எச்.எம்.வி நிறுவனமே ஆச்சரியம் அடையும் வண்ணம் பிளேட்டுகள் விற்றுத்தீர்ந்தன. முதல் பாடலின் அடைமொழியோடு “எவரிமாடஎம்.எஸ்.” பெயரில் மேலும் சில இசைத்தட்டுகள் வெளி வருகின்றன. தமிழகத்தின் பல நகரங்களில் கச்சேரிக்கு அழைக்கப்படுகிறார். இந்த தனிக் கச்சேரிகள் “கிராமபோன்பிளேட்புகழ்”, எம்.எஸ் சுப்புலட்சுமியின் கச்சேரி என்றும் அறிவிக்கப்பட்டன. 2004ல்தான் அன்னையின் பெயரையும் தந்தையின் பெயரைப்போல முன்னெழுத்தாகப் போட்டுக்கொள்ளலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது
Category: இதழ்-303
மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
ஜெரஸூப்பாவில் மகாராணி மற்றும் ராஜ குடும்பம் தங்கறது அபூர்வம். மிர்ஜான் கோட்டையில் தான் அவங்க நிரந்தரமான இருப்பு. பிரதானி, அதிகாரிகளும் இங்கே வீடு வச்சிருக்காங்க. ஆனால், ஹொன்னவர்லே இருக்கறதுதான் அதிகம். இன்னொண்ணு மகாராணி மிர்ஜான் கோட்டையில் இருக்கறதால், ஹொன்னாவர்லே இருந்து அது கூப்பிடு தூரம் என்கிறதால் ராணியம்மா அவசரமாகக் கூப்பிட்டு விட்டா உடனே வந்துடலாம். ஆக ஜெர்ஸோப்பாவிலே ஒரு கட்டாயத்தின் பேர்லே பலரும் இருப்பாங்க.
பூனை சொன்ன ரகசியங்கள்
வகுப்பறைக்குள் செம்மண் நிற சேலையணிந்த ஒரு ஆசிரியை நுழைந்தாள். அவள் தலைக்கு மேலே பல வண்ணங்களில், பல வடிவங்களில் பலூன்கள். பலூன்களோடு பிணைக்கப்பட்ட கயிறுகளை கொத்தாகத் தன் கையில் பிடித்திருந்த ஆசிரியை வகுப்பறையின் நடுவே நின்றாள். குழந்தைகளைப் பார்த்து சிரித்துவிட்டு வித்தை காட்டுவதுபோல கையை விரித்து ஊதினாள். கயிறுகள் விடுபட்டு பலூன்கள் வகுப்பின் மேற்சுவரோடு ஒட்டிக்கொண்டது. வாய்திறந்து வேடிக்கை பார்த்த குழந்தைகள் ஓடிச்சென்று ஆசிரியையைச் சுற்றி நின்றார்கள்
மொழியென்னும் ஆடி
ஆதிமந்தியார்,ஊண்பித்தை,ஓரிற்பிச்சியார்,காமக்கணிப் பசலையார், காவற்பெண்டு,குமிழிஞாழலார் நப்பசலையார் மற் றும் குறமகள் இளவெயினி ஆகியோரின் பாடல்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஒருபாடல் எழுதியுள்ளார்கள். சங்கப்பாடல்களில் துணங்கை கூத்து என்ற கூத்தினைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பெண்கள் கைக்கோர்த்து ஆடும் நடனம் என்று சொல்லப்படுகிறது. திருவிழாவில் தேர்வலம் முடித்த மாரியம்மன் கோவில் “மொழியென்னும் ஆடி”
மாறாத பேரானந்தம்
புரூரவஸ் எனில் நீர் கொண்ட மேகம், அதிக முழக்கம் செய்வது. நீர் ஆவியாகி மேகங்களாகும்போது மழையின் அறிகுறியாக இடிமுழக்கம் எழும். ஊர்வசி எனும் பெயர் மின்சாரம் பாய்வது போன்ற மின்னல் எனவும் பொருள்படும். ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ள பாடலின்படி ஊர்வசி என்பது இடையிடையே தோன்றிமறையும் மின்னல் எனப் பொருள் கொள்ளப்படும்.
அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 4
நானே பார்க்காத ஒரு கணினியில், இந்த வங்கியின் ஒரு கிளைக்கு வேண்டிய நிரல்களை நான் எழுத வேண்டும். இத்தனைக்கும், அதற்கு முன், அப்படி ஒரு வங்கிக்காக எந்த நிரலையும் நான் எழுதியதில்லை! என் கவனம் எல்லாம், எப்படி இந்த ப்ராஜக்டில் மீண்டு வரப் போகிறோம் என்பது மட்டுமே. ஆனால், மற்றவர்களின் பார்வை வேறு விதமாக இருந்தது.
இறுதி சல்யூட்
தங்கள் கிராமத்தைப் பற்றியும், இருவரும் சேர்ந்து விளையாடிய குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் பற்றியும், பள்ளியில் பரிமாறிக் கொண்ட கதைகள் பற்றியும், 6/9 ஜாட் ரெஜிமெண்ட் பற்றி, அதன் தலைமை அதிகாரிகள் பற்றியும், விசித்திரமான பல நகரங்களில் அவர்கள் இருவரும் ஒன்றாகப் போய் உறவு கொள்ள நேர்ந்த விசித்திரமான பெண்கள் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தான். இடையில் கடுமையான வலியால் பேசுவதை நிறுத்தி உரக்கக் கதறினான்.
குறுங்கவிதைகள்- கு.அழகர்சாமி
எவ்வளவோ சாதுவாய் என்னை நான் உணர்கிறேன்
என்னோடு நான் உருட்டிக் கொண்டு வரும் சைக்கிள்
என்னை உருட்டிக் கொண்டு வரும் போது-
அதிரியன் நினைவுகள் -22
அந்த முகம் அழகானது, அதில் எவ்வித ஒளிவுமறைவுமில்லை, இருந்தும் அதைப் பற்றி நான் இதுவரை எதுவும் சொல்லாததற்கு, முற்றிலுமாக தன்னை அவனிடம் இழந்திருந்த மனிதனொருவனின் தயக்கமாக இதனை பார்க்கக்கூடாது. எவ்வளவு தீவிரமாக தேடினாலும், நாம் தேடுகின்ற முகங்கள் நமக்குக் கிடைப்பதில்லை, தப்பிவிடுகின்றன, அப்படித் தேடி அலுத்து கிடைத்த கணமொன்றில் கண்டதே அவனுடைய முகம்: கருத்தடர்ந்த தலைமுடியின் கீழ் சாய்வாக ஒருதலை, அதில் கண்ணிமைகளுக்கு இசைவாக நீண்டும், வளைந்துமிருக்கும் விழிகள், இளம் முகமோ அகன்று, அவ்விழிகளுக்கென்று அமைந்ததுபோலவும் இருக்கும்
இரண்டாம் இன்னிங்ஸ் சாத்தியமா?
தற்போது பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரைமரி தேர்தலில் வென்று அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மத்திய அரசின் முக்கிய பிரிவுகளை மாற்றியமைப்பதாகவும் சமூக பாதுகாப்பு வலைத்திட்டங்களைக் குறைப்பதாகவும் கூறியுள்ளார். பைடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குத் தொடுக்க ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பதாகக் கூறி தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதாகவும் சபதம் செய்துள்ளார்!
உபநதிகள் – 15
பெர்னியின் திருமண விருப்பத்தை குடும்பத்தில் மற்றவர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதது மானஸாவுக்கு ஆச்சரியமாக இல்லை. அவள் அப்பாவும் அம்மாவும் மறுத்து எதுவும் சொல்லாவிட்டாலும் அவர்கள் வார்த்தைகளின் தொனியில், ‘இது ஒரு தாற்காலிகக் கவர்ச்சி, ஆறு மாதம் நீடித்தால் பார்த்துக்கொள்ளலாம்.’ அவர்களின் சந்தேகம் எதிர்பார்க்கக் கூடியது தான். பதின் பருவத்திலேயே இன்னும் ஒரு ஆண்டு இருக்கும்போது மானஸாவும் பெர்னியும் கல்யாணத்துக்குப் பதில் தொழில் பாதையை யோசிக்க வேண்டும்.
ஏங்குதல்
அவளுடன் வெகுகாலம் உரையாடிய போதிலும்
இன்னும் சில காலம் உரையாடிக் கொண்டிருந்திருக்க எனக்கு ஆசை,
ஏற்கெனவே தான் பெருக்கி முடித்திருந்த
வீட்டின் முற்றத்தையும், சுற்றுப் புறத்தையும்
இரண்டு மூன்று முறைகளுக்கும் மேலாய் பாட்டி
பெருக்கிக் கொண்டிருந்ததைப் போல.