டகாஹாமா க்யோஷி: இலையுதிர் காலம் இன்னும் ஆழமாகிறது

ஜப்பானிய ஹைக்கூவின் ஒரு அம்சம் அதன் விளக்கத்தை அதன் வாசகர்களுக்கு சமர்ப்பிப்பதாகும். ஹைக்கூ அதன் வாசகர்களை அதன் அர்த்தத்தை பல்வேறு வழிகளில் விளக்க அனுமதிக்கிறது. எனவே, ஜப்பானிய மூலத்திலிருந்து வேறொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஹைக்கூவில் அத்தகைய அம்சத்தைப் கிடைக்கச் செய்வது சற்று கடினம். மிகவும் தர்க்கரீதியான மொழிபெயர்ப்பு அசலின் அழகையும் உணர்வையும் மீட்டவோ மீட்கவோ கூட முடியாமல் தவிக்கும்.

சித்சக்தி சேதனா ரூபா ஜடசக்தி ஜடாத்மிகா

விருந்தாளியாக, பிறப்புக் கணக்கு முடியாத நேரத்தில், தன் ஊருக்கு வந்த ஒரு சிறுவனிடத்தில் அவனை மூன்று நாட்கள் காக்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்கும் யமன், அவனுக்கு மூன்று வரங்கள் தருகிறார். முதல் இரண்டு கேள்விகளால், உலகில்  சினம் குறைந்து அன்பு பெருக வேண்டும் என்றும், யாக  அக்னியின் புனிதம் எது, அதன் முன் சொல்லப்படும் வார்த்தைகள் சத்தியமாகிவிடும் விந்தை என்ன என்பது பற்றியும் கேட்கும் சிறுவன் மூன்றாவதாகக் கேட்கும் கேள்வி யமனையே அசைத்து விடுகிறது

காதல் மறைத்தாலும் மறையாதது

நேரடியாகப் பொருள்தரும் இப்பாடலைக் கி.பி 946 முதல் 967 வரை அரசராக இருந்த முராகமியின் வேண்டுகோளுக்கேற்ப 960ல் இயற்றியிருக்கலாம் எனக் கருதுகிறார்கள். அந்தக்காலத்தில் நம் சங்கப்பலகை போன்று அரசவையில் தரப்பட்ட தலைப்பில் செய்யுள் இயற்றும் போட்டிகள் அவ்வப்போது நடப்பது வழக்கம். பேரரசர் முராகமியின் அரசவையில் புலவர்கள் அழைக்கப்பட்டு அரசருக்கு இடமும் வலமும் வரிசையாக அமரவைக்கப்பட்டு ஒவ்வோர் இணையாக ஒரே தலைப்பில் பாடல் புனையக்கூறி இரண்டில் சிறந்த பாடலைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்துவந்தது.

‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’

இரு காதலர்களின் பிரிவு அவர்கள் உள்ளங்களிலும் வாழ்விலும் ஏற்படுத்தும் வெறுமை, தனிமை, வாழ்க்கையின் மீதான வெறுப்பு, சலிப்பு, பற்றின்மை என அனைத்தும் இத்தனை நுட்பமாக, பொறுமையாக வேறெந்தக் கவிஞனாலும் விவரிக்கப்பட்டுள்ளதா என நான் அறியேன். முன்பே கூறியபடி, கம்பன் அழகாக சீதை, இராமன் இவர்களின் தாபத்தையும், சேக்கிழார் பெருமான்

மிகிலிந்தேமிடி? (என்ன மிச்சம்?) என்ற நாவல் 

அழகே செல்வமாகக் கொண்டவள் என்ற சிறப்பு இருந்தாலும் சமுதாயத்தில் தாழ்வாக பார்க்கப்படுகின்ற குலத்தில் பிறந்தவள் என்ற தாழ்வு மனப்பான்மை அவளைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தது. பிறருக்கு போகமளிக்கும் குலத்தில் பிறந்த பெண் திருமணம் செய்து கொண்டாலும் ஒரு ஆணையே  நம்பிக்கொண்டு வாழ்ந்தாலும் அவளுடைய கற்பு எப்போதும் சந்தேகப்படத்  தக்கது என்று எண்ணும் சமுதாயத்தில் வித்யா திருமணம் செய்து கொள்வதை   அவளுடைய தாய் விரும்பவில்லை. பெண் அனாவசியமாக கஷ்டங்களில் சிக்க கூடாது என்பது தாயின் அபிப்பிராயம்.

மிளகு அத்தியாயம்  நாற்பத்தொன்பது 

போன மாதம் பிரார்த்தனை மண்டபத்தை பெரும்பான்மை வைதீக மதத்தினர் அடித்து நொறுக்கி தீர்த்தங்கரரின் நாசியை உடைத்தார்கள். நாம் மௌனமாக இருந்தோம். போன வாரம் புதியதாகக் கட்டப்படும் வசதி முழுக்கக் கட்டாமலிருக்கும்போதே மாமிசத் தாக்குதலை எதிர்கொண்டது. நான்கு தீர்த்தங்கர் சிலாரூபங்கள் மேலும் பசுமாமிசம் விழுந்து தரையில் படிந்து துர்நாற்றத்தைக் கிளப்பி உள்ளே வந்தவர்களை விரட்டுகிறது. அரண்மனைக்கு மிளகு விற்பது தான் குறிக்கோள். போர்த்துகல்லுக்கு எவ்வளவு மிளகு விற்பனையாகுமோ அவ்வளவுக்கு அரசாங்கமும் செழிக்கும்.

யானை வெரூஉம்

எட்ஜ் சாம்பியனாக இருந்த போது என் அப்பாவுக்கு கல்கத்தாவிற்கு மாற்றல் வந்தது. நாங்கள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தோம். எனக்கு மீசை லேசாக அரும்பியிருந்தது. ஆக அழ முடியாது எனும் கட்டாயம் வேறு. என் அக்கா வெஸ்ட் பெங்காலில் படித்தவள் ஒரு வருடமாகத்தான் தமிழ்நாட்டில் இருக்கிறாள். குடும்பமே கல்கத்தா திரும்பும் குதூகலத்தில் இருந்தது. நான் பேசிப்பார்த்தேன். ஒரு பயனும் இல்லை. வாழ்க்கை இனித்துக்கொண்டே இருக்கக் கூடியதல்ல என்பது அந்த காலத்தில்தான் அறிமுகமானது. என்னை ரயிலேற்றிவிட பிலுக்கோண்டு மட்டும்தான் வந்திருந்தான்

பெயோட்டி

சிலர் விசும்பி அழுது கொண்டிருந்தனர். பலர் காலடியில் வேர்கள் வளர்வதை உணர்வதாக கூறினர். அனைவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். அதிகாலையில் அனைவரும் அங்கேயே படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். தனித்தனியே அந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் நிகழ்வு முடியும்போது ஒரே குடும்பமாகி இருந்தனர்… அத்தனை பேரும் புத்தம் புதிதாக பிறந்தவர்கள் போல் இருந்தார்கள். அந்த கள்ளிப்பசை உள்ளிருந்து நமது ஆணவத்தை வெளிக்கொண்டு வந்துவிடுகிறது

உபநதிகள் – அத்தியாயம்: பத்து

This entry is part 10 of 14 in the series உபநதிகள்

சற்றுத்தள்ளி கோடிட்ட இடத்தில் கலாவதி காரை நிறுத்துகிறாள். இறங்கி மேற்கு வானத்தின் கருமையைப் பார்த்து அவள் முகத்தில் கவலைக் கோடுகள். மனதைத் தேற்றிக்கொண்டு காரில் இருந்து பைகளை எடுத்து நடக்கிறாள். புல்வெளியில் ஏற்கனவே சில கூடாரங்கள் எழுந்து நிற்கின்றன. இன்னும் சில தரையில் உட்கார்ந்து ஓய்வு எடுக்கின்றன. விவசாயிகள் சந்தையில் என்ன வாங்கலாம் என்பதைத் தீர்மானிக்க கலாவதி ஒரு சுற்று நடக்கிறாள்.

ஆமிரா கவிதைகள்

இனி புதிதாக
பூப்பெய்திய
மழை இரவு
தானாக சிரித்தபடி
தரை இறங்கி வரக்கூடும்
இரயில் நிலைய வாயிலில்
அரசமரத்தின் கிளைகளில்
அனைத்தும் சொல்லி முடித்து
அதனதன் குஞ்சுகளுடன் கரும்பச்சையை கட்டியணைத்தபடி

தெய்வநல்லூர் கதைகள் – 6

This entry is part 6 of 10 in the series தெய்வநல்லூர் கதைகள்

ராமர் கோவில் கருப்பனுக்கு இரு கிடாக்கள் செய்த உயிர்தியாகத்தில் பிறந்த பிள்ளை காணாமலானது குறித்து அவர் தாய் நியாயம் வேண்டினார். வெள்ளானைக்கோட்டை ஊர்க்காரர்கள் எண்திசையும் கடுகி  முடுகி  தேடுகையில்  திருமண விருந்தின் பின்விளைவாக ஊருணி சென்றிருந்த மணியின் தாத்தா திரும்பி வந்து நிகழ்வைக் கேள்வியுற்று சற்றே சிந்தித்த அவர் வெடித்த பலாவின் சுளையென மீசைக்குள் தெரிந்த வாய் விட்டு சிரித்து இருவர் தன்னைப் பின்தொடர ஆணையிட்டு “பொறவாசலில் சோறாக்குமிடத்திற்கு” வந்து இரண்டடி விட்டமும், மூன்றடி  உயரமும் கொண்ட சேமியா பாயாச வட்டைக்குள் பார்க்கும்படி சொன்னார்.

ஜூலை பாடல்கள்

இமைகளைக்
காவல் வைத்தேன்.
ஆனாலும்
என் விழிகளுக்கு தெரியாத
என் விழிகள்
எனக்குத் தெரியாது
என்னைக் கண்காணிப்பது

தூயக் கடலாள்

நாங்கலாம் மனுசங்க இல்ல இவனுக்கு எப்ப பாத்தாலும் சங்கரு சங்கரு.. போன வாரம் கோவா போனானே அக்கா மவளுக்குனு அக்காவுக்குனு ஏதாச்சும் வாங்கிட்டு வந்தானா? இவன் புள்ளைங்களுக்கு மாதிரியே அவன் புள்ளைங்களுக்கும் மேட்சிங்கா டிரஸ்ஸு.. அத போட்டோ எடுத்து வாட்ஸப்ல ஸ்டேட்டஸ் வேற.. இருக்கட்டும்..’ எனக் கறுவியவளை சமாதானப்படுத்த பிரபுவுக்கு வெகு நேரம் ஆனது.

அதிரியன் நினைவுகள் -17

This entry is part 17 of 21 in the series அதிரியன் நினைவுகள்

நமது வணிகர்கள் சில சமயங்களில் சிறந்த புவியியலாளர்களாகவும்,  சிறந்த வானியலாளர்களாகவும், நன்கு  கற்றறிந்த இயற்கை ஆர்வலர்களாகவும் இருக்கின்றனர். அதுபோல  மனிதர்களைப் புரிந்து நடக்கும் மனிதர் கூட்டத்தில் வங்கியாளர்களையும் நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்படியான தனித் திறமைகள் எங்கிருந்தாலும் அவற்றை நான் பயபடுத்திக்கொள்வேன். ஆக்ரமிப்புகளுக்கு அல்லது அத்துமீறல்களுக்கு எதிராக ஒட்டுமொத்த  சக்தியையும் திரட்டிப் போராடியுள்ளேன். கப்பல் உரிமையாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு காரணமாக வெளி நாடுகளுடனான கட்டுப்பாடுகள் தளர்ந்து பரிவர்த்தனை பெருகியது

பெரிய ஸார்

ஹைமவதி கையில் கொண்டு வந்திருந்த பச்சை நிற அப்ளிகேஷன் ஃபார்மையும் மார்க் ஷீட்டையும் எடுத்து அவரிடம் தந்தாள். அவர் தான் அணிந்திருந்த கண்ணாடியை லேசாக மேலே தூக்கி விட்டுக் கொண்டு பார்த்தபடியே மேஜை மேலிருந்த காலிங் பெல்லை அடித்தார். உட்பக்கத் தள்ளு கதவைத் திறந்தபடி பள்ளி அலுவலர்கள் அணியும் சீருடையில் ஒருவர் வந்தார்

உங்க வீட்ல தங்க விளைய..

போதும், கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா,   அழுகை. மேல படிக்கணும்னு. எட்டாவது  முடிச்சோன்னயே, படிப்பை நிறுத்திட்டு   கல்யாணம் பண்ணிடலாம் சொன்னேன். வேணாம்னு சொல்லிடாக. இப்ப பாருங்க. மாப்பிள தேடினா கிடைக்க மாட்டேங்குது. மளிகை கடை வச்சிருக்க நம்ம சொந்தகார பையனை முடிச்சிடலாம்னு பாத்தா, படிச்ச புள்ள மளிகை கடையில உக்காராதுனு என்கிட்டயே சொல்றான்.”

அமெரிக்க அதிபர் தேர்தல் (2024) வியூகங்கள்!

நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ட்ரம்ப்புடன் முன்பு தனக்கு இருந்த தொடர்பைப் பற்றி 2016 தேர்தலில் பேசாமல் இருக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன், ‘ஹஷ்’ பணம் செலுத்தி பிரச்சார நிதி மீறல் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்பொழுது விசாரணை நடந்து வருகிறது. இது ட்ரம்ப்பைச் சட்டவிரோத நடவடிக்கைகளில் சிக்க வைக்கக்கூடும். ஆனால் ஸ்டார்மி டேனியல்ஸ் தொடுத்த ‘அவதூறு’ வழக்கில் ட்ரம்ப்பிற்குச் சாதகமாக தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

அந்த இவள்

சோறிடும் போது அவள் விரல்களை கவனிப்பான். அவை சின்ன சின்னதாக அழகாக இருக்கும். அவளின் விரல்களை காண நேர்கையில் அவன் எண்ணங்கள் எங்கோ போய்விட்டு மீளும்.  அவசரமாக தலையை வேகமாக உதறிக்கொள்வான். சாப்பாடும்  வைக்கும் போது அவள் காட்டும்  நேர்த்தியும், பதறியபடி இவனின்  ‘ம்….ம்’ என்ற முனகலுக்கு வார்ப்பதை நிறுத்தும் நரிவிசும் அவனுக்கு பிடித்திருந்தது.

மாரியின் மனைவி

மனிதர்களுக்கு கடுப்பையும், எரிச்சலையும் ஊட்டுவது கார்டிசால் என்ற ஹார்மோன். அட்ரினலின் சுரப்பியினின் மூலமாக கார்டிசால் மனிதனுக்கு ஆபத்து வந்தால் சுரக்கும்.  ஆதி மனிதனுக்கு அது  உயிர் வாழ உதவியாக இருந்தது. வனவிலங்குகளைக் கண்டால் மனிதன் ஓடவோ, சிலை போல நிற்கவோ, போராடவோ அது பல விதத்தில் உதவி செய்தது. அதே போல் மனிதனுக்கு பசியைத் தூண்டுவது க்ரெலின் என்ற ஹார்மோன். சில சமயம் கார்டிசால் க்ரெலின் சுரப்பை அதிகரிக்கும்.