நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகம்

நாஞ்சில் நாடனின் புனைவுகளில் பெண்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருக்கிறேன். சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன் 2012ல் மும்பை தமிழ்ச் சங்கத்தில் நாஞ்சில் நாடனுக்கு நடந்த பாராட்டுவிழாவில் நாஞ்சில் நாடனின் படைப்புலகில் கண்ட பசித்தவனின் பயணத்தைப் பேசி இருக்கிறேன்.  கொரொனா காலத்தில் மும்பை தமிழ்க் கூடலில் மும்பை படைப்புலகம் என்ற தொடர் சொற்பொழிவில் நாஞ்சில் நாடன் புனைவுலகத்தையும் ஏற்கனவே நான் பேசி எழுதி பதிவு செய்திருக்கிறேன்.

ராயல்டி பிரச்னை எனக்கில்லை!

பிஸினஸ் கூட்டாளியின் நம்பிக்கைத் துரோகம், அதனால் வந்த பொருளாதாரச் சிக்கல்கள், வளரும் குடும்பம் எனப் பல பிரச்னைகள். 2005 -இல் மறுபடியும் எழுதத் தொடங்கினேன். என் மனத்துக்கு ஆறுதல் சொல்லிக்கொள்ளவோ, ஏனோ, சுயமுன்னேற்றக் கட்டுரைகள் எழுதினேன்.  முதல் கட்டுரையை ‘ராமகிருஷ்ண விஜயம்’ வெளியிட்டது. அதன் ஆசிரியர் மகாராஜ் விமூர்த்தானந்தாஜி  தொடர்ந்து எழுத ஊக்கம் தந்தார். சுமார் இருபது கட்டுரைகளை வெளியிட்டார். 

மோகனாங்கி

இவ்வளவு சொல்கிறோமே… மோகனாங்கிக்கு தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் என்ற இடம் எளிதில் கிடைத்துவிடவில்லை. பொதுவாகவே ஈழத்தவரின் தமிழ் இலக்கியப் பணிகளுக்குக் கிடைக்க வேண்டிய முறையான இடம் கிடைப்பதில்லை என்பது இன்றும் உண்மை. சி.வை.தா ஒருவர் போதுமே! அவர் இல்லையென்றால் தொல்காப்பியம் ஏது! கலித்தொகை ஏது! பல நூல்களைக் கண்டெடுத்த அந்த மாமேதையைப் பற்றி தமிழுலகம் பேசுகிறதா!

நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு….

இதோ 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதையைப் படித்தப்போதும், இப்போது எழுதிய கதையைப் படித்த போதும் எனக்கு என்ன தோன்றுகிறது.  முதலில் ஆச்சரியம்.  முதல் கதையைப் படித்தப்போது அவருடைய தனித்துவம் தெளிவாகத் தெரிகிறது.  கதையில் அவர் பயன் படுத்திய வார்த்தைப் பிரயோகம் அபாரமாக இருக்கிறது.  கதையில் அவர் கொண்டுவரும் மௌனம் குறைவாக இருக்கிறது.

சிலையும், கல்லும் – நூல் விமர்சனம்

தங்கத்தின் மாற்றினை அறிவதற்கு. ஆசாரி. உரைகல் என்று ஒன்று வைத்திருப்பார். கிரிதரனின் வசம் அந்தக் கல் வந்திருக்கும் போலிருக்கிறது. முதல் கட்டுரை நாம் கொண்டாடும் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம். வாசனையைக் கொண்டு, பூவை அறிவது போல, நம்மை நேரடியாக பாதிப்பது, ஒரு எழுத்தின் மூலம் எழுத்தாளனை நாம் அறிந்துகொள்வதே. ஹென்றி என்ற. கதாபாத்திரம், புனைவின் பிடிகளுக்குள் கட்டுப்படாதவன். அவனது சமநிலை. ஆச்சரியப்படுத்தும் ஒன்று. ஜெயகாந்தன் சொல்லும் மிகச்சிறப்பான ஒரு அவதானிப்பை கிரி சொல்கிறார். மனிதன் என்பவன், சமூகத்தின் விளைச்சல் இல்லை. அவன் சுயமான எண்ணங்களைக் கொண்டவன்

சினிமாவும் ஆண் பார்வையும்

முதலாவதாக ஊடகங்களின் ஆண்பார்வையில் பெண்கள் செயலற்ற,மந்தமான, உடமையான, பாலியல்  பொருளாகவே பயன் படுத்தப்படுகிறார்கள். இரண்டாவதாக பெண்கள் எவ்வாறு தம்மைத்தாமே பார்க்கிறார்கள் என்பதாகும். மூன்றாவதாக பெண்கள் மற்றைய பெண்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதாகும். பெண்களில் ஒரு பகுதியினர் ஆண்பார்வையில்  தங்களது செயலான்மையை விளங்கிக் கொண்டாலும், பெரும் பகுதியினர் ஆணாதிக்க ஆண்பார்வைக்கே பலியாகிப் போகிறார்கள். அப்பார்வையே இயல்பானது எனவும் நம்புகிறார்கள். அழகு, கவர்ச்சி என சில பெண்கள் தமது உடலமைப்பு குறித்து அதீத கவனம் செலுத்துவதைத் காணலாம். குறிப்பாக இளம் வயதினரின் தமது உணவை தவிர்த்து உடல் எடையை குறைப்பார்கள். முழு கவனமும்  உடலின் எடை, அளவு (shape and size) என்பதாகவே இருக்கும். இறுதியில் உடல்நலத்திற்கு அவசியமான கலோரியினை இழப்பதினால் கனியுப்புகள், விற்றமின்கள் குறைபாடும் ஈமோகுளோபின் குறைபாடும் ஏற்பட்டு நோயாளியாகிறார்கள். இதனை eating disorder என்று அழைப்பர். இது ஆணாதிக்க கருத்தாக்கத்தின் பின்புலத்தில் உருவாக்கப்படும் ஆண்பார்வையை ஏற்றுக்கொண்ட பெண்களின் விழிப்புணர்வின்மை அல்லது அறியாமை என்பதுடன் மனநிலை பாதிப்பிற்கே இட்டுச் செல்கிறது எனலாம்.

 குரு

இறந்தவரின் அவோனா தனக்கு குடும்பத்தில் இருக்கும் பிரியமான குழந்தையின் உடலுக்குள் சென்று விடுகிறது. இப்படி அவோனா நுழைந்த குழந்தை நல்ல வேட்டைக்காரராகவும், அள்ள அள்ள குறையாமல் உணவை அளிப்பவராகவும் பின்னாட்களில் இருப்பார் என்றும் நம்பிக்கை உண்டு

இகிகை

‘இகிகை’ என்பது நான்கு கூற்றுகளின் கலவையாகும்: நீங்கள் எதை விரும்புகிறீர்கள், நீங்கள் எதில் சிறந்தவர், உலகிற்கு என்ன தேவை, உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்வது? என்பதே அந்த நான்கு அடிப்படை மூலக்கூறுகள். “உங்கள் இகிகையைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு வேலை அல்லது பொழுதுபோக்கைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, மாறாக உங்கள் தனித்துவமான நோக்கத்தையும் வாழ்க்கையின் பொருளையும் கண்டறிவதாகும்” என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

இச்சா, இனியா, காயா, பழமா?

உளவியலின் மற்றொரு முக்கியப் பிரிவு, ஆய்வகங்களில் அறிவியல் நிரூபணங்களின் மூலம் இதை உறுதி செய்ய முடியும் என நம்பியது. உளவியல் பகுப்பாய்வாளர்கள் போலவே, பரிசோதனை உளவியலாளர்கள், மனிதரின் அக அனுபவத் துல்லியத்தை, அறிவியல் ரீதியாகச் சொல்ல முடியும் என்றார்கள். அளக்கக்கூடிய புற நிலை உடல் செயற்பாடுகள், அகநிலையின் வெளிப்பாடுகளே என்ற அவர்களது கொள்கையால் அவர்கள் உளப்பகுப்பாய்வாளர்களிலிருந்து மாறுபட்டனர். ஜான் வாட்சனின் ‘நடத்தை விதிகள்’ மூலம், மிகப் பிடிவாதமாக, தனியான அகநிலை என்ற கருத்தை கிட்டத்தட்ட மறுத்து, ‘உணர்வு’ என்பது பிரதிபலிப்புகளின் கூட்டமைப்பு என்ற முடிவிற்கு வந்தார்கள்.

தெய்வநல்லூர் கதைகள் – 9

This entry is part 9 of 10 in the series தெய்வநல்லூர் கதைகள்

இருவரும் பேசிமுடித்ததும் சில முடிவுகள் உடனே அமுல்படுத்தப்பட்டன. வகுப்பினைக் கவனிக்கும் பொறுப்பு உடனடியாக ஆசிய ஜோதி அணியினருக்கு திரும்பக் கொடுக்கப்பட்டது. தெண்டில் அணியினர் அனைவரும் அவரவர் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர். இனி குறிப்பேடுகளை தேதி வாரியாக  சரி பார்த்து ஆசிரியர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூடுதல் தனிப் பொறுப்பு பிரேமுக்கு ஒதுக்கப்பட்டது. தவறு செய்த மூவருக்கும் அன்று  மாலை பள்ளி முடியும்வரை வகுப்புக்கு வெளியே படிக்கட்டில் நின்று கொண்டேயிருக்கும்படியாக தண்டனை அளிக்கப்பட்டது.      

மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு

”நான் கூட நேத்தைக்கு தங்கம் வாங்கப் போயிருந்தேன். தனசேகரன் செட்டியார் வேண்டப்பட்ட ஆளாக இருக்கறதாலே நாலு பவுன் வாங்கினேன். மத்தவங்களுக்கு எல்லாம் ஆளுக்கு ரெண்டு பவுன் தான் கொடுத்தார். அதுவும் பவன் ஒண்ணு பத்து வராகன் பணத்துக்கு. எனக்கு பவுனுக்கு எட்டு வராகன்லே கொடுத்தார். அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் வாங்கணும். வீட்டுலே பீவி போர்ச்சுகீசியப் பணம் ரியல் சேர்த்து வச்சிருக்கு. அதையும் தங்கமாக்கணும்” என்றபடி பால் குவளையை வைத்து விட்டு எழுந்தார் அபுசாலி ராவுத்தர். 

காதல்வலி விதைக்கும் வெறுப்பு

இப்பாடலின் வரிகளைக் கொண்டு காதலர்கள் இருவருக்கும் சந்திப்பு நிகழ்ந்ததா இல்லையா என உறுதியாகக் கூற இயலவில்லை. சில உரையாசிரியர்கள் சந்தித்தபின் பிரிவு ஏற்பட்டதால் உண்டான வலி என்றும் சிலர் சந்திக்க முயன்றும் இயலாததால் ஏற்பட்ட வலி என்றும் பொருள்கொள்கிறார்கள். ஆனால் எல்லா உரையாசிரியர்களும் ஒப்புக்கொள்ளும் பொதுவான கருத்து, காதலர்களின் துன்பத்துக்குக் காரணம் அவர்கள் மிகவும் எதிர்நோக்கியிருக்கும் சந்திப்புதான்

மோகனவம்சி என்ற நாவல்

ராதா, தபதி, சந்திரிகா அனைவரும் கிருஷ்ணனின் பௌதீகமான சிந்தனை, கானம், சௌந்தர்யம் ஆகியவற்றில் களித்திருப்பவர்களே. அவர்களுக்குத் திருமணம் ஆகி சம்சாரம் இருந்தது. வயதில் கிருஷ்ணரை விடப் பெரியவர்கள். கிருஷ்ணருக்கும் அவர்கள் மீது சமமான அன்பு. உண்மையில் அவனுடைய பார்வையில் பெண்களனைவரும் வேறு வேறு பெயர்களோடு பௌதீகமாக மாறுபட்டு தென்படும் பெண்மையும் வேறுபட்ட தோற்றங்களே.

தனிமையின் பிடியில் புரூரவஸ்

ஒருவர்மீது எல்லையற்ற காதல் கொண்டுவிட்டால் ஒருவன் எத்தகைய பலவானானாலும், அவனுடைய புகழ், பதவி எதுவுமே அவனுக்கு ஒரு பொருட்டல்ல எனக் காண்கிறது. இத்தனைக்கும் அவனை திலோத்தமை முதலிலேயே எச்சரிக்கை செய்துள்ளாள். காதல் அவன் சிந்தனையைக் குருடாக்கி விட்டதே!

அதிரியன் நினைவுகள் -20

This entry is part 20 of 21 in the series அதிரியன் நினைவுகள்

நான் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான், போரில் வாகைசூடிய நம்முடைய ஆறாவது படையணி பிரிட்டிஷ் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே இங்கிருந்த நம்முடைய ஒன்பதாவது படைப்பிரிவு வீரர்களில் அனேகர்,  பார்த்தியர்களோடு நாம் யுத்தத்தில் இருந்த முகாந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு வெடித்த கலவரத்தில் கலிடோனியர்களால்  வெட்டுண்டு மடிந்து அவல்நிலையில் இருக்க, இவர்கள் இடத்தில் ஆறாவது படையணி. இத்தகைய அசம்பாவிதங்கள்  மீண்டும் நிகழாமல் தடுக்க இரண்டு நடவடிக்கைகள் தேவைப்பட்டன.

உபநதிகள் – பதின்மூன்று

This entry is part 13 of 14 in the series உபநதிகள்

என் எலைஸா பாட்டி ஆதிகால வரலாற்றில் கரைகண்டவள். டைபர் நதியில் மிதந்து வந்த இரண்டு அபலைக் குழந்தைகளை ஒரு பெண் ஓநாய் காப்பாற்றி வளர்த்த கதையையும், அதைத் தொடர்ந்த சம்பிரதாய வழக்கங்களையும் அவள் எழுதிய ஒரு கட்டுரையில் படித்தேன். நிஜத்திலும் ஓநாய்கள் ஒன்றுக்கொன்று உதவிசெய்து குட்டிகளுக்கும் முதிர்ந்த பிராணிகளுக்கும் ஆதரவு தருவதையும், ஆணும் பெண்ணும் வாழ்நாள் முழுக்கத் துணையாக இருப்பதையும் அவள் விவரித்து இருக்கிறாள். ஓநாய்களை நம் காதல் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக ஏற்க வேண்டும் என்ற அவள் அறிவுரையைப் பின்பற்றப் போகிறேன்

அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 2

This entry is part 2 of 3 in the series கணினி நிலாக்காலம்

இப்படி உள்ளேற்றப்படும் தரவுகள் ஒரு ஃப்ளாப்பி டிஸ்க் -கில் (floppy disk) பதிவு செய்யப்படும். டிஸ்க் என்றவுடன் ஏராளமான தேக்கம் (storage) இருப்பதாக நினக்காதீர்கள். ஒரு ஃப்ளாப்பி டிஸ்கில் 80 -களின் ஆரம்ப கட்டத்தில் வெறும் 256 KB மட்டுமே சாத்தியம். இந்தத் தரவு உள்வாங்கும் எந்திரங்கள், அவை முற்றிலும் நிரம்பிவிடாமல் பார்த்துக் கொண்டு, வித்தியாசமான ஒலிகள் மூலம் இயக்கியிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும்.

மூன்று கவிதைகள்

மங்கலான அகல் வெளிச்சத்தில்
திருப்புகழ் படித்துக் கொண்டிருந்தாள்..

காலனெனை அணுகாமல் உனதிரு
காலில் வழிபட அருள்வாயே

எங்கே போனாய் இவ்வளவு நேரம்?

கேட்டுவிட்டு படிக்கலானாள்..

ஆழ்கடலில்

பகலைப் பிழிந்தெடுத்த
ஒரு
தேனின் துளி
நீலம்பாரித்த
நஞ்சின் சாரல்
இரு வண்ணக்கலவையில்
பிரதிபலிக்கும்
வானவில் தோற்றம்

கே.சட்சிதானந்தன் கவிதைகள்

நாம் சிலதைப் பெறுகிறோம்
நாம் சிலதைக் கொடுக்கிறோம்.
‘சாவு நிதிநிலை அறிக்கை தயாரிக்கிறது’
சொர்க்கம் என்பது ஒரு பொய் , ஆனால்
நரகம் ,ஆமாம், உளதாயிருக்கிறது.

நாய்கள் ஜாக்கிரதை

“ஏங்க? ரூல்ஸை நான் என்ன உள்ளங்கைலயா பச்சை குத்தி வச்சிருக்கேன், காட்டறதுக்கு? ஏத்தக் கூடாதுன்னா ஏத்தக் கூடாதுதாங்க.. அடுத்த ஸ்டேஷன்ல எறங்கி ஒழுங்கா லக்கேஜ் புக் பண்ணி லக்கேஜ் வேன்ல ஏத்துங்க… இல்லேன்னா பாசஞ்சர் சேஃப்டிக்குக் குந்தகம் வெளவிச்சீங்கன்னு அடுத்த ஸ்டேஷன்ல நாயோட சேத்து எறக்கி விட்ருவோம், தெரிஞ்சுக்குங்க”

யாழ் பறவை

“அவன் அப்ப இருந்த மனநிலையிலை, அந்தரிச்சுப்போய் அப்படி நடந்திருக்கலாம். உங்களைத் தேவையில்லையெண்டா, பேந்தும் பேந்தும் ஏன் அவன் உங்களைத் தொடர்பு கொள்ளவேண்டும்? பாவம் அவன்ரை மனிசி… அவள் ஒரு அப்பிராணி,” பராசக்தி மீண்டும் உபதேசம் செய்துவிட்டு, தனது மொபல்போனைத் திறந்து தங்கச்சுரங்கத்தில் எடுத்த படங்களைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினார். 

பாப்பாக்காவும் பிரசாந்த் சினிமாவும் 

வாத்தியார் வீட்டின் வாசலில் நிற்கும் ஓங்கு தாங்கான முருங்கை மரத்தின் பொந்தில் தான் அவர்களின் காதல் சிறுக சிறுக வளர்ந்தது குருவி குஞ்சுகளோடு. துண்டு சீட்டு அதற்கு பதில் சீட்டு என்று இருவரும் மாறி மாறி குருவிகளை விட அந்த பொந்தை அதிகமாக பயன்படுத்தி கொண்டார்கள்.  எந்த கை உள்ளே வருகிறது, எந்த கை எடுக்கிறது என்பெதெல்லாம் முருங்கையும், பொந்தில் அடையும் குருவிகளுமே அறிந்த ரகசியம். கொஞ்ச நாட்களிலேயே குஞ்சுகள் வளர்ந்தன. தங்கள் திசை நோக்கி பறந்தன. 

40+

இந்தப் பூஜா ஹெக்டே ப்ளூ டூத் ஹெட்செட்டைத் தூக்கிப் போட்டுட்டு சென்ஹைஸர் வாங்குமா” பாபு அடிக்கடி கலாய்ப்பது நினைவுக்கு வந்து அதன் பங்கிற்கு புன்சிரிப்பை டெலிவரி செய்தது. இந்தப் பிட்ரான்(pTron) ப்ளூ டூத் சாதனம் நன்றாகத் தான் இருக்கிறது. பாடல்கள் கேட்க, செல் அழைப்புகளை ஏற்றுப் பேச, கைப்பையில் மொபைலைப்  பத்திரப்படுத்தி விட்டு வாகனத்தில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில்  மிகவும் செளகர்யமாக இருக்கிறது. துல்லியமான ஒலித்தரம், ஆடியோ அவுட்புட், பக்கா பேஸ் என பாபு ஏதேதோ சொல்கிறான்.

இசை

ஒரு இங்கிலீஷ் பயங்கரப் படம். பேரு ஞாபகமில்லீங்க. வெள்ளக்கார பொண்ணு குளிக்க போறா. வில்லன் கத்தியோட வந்து அவள குத்து குத்துனு குத்துறான். ரத்தம் சும்மா பீறி அடிக்குது. அப்ப பேக் கிரவுண்ட் மியூசிக்க கேக்கணுமே….. “வீல், வீல் . வீல் ” எணு சும்மா பிச்சி வாங்குது. மாமா சவுண்ட் டயல உச்சத்தில் வச்சி புடிச்சாரு. தியேட்டர் சும்மா அதிருது. அரைவாசி பசங்க கால தூக்கி கதிரையில் வைச்சி……. அத கேக்காதீங்க சார். கதிரைய நனைக்சிட்டானுக எண்ணா நம்புவீங்களா சார்?