புத்திசாலியான முட்டாள்-I

கார்டனர் முன் வைக்கும் எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். ஐசக் நியூட்டன் விவிலிய அடிப்படைவாத சிருஷ்டியை உண்மையென நம்பி அதனைக் குறித்து சில நுணுக்கமான கணித ஆராய்ச்சிகளைச் செய்தது; ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்கிய சர் ஆர்தர் கோனன் டாயில் சில பதின்ம சிறுமிகள் எடுத்த புகைப்பட தேவதைகளை உண்மையென நம்பி அது குறித்து ஒரு நூலையே எழுதியது அத்துடன் பாபி ஃபிஷரின் தீவிர யூத வெறுப்பு.

கடவுளுடன் பன்னிரு நடனங்கள்

இது பல நாட்டு இசை வகைகளை நேர்மையாக அணுகுவதாலும், தேர்ந்த மேற்கத்திய இசைக்கோர்ப்பாலும் முக்கியமான இசைப்படைப்பாகிறது. ஒரு வட்டப்பாதையில் மீண்டும், மீண்டும் சுற்றிவரும் ட்யூனும், பின்னணி இசைக்கோர்வையும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வடிவமைப்பை வெகுவாக நினைவூட்டுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவைப் பின்னணியாகக் கொண்ட ’Bombay Valentine’ என்ற இசைக்கோர்வை அச்சு அசலாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு போலவே இருக்கிறது.

அது அவள் அவன்

தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து போகும் சண்முக அண்ணனைக் கண்டாலே ஜாக்கனுக்கு ஆகாது. அவன் வருவது தெரிந்தாலே ஜாக்கனை கட்டிப் போடுவோம். ஆனாலும் கடும் கோபத்துடன் இவனை குதறியே தீருவது என்று கட்டியிருக்கும் சங்கிலி கழுத்தை அறுக்க, பாய்ந்தப் பாய்ந்து குரைப்பான்.எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் சண்முக அண்ணன் ஒரு நாள் ஜாக்கன் ஒரு நாய் என்பதையும் மறந்து, ‘ஒன் வயசென்ன என் வயசென்னலே’ என்று தன்னிலை மறந்து கோபப்பட்டான்.

புரிந்து கொள் – 2

என்னை சிஐஏ மேன்மேலும் சோதனைகள் நடத்துவதற்குப் பயன்படுத்த விரும்பலாம், மற்ற நோயாளிகளையும் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து இப்படியே பயன்படுத்த விரும்பும். அதற்குப் பிறகு வெளியாட்களில் தானாக முன்வருபவ்ர்கள் சிலரை சிஐஏ பொறுக்கி எடுத்து, அவர்கள் மூளைகளுக்குப் பிராணவாயு கிட்டாமல் அடைத்து வைத்து சேதமாக்கி, பின் மீட்டு எடுக்க ஹார்மோன் கே சிகிச்சை அளிக்கும். எனக்கு சிஐஏ உடைய சொத்துப் போலாக விருப்பமில்லை.

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

வடுவூரார் ஒரு வினோதமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார். ஃபேரோக்கள் என்ற எகிப்திய மன்னர்கள் தமிழ் நாட்டில் இருந்து எகிப்து என்ற மிசிர தேசத்திற்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்பதை ஆதாரங்களுடன் நிறுவி, தி லாங் மிஸ்ஸிங் லிங்க் என்றொரு 900 பக்க ஆராய்ச்சி நூலை எழுதி அவரே பதிப்பித்து வெளியிட்டதாகவும், அந்த நூல் விலைபோகாதபடியால் தன் சென்னை வீட்டை விற்று விட்டு கிராமத்துக்கே திரும்பி விட்டதாகவும் க. நா. சு நினைவு கூறுகிறார்.

சென்னையில் அட(டை) மழை!

இருபது அடிக்கு ஒரு குடையை கவுத்துவைத்து அதில் குடை வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார்கள். “அறுபது, எழுபது” என்று விற்ற குடைவியாபாரிகள் எல்லோரும் சொட்ட சொட்ட நனைந்திருந்தர்கள். அந்த மழையிலும் “அதோ அந்த பச்சை கலர் கொடுங்க” என்று மக்கள் வாங்கிக்கொண்டிருதார்கள். குடை அன்று சென்னை மக்களின் கை, கால் மாதிரி ஒரு புதிய உறுப்பானது.

செவ்வாய் கிரகப் புகைப்படங்கள்

செவ்வாய் கிரகத்தை 2006 ஆம் வருடத்திலிருந்து சுற்றிவரும் Mars Reconnaissance Orbiter என்ற நாசா செயற்கைக்கோள், அதிலிருக்கும் HiRISE என்ற உயர்தொழில்நுட்பக் கேமரா வழியகப் பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியிருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் கோள்பரப்பை சற்று நெருக்கமாகக் காட்டும் புகைப்படங்களின் தொகுப்பை பாஸ்டன்.காம் வெளியிட்டது. அவற்றை இங்கே காணலாம்.

நிழல் நந்தி

எத்தனையோ அழகான காட்சிப்படிமங்களை நாம் வெகு சாதாரணமாகக் கடந்து சென்று விடுகிறோம். சிறப்பான பல கட்டடக்கலை சாதனைகள் நம்மில் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்துவதில்லை. தென்னிந்தியாவின் சில கோயில்களில், வருடத்தின் ஒரு சில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழுமாறு வடிவமைத்திருப்பார்கள். சூரியன் இறைவனை பூஜை செய்வதான ஐதீகம் மட்டுமே கவனத்தைக் கவருகிறதே தவிர, வானியல், கணிதம், கட்டடக்கலை சார்ந்த அந்த வடிவமைப்பின் அற்புதம் நம் மனதின் மேற்பரப்பைக் கூடத் தீண்டுவதில்லை. வற்றையெல்லாம் நம் கண்களால் கண்டறிந்து ரசிக்க முடிந்தால் அதுவே சிறந்த மன எழுச்சியைத் தரும். அதைப் புகைப்படமாக்குவதெல்லாம் ஒரு சாதாரண தொழில்நுட்பம் சார்ந்த பின்நிகழ்வுதான். ஒளியையும், கோணங்களையும் ரசிக்க முடியும் மனோபாவமே பிரதானம். அப்படி ஒரு கோணத்தை நாம் கண்டுகொள்ள முடியும்போது, சிற்பத்தின் புன்னகையை ரசிக்க முடியும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கலைஞர்களின் கலையுணர்வை நம்மால் தரிசிக்க முடிகிறது.

சாத்தியத்தை மீறிய சத்தியங்கள்

மனித ஜினோம் ப்ராஜெக்ட் ஆரம்பித்தபோது ‘இதனால் யூஜெனிக்ஸ் சாத்தியமாகும், நல்ல குடிமக்களைப் பிறப்பிக்க முடியும்’ என்றார்கள். பரம்பரை வியாதிகளைப் போக்குவதுடன், குற்றங்களைக் குறைத்து, சமுதாயத்தில் போக்கிரித்தனத்தை ஒழிக்க முடியும் என்று சொல்லப்பட்டது. 1989ல் ‘சயன்ஸ்’ பத்திரிகையின் தலையங்கத்திலேயே, ‘இனி மன நோய்கள் ஒழிந்துவிடும், ப்ளாட்பாரத்தில் படுத்துத் தூங்குபவர்கள் குறைந்துவிடுவார்கள்’ என்று சிவலிங்கத்தின் முன்னால் நின்ற மாணிக்கவாசகர் மாதிரி நெக்குருகினார்கள். நடந்ததா ?

மகரந்தம்

“மனுசன் குரங்கிலிருந்து வந்தான் அப்படீன்னா ஏன் குரங்கு இன்னும் மனுசனாக மாட்டேங்குது?” என்று அசட்டுத்தனமாக கேட்டுவிட்டு பெரிய அறிவாளியாக புளித்த ஏப்பம் விடும் படைப்புவாதிகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.

வேளாண்மை உயில்: ருஷியாவில் மண்ணுயிர் ஆய்வு

பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த ஸ்பேரயர் கொண்டு காடுகளில் ‘மருந்து’ அடிப்பதில்லை. காடுகளில் உள்ள விலங்குகளும் தாவரங்களுக்கும் நோய் வருவதுண்டு. ஆனால் மருத்துவ உதவியின்றி அவை குணமாகின்றன. விலங்குகளும் தாவரங்களும் பூச்சி பூசணங்களிலிருந்து தாமாகவே காப்பாற்றிக் கொள்கின்றனவே. எவ்வாறு? இழந்துவரும் மண்வளம் மீட்கப்படவேண்டும். நவீன விவசாயத்தில் மண்வளம் இழப்பது மட்டுமல்ல. மண்ணில் மக்குப் பொருள் இல்லாததால் மண்ணே அரிப்புகளுக்கு பலியாகிப் பாலையாகிவிடுகிறது.

வாசகர் எதிர்வினை

சொல்வனத்தில் டேவிட் ஷெப்பர்ட் பற்றின அஞ்சலி படித்தேன். அருமையான கட்டுரை. போலியான பாவனைகள் இல்லை என்பதே இக்கட்டுரையின் முக்கிய சிறப்பு. அடுத்து ஒரு புன்னகையுடனான மீள்பார்வையாக உள்ளது இதன் உத்தேசம். இழப்பைப் பற்றி பேசுகையில் சமநிலைக்கு இந்த நகைச்சுவை நல்லது. உங்கள் நினைவுகளிலிருந்து ஆரம்பித்து குறிப்பான புறவய தகவல்கள் தந்து அருமையாக ஒருங்கிணைத்துள்ளீர்கள்.

புதியதோர் உலகம்

முதல் வாரத்திலேயே ஒருநாள் அம்மாவிடம், “ஏம்மா நீங்களும் ஸ்கூல்ல படிக்கிறப்ப இப்டி தான் எப்பவும் புத்தகமும் கையுமா படிச்சிட்டே இருப்பீங்களா?”, என்று கேட்டேன். அம்மா இல்லையென்று சொன்னதை நம்பாதவனாக, “நிஜமாவா?”, என்றதும், “அடப் போடா, வீட்ல அஞ்சி பிள்ளைங்க. நாந்தான் மூத்தவ. அம்மா வேற எப்பயும் சீக்கு. கேக்கணுமா? அடுப்படியிலையோ இல்ல தம்பிதங்கச்சியப் பார்த்துக்குறதோன்னு,.. எப்பயும் வேலையிருக்கும். அதுக்கிடையில தான் நான் பள்ளிப்பாடத்தை எழுதவும் படிக்கவும் செஞ்சிக்கணும்.