பாதாளத்தை வடிவமைத்தல்: பேயோவுல்ஃப், கிரெண்டல்

ஹெர்குலிஸ் அல்லது தீசியஸ் போல நாயகன் ராட்சதர்களைக் கொல்கிறான். ராட்சதன், அதன் அம்மா, டிராகன் இவையெல்லாம் அக்காலத்து மக்கள் இக்கதையில் எதிர்பார்த்த விஷயங்கள். இவை தீமையின் அவதாரங்கள், “பார்வையாளர்களால் உண்மையென ஏற்றுக் கொள்ளப்பட்டவை,” எழுத்தாளன் இவ்வகைமையைத் தேர்ந்தெடுத்த பின்னால் இந்த அவசியக் கூறுகளைச் சேர்ப்பது தவிர்க்க இயலாமல் போகிறது. இரும்பால் பிணைக்கப்பட்ட, விதி சூழ்ந்த வீடு (ஹீராட் ஹால்), கிரெண்டல் மற்றும் அதன் உருவற்ற அன்னை பீடிக்கும் நீருக்கு அடியே அச்சமே உருவான ஓர் இடம், கடைசியாகப் பாறைகளாய் இறுகிய பாதைகளற்ற டிராகனின் குகை என்று அச்சத்தின் அடிப்படை உருவகைகள் மூன்றின் வழியே கதையைக் கொண்டு செல்லும்போது:

தமிழ்ப் பண்பாட்டின் குரல்

வழக்கம் போல பழைய பாடல் தேடலில் மாட்டியது இந்தப் பாடல். படம்: நான் பெற்ற செல்வம் (1956) இசை: ஜி.ராமநாதன். குரலாலேயே விரட்டி விளையாடும் டி.எம்.எஸ், ஜிக்கி. நடுத்தர குடும்பத்தை கண்முன்னே காட்டும் சிவாஜி, ஜி.வரலக்ஷ்மி. தொப்பையில்லாத, தன் ஒவ்வொரு அசைவிலும் ‘நடிகர் திலகம்’ என்று நிரூபிக்கவேண்டிய கட்டாயங்கள் இல்லாத சிவாஜி. இந்தப்பாடலில் இவரின் உடல்மொழிகள் கூட ஆரம்ப காலக் கமல் படங்களில் நாம் கண்டவையே. எழுபதுகளின் இறுதியில்  இலங்கை வானொலியில் ஜிக்கி, ஏ எம் ராஜா பாடல்கள் தவிர நேரமிருந்தால் மற்ற பாடல்களும் போடுவார்கள் என்றிருந்த காலத்தில் ஏதோ ஒரு ஓய்ந்த மதிய வேளையில் கேட்ட பாடல். காலத்தை வென்ற இசை மனதை நிறைக்கிறது. 

அதிரியன் நினைவுகள் – 9

This entry is part 9 of 10 in the series அதிரியன் நினைவுகள்

இவ்விவகாரத்தில் வேறு சில விஷயங்களும் இருக்கின்றன:   நானும் தக்க தருணத்திற்கென்று திரைமறைவில் காத்திருக்கும் (நாடக) நடிகன் போல,  முன்பின் தெரியாத ஒரு நபர் உள்ளே பரபரப்புடன் தெரிவிக்கும் சங்கதிகளை,  குறிப்பாக சலசலவென்று பேசுகிற பெண்களின் குரல்களை, வெடிக்கும் கோபத்தை அல்லது சிரிப்பை, சொந்த வாழ்க்கையின் முணுமுணுப்புகளை, மொத்தத்தில் நானிருக்கிறேன் என்பது தெரியவந்த மறுகணம்  அடங்கிப்போகும் ஒலிகளை ஆர்வத்துடன் ஒட்டுக்கேட்பதுண்டு. குழந்தைகள், ஆடைகுறித்த தீராத பிரச்சனைகள்,  பணத்தைப் பற்றிய கவலைகளென, நான் இல்லாத நேரத்தில் பேசப்படும் பொருள் எதுவென்றாலும்  எனக்குத் தெரியக்கூடாத முக்கியமானதொரு விஷயம்

மித்ரோ மர்ஜானி – 9

This entry is part 9 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தாயின் புலம்பலை கேட்ட மித்ரோவுக்கு இனம் புரியாத பயம் ஏற்பட்டது. அந்தக் காரிருளில், மூடி கிடந்த ஜன்னல்களையும் வெறிச்சோடி கிடந்த வீட்டையும் பார்த்த மித்ரோவின் கண்களில் மின்னல் ஓடியது போன்ற பிரமை ஏற்பட்டது. வெறிச்சோடிக் கிடந்த வீடு, பூதங்கள் வாழும் மயானத்தைப் போலவும், அழுது புலம்பும் தாய், பசி தாகத்தால் தவிக்கும் ராட்சசியைப் போலவும் அவளுக்குத் தோன்றியது.

ரத்னா

பாரதியார் காலனி நகர்ப்புற வளர்ச்சித் துறையால் குறைந்த வருமானம் ஈட்டும் ஏழ்நிலைக் குடும்பங்களுக்காக கட்டப்பட்டது. வடக்கில் செல்வசிந்தாமணிக் குளம், மெயின் ரோட்டில் இருந்து வழி குளக்கரையோர சாலையாக நீண்டு காலனியைத் தொடும், மேற்கே கவுண்டர் தோட்டம், கிழக்கே தனிவீடுகள், தெற்கே முள்ளுக்காடு. ஆங்கில எழுத்துக்கள் ‘A’ முதல் ‘T’ வரை இருபது பிளாக்குகள், தளத்திற்கு நான்கு என்று இரண்டு மாடிகள் கொண்ட ஒவ்வொரு பிளாக்கிலும் இரண்டு பத்துக்குப்பத்து அறைகள் கொண்ட பன்னிரண்டு வீடுகள். இருநூற்றி நாற்பது வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டதும் 1980ல் குலுக்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம்

அறிமுகம் “கடும் போட்டிகள் கொண்ட விளையாட்டுகளுக்கு அழகு என்பது ஒரு குறிக்கோள் அல்ல, ஆனால் உச்சப்பட்ச விளையாட்டுப் போட்டிகள் மனித அழகின் மிகச் சிறந்த ஆடுகளம். இதை தோராயமாக போருக்கும் வீரத்திற்கும் உள்ள தொடர்போடு பொருத்திப் பார்க்கலாம்” டேவிட் பாஸ்டர் வாலஸ் அமெரிக்க விளையாட்டுக்கள் உண்மையில் இன்றைய அமெரிக்காவை “அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம்”

மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று

எல்லோரும் அடுத்தவர் பேசுவதைக் கவனமாகக் கேட்டு,  அழைக்கப்பட்டபோது கருத்து சொன்னார்கள். எல்லோரும் துரதிருஷ்டவசமானது என்பதில் கருத்து வேறுபாடின்றி ஒன்றுபட்டார்கள். விஷமிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்று கொங்கணியிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும் திடமாகச் சொன்னார்கள். இன்று சிறிய வெடி, நாளை பெரிய வெடிவெடிப்பு என்றாகலாம் என அச்சப்பட்டார்கள். பிரதானி நஞ்சுண்டய்யா ஜாக்கிரதையாகப் பேசியதாக சென்னபைரதேவி மகாராணிக்குப் பட்டது. எல்லோரும் தான். எதற்குப் பயப்படுகிறார்கள்? எதை மறைக்கிறார்கள்?

மாயம் & இயலாச் சொல்

என் குரல் நாண்களின்
இடை வெளியில் இன்னமும்
நீங்கள் கேட்காத சொற்கள்
சிற்சிறு தூளிகளில் தொங்குகின்றன
எண்ணிக்கை ஓங்குகையில்
உடல் குறுக்கி அமர்ந்திருக்கும் சில
பாதம் நீட்டி படுத்திருக்கும் சில
முகம் காட்டி கண் மூடியிருக்கும் சில
கைகள் வெளிப்போந்திருக்கும் சில
திமிறி வரத் தெரியாதவை
உள்ளேயும் புதைக்க இடமில்லை

லண்டானா கமாரா

லண்டானா வெர்பினேசி குடும்பத்தை சேர்ந்தது. இந்த பேரினத்தில் கமாரா உள்ளிட்ட சுமார் 150 சிற்றினங்கள் உள்ளன. லண்டானா ஒரு பல்லாண்டு தாவரம் இவை 7 அடி உயுரம் வரை வளரும் புதர் வகைகளாகவும் மரங்களில் படர்ந்து ஏறி வளரும் உறுதியான தண்டுகளையும் கொண்ட கொடி வகை தாவரமாகவும் சிறு செடிகளாகவும் காணப்படுகிறது.லண்டானாவின் அகன்ற முட்டை வடிவ எதிரிலைகள் கடும் நெடி கொண்டவை. இவை பல நிறம் கொண்ட மலர்கள் அடங்கிய மஞ்சரிகளை கொண்டிருக்கும். ஒரு செடியிலிருந்து சுமார் 12000 கருப்பு நிற சிறு கனிகள் உருவாகும்.

உபநதிகள்-2

This entry is part 2 of 3 in the series உபநதிகள்

பதின்பருவத்தின் பின்பாதியில் இருந்த அவர்களுக்கு நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இருந்து சால்ட்லேக் சிடிக்குத் தனியாகப்பயணம், பலருக்கு முதன்முறையாக. மதியத்திற்குமுன் விமான நிலையத்தில் ஐந்தாறு பேர்களாகச் சேர்ந்து வளாகத்தின் மாணவர் விடுதிக்கு வந்தார்கள். சிறுவயதில் இருந்தே தனி அறையின் சுதந்திரத்திற்குப் பழக்கப்பட்ட மானஸா இன்னொருத்தியுடன் ஒரு அறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். கல்லூரி வாழ்க்கைக்கு ஒத்திகை. மானஸா தன் பெட்டியைத் திறந்து சாமான்களை அவற்றுக்கான இடங்களில் வைத்தபிறகு அவள் அறைத்தோழி நிதானமாக வந்தாள், சிறிய தோள்-பையுடன். 

கேதார்நாத்

This entry is part 8 of 9 in the series கங்கா தேசத்தை நோக்கி

மேடுகளைக் கடந்து சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு குடியிருப்புக் கட்டடங்களும் கடைகளும் இருந்தது. அங்கிருந்து கோபுர தரிசனம்! ‘சிவசிவ’ என்று கைகூப்பி வணங்கினோம். அனைவர் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர்! “பார்த்தீங்களா! நாம் பத்திரமா வந்து சேர்ந்துட்டோம்!” என்று அவர்களுடைய மற்ற குழுவினரையும் சந்தித்துப் பேசி அறிமுகப்படுத்திக் கொண்டோம். நினைத்தபடி சித்தன் குடியிருக்கும் மலையில் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தோம்! வார்த்தைகளால் சொல்லிட இயலாத பேரானந்த பெரு அனுபவம் அது!

மயக்கமா, கலக்கமா, அறிந்ததில் குழப்பமா, அறிவதே சிக்கலா?

என்னைப் போன்ற சாதாரணர்களின் இயல்பு இது.  நாங்கள் மேற்சொன்ன விதத்தில் செயல்படலாம். ஆனால், இயற்பியலாளர்கள் கூட இந்த இரகம் தான் என்பதில் ஒரு குரூர திருப்தி! அந்தத்துறையில் மிகப் பழமையான நகைச்சுவை ஒன்று உண்டு- ‘ நாம் பசு மாட்டை கோளமாக (Sphere) உருவகித்துக் கொள்வோம்.’ மன்னிக்கவும், இது ஜோக் தான். இதன் பொருள், ஒரு கோளத்தின் செயலை புரிந்து கொள்வது, அதன் வடிவத்தால் எளிதாகிறது; எனவே தொடக்க அனுமானமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆராயப்படும் பொருளின் சில குணாதியசங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லாத நிலைகளில், சில எளிய கருதுகோள்களைக் கொண்டு நாம் அகிலத்தை அறிந்து கொள்ளத் தொடங்குகிறோம்.

பட்டுப்புழு மற்றும் தானியத்தின் கதைப்பாடல்

டு ஃபுவின் ஆகச் சிறந்த படைப்புகள்  கொய்ஜோவ் நகரில் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டவை. 400 கவிதைகள் வரையிலும் எழுதியுள்ளார். பெரும்பாலான கவிதைகள் இயற்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. அற்புதமான கவிதைகளை படைத்தவர். வாழ்ந்த காலத்தில் அதிகம் அறியப்படாமல் போனார். பரவலாகப் படைப்புகளை கொண்டு சேர்க்க இயலாமல் போனதும் ஒரு காரணமாகும். இவர் காலமான பிறகே இவரது கவிதைகள் பிரபலமாகி கொண்டாடப்பட்டன. இன்று வரையிலும் அவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வருகின்றன. சிறந்த கவிஞர் என்றும், இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது என்றும் உலகம் போற்றுகிறது.

சக்குராவின் சலனம்

இந்த சக்குரா மலரின் நிலையாமையை வைத்துப் பல செய்யுள்கள் காலந்தோறும் ஜப்பானிய இலக்கியத்தில் இயற்றப்பட்டிருக்கின்றன. இத்தொடரின் 17வது பாடலின் (கடவுளும் காணா அதிசயம்) ஆசிரியரான நரிஹிரா இசேவின் கதைகள் புதினத்தில் சக்குரா பற்றி ஒரு பாடலை இயற்றியுள்ளார். இந்த சக்குரா மலர்கள் மட்டும் இல்லையென்றால் வசந்தகால இதயங்களில் எப்படி அமைதி நிலவும் என்பது அதன் பொருள். 

பப்பிக்குட்டி

நான் கூடையைப்  பார்த்தேன்.  வெள்ளைப் பஞ்சு மேகம் போல புசு புசுவென்று  ஒரு அழகான குட்டி. பிறந்து சில வாரங்கள் தான் ஆகி இருக்க வேண்டும். பொமேரேனியன்  வகை என்று நினைத்தேன்.  கூடையின் பக்கத்தில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாள் நின்று கொண்டு யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார். “ஆமாங்க, நம்ம பேரப்  பிள்ளைங்களுக்குத் தாங்க.  போன மாசம் தான் குட்டி போட்டது. எழுபதாயிரம்  கேட்டாங்க. நாங்க  அம்பதுக்கு  பேசி முடிச்சிட்டோம்”.

மரத்தில் மறைந்தது மாமதயானை

குவாண்டப் பொருட்கள், அலைகளால் அமைந்துள்ளதால் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. காற்றடிக்காத, அமைதியான, கண்ணாடித் தகடு போன்ற கடலை கற்பனை செய்யுங்கள்/ நேரிலும் பாருங்கள்(!). தனிப்பட்ட இரு அலை வகைகள், ஒன்றன் மீது மற்றொன்று மேலிட்டுவரும்போது, இது எப்படி சாத்தியமாயிற்று என்று சிந்தியுங்கள். முழுதும் தட்டையான பரப்புகள் இரண்டு, ஒன்றின் மீது மற்றொன்றாக அடுக்கப்படும்போது சீரான பரப்பு தெரியும்; மற்றொரு சாத்தியம், ஒரே மாதிரியான இரண்டு அலைகள் ஒன்றின் மீது மற்றொன்று  பயணிக்கிறதாக எடுத்துக் கொண்டு, (மாறி மாறியும் இது நடக்கலாம்) ஒன்றின் முகட்டின் மேல் மற்றொன்றின் நீளலைகள் பெயர்வதாலும் நடக்கலாம்.

பாபிலோனின் மாபெரும் பணக்காரர்

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த களிமண் பலகைகளில் (Clay Tablets) உள்ள குறிப்புகளை கண்டடைந்து,  அன்று புழக்கத்திலிருந்த நிதி கோட்பாடுகளை ஆராய்ந்து, அது எக்காலத்திற்கும் பொருந்தும் என்று உய்த்துணர்ந்து, எல்லோரும் பயன் பெற வேண்டி, சாலை வரைபட(Road Map) தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த திரு.ஜார்ஜ் சாமுவேல் கிளாசான், 1920களில் தன் செலவில் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து விநியோகித்தார். அமெரிக்க வங்கிகளும், காப்பிடு நிறுவனக்கும் இதன் முக்கியத்துவம் அறிந்து இதை ஊக்குவிக்கும் பொருட்டு பெருமளவில் அவர்களும் அச்சடித்து விநியோகித்தனர். உலகில் தலைசிறந்த நிதி ஆலோசகர்களின் பரிந்துரை பட்டியலில் இடம் பெறும் ஒரு பிரதான புத்தகம்.

மேழி வான்மதி கவிதைகள்

வீதியில்
பவனி வருகிறாள் காளி.
வரவேற்கும் பொருட்டு
தெருப் பொடிசுகள்
தங்கள் கால்களின் கட்டுதிர்க்கத் துவங்கியிருந்தனர்.
தரை பாவிய கால்கள்
பறையின் உச்சம் தொட
தெருவை நனைக்கிறது ஆட்டம்.