அக்ரகாரத்தில் பூனை

தங்கசாலைத் தெருவில் ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்குப் பின்புறம் தெப்பக்குளத்தைச் சுற்றி ஏகாம்பரேஸ்வர் அக்ரஹாரம் ‘ப’ வடிவில் இருந்தது. பொதுவாக ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகளே நுழைவதில்லை. அக்ரஹாரவாசிகளும் பூனைகளை அவ்வப்போது தங்கசாலைத் தெருவிலோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ அல்லது…

திசை

அம்மன்புரத்தில் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து மிதிக்கத் தொடங்கினோம். எனக்கு லேசாக தலை சுற்றியது. அதற்குப் பிறகு சைக்கிள்தான் எங்களைக் கூட்டிக் கொண்டு போனது. அடுத்த ஊரான திருச்செந்தூர் வர ரொம்ப நாளானது. ஒருமாதிரியாக செந்திலாண்டவன் சன்னிதியை அடைந்தோம். சட்டையைக் கிழற்றிவிட்டு சன்னிதானம் முன் நின்றோம். எனக்கு இரண்டு முருகர்கள் தெரிந்தனர். ஷண்முகர் சன்னிதியில் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனை தரிசிக்கப் போன போது அங்கு அவர்கள் ஒரு கூட்டமாக ஒரு பெரிய கூட்டுக்குடும்பமாகக் காட்சியளித்தனர். கோயிலை விட்டு வெளியே வந்து கடற்கரையில் விழுந்தோம்.

வன்முறையின் வித்து – ஓர் உரையாடல் – பகுதி 1

ஸ்டாலினின் இளமைக்காலம் குறித்தான Young Stalin எனும் புத்தகத்தை எழுதத் துவங்கியபோது, புத்தகத்தில் அவர் செய்த எந்த வித கொலைக்குற்றத்தையும் பதிவு செய்ய நேராது என்றே நினைத்தேன். ஆனால், தனது 22 வயதிலேயே, தனக்கு துரோகம் புரிந்ததாகக் கருதியோரை எல்லாம் அவர் “அகற்றினார்”.

அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் – பகுதி 1

பூமிப்பந்து சூடடைவது என்பது ஏதோ 20-30 வருட காலக்கணக்கில் முடிவு செய்யக்கூடியது அல்ல. ஏனெனில் பூமியின் வயது பல பில்லியன் வருடங்கள். பூமிப்பந்து எரிகுழம்பு வழிந்தோடும் பரப்பாக இருந்திருக்கிறது. பனியுகத்தில் பனிப்பாளங்களால் நிரப்பப்பட்டு இருந்திருக்கிறது. பிறகு மீண்டும் சூடாகியிருக்கிறது. பனிப்பாளமாய் இன்று இருக்கும் ஐஸ்லாந்தில் ஒருகாலத்தில் வைக்கிங்குகள் விவசாயம் செய்திருக்கிறார்கள்.

மகரந்தம்

சில ஆங்கில வலைத்தளங்களின் முக்கியமான, சுவாரசியமான, பல்துறை சார்ந்த படைப்புகளின் தொகுப்பு இப்பகுதி. இந்த இதழில் இடம்பெறும் பகுதிகள்: லெபனான் தேர்தல், அணு ஆயுதங்களின் வரலாறு, கிழக்குஜெர்மனி குறித்த ரகசிய ஆவணப்படம், கண்ணீரின் தேவை என்ன? கூகுள் Vs மைக்ரோசாஃப்ட் தொடரும் யுத்தம்.

அறிவியல் கல்விக்கான சமுதாயத்தேவை

பிராந்திய இயற்கை வளங்களையும் அதனுடன் தன் வாழ்வு பின்னிப்பிணைந்து கிடப்பதையும் சிறிதும் உணராமல் நம் மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளிவந்து பட்டமும் பெற்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு அறிவியல் என்பது முற்றிலும் மேற்கத்திய விஷயம்; வெள்ளைக் கோட்டுடன் வெள்ளைத் தோலுடன் இணைந்த ஒரு பண்பாட்டு அன்னியம்.

இந்திய இசையின் மார்க்கதரிசிகள்

ஒரு இசைக்கலைஞர் இசைப் பாரம்பரியமே இல்லாத ஒரு குடும்பத்தில் பிறக்கும் முதல் தலைமுறை இசைக்கலைஞராக இருக்கலாம். அப்படிப்பட்டவர் சிறு வயதிலேயே மேதையாக விளங்கி, ஒரு புதிய இசைக்கருவியிலோ அல்லது இசை வடிவத்திலோ சிறந்து விளங்கவும் நேரிட்டால், அந்த இசைக்கலைஞரில் நாம் இசையுலகின் ஒரு மார்க்கதரிசியைக் காண்கிறோம். இப்படிப்பட்ட மூன்று மார்க்கதரிசிகளால் நம் இசைக்கு மாண்டலின், சாக்ஸஃபோன், ஸ்லைட் கிடார் என்ற மூன்று புதிய இசைக்கருவிகள் கிடைத்திருக்கின்றன.

ஒலிக்காத குரல்கள்

கோபிகிருஷ்ணனின் இந்த நூலை வாசிக்கும் எவர் ஒருவரும் நிச்சயம் ஒரு கட்டத்தில் நாமும் மனநோயாளிதானோ என்று யோசித்தே தீரவேண்டும் என்று நினைக்கிறேன். மிகச்சாதாரண விஷயங்கள் முதல், அதிர வைக்கும் விஷயங்கள் வரை இந்நூலில் மனநோயாக நடமாடுகின்றன.

திலீப்குமாரின் இலக்கிய உலகம்

தனது வாழ்வில் நிகழ்ந்த பலவிதமான அனுபவங்களையும் மிக நுட்பமான நகைச்சுவை உணர்வுடன் தீலீப்குமார் சித்தரிக்கும் பொழுது நம் மனதில் அந்தச் சிறுகதைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவரது ஒவ்வொரு சிறுகதையும் மனிதாபிமானத்தையும் சிக்கலான மனித உறவுகளையும் தொட்டுச் செல்பவை.