நிலவை நோக்கி – கனவுப்பயணம்

படக்கதை நூலுக்கு ஒரு தனி மொழி அமைந்துள்ளதை இந்த நூலில் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. சாதாரண கார்டூன் போல வரும் பல கிரஃபிக் நாவல்களுக்கு மத்தியில் பல கோணங்களை ஒன்றாகத் தொடர்புறுத்தும் இது போன்ற நூல்கள் திரைப்படம், கதைபுத்தகம் போன்றவற்றைத் தாண்டி மற்றொரு பரிணாமத்தை அளிக்கிறது.

கில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்

‘இந்து’ பத்திரிகையைத் தவிர, 1969 -ல் மிக முக்கியமான ஒரு செய்தி அறிந்து கொள்ளும் முறை, அகில இந்திய ரேடியோவில், காலை 7:15 மணிக்கு, “செய்திகள் வாசிப்பது விஜயம்” , என்று தொடங்கும் தமிழ் செய்தி நிகழ்ச்சி. முதல் ஐந்து நிமிடங்கள் அரசியல் செய்திகள் என்னைக் கவராது. பிறகு, அப்போலோ 11 ராக்கெட் நிலவரம் என்ன என்பதை சரியாக பாத்திரச் சத்தங்களை மீறிக் கேட்க, என்னுடைய காதை ரேடியோவுடன் ஒட்டிக் கொள்வதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தேன்.

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- நான்காவது விதி

பாராட்டுவோர் அனைவருமே ஐந்து அல்லது பத்து வினாடிகளுக்கு மேல் போவதில்லை; பாராட்டுதல்களும் உதிரியான ஒற்றைச் சொற்கள் மட்டுமே. “சூப்பர், அருமை, சிறப்பு, கெத்து கலக்கல், செமை” என்பன போன்ற வார்த்தைகளும், “Great, Superb, fantastic, wow, mind boggling, awesome” என்பன போன்ற வார்த்தைகளும்தான் மீள மீள பயன்படுத்தப்பட்டன…
அதாவது வியப்பொலிச் சொற்களை சொல்வதையே பெரும்பாலும் நாம் பாராட்டாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்…

வெளி மூச்சு

This entry is part 1 of 2 in the series வெளி மூச்சு

சாவு நேரும் வகையான விபத்துகளில், மண்டை ஓடு உடைந்தால், மூளை தங்கத்தால் ஆன மேகம் போல சீறிப் பாய்கிறது என்பதும், சின்னாபின்னமான சரடுகளையும், தகட்டையும் தவிர பயனுள்ள எதுவும் கிட்டுவதில்லை என்பதும் சராசரி நிகழ்வு. பல பத்தாண்டுகளாக, ஒரு நபரின் அனைத்து அனுபவங்களும் தங்கத் தகடுகளில் பொறிக்கப்படுகின்றன என்ற கருத்துதான் நினைவு சக்தியைப் பற்றிய கோட்பாடாக இருந்தது; விபத்துகளுக்குப் பிறகு காணப்பட்ட துகள்களுக்கு, வெடிப்பால் கிழிக்கப்பட்ட இந்தத் தகடுகளே காரணம். உடற்கூறியலாளர்கள் இந்தத் தங்கத் தகடுகளின் சிறு துகள்களைச் சேகரிப்பார்கள்- அவை அத்தனை மெலிதாக இருப்பதால் ஒளி அவற்றூடே கடந்து போகையில் பச்சையாகத் தெரியும்- பிறகு பல வருடங்கள் செலவழித்து அவற்றைத் திரும்ப இணைக்க முயல்வார்கள்,

நானென்பதும் நீயென்பதும் அதுவென்பதும்

வளர வளர குழந்தைகள் தன்னியல்பில் கற்றுக்கொள்வதை இந்தக்குழந்தைகளுக்கு படிப்படியாக கற்பிக்க வேண்டியதை இந்தநூல் சொல்கிறது.முதலில் குழந்தையை மனதால் பின்தொடர்ந்து புரிந்து கொள்வதன் அவசியத்தையும்,அவர்களை மனதாற ஏற்றுக்கொள்வதன் அவசியத்தையும் சொல்கிறார்.இவை இரண்டும் சரியாக நடந்துவிட்டால் அடிப்படையான சிக்கல் முடிவிற்கு வந்துவிடும்.

இருவேறு உலகங்கள்

This entry is part 2 of 17 in the series 20xx கதைகள்

இரண்டில் எது நிஜம்? ரசியின் உலகில் கட்டடங்கள் கட்ட, கட்டிய அமைப்புகளை சுத்தமாக வைக்க, அவற்றில் குடியிருக்கும் மனிதர்களுக்கு காப்பி சிற்றுண்டி தயாரிக்க, அவர்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்ள, பயணவிடுதிகளில் படுக்கை உறைகளை மாற்ற காப்ரியெல் உலகத்தினர் அவசியம். திருப்பி அவர்களுக்கு ரசி உலகத்தினர் என்ன செய்கிறார்கள்? கையகல அலைபேசியின் திரையில் இருந்து பிருமாண்டமான வெள்ளித்திரை வரை மாய உலகை சிருஷ்டித்து மனமகிழ்வு தருகிறார்கள். அவ்வளவுதான்.

எட்டு மாடிகள் கொண்ட பொம்மைக் கதை

ஒரு பொம்மையாக அந்தாரா உருமாறி வருவதை அந்தத் துணிக்கடையில் பணிபுரிந்த அத்தனை பேரும் உணரத் தொடங்கிய பிறகான நாளொன்றின் நண்பகலில், ஆறு மாதத்தயக்கத்திற்குப் பிறகு அவள் தனது காதலை வெளிப்படுத்தியபோது, மிஸ்டர் ஜீன் எனும் அந்தக் காட்சியாக்க ஆண் பொம்மை எப்போதும்போல் அசையாமல் காலில் முட்டுக் கொடுத்து,முகத்தைக் கைகளில் தாங்கி உட்கார்ந்திருந்தது..

மாமாங் டாய்- மூன்று கவிதைகள்

நினைவில் நீங்காது எப்போதும்
கல்லிலும் புல்லிலும் குழந்தைகளின் துயிலிலும்
தெய்வங்கள் உய்த்திருப்பார்களென ஏன் நினைத்தோம்;
இப்போதோ, கண்மூடி
நம்பிக்கை துறக்கையில், தெய்வங்கள் மரிக்கின்றன.

கவிதைகள்

பாதங்களைத் தவிர வீட்டுடன் அதிகமாகப் பேச
வேறு யார் இருக்கிறார்கள்.
வெகுநாளைக்குப் பிறகு
தூசியைத் துடைக்க வருகிறவன்
கதவுகளைத் திறக்கும் போது
பாதங்களை மட்டுமே பார்க்கிறது வீடு.

மகரந்தம்

மூளை முணுமுணுப்பின் மொழி பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவியல் பாய்ச்சலுக்கு இணையாக அண்மைக்காலங்களில் ஒன்றிருந்தால் அது நரம்பியல் துறையில் ஏற்படும் வளர்ச்சியைத்தான் சுட்டிக்காட்டமுடியும். மூளை மற்றும் நரம்பு தொடர்புகொள்ளும் மின் தொடர்பு செய்தி பரிமாற்றத்தைப் புரிந்துகொள்ள பல ஆய்வுகள் நடக்கின்றன. நம் உறுப்புகளுக்கு மூளைக்கும் இருக்கும் இணைப்பை நாம் முழுவதாகப் “மகரந்தம்”

அந்தர அறை

“ ஏதாச்சும் ஒரு பேரை எழுதுங்க…சார்.. அப்புறம் அட்ரஸ் முக்கியம்.. எந்த ஒரு கமா, புள்ளி கூட உண்மையா இருக்கக்கூடாது.. நீங்க வடக்கேயிருந்து வந்திருந்தா.. தெக்கே இருக்கிற ஒரு ஊர் அட்ரஸை எழுதுங்க.. தெக்கே இருந்து வந்திருந்தா வடக்கே உள்ள ஏதாச்சும் ஒரு ஊரை எழுதுங்க.. முக்கியமா நீங்க எழுதுற ஊரில் உங்க பிரண்ட்ஸ், சொந்தக்காரங்க.. யாரும் இருக்கக்கூடாது… அது ரொம்ப முக்கியம்..”