொன்னால், முதல் பிரிட்டிஷ்-பர்மிய போரில் பிரிட்டிஷ் இந்திய துருப்புகளுடன் சேர்ந்து பயணம் செய்தே அவர்கள் பர்மாவைச் சென்றடைகிறார்கள். (ஷான் டர்னல்). பிரிட்டிஷ்காரர்களுடன் நகரத்தார்களுக்கு இருந்த வணிகப்பிணைப்பும் பல இடங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஒன்றே. பிரிட்டிஷ்காரர்களை அண்டி அரசியல் செய்த நகரத்தார்கள் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நீதிக்கட்சி, திராவிட இயக்கங்கள் வழியாக தமிழக அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுக்கவும் செய்தார்கள்.
செயற்றிட்ட மேலாண்மை (Project Management) அனுபவக் குறிப்புகள்
ஒன்றரை வரியில் திருவள்ளுவர் சொல்லி முடித்துவிட்டார். இதனை விளக்குவதற்கு ஓராயிரம் பக்கங்கள் தேவைப்படலாம். பிராஜெக்ட் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு பொருளை உருவாக்குவதோ, அல்லது ஒரு பொருள் உருவாக்குவதற்கான உதவிகளைச் செய்வதோ அல்லது தலைபோகும் பிரச்னைக்கு ஒரு முடிவை தேடித்தருவதேயாகும். புதிதாக ஒரு கார் தயார் செய்வது ஒரு பிராஜெக்ட்தான். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட காருக்குப் பெயிண்ட் அடிக்கும் பணியைச் செய்வதும் ஒரு பிராஜெக்ட்தான்.
ஹலோ பார்பி!
இது போன்ற தொழில்நுட்பத்தை பார்பி பொம்மைகளில் பொருத்தி உருவாக்கப்படும் ‘Hello Barbie’ பொம்மைகள், Wi-fi மூலம் இணைய இணைப்பை மையமாக வைத்தும், குரல் அங்கீகார மென்பொருள் முறையைக் கொண்டும் குழந்தைகளுடன் பேசுவது சாத்தியமாகிறது. குழந்தைகளின் மொழி உச்சரிப்பையும், அவர்களின் குரலில் இருக்கும் ஏற்ற இறக்கங்களையும் புரிந்துகொள்ள முடியும் என்பது தான் இவற்றின் சிறப்பம்சம்.
ஷ்யாம லீலா
விலை: லிட்டருக்கு 23 ருபாய். மார்க்கெட் விலை – 18 ரூபாய். வாங்கும் அளவு மாதம் 5 லட்சம் லிட்டர். நிறுவனத்துக்கு நஷ்டம் வருடம் : 3 கோடி. (அன்று சென்னை கோட்டூர்புரத்தில், ஒரு கிரவுண்ட் 15 லட்சம் விலை). மும்பை நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதச் சொன்னார். அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து, உங்களிடம் இருந்து வாங்கும் மெழுகெண்ணெயின் கொள்முதல் விலை ரூ.18 என நிர்ணயிக்கப் படுகிறது.
இருக்கையில் இருந்து குதித்தே விட்டேன். “சார், ஸ்டாம்ப் பேப்பரில் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது”, என்று பதறினேன்.
ஒரு தமிழ் எழுத்தாளரின் இறுதிச் சடங்கு – (ஜெயகாந்தன் அஞ்சலி)
நள்ளிரவில் ஜே.கே வீட்டு வாசலில் நின்றபடியே பேசிக்கொண்டிருந்த என்னையும், ராமகிருஷ்ணனையும் பார்த்து ஜே.கேயின் இளையமகள் தீபா, ‘எவ்ளோ நேரம் ஸார் நின்னுக்கிட்டு இருப்பீங்க? இந்தாங்க, முதல்ல டீ சாப்பிடுங்க’ என்று நாற்காலிகளை எடுத்துப் போட்டார். நான் ‘தவறுகள் குற்றங்கள் அல்ல’ பற்றியும், ராமகிருஷ்ணன் ‘எங்கோ, எப்போதோ, யாருக்காகவோ’ பற்றியும் பேசிப் பேசி நள்ளிரவைக் கழித்தோம்.
அவளே தேர்வு செய்யட்டுமே
சுத்த உணர்வைத் தருவதற்காக இள மஞ்சள் நிறத்தில் இருக்கும் பருத்தியானது டயாக்ஸின் கொண்டு ப்ளீச் செய்யப்படுகிறது. நாப்கின்கள் நேரடியாக பொருத்தப்படுவதாலும் எல்லா நேரமும் ஈரத் தொடர்பில் இருப்பதாலும் அந்த கமிகல்கள் உடலினுள் புகக்கூடியதாகவே இருக்கிறது. இது புற்று நோயையும் இன்ன பிற கர்பப்பை தொடர்பான, தோல் தொடர்பான நோய்களை வரவேற்கிறது.