“புதுசா வேலைக்கு சேர்ந்தவங்க எல்லாம் இருக்காங்க… நான் மட்டும் என்ன?” என்று விக்கத் துவங்கியவள் முகத்தை அழுந்தத் துடைத்தபடியிருந்தாள்.
அழுது முடிக்கும் வரை பொறுமை காத்தேன். அமைதியான அவ்வறையில் என் தலைக்கு மேல் இருந்த மின்விளக்கில் டங்.. டங் என்று பூச்சியெதோ மோதும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
சிறுது நேர மௌனத்திற்குப் பிறகு “ஸாரி, ரெஸ்ட் ரூம் போய் வருகிறேன்” என்றபடி வெளியேறினாள்.
“நேற்றும் ஒரே அழுகை, நான் சாகத்தான் செய்யணும்னு என்னவெல்லாமோ சொல்லிட்டு இருந்தாங்க.”