வனத்திலே இராமனின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து ஓர் ஆத்மா பல காலமாகக் காத்துக் கொண்டிருக்கிறது. பெருமாளை நினைந்து நினைந்து மனமெல்லாம் அவரே ஆகி அளவில் காலமாக அது பரமாத்மாவை நினைத்துத் தவம் செய்து வருகிறது. அதுதான் ‘சவரி’ என்னும் பெருமகள். அவள் வேடர் குலத்தைச் சார்ந்தவள். இராமபிரான் வருவதற்குச் சில நாட்கள் முன்பு ஈசனும் நான்முகனும் தேவரும் வந்து…
Category: இதழ்-117
கிடாச் சண்டை
சுற்றியிருப்பவர்களின் வெறிகூச்சலயும் வசைச்சொல்லையும் புரிந்துகொண்டவைபோல அவைகள் ஒவ்வொரு முறை மோதும் போதும் போதிய இடைவெளி எடுத்துக்கொண்டு மூர்க்கமாக மோதிக்கொண்டன. சில வலிய ஆடுகளின் தாக்குதலை தாங்கமுடியாமல் பத்துக்கும் குறைவான முட்டலில் சில பின்வாங்கி கூட்டத்திற்குள் ஓடிவரத்துவங்கியது. சில சண்டைகள் நீண்டநேரம் நடந்தது. ஆனால் 50 முட்டல்கள் தான் ஒரு போட்டிக்கு அனுமதி
பந்தமின்றி பரம்பரையின்றி பெண் சி.யீ.ஓ.
என்டர்பிரைஸ் கார் நிறுவனம், முழுக்க முழுக்க தனியார் நிறுவனம். இது வரை குடும்பப் பொறுப்பில் மட்டுமே இயங்கிய நிறுவனம். தாத்தா, பையன், பேரன் என தலைமை பீடத்தில் உட்கார்த்தி வைக்கும் நிறுவனம். அந்த மாதிரி அமைப்பில் நிறுவனரின் குடும்பத்திற்கும் தனக்கும் ஸ்னான ப்ராப்தி கூட இல்லாத ஒருவர் எவ்வாறு முதன்மைப் பொறுப்பை அடைய முடிகிறது?
'அவள் அப்படித்தான்' இயக்குநர் ருத்ரையா
திரைப்பட இயக்குநர் ருத்ரையா (67) உடல்நலக்குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978-ஆம் ஆண்டு வெளிவந்த “அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கி திரையுலகில் நுழைந்தார் ருத்ரையா. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் இந்தப் “'அவள் அப்படித்தான்' இயக்குநர் ருத்ரையா”
கண்ணாடியின்றி படிக்கும் வழி
கண் பார்வைக்கோளாறை திருத்தக் கண்ணாடி அணிபவர்களுக்கு அசௌகரியம் உண்டு. தலையில் எப்பொழுதும் இடையூறாக இருப்பது ஒரு பக்கம். அதைத் தவிர்க்க கண் வில்லை (கான்டாக்ட் லென்ஸ்) போட்டால், தூங்குவதற்கு முன் கழற்றி வேறு வைக்கும் உபத்திரவமும் உண்டு. இந்த மாதிரி கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற பிரச்சினைகளை “கண்ணாடியின்றி படிக்கும் வழி”
உங்கள் கேள்விக்கு என்ன பதில் – 5
குப்பியில் அடைத்து திரவ வடிவில் விற்கப்படும் நுண்ணுயிரிகளின் ஆற்றல் கேள்விக்குரியவை. வர்த்தகரீதியில் ஏதோ ஒரு பிராண்ட் பெயரில், சக்தி, சமந்தா, சத்தியம், ஆச்சி, பேச்சி என்று விற்கப்படுகின்றன. உள்ளே இருக்கும் நுண்ணுயிரிகள் பற்றிய விபரம் இருக்காது. ரசாயன நுண்ணூட்டங்களான போரான், தாமிரம், துத்தநாகம் போன்றவை கலக்கப்பட்டிருக்கலாம். எந்தப் பயிருக்கு எந்த நுண்ணுயிரி தேவை என்ற விபரம் இல்லாமல் இருக்கும். பணம் உள்ளவர்கள் விளம்பரத்தை நம்பி வாங்கிச் செல்லலாம்.
மகரந்தம்
மீண்டும் ஒரு ஆண்டு முடியப்போகிறது. “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்; இப்பொழுது டிசம்பர் என்பது பட்டியல்களின் மாதம். இந்த ஆண்டின் முக்கியமான இருபத்தி ஐந்து தொழில்நுட்பத் தோன்றல்களை டைம் பத்திரிகை வரிசைப்படுத்துகிறது. செவ்வாய்க்கு ராக்கெட் விட்ட எவருமே முதல் தடவையே ஜெயித்ததாக சரித்திரம் கிடையாது. அமெரிக்காவால் முடியவில்லை. ருஷியாவும் தோற்றது. ஐரோப்பியர்களுடைய ஏவூர்தியும் செவ்வாய் கிரகத்தை கஜினி முகமது போல் சென்றடைந்தது. ஆனால், சீனாவிற்கு முன்பாகவே, எந்த ஒரு ஆசிய நாட்டிற்கும் முன்பே…
கம்போடிய அங்கோர் வாட்டில் இந்தியத் தொல்பொருள் ஆய்வகம்
1992 ம் வருடம் கம்போடிய நாட்டின் புகழ்பெற்ற புராதன கோவிலான அங்கோர் வாட்டில் பழுது பார்த்து சரி செய்யும் பணியை இந்திய தொல்லியல் ஆய்வகம் மேற்கொண்டிருந்தது. ஆனால் அந்த பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்று விமர்சனம் எழுந்தது. அதைப் பற்றி விசாரித்து எழுதும்படி ஒரு தினசரி என்னிடம் கேட்டிருந்தது.
வால்விழுங்கி நாகம்
எந்த இடத்தில் கருந்துளையில் நுழைகிறோமோ, ஐயாயிரம் வருடங்களுக்கு முன் அதே இடத்தில் இறங்குவோம். ஆகவே அது கடலாகவோ காடாகவோ இருந்துவிடாமல், மனித குடியிருப்புகளின் மிக அருகில் இருக்கும் இடமாக இருக்க வேண்டும். குஜராத்தில் லோத்தல் கிராமத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள். அந்தக் காலத்தில் கப்பல் போக்குவரத்துக்குப் பெயர் போன இடம், வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து போயிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கும் இடம். ஊருக்குள் கோபால் ஒரு வெளிநாட்டு வர்த்தகர் என்று சொல்லிக்கொண்டு நுழைவதாக ஏற்பாடு. அந்தக் காலத்தில் மதிப்பு நிறைந்ததாகக் கருதப்படும் செம்பு, தங்கம் போன்றவற்றைக் கொடுத்தனுப்புகிறார்கள். அதனுடன் ஒரே ஒரு துப்பாக்கி.
கருத்தடை தொழில்நுட்பமும், சந்தைகளும்
விந்து உயிரி வெளிவரும் வாஸ் டிஃபரென்ஸ் எனப்படும் குழாயை , தற்போது புழக்கத்தில் இருக்கும் அறுவை சிகிக்சை முறையில், சிறிய அளவில் வெட்டிவிடுகிறார்கள். இதனால் விந்துஉயிரி வெளியேறாத நிலையில் ஆணின் விந்துப் பையிலேயே அழிந்துவிடுகிறது. மீண்டும் கருத்தரிக்க வேண்டினால், அந்த ஆணின் விந்துக்குழாயை ஒட்ட வைக்க வேண்டும். இதில் சில மருத்துவ சிக்கல்களும், உளவியல் சிக்கல்களும் இருக்கின்றன.
வணிகவியல் சிந்தனைச்சோதனைகள்
இந்த நிகழ்ச்சியில் கடவுள் நம்பிக்கை உள்ள, தர்மநியாயத்தை கடைபிடிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான, படித்த, சமூகத்தில் நல்ல மதிப்புள்ள ஒரு பெண் என்றெல்லாம் தன்னை கூறிக்கொள்ளும் ஒரு போட்டியாளர், சற்றே பயமுறுத்தும் தோற்றத்துடன் காணப்படும் எதிராளியான ஒரு ஆணிடம், “என்னை பார்த்தாலே தெரியவில்லையா? கடவுள் மீதும், என் குழந்தைகள் மீதும் சாட்சியாக நான் “பிரி” பந்தைதான் எடுக்கப்போகிறேன். எனவே நீங்களும் “பிரி” பந்தையே தயவு செய்து தேர்ந்தெடுங்கள். நாம் பரிசுத்தொகையை பிரித்தெடுத்துக்கொண்டு…
விதியின் பிழை காண் – திரைக்கதை – பகுதி – 1
வருடம் கி.பி.500. தென் தமிழகத்தில் நூறு வருடங்களாக அமைதி நிலவுகிறது. மதுரையை ஆண்ட களப்பிரரும் திருநெல்வேலிப் பாண்டியரும் போரின்றி ஆட்சி செலுத்துகிறார்கள். இரண்டு நகரங்களுக்கும் நடு வழியில் தூங்கி வழிகிறது சாத்தூர் கிராமம்.கிராமத்தின் அருகே உள்ள காட்டில் வனதுர்க்கை கோவில். தன்னுடைய மனைவி மற்றும் ஒரு வயதுக் குழந்தையுடன் அங்கு படையலிட வர இருக்கிறான் பாண்டியன்…
நாஞ்சில் நாடன் கவிதைகள்
கல்லூரி போய் வர
பொடி நடையும் நகரப் பேருந்தும் –
வழித்தடம் 33
பதினெட்டு ஆண்டுகள்
பம்பாயில் மின் தொடர் வண்டி
மிஸ். குஷ்பு தக்காளி, ஜி.எம்.
நம் முன்னோர்கள் விளைநிலங்களில் மரபணு மாற்றம் செய்து தங்கள் விவசாய நிலங்களிலும் பயிர்களை உருவாக்கி இருக்கிறார்கள். பத்துப் பதினைந்து இல்லை. ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் இந்தியாவில் இருந்தன. தற்போது உலகம் முழுமையும் சில நூறு வகைகள் இருந்தாலே அதிகம். இந்தியாவில் அரிசி விதைகளுக்காகக் கூடும் சந்தை ஒன்றில், அடுத்த தலைமுறை விதையைத் தராத செடியைக்கூட நீங்கள் பார்க்கலாம்.
பார் மகளே பார்
அனுராதா முன்னும் பின்னும் கால் மாற்றி மாற்றித் தவித்தது. மாடா இருந்தா என்ன மனுஷியா இருந்தா என்ன வலி ஒண்ணுதான அம்மா பெருமூச்சு விடுகிறாள். நான்கு பிரசவங்களைக் கடந்த பெண்மையின் வலியன்றோ அது. நிலவு அரைவட்டமாய் தலைக்கு மேலே, குளிரில் மணலில் அமர்ந்திருக்கிறோம். அன்று பெத்லகேமில் உதித்த தச்சனின் மகன் வரவிற்காய் காத்திருந்த சீமோனைப் போன்று நம்வீட்டுக் கொட்டிலில் பிறக்கப்போகும் கன்றிற்காய் பார்த்திருக்கிறோம். அன்பு மகளே அனுராதா வலியில் கால் இடறி…
புனைவை முன்வைத்து
சமூக நாவல்கள் உயர்வாக மதிக்கப்படுவதால், தீவிர இலக்கியம் படைப்பவர்களில் பலர் எந்தக் கதை எழுதினாலும், அதில் திடீரென்று சமகால வாசகனுக்குத் தெரிந்திருக்கும் சமூக யதார்த்தத்தைப் போட்டுப் பார்த்து, அதற்குரிய தீர்வுகள் அளிக்கத் துவக்கி விடுகிறார்கள். இதைச் செய்வது முழுக்க முழுக்க தவறென்றும் சொல்ல முடியாது- அவனுக்கு இருக்கும் வரலாற்று கட்டாயங்கள் போக, வகைமைகளின் எல்லைகளை மீறுவதில் எழுத்தாளனுக்கு ஒரு சுவாரசியம் இருக்கிறது: ஃபீல்டிங் தன் கதைகளில் குறுக்கே பேசத் துவங்கிவிடுகிறார் என்பது நாவலாசிரியனின் வரலாற்றுக் கட்டாயம் – கதை, கட்டுரை, கேளிக்கை, அறிவுறுத்தல் என்ற தொகைகளைப் புனைவு கடக்கிறது என்பது எழுத்தாளனின் சுவாரசியம்.
ஆண், பெண் மற்றும் மூன்றாம் இனம்?
இரவு வரை வெளி வேலை செய்ய முடியாமல் போதல் என்பது அவளது ’முடியாமல் போதல்’ அல்ல. அதாவது அது அவளது disability அல்ல. குரங்கு மரம் தாவும் அது நம்மால் முடியாது என்பது போன்றது அல்ல. தாவ மரமே இல்லை அதனால் முடியாது என்பது போன்ற சூழல் சார்ந்த ஒன்று. அல்லவா? அப்படியிருக்க முடியாமல் போகும்படியான சூழலை யார் தந்தார்கள்? பிள்ளைப் பேற்றுக்கான விடுமுறை எனில் அது அவள் பிள்ளை மட்டுமல்ல சமூகத்தின் எதிர்காலம்..இதைப்பற்றி ஒவ்வொரு உற்பத்தியாளரும் கவனித்துக் கொண்டிருக்க இயலாது எனில் அரசுதான் கவனிக்க வேண்டும். அந்த அரசும் அதைச் செய்யாத போது..பெண் இந்த முடிவை நோக்கித் தள்ளப் படுகிறாளோ?
பாடுதும் காண் அம்மானை!
அடுத்த பெண் இதற்கான மறுமொழியைத் தயாராக வைத்திருக்க வேண்டும்!! அவளும் சளைக்காமல் உடனே, “அழகான வில்லும் யானைத்தோல் போர்வையும் உடல் மாதின் அங்கமும் ஆனாலும், அடியே! ஆராய்ந்து பார்த்தால் அவர் எடுப்பது பிச்சை அல்லவோ, அம்மானை,” என்று ஏளனமாகக் கேட்டபடி அம்மானையை வீசுகிறாள்.