காகசஸ் மலைக் கைதி – 6

ஒருநாள் அவன் அந்தக் குழியின் தரையில் அமர்ந்து கொண்டு, விடுதலை பற்றி யோசித்த வண்ணம் மிகவும் மனந்தளர்ந்து இருந்தான்; அப்போது திடீரென்று அவன் மடியில் ஒரு கேக் விழுந்தது, பின் இன்னுமொன்று, பின் ஏராளமான செர்ரிப் பழங்கள் என விழுந்தன. அவன் மேலே அண்ணாந்து பார்த்த போது அங்கு டீனாவைக் கண்டான். அவள் அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு ஓடி விட்டாள். உடனே ஜீலின் சிந்திக்கலானான், ‘டீனாவால் எனக்கு உதவ முடியாதா?’

ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது: நூல் அறிமுகம்

இந்தநூற்றாண்டின் முற்பகுதியில் நகர நாகரிகத்தின் நிழல்படாத- நதியை ஒட்டிய – சிதம்பரம் அருகே சிறிய கிராமம் ஒன்றில்பள்ளி ஆசிரியராக சாமிநாதசர்மா ‘ஐயா’ என்ற பாத்திரத்தில் ஜீவிக்கும் நாவல் ‘ஒருநதி ஓடிக்கொண்டிருக்கிறது’. ஒரு period film பார்ப்பதுபோல்இருக்கிறது இந்த 264 பக்கநாவல். இதை எழுதிய திரு.வே.சபாநாயகம் தான் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல – தன் ஆசிரியர் சாமிநாத அய்யரை மையப்படுத்தி இதை எழுதி இதை அவருக்கே சமர்ப்பணம் செய்திருப்பது இதன் விசேஷம்.

ஆக்னெஸ் மார்டின்: மினிமலிஸம்

சமீபத்தில் இவருக்கான கூகுள் டூடுல் மூலமாகத்தான் பலர் அறிந்திருப்போம். ஆக்னெஸ் மார்டினின் இந்த நேர்காணலில், இவர் ஓவியங்களை உருவாக்குவதைப் பற்றிச் சொல்வதைக் கவிதைகளுடனும் பொருத்தி பார்க்கலாம்.

பருவ மழை

மெடிராலஜி டிபார்ட்மென்டில் சேர்ந்து இரண்டு வருடம் ஆயிற்று. இது வரை ஒரு குட்டி உப மந்திரி கூட அழைத்ததில்லை. எப்பொழுதாவது யாராவது அன்டர் செக்ரடரியிடமிருந்து, பார்லிமென்டில் கேள்வி வந்தால் பைல் வரும். பிரதமருக்கு வானிலை பற்றி என்ன தெரிய வேண்டும் ? இன்னும் ரிடையர் ஆக ஒன்றேகால் வருடம் இருக்கிறதே, அதற்குள் எக்ஸ்டென்ஷன் எல்லாம் பற்றி யோசிக்க ஆரம்பித்திருப்பார்களோ என்று குறுகுறுத்தது. கூடவே தான் ஒன்றும் எக்ஸ்டென்ஷன் வாங்கும் அளவு யாருடனும் நெருக்கம் இல்லை என்று உரைத்தது.

தாவர நூல்கள்

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மரம் நிச்சயமாக இருக்கும். சிலருக்கு ஓரிரு மரங்கள் இருக்கலாம், சிலருக்கு பல மரங்கள் இருக்கலாம்.  அந்த சிலர் எழுத்தாளர்களாக இருந்தால் அவர்கள் தமது வாழ்வில் கண்டு வியந்த, தமது வாழ்வில் ஒன்றிப்போன மரங்களைப் பற்றி எழுதாமல் இருக்கவே மாட்டார்கள். நாஞ்சில் நாடனின் ஆலமரமும், மதுமிதாவின் மனோரஞ்சிதமும் அதற்கு சில எடுத்துக்காட்டு. இவர்களைப் போல பல படைப்பாளிகளின் நினைவில் இருக்கும் மரங்களைப் பற்றி அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

நொண்டி யானை

அதனை கட்டிக்கொள்ள ஆசையாய் இருந்த எனது குட்டிக் கைகளை அகல விரித்து முன்னோக்கி படுத்தேன்…யானையுடைய தலையின் மேற்பகுதி இரு பாறைகள் இணைந்த குன்று போலவும் அதன் மீது ஆங்காங்கே செங்குத்தாக நின்றிருந்த ரோமங்கள் இலைகள் அற்ற மொட்டை மரங்கள் போலவும் தெரிந்தது. இன்றும், கோடை காலத்தில் மலைப்பிரதேசங்களை கடக்கையில், காய்ந்து கிடக்கும் மலைச்சரிவுகளில் இலைகள் முற்றிலும் உதிர்த்த மரங்களைப் பார்க்கும் பொழுது நொண்டி யானை நினைவில் நின்று தலையை ஆட்டி விட்டுப் போகும்.

பாசாவின் உறுபங்கம் – ஒரு பார்வை

வட மொழி இலக்கிய உலகில் நாடகம் என்ற சொல்லைக் கேட்ட அளவில் நினைவில் நிற்கும் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப் பட்டு அறிமுகம் செய்யப் பட்டன.பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளி தாசனுக்கு முற்பட்டவர் என்பதில் இரண்டாவது கருத்து கிடையாது. மாளவிகாகினிமித்திரத்தில் “பாசா ,கவிபுத்ரா போன்ற மிகச் சிறந்தவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா“ என்று காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு இதை உறுதி செய்கிறது. காளிதாசன் தன் படைப்புகளில் பாசாவின் உத்திகளைப் பயன்படுத்தி இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

புடலங்காய்

புடலங்காய் விலை இரண்டு ரூபாய் அதிகரித்த செய்தியைக் கேட்ட நொடியிலிருந்து கணேசனுக்கு சந்தோசத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. உற்சாக மிகுதியால் தனக்குத்தானே சிரித்தும் கொண்டான். முதலாம் ஆண்டு கல்லூரிக்கு தேர்வுக் கட்டணம் கட்ட கடைசித் தேதி தீர்மானமாகி இருந்தது. மனதுக்குள்ளே கணக்கு போட்டுக்கொண்டான். கிணத்துப் பக்கத்துல இருக்கிற சின்ன குண்டுல ஒரு மூட்டை, காக்கேயன் வரப்புக்கு அடுத்தாப்புல இருக்கிற குண்டுல எப்படியும் ஒரு மூட்டை தேத்திடலாம். இரண்டு மூட்டை 80கிலோ வரும். கிலோவுக்கு 10ரூவாயிலருந்து 12ரூவா ஆயிருக்குனு சொன்னானுவ. எப்படியும் பீஸ் கட்ட ஆயிரம் ரூவா சேந்திரும். .

புத்தகங்களும் புனிதங்களும் – ரே பிராட்பரியின் ஃபாரன்ஹீட் 451

புத்தகங்களில் உள்ள விஷயங்களைக் கண்டு நாம் கொதிப்படைகிறோம் என்பது, அதில் உள்ள விஷயங்களின் நம்பகத்தன்மைக்கும் அப்பால், புத்தக வடிவில் வரும் காரணத்தால் மட்டுமே அதன் உள்ளடக்கத்துக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்துவிடுகிறது என்பதை நாம் அறிந்திருப்பதை உணர்த்துகிறது. பொய்களை எவரும் புறக்கணித்துவிட முடியும். ஆனால், அவை உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியம் இருக்கும்போதுதான் அந்தப் பொய்கள் ஏற்றுக்கொள்ளக் கடினமாகவும், உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் இருக்கின்றன.

அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான்

சில நாட்களுக்கு முன்பு ஒரு சிவில் வழக்கில் சான்றாயராக (Juror) பணியாற்ற மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. கொலை போன்ற கடுமையான குற்றம் சுமத்தப்பட்ட கிரிமினல் குற்றவாளிகளுக்கு தங்களைப்போன்ற குடிமக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சான்றாயர் குழு (Jury) முன்பு தாங்கள் நிரபராதி என்று வாதிடும் உரிமை பல நாடுகளில் இன்றும் வழங்கப்பட்டாலும், அந்த உரிமை எந்த மாதிரி குற்றங்களுக்கு பொருந்தும், ஜூரி வழங்கும் தீர்ப்பின் முடிவு எவ்வளவு இறுதியானது என்பது போன்ற விஷயங்களில் நாட்டுக்கு நாடு எக்கச்சக்க வேறுபாடுகள் உண்டு.

ஆசான்களின் ஆசான்

அதற்குப் பிறகு ஜே.கேயை சந்திப்பதற்கு ஜே.கே.யை தன் மானசீக குருவாக ஆராதிக்கிற எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் அவர்களுடன் பலமுறை சென்றிருக்கிறேன். அந்த சமயங்களில் சிவமூலிகையை, தன்னுடைய பழக்க, வழக்கங்கள் பற்றிய ஒளிவுமறைவில்லாத ஜே.கே  விட்டொழித்திருந்தார். வ.ஸ்ரீநிவாசனுக்கும், ஜெயகாந்தனுக்கும் ஏற்கனவே நல்ல அறிமுகமும், தொடர்பும் இருந்த காரணத்தினால் அவருடன் போகும் போதெல்லாம் மெல்ல மெல்ல ஜே.கே.யுடன் நெருக்கமாகப் பேச முடிந்தது. ஒன்றிரண்டு சந்திப்புகளில் ஜே.கேக்கு என்னைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. சில நேரங்களில் எங்களுடன் நண்பர் கே.பி.விநோத்தும் வருவார். அந்த சமயத்தில் ஜெயகாந்தனின் எழுத்துகளைப் படித்திராத விநோத்துடன் ஜே.கே பிரியமாகப் பேசுவார். ஒருநாள் அப்படி பேசிக்கொண்டிருக்கையில் விநோத், ஜே.கேயிடம் சொன்னார்.

பசுக்காவலரின் காணி நிலத் திட்டம்

முதியோர்களுக்கு இல்லம் உள்ளதுபோல் இந்த வாயில்லா ஜீவன்களுக்கும் ஆங்காங்கே கோசாலைகள் நிர்மாணிக்கும் யோசனையுடன் சுய ஓய்வுத் திட்ட அடிப்படையில் ரிசர்வு வங்கி வேலையை உதறித்தள்ளிவிட்டு தான் மொத்தமாகப் பெற்ற தொகையைக் கொண்டு கோவர்த்தன் அறக்கட்டளை நிறுவி, கால்நடை நலவாழ்வு குழுமத்தின் அங்கீகாரம் பெற்று கோவில்களில் ஏலம் விடப்பட்ட மாடுகளையும் காவலர்களால் மீட்கப்பட்ட மாடுகளையும் பராமரிக்கத் தொடங்கினார் நடேசன்.

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் என்ற ஸாக்ஸிஃப்ரேஜ் மலர்

இந்த நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் ஆங்கில மொழியின் இலக்கியங்களில் நிகழ்ந்த ஒரு மாற்றம் கவிதையையும் உரை நடையையும், சொற்றொடர் இலக்கணத்தையும் நுண்மையையும் (sensibility), கவிதையியலையும் கற்பனையையும் ஒருங்கே பாதித்தது. ஐரோப்பா மற்றும் லதீன் அமெரிக்கா பகுதிகளில் அதே சமயம் நிகழ்ந்த மாற்றங்களை ஒத்த இம்மாற்றம் முதன்முதலில் ஒரு சில, அனேகமாக அமெரிக்க, கவிஞர்களாலேயே உருவாக்கப் பட்டது. இந்த ஆரம்ப கர்த்தாக்களிலான குழுவில் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் ஒரு தனித்துவமிக்க மைய இடத்தை வகிக்கிறார் : பவுண்டையும் எலியட்டையும் போல வேரோடு லண்டனிற்கோ பாரிஸிற்கோ புலம் பெயராமல், நியூயார்க்கிற்கு புறத்தேயுள்ள சிறு நகரமொன்றில் தன்னை ஆழ்த்திக் கொள்வதையே அவர் விரும்பினார்…

மகரந்தம்

இவர்கள் பண்டைப் பண்பாடுகளையும், மரபுகளையும் இழித்துரைக்காத நாளே இல்லை என்பதுதான் அபத்த நாடகங்களின் உச்சம். அதுவும் இடது, முற்போக்கு என்ற முகமூடியை அணிந்து கொண்டு இவர்கள் ஆடும் அபத்த நாடகங்களில் பற்பலவும் வெறும் கேலிக் கூத்துகள். இங்கே ஒரு கேலிக்கூத்தை மேற்கின் ‘விளையாட்டு’ அமைப்புகள் ஆடியிருப்பதை ஒரு பெண் அம்பலப்படுத்துகிறார். விளையாட்டு என்ற சொல்லையே அபத்தமாக்கி இருப்பன பல நாட்டு ‘விளையாட்டு’ச் சீரமைப்பு நிறுவனங்கள். அவை கொணரும் சீர் என்ன வகைத்தது என்றால், பற்பல பெண்களின் உடல்களைச் சித்திரவதைக்குள்ளாக்கி, அவமதிப்பதுதான் என்று இவர் வாதிடுகிறார்.

தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி – 2

கணிணிகள் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் பொழுது தகவல் பரிவர்தனை சின்னச்சின்ன தகவல் பொட்டலங்களை (Packets) பரிமாறிக்கொள்வதன் மூலமே நிகழ்கிறது. இப்படி பரிமாறிக்கொள்ளப்படும் ஒவ்வொரு பொட்டலத்திலும் இருக்கும் தகவல் மிகவும் குறைவானதுதான். ஒரு பொட்டலத்தில் சாதாரணமாக ஒரு ஆயிரம் எழுத்துகள்தான் இருக்கும். 64 எழுத்துகள் மட்டுமே கொள்ளும் மிகச்சிறிய பொட்டலங்களில் இருந்து 64,000 எழுத்துகள் வரை கொள்ளும் ஜம்போ பொட்டலங்கள் வரை இணையத்தில் உலவுவது உண்டு என்றாலும், முக்கால்வாசி பொட்டலங்கள் ஆயிரம், ஆயிரத்து ஐநூறு எழுத்துகள் கொள்ளும் சைஸில்தான் இருக்கின்றன.

மொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஆட்ரியன் ரிச், மேன்கா ஷிவ்தஸானி

தவறவிட்டிருக்கக்கூடிய இச்சுவைப்பின் சுகிப்பை
நான் கூட கவனிக்கிறேன்
உன் தயவால்..
……
நமது மூர்க்க கவனமே
கெட்டித்த பெருமூளை மொத்தைகளிலிருந்து
ஆகாயத் தாமரைகளை அவிழ்க்கிறது:
ஈரம் சொட்டும் மொட்டுக்களாய்
தண்டின் நீட்டம் நெடுக .