தமிழ் இலக்கியம் பூரா பெரும்பாலும் வாழ்ந்து கெட்டுப் போனவங்களைப் பத்தித்தானே இருக்கு. அதுதான எழுத்தாளங்களுக்கு லேசா எழுத வருது. சோகத்த எழுதுறது சுலபமா இருக்கு என்று தோன்றியது. இந்த மாதிரி, நாராயண பிள்ள மாதிரி சின்னச் சின்னப் பணக்காரங்கதான் அரசியல், சமூக மாத்தங்களிலே தாக்குப் பிடிக்க முடியாமே சில பேரு நொடிச்சுப் போயிருதாங்க. டாடா, பிர்லா மாதிரி பெரும் பணக்காரங்களை ஒலகத்துல நடக்கிற மாற்றங்கள் ஒண்ணும் பண்ணுதது இல்லே. அம்பானி குடும்பம், அதானி குடும்பம் எல்லாம் எத்தன தலைமொறை ஆனாலும் நொடிச்சுப் போகாது. இவங்க எல்லாம் பல தொழில்கள்ள மொதலீடு செஞ்சு நிரந்தரப் பணக்காரங்களா இருக்காங்க.
Category: இதழ்-285
அஷ்டத்யாயீ
பாணினி ( Pānini ) கி மு 350ல் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் வசித்தவர் எனக் கூறப்படுகிறது. இந்திய மொழியியலின் தந்தை என்று மதிக்கப்படுபவர். அவர் எழுதியது, (சிற்சில முன் தொகுப்புக்களின் உதவி கொண்டும், தானே பெரும்பாலும் வடிவமைத்தும்) அஷ்டத்யாயீ என்னும் வடமொழி இலக்கண புத்தகம். எட்டு அத்தியாயங்கள் கொண்டுள்ள நூல். இங்கே அத்தியாயங்கள் என்று குறிப்படுவது புத்தகங்களை. ஒவ்வொரு புத்தகத்திலும் நான்கு பாடாந்தரங்கள். வடமொழி இலக்கணத்திற்கான 4000 நெறிமுறைகள் கொண்டுள்ளது. இதன் சிறப்பே இது வெறும் இலக்கண நூல் மட்டுமில்லை; படிப்படியான வழிமுறைகளின் படி, இதைக் கொண்டு இலக்கண சுத்தமான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் அமைக்க முடியும் என்பதால் இது முழு அளவிலான ஒரு மொழி இயந்திரம்.
உன் பார்வையில்
பாட்டிலைக் காண்பித்து அவர்கள் போனதும் மீதமிருக்கும் இரு மடக்கு பியரை குடித்துவிட்டுப் போகலாம் என்று விக்னேஷ் உன்னிடம் கண் ஜாடையில் சொல்கிறான். நீ வேண்டாம் என்று தலையசைத்து பாட்டிலை வீசச் சொல்லி கண் காட்டுகிறாய். விக்னேஷ் மறுத்துத் தலையசைத்துச் சிரிக்கிறான். திடீரென ஒரு சைரன் ஒலி கேட்கிறது. சாலையில் ஒரு போலீஸ் ஜீப் தலையில் சுழலும் விளக்குகளோடு வந்து நிற்கிறது. உங்களுக்கும் ஜீப்புக்கும் நடுவே நிற்கும் பாஸ்கரும் ஜெயபாலும் சல்யூட் அடிக்கின்றனர். ஜீப்பின் முன்னிருக்கையிலிருந்து திரண்ட உடல்வாகுடன் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு காவல் அதிகாரி இறங்குகிறான்.
வானம் பொழிகிறது பூமி விளைகிறது
போவதற்கு முன் தயிர் சாதம். திரும்பிவந்ததும் ஒரு தம்ளர் மோர். மறுநாள் வீட்டில் தங்கியவர்களுக்குக் கதை சொல்ல வேண்டும். கடைசி காரியம் தான் சிரமம். நடுநடுவில் நிறுத்தி சங்கரி விவரம் கேட்பாள். ‘குளிகை சாப்பிட்டதுமே ராணி கிளியா மாறிட்டாளா? அது எப்படி?’ பதில் தெரியாமல் அவன் முழிப்பான். இந்த தடவை. கவனம் சிதறாமல் திரையில் வைத்த கண் எடுக்காமல்…
காரியம்
அவனது பேச்சு செய்யும் தொழில் பற்றி தாவியது. மரியாதைக்குக் கூட அவன் என்னைப் பற்றி விசாரிக்காமல் இருப்பது எனக்கு துக்கம் தருவதாக இருந்தது. தொழிலில் அவனது சாம்ராஜ்யம் எப்படி நீண்டது என்று குறித்து விளக்கும் போது என்னிடம் இருந்த வெள்ளரி தீர்ந்து போயிருந்தது. இதை எப்படி அவன் கவனித்தான் என்று தெரியவில்லை அவனிடம் இருந்த பொறித்த சிக்கன் துண்டுகளை கொண்ட தட்டை என்னிடம் தள்ளினான். நான் மறுக்காமல் எடுத்துக்கொள்வேன் என்று நினைத்துவிடக்கூடாது என்பதால் மறுத்தேன். இதை எடுக்காவிட்டால் நம்மிருவருக்கிடையே இனி ஒட்டுமில்லை உறவுமில்லை என்று எழ முற்பட்டான். நான் சிக்கனை எடுத்துவிட்டேன் ஆனால் வாயில் வைக்கவில்லை. வெகுநேரம் அப்படியே இருந்ததால் மீண்டும் கோபித்துக்கொண்டான். சிக்கனை எடுத்து வாயில் வைத்ததும்தான் மீண்டும் இயல்பானான்.
பனி இறுகிய காடு
அக்காவு யோசித்த முகத்துடன் இன்னைக்கு “இன்னிக்கு அவரு ஊருக்கு போறாரு” என்றான் மெதுவாக. புரிந்துக் கொண்டவர் போல தலையசைத்து “உள்ள உட்காருங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார். இரவின் சாயல்கள் பெருகிவரும் நேரம், பெரிய உருண்டை பல்பு உயரத்தில் எரிந்தது. அதன் வெளிச்சம் மஞ்சள், இளம்சிவப்பு நிறங்களை வெளிப்படுத்தின. உள்ளே வந்த போது மாறியிருந்தார். கழுத்து மணிகளின் ஓசை மிக மெல்லியதாக வைத்தியின் உள்ளத்தில் ஒலித்தது. அவ்வோசையை பின் தொடர்ந்தால் அவர் கைவேலைகளின் வேகத்தை அறியமுடியும். கண்களை மூடிக் கொண்டான் வைத்தி. முழுமையான இருள் பிரதேசம். அவன் இருப்பது அவனுக்கே தெரியவில்லை
மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
வெடியுப்பை வைத்து விளையாடியிருக்கிறார்கள் அவர்கள். தீபாவளி முடிந்து சுவதேசி பட்டாசு தயாரிக்கிற முயற்சியாம். எக்குத்தப்பாக ஒரு சிறு கரண்டி வெடியுப்பை நகக்கண் அளவு இத்தனூண்டு கந்தகத்தோடு கலந்து எரிய விட்டத்தில் ஏதோ வெடிப்பு உண்டாச்சாம். விரல் பிழைத்தது பகவான் கருணை. காயம் சீக்கிரம் ஆற மூலிகைச் சாறு தடவணும். அதுக்குத்தான் பறிச்சுட்டுப் போறேன். ஏற்கனவே நாலைந்து வருஷம் முந்தி இதே மாதிரி வெடியுப்போட விளையாடினாங்க. மூலிகை அரைச்சுப் பத்து போட்டு குணமாக்கினேன். இப்போ அதைவிட அதிகமா வெடியுப்பு. தேவையில்லாத இதர சேர்மானம். அதிகம் மூலிகை. அதிகம் நாள் எடுத்து குணமாகறது”. வைத்தியர் விளக்கினார்.
சிவன்ன சமுத்திரம்
இந்தக் கோவிலில் இன்னொரு ஆச்சரியமும் உண்டு. இங்கே சிற்பிகளின் பெயர்களை சிற்பங்களின் அடியிலேயே பொறித்து கவுரவப் படுத்தியிருக்கிறார்கள். ஏறக்குறைய 800 வருடங்கள் கழித்து பெங்களூரிலிருந்தும், மைசூரிலிருந்தும் வந்தவர்கள் தங்களின் கருப்புக்கண்ணாடிகளை நெற்றியின் மேல் உயர்த்தி வைத்து, நகப்பூச்சு மின்னும் விரலால் கற்களில் பொறித்திருக்கும் கன்னட லிபியை வருடி, பாலேயா, சவுடேயா, நஞ்சைய்யா, என்ற இந்த சிற்பிகளின் பெயர்களை வாய் விட்டு உச்சரித்ததைப் பார்த்த பொழுது இது அந்த மகத்தான கலைஞர்களுக்கு நாம் செய்யும் சிறு மரியாதை என்று என் மனதில் பட்டது.
மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 4
மித்ரோ, நின்றபடியே தலை முடியை வகிடு பிரித்து, இருபுறமும் கிளி மற்றும் பறவையைப் போல் இருக்கும் கிளிப்புகளை பொருத்திக் கொண்டு, பின்னலை இழுத்துப் பின்னி குஞ்சலம் வைத்து கட்டிக் கொண்டாள். பிறகு, பெட்டியில் இருந்து வாசனை திரவிய குப்பியை எடுத்து, “உடம்பு சூடாக இருந்தால் சொல்லுங்கள் அண்ணி, உங்களுக்கும் இந்த வாசனை திரவியத்தைப் பூசி விடுகிறேன்” என்றாள்.
அதிரியன் நினைவுகள் – 4
என் தந்தை, ஏலியஸ் அஃபர் அத்ரியானுஸ்(Aelius Afer Hadrianus) நல்லொழுக்கங்கள் நிறைந்த மனிதர். தேசம், அரசாங்கம் என அவர் உழைத்தபோதும், பலனடைந்தவரில்லை. செனெட் அவையில், அவர் குரல் எடுபட்டதில்லை. வழக்கமாக நம்முடைய ஆதிக்கத்தின் கீழிருக்கும் ஆப்ரிக்க பகுதி நிர்வாகிகள் செல்வத்தில் கொழிப்பதுண்டு, ஆனால் இவர் அங்கும் எதையும் சம்பாதித்தவரில்லை. திரும்பிய பின் இங்கும் ஸ்பெயின் நாட்டில் நமது கைவசமிருந்த இட்டாலிகா (Italica) நகராட்சியில் ஓயாமல் உள்ளூர் சர்ச்சைகளைத் தீர்த்துவைத்து சோர்வுற்றதுதான் அவர் கண்ட பலன். இலட்சியங்களற்ற மனிதர், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் பெரிதாக அனுபவித்தவரில்லை. பெரும்பாலான மனிதர்களைப்போலவே ஆண்டுதோறும் மேலும்மேலும் நிறமிழந்து, இறுதியில் அற்பவிஷயங்களில் வெறித்தனமாக ஒரு முறைமையைக் கையாண்டு தம்மை சிறுமைபடுத்திக்கொண்டார்.
மாலதி சந்தூர், ரேணுகா தேவி
மாலதி சந்தூருக்கும் அவ்விதமாக பெண் வாசகர்கள் மிக அதிகம். 1952 லேயே பிரமதாவனம் என்ற பெயரோடு ஆந்திரபிரபா பத்திரிக்கையில் வெளிவந்த மாலதி சந்தூரின் பத்திக்காகக் காத்திருந்த பெண் வாசகர்கள் மிகப் பலர். அந்த நாட்களில் குக்கிராமங்களில் வசித்த பெண்கள் கூட அந்த பத்திரிகையை தபால் மூலம் வரவழைத்துக் கொண்டார்கள் என்றால், மாலதி சந்தூர் போன்ற பெண் எழுத்தாளர்கள் பெண் வாசகர்களை எத்தனை ஏற்படுத்திக் கொண்டார் என்பது புரிகிறது. பல வெளிநாட்டு மொழி நாவல்களை தெலுங்கு மக்களுக்கு அறிமுகம் செய்து எழுதிய கதைகள் ‘பாத்த கெரடாலு’ (பழைய அலைகள்) என்ற பெயரோடு பிரசுரமாயின.
யார் ஐரிஷ்காரர் ?
இப்போதெல்லாம் என்னோட அழகான பொண்ணு அத்தனை களைச்சுப் போய் வரா, அவ அந்த நாற்காலியில உட்கார்ந்ததுமே தூங்கிப் போயிடறா. ஜானுக்கு மறுபடியும் வேலை போயிடுத்து, ஆனா அவங்க என் உதவியைக் கேட்கறத்தை விட்டுட்டு, இன்னொரு ஆயாவை குழந்தையைப் பாத்துக்கற வேலைக்கு அமர்த்தி இருக்காங்க, அவங்களுக்கு அது கட்டுப்படி ஆகாதுன்னு இருந்தாலும் பரவாயில்லையாம். வேற எப்படி இருக்கும், அந்தப் புது ஆயா ரொம்ப வாலிபம்தான், குழந்தையோட ஓடி ஆடித் திரிய முடியறது.
சோசியலிசம்: நிறுவனங்களை பலவீனப்படுத்துவதா?
அவர் நாடும் சோசியலிசம் நிறுவனங்களை பலவீனப்படுத்துவது அல்லது அதற்கு மேலும் சென்று அவற்றை அழிப்பது ஆகிய வழிமுறைகளைக் கையாளுவதில்லை. அல்லது அதில் அடிப்படையாகவே புதிய ஆளுகைக் கருவிகள் கொண்டுவரப்படும் என்ற கற்பனைகளும் இல்லை. நடப்பில் உள்ள இயங்கமைவுகள் (mechanisms) மற்றும் குறியீடுகள் (indices) -வரிவிதிப்பு, மக்களுக்காக செலவிடுதல், பெருநிறுவனத்தின் நிர்வாகக் குழு, பொருளாதாரப் புள்ளி விவரங்கள், உயர் கல்வி, யூரோப் ஒன்றியம்,மத்திய ரிசர்வு அமைப்பு – ஆகியவற்றை மாற்றியமைத்து புதிய சமத்துவ நியாயத்தைப் (Egalitarian Logic ) பின்பற்றச் செய்வதே அவர் நோக்கம்.
குளிரில் தனிமை கொடிது
மலைமீதுள்ள கிராமம் எல்லாப் பருவங்களிலும் ஆள் நடமாட்டம் குறைந்தே காணப்படும். ஜப்பானின் மலைப்பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் குளிர்காலங்களில் பனிப்பொழிவைப் பெறுபவையாகவே இருக்கின்றன. எனவே, இப்பாடலில் குறிப்பிடப்படும் மலை எது என்று தெரியாவிட்டாலும் பனி பொழிவதால் மேலே செல்ல மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் இலையுதிர்காலத்தின் தொடர்ச்சியாகப் பனிக்காலம் வருவதாலும் அடுத்து வசந்தகாலம் வரும்வரை மரங்களில் இலைகள் துளிர்விடா. மனிதர்கள் வசிக்கும் மலைவீடுகள் மட்டுமின்றி மரங்களும் தனிமையை அனுபவிக்கின்றன என்று கவித்துவமாக இயற்றியிருக்கிறார்.
மேற்கத்திய இசை: எளிய அறிமுகம்
வெறும் மேலதிக கொண்டாட்டங்களுக்கான இசையை கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு. சங்கீதம் வாயிலை திறந்து வைத்துக்கொண்டு அரவைணைக்க தயாராக இருக்கும் தருணத்தில் விலகிவிட்டிருக்கிறேன். நமது நம்பிக்கையில் சில தத்தளிப்புகளை உருவாக்குகிறது. பழகிய சிந்தனைகளை கேள்விக்குள்ளாக்கிறது. கற்பனையின் எல்லை என்று நீ வகுத்தது அடிப்படை தவறு . மேலும் விஸ்தரி என்ற அறைகூவல்.
ஆறு கவிதைகள்
இந்த நிமிடங்களை
அற்புதமாக்க
இப்பொழுதே எதும் நடக்கத் தேவையில்லை
அன்றொரு நாள்
எலியாட்ஸ் கரையில்
புறா எச்சமிட்டுத் துவைக்காத சட்டை
சந்தாதாரரின் ஒரு முறை பயன்பாடு
இசை நிகழ்ச்சிக்குச் செல்லும் தனி ஒளிப்படக் கலைஞர் -அவருக்கும் செய்தித்தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை- அழகாகப் பல வண்ணப்படங்களை உருவாக்கி, ஏஜன்சிக்கு மேலேற்றுகிறார்என்று வைத்துக் கொள்வோம். அந்த ஏஜன்சியில் இசைத் தளத்திற்கும் கணக்கு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். செய்திக் கட்டுரையுடன் சுடச்சுட வண்ணப்படத்தைத் தேடி, ஏஜன்சியிடம் போனால், தனி ஒளிப்படக் கலைஞரின் படம் பிடித்துப் போக, ஏஜன்சிக்கு காசு கொடுத்து வாங்கி, தன்னுடைய செய்திக் கட்டுரையில் இசைத் தளம் வெளியிட்டால், தனி ஒளிப்படக் கலைஞருக்கு ஒரு சிறு அளவு வருமானம் கிடைக்கும்! இசைத்தளத்திற்கு, முழு நேர ஒளிப்படக் கலைஞரை அமர்த்துவதை விட, இந்த ஏற்பாடு, விலை குறைவானது.
வீடு, அலை, மதுரம் & கருப்பை காய்தல்
சிறிது கன்னியாகிறாள்
கனவுக்கண்களோடு
அலைகிறாள்..
கொஞ்சம் உன்னித்துப்
பார்த்தால்
கண்ணின் ஓரத்தில்
சிறிது காதல் கசிவுகூட
உண்டு..
மிஸல்டோ – முத்தச் சிறுகிளை
பொதுவெளியில் பாராட்டுவது, அன்பை தெரிவிப்பது ஆகியவற்றிற்கு அவ்வளவாக பழக்கப்பட்டிருக்காத தென்னிந்திய சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு நிச்சயம் இது வெட்கத்தை உண்டாக்கும் நிகழ்வுதான்.அந்த குறுங்கிளை மிஸல்டோ (Mistletoe) என்னும் ஒரு மர ஒட்டுண்ணிச்செடியின் பகுதி. இந்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இச்செடியின் கிளைகள் அலங்காரத்துக்கான பயன்பாட்டில் இருக்கின்றன எனினும் அதனடியில் முத்தமிட்டுக் கொள்ளும் வழக்கம் இந்தியாவில் இல்லை.
கனவின் நீரோடை
கனவுகள் போல தாவரங்கள்
கரையின் இரு பக்கங்களிலும்
ரகசியக் குறிப்புகளோடு
தவமிருந்த மரங்களை இறுகப் பற்றியபடி
கனவுகள் போல தாவரங்கள்
கரையின் இரு பக்கங்களிலும்
ரகசியக் குறிப்புகளோடு
தவமிருந்த மரங்களை இறுகப் பற்றியபடி
பர்கோட்
முதன்முதலாக யமுனை ஆற்றைக் கடந்து செல்ல பச்சை வண்ணம் அடித்த பாலம் ஒன்றில் ‘கடகட’ சத்தத்துடன் கடந்து மழையால் துவம்சம் செய்யப்பட்ட சாலைகளில் பயணம். மலைராணி முந்தானை சரியச் சரிய, யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சிறு நகரத்தைக் கடந்து மீண்டும் மலையில் பயணம். சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள். இப்பவோ எப்பவோ என்று காத்துக் கிடக்கும் கருமேகங்கள். ‘நௌவ்கான்’ என்ற ஊரில் சாலையோரத்தில் ஒரே ஒரு தேநீர்க்கடையை அம்மா, அப்பா, மகன் என்று மூவர் நிர்வகிக்கிறார்கள். அவர்கள் சொல்வது தான் விலை. சாப்பாடும் தயார் செய்து தருகிறார்கள். அப்பா டீ போட, அம்மா சமையலையும் மகன் கடைக்கு வருபவர்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
இரு கவிதைகள்
ஓர் இசைக் குறிப்பின்
இடைவெளியில் ஜனித்த
மௌனத்துடன் பெயரற்ற நதியில்
தனக்காகக் காத்திருக்கும் படகில் பயணிக்கத்
துவங்குகிறான் சித்தார்த்தன்
படகின்
ஒரு புறம் குவித்து வைக்கப்பட்டுள்ள பூக்களை
அதிகாலைப் பனியின்
உதடுகள் உரசி துய்க்கின்றன
உன்னை ஒன்று கேட்பேன்
சேட்ஜிபிடி மனிதனுக்குகந்த சாதனம். அது நம் மொழியில் உரையாடுகிறது. தொலைக் காட்சி, இணையம், காணொலிகளுடன் நாம் நிகழ்வின் நடுவே உரையாட முடியாது. பின்னரும் கூட கருத்துக்களை மட்டும் தான் சொல்ல முடியும். சேட்ஜிபிடி அப்படியல்ல. அது உங்கள் அலைபேசியில் இருக்கும் பல்திறன் களஞ்சியம், உரையாடும் நண்பன், வழிகாட்டும் ஆசிரியர், கற்றுக் கொள்ளும் சீடன், செல்லக் குழந்தை, மீள மீளக் கேட்டாலும் அலுத்துக் கொள்ளாத உறவு, பாரதி கண்ணனைப் பற்றி பாடியதைப் போல், நண்பனாய், சேவகனாய் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
பணம் பணம்… (2)
முதலில் ஒரு சௌகரியமான இல்லம் தேட வேண்டும். தற்போதைய இடம் தாற்காலிகம் என்பதுடன் அவன் தேவைக்கு சிறியது. அவன் தொழிலுக்கு எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம். ஆனால் ‘ஹார்மொனி’யிலோ ‘ஃப்ளவர்-ஆர்ரோ’விலோ சந்திக்கும் பெண்களை அவனால் விலையுயர்ந்த விடுதிக்கும் திரைப்படத்துக்கும் அழைத்துப்போக முடியும். அவர்களில் ஒருத்திக்கு அவன்மேல் ஆர்வமும் நம்பிக்கையும் பிறக்கும். அதனால் ஊரின் எல்லைக்கு உள்ளேயே.