மிளகு அத்தியாயம் முப்பத்தேழு

”விலை கொஞ்சம் குறைவுன்னாலும் கூடுதல் மிளகு ஏற்றுமதி. அதை அனுப்ப தயார்ப்படுத்த அதிக பேருக்கு வேலை. பயிரிட்டு அறுவடை செய்ய அதிகப் பேருக்கு வேலை. எல்லா வாசனை திரவியங்களுக்கும் இப்படி அதிகப் பேருக்கு வேலை. வெடியுப்பு தயார் செய்ய, அனுப்ப அதேபடி. துணி நெய்ய, சாயம் தோய்க்க, சீராக்கி லிஸ்பன் அனுப்ப அதிகப் பேருக்கு வேலை. அதிகம் வேலை. அதிகம் பணப் புழக்கம். அதிகம் பணம் செலவழிக்க. சேமிக்க. நகை வாங்க. யார் வேணாம்னு சொல்லப் போறாங்க மகாராஜா?”

மாற்றாரை மாற்றழிக்க

ஓனிடா டி வியின் விளம்பர வாசகம் ‘அக்கம் பக்கத்தோர் பொறாமை கொள்வார்கள்; உடமையாளருக்கோ மகிழ்ச்சி’ நம் அருமை நண்பன் சீனா நேரடியாகவும், மறைமுகமாகவும் நமக்குத் தொல்லை தந்து கொண்டேயிருக்கிறது. அதனுடைய வேவுக் கப்பல் இந்தியப்பெருங்கடலில், நமது கால் சுண்டு விரலான ஸ்ரீலங்காவை கடன்களாலும், வணிகத்தாலும் கட்டுப்படுத்தி, நயவஞ்சகமாக அதன் “மாற்றாரை மாற்றழிக்க”

சீனா… ஓ… சீனா!

இப்பொழுது சீனா என்றால் அண்டை நாட்டிலுள்ள இந்தியருக்கு நினைவுக்கு வருவது 1962 இந்திய-சீன எல்லைப் போரும், இடைவிடாது தரப்படும் பிரச்சினைகளும், தலைவலியும், தடுக்கவே இயலாத பிரம்மபுத்திராவையே தடுத்து நிறுத்தித் , தன்பக்கம் ஈர்க்கும் திட்டம்தீட்டிச் செயல்படுத்தும் வேகமும், அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளத்தை எதிராகத் தூண்டிவிட்டு மறைமுகமாகச் செயல்படும் குள்ளநரித்தனமும்தான்.

பிரம்ம சாமுண்டீஸ்வரி

எந்த அவசரமும் இல்லை. என் மனதிற்குள் அம்மா திரும்ப திரும்ப நினைவுக்கு வந்து கொண்டே இருந்தாள். இப்படி ஒரு நாளில் தானே அம்மாவும் தூக்கு போட்டுக் கொண்டாள். இதே போலத்தானே அம்மாவும் நிர்வாணமாக பிணவறையில் கிடந்தாள். அவளையும் இப்படித்தானே கட்டினேன் மனம் நினைவுகளால் அலைகழிந்தது. நீண்ட பெருமூச்சுடன் கண்களை இறுக மூடிக் கொண்டேன்.நாற்றம் ஒரு சுழல்.அதில் தான் எல்லா கசடுகளும் இருக்கிறது என்பதைப் புரிய எத்தனை காலம் ஆகித் தொலைக்கிறது ? அதை புரிந்து கொள்வதற்குள் காலத்தின் முடிவே வந்து தொலைத்து விடுகிறது. 

மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 5

This entry is part 5 of 9 in the series மித்ரோ மர்ஜானி

மகளின் தலையை அன்போடு தடவி, குர்தாஸ், பேரனை மடிமீது அமர்த்தி, கொஞ்சி மகிழ்ந்தார். ஜன்கோ அம்மாவை அணைத்துக் கொண்டாள். தனவந்தியும், மகளை ஆரத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாள். தனவந்தி நீண்ட நேரம் மகளை அணைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து மித்ரோ, “கொஞ்சம் அன்பை மருமகள்களுக்கும் மீதி வையுங்கள் அம்மா” என்று கேலி செய்து சிரித்தாள்.ஜன்கோ சந்தோஷமாக அண்ணிகளையும் தழுவிக் கொண்டாள். சின்ன அண்ணி கண்ணில் படாததைப் பார்த்த ஜன்கோ, “அண்ணி நன்றாகத் தானே இருக்கிறாள் அம்மா? அண்ணியும் கண்ணில் படவில்லை, அண்ணன் குல்ஜாரியும் கண்ணில் படவில்லையே என்று கேட்டாள்.

கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம்

மகன் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்த போது அவள் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகப் போகிறாள் என்று நினைத்த அவனுக்கு அவளுடைய நடத்தை இயற்கைக்கு விரோதமாக தோன்றுவது இயல்பு. இங்கு பிரசாதின் கண்ணோட்டம் சாதாரண ஆணின் பார்வையை முன்வைக்கிறது. அது ஆண்களின் கண்ணோட்டம் என்று மாலதி சந்தூருக்குத் தெரியும். அதற்கு மாறாக பெண்கள் நடந்து கொண்டால் ஆணாதிக்கம் அடிபட்டு போகும் என்று கூட அவருக்கு தெரியும். அதனை அவர் பிரசாதின் வாய்வழியே விமரிசனம், சுய பரிசோதனை என்ற விதமாக, மூர்த்தியோடு நடந்த உரையாடலில் ஒரு பகுதியாகக் காட்டுகிறார். கற்பு, தாய்மை என்னும் மாயத் திரைகளை கிழித்துக் கொண்டு பெண்கள் சைதன்யம் உள்ளவர்களாகும் இந்த காலத்திற்கு தகுந்தாற்போல் ஆண்களும் தம் அதிகார, அகங்கார இயல்புகளை விட்டு விட வேண்டும் என்ற எச்சரிக்கை அதில் தெரிகிறது.

அதிரியன் நினைவுகள் – 5

This entry is part 5 of 22 in the series அதிரியன் நினைவுகள்

ஏதன்ஸ் நகரை அடைந்த மறுகணம் என்னுடைய மனதைப் பறிகொடுத்திருந்தேன்; நானோ, பிறர் சந்தேகிக்கிற விரும்பத்தகாத தோற்றம்கொண்ட மாணவன், அங்கு நிலவிய கலகலப்பான சூழல், வேகமாக பரிமாறிக்கொள்ளப்பட்ட உரையாடல்கள், நீண்ட ரம்மியமான மாலைப்பொழுதுகளில் காலாற நடக்கும் தருணம், வேறெங்கும் அறிந்திராத விவாதங்கள், தர்க்கங்கள், ..அனைத்தையும் முதன்முறையாக அங்குதான் சுவைத்தேன். கணிதம், கலை இரண்டுமே சுழற்சிமுறையில் எனது தேடலுகேற்ப தங்கள்பால் அக்கறை கொள்ளவைத்தன. …மருத்துவர் தொழில் எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்; அப்பணியின் அடிப்படை அணுகுமுறை, எனது சக்கரவர்த்தி தொழிலுக்கென முயற்சித்துப் பெற்ற அணுகுமுறையை ஒத்திருந்தது.

பெருங்கரடி: கிரெக் பேர் பற்றிய நினைவுகள்

கிரெக் பேரை நான் முதன் முதலில் எப்போது சந்தித்தேன் என்று நினைவில்லை, ஆனால் எங்கள் ஆரம்பகால சந்திப்புகளில் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு முன், மெதினா நகரிலிருந்த ஒரு கோடீஸ்வரரின் அடக்கமான ஆனால் உச்ச நிலை தொழில் நுட்பம் கொண்டிருந்த வீட்டில் (இதற்கான பாராட்டுகள் அவர் மனைவிக்கே சேரும்) நேர்ந்தது. (அந்தக் கோடீஸ்வரரின் பெயர் இங்கு தேவையில்லை.) கிரெக்கும் நானும் புத்தகங்களைப் பற்றி உரையாடினோம். 

முது மது (நாட்படு தேறல்)

சாண்ட்ரா விழுங்குவதற்குச் சில கணங்கள் எடுத்துக் கொண்டாள். “இல்லைதான், உங்களிடம் இருப்பது ஜனங்களே பிரச்சினைகளாக இருந்தாலும்,  அவர்கள் தங்கள் பிரச்சினைகளிலிருந்து ஓடிப் போக வழி செய்வது.”..டாக்டர் கோல் அசைவின்றி அமர்ந்திருந்தார், … “ஆமாம், அது ஒரு பெரும் பங்கு இதிலெல்லாம். நாம் ஒரு பெரிய சிக்கலை உருவாக்கி விட்டு, அதன் விளைவுகளைச் சந்திக்காமல் அவற்றிலிருந்து பறந்து போய் விட முடியாது. கடிகாரத்தைத் திரும்பி வைத்து, நிஜ வாழ்வில் ஏற்பட்ட சேதங்களை மற்ற மனிதர்கள் மீது சுமத்த முடியாது. நீ இதைச் சரியாகப் பிடித்து விட்டாய்.”

ஒந்தே ஒந்து

சுவாமிநாதன் குமரநாதனின் நெருங்கிய நண்பன். அவன் பெற்றோர்கள் பல மாநிலங்களில் வசித்ததால் அவர்களுக்குப் பல மொழிகள் பழக்கம். அச்சமயம் அவன் தந்தை பெங்களூர் விமானப்படை அதிகாரிகளின் பயிற்சியில் இருந்தார். கன்னடம் தமிழ் மாதிரிதான். பல வார்த்தைகள் கிட்டத்தட்ட ஒண்ணா இருக்கும்.ஒன்று இரண்டு மூன்று… எப்படி சொல்லணும்? 

விஜி ராஜ்குமார் கவிதைகள்

இப்படித்தான் இருக்கிறேன்
மிகவும் மிகவும்
பேசிக்கொண்டு
சிரித்துக்கொண்டு
படபடத்துக்கொண்டு
ஏன் இப்படி என்று கேட்டுக்கொண்டு
ஆனாலும் இப்படித்தான் இருக்கிறேன்

யமுனோத்ரி

This entry is part 4 of 12 in the series கங்கா தேசத்தை நோக்கி

யமுனா நதிப் பாலத்தைக் கடந்து யமுனோத்ரிக்குச் செல்லும் வழியில் வழியில் ‘கருட கங்கா’ என்று கிளை நதி ஒன்று வருகிறது. கோடைக்காலத்தில் பனி படர்ந்து அழகாக இருக்கும் பகுதி நாங்கள் சென்றிருந்த பொழுது நதியாக ஓடிக் கொண்டிருந்தது. தூரத்திலிருந்தே தெரியும் ஆசிரமங்களில் தங்கும் வசதிகளும் இருக்கிறது. கோவிலை அடைத்தாற்போல தெரியும் நீல வண்ண கட்டடங்களும் அழுக்குத் தார்ப்பாய்கள் போர்த்திய குடில்களும் குப்பை மூட்டைகளும் திருஷ்டிப்பொட்டாக கண்களை உறுத்தியதில் வருத்தமாக இருந்தது. எத்தனை ரம்மியமான இடத்தில் இருக்கிறது இந்த புண்ணியத்தலம்! ஏனோ நமக்குக் கோவிலைப் பற்றின அக்கறையோ அந்தச் சூழலைக் காக்க வேண்டிய பொறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை. யாரிடம் சென்று முறையிடுவது? திருந்த வேண்டியது நாம் தானே?

வெண்பனியா வெண்மலரா?

இத்தொடரில் வெண்தோகை, வெண்மையான ஃபுஜி மலை, வெண்பனி ஆகியவற்றின் வரிசையில் இப்போது வெண்சாமந்திப்பூ. இரவெல்லாம் வெண்பனி பொழிந்துள்ளது. காலையில் கண்விழித்துச் சாளரத்தின்வழி பார்த்தால் வெண்கம்பளத்தை விரித்து வைத்தாற்போல் பனி எங்கும் படர்ந்திருந்தது. வெண்சாமந்திப்பூச் செடியின் மீதும் படர்ந்திருந்ததால் எது பூவின் இதழ், எது உறைபனி எனப் பிரித்தறிய முடியவில்லை. ஒருவேளை இதழ்களை மடித்துப் பார்த்தால் வேண்டுமானால் கண்டறியலாம்.

ரிஸின்

மார்கோவின் படுகொலையை இப்போது நினைக்கையில் , அக்கால அரசியல் காழ்ப்புக்கள் அப்படி நஞ்சூட்டப்பட்டு நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றும் , ஆனால் அப்போதும் இப்போதும் அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடில்லை என்பது 2020ல் ருஷ்ய எதிர்கட்சி தலைவரும், ஊழலுக்கெதிரான செயற்பாட்டாளருமான அலெக்ஸி நவல்னி (Alexei Navalny)க்கு நடந்த நஞ்சூட்டி கொல்லும் முயற்சியை அறிந்து கொண்டால் தெரியவரும். ரிஸின் கொண்டிருக்கும் ஆமணக்கு எண்ணெய் , உணவுப்பொருட்களில் சிறு அளவில் இவ்விதைகள் சேர்க்கப்படுவது ஆகியவை மிகுந்த கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும்

இயற்கையின் கலகம்

Nature’s Mutiny (இயற்கையின் கலகம் ) என்னும் இந் நூலின் போக்கில் பழக்கப்படாத கடுங்குளிர் காலநிலை என்ற பாடத்தைக கடந்தும் கணிசமான தூரம் பயணிக்கிறோம். . புவி முன்பை விட குளிரடைந்தது என்று நிச்சயமாக அறிந்துள்ளோம்: முந்திய கால வெப்பநிலைகளை மதிப்பிடுவதற்குரிய பல்வகை நுணுக்கங்கள்- எடுத்துக் காட்டாக ஐஸ் உள்ளகங்கள்(ice cores) மற்றும் மர வளையமுறை, (tree rings method)-மூலம் அதற்கான ஆதாரம் காண முடியும். மேலும் கடிதங்கள், நாட்குறிப்புகள், விளக்கப் பேருரைகள் (sermons) ,மது உற்பத்தியாளர்களின் பதிவுகள் போன்ற பற்பல வடிவங்களில் குளிர் தாக்கம் குறித்த விரிவான கையெழுத்து வர்ணனைகள் உள்ளன.

எத்தகையப் படங்களுக்கு வரவேற்பு அதிகம் ?

கலைஞர் தன்னுடைய வண்ணப்படத்தை ஏஜன்சிக்கு விற்று விட்டாலும், அதன் முழு உரிமையாளரும் அவரே. அது ஏஜன்சிக்குச் சொந்தமாகாது. இது ஒரு விற்பனை அமைப்பு – அவ்வளவுதான். பங்களிப்பாளர் (இந்தத் தொழிலில் கலைஞர்கள் contributors அல்லது content contributors என்று அழைகப்படுகின்றனர்), எப்பொழுது வேண்டுமானாலும், தன்னுடைய படைப்பை ஏஜன்சியின் இணையதளத்திலிருந்து நீக்கி விடலாம்

காலப் பெருங்களம்

அறிவியல், பொதுவாக, பலகட்டச் சோதனைகளை எதிர் கொண்டுதான் தன்னை நிரூபித்துக் கொள்ளும். அவ்வகையில் 2022ன் அறிவியல் செழுமையும், காலம் நிர்ணயிக்கும் ஒன்றாகவே இருக்கும். ஆயினும், 2022லேயே அறிவியலின் எட்டு வியத்தகு அதிசயங்கள் தங்களின் இருப்பையும், அவசியத்தையும் உணர்த்தியுள்ளன. இதில் அதிசயம் என்னவென்றால், அந்தத்துறையைச் சார்ந்த விற்பன்னர்களே அதன் வீச்சைக் கண்டு வியக்கிறார்கள்.