அந்துப் பூச்சி

“புதுசா வேலைக்கு சேர்ந்தவங்க எல்லாம் இருக்காங்க… நான் மட்டும் என்ன?” என்று விக்கத் துவங்கியவள் முகத்தை அழுந்தத் துடைத்தபடியிருந்தாள்.

அழுது முடிக்கும் வரை பொறுமை காத்தேன். அமைதியான அவ்வறையில் என் தலைக்கு மேல் இருந்த மின்விளக்கில் டங்.. டங் என்று பூச்சியெதோ மோதும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

சிறுது நேர மௌனத்திற்குப் பிறகு “ஸாரி, ரெஸ்ட் ரூம் போய் வருகிறேன்” என்றபடி வெளியேறினாள்.

“நேற்றும் ஒரே அழுகை, நான் சாகத்தான் செய்யணும்னு என்னவெல்லாமோ சொல்லிட்டு இருந்தாங்க.”

தியேட்டர் இல்லாத ஊரில்

மாத்தையப் படம் ஒளிபரப்பப்படவிருக்கும் அன்றைய இரவை முன்னிட்டு அன்று பின்னேரமே நான் மாமியின் வீட்டுக்குப் புறப்பட்டு விடுவேன். இந்தப் பயணத்தில் என்னுடன் என் மூத்த சகோதரங்களான மர்ழியாவும் மர்வானும் இணைந்துகொள்வார்கள். மர்வான் படம் பார்ப்பதற்காக என்னை விட கடுமையாக முண்டக்கூடியவன். சத்தமில்லாமல் ஒரே நாளில் ஒன்பது படம் ஒரு முறை பார்த்திருந்தான்.
ஆனால் சிலவேளைகளில் இந்த மாத்தையப் படமும் கைகொடுக்காமல் விட்டு விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அப்போதெல்லாம் மனம் ஒரு எரிமலைபோல் வெடித்துக் குமுறும். சிலநேரங்களில் மாத்தையப் படம் ஓட இருக்கும் இரவாகப் பார்த்து கரண்ட் போய் விடும்.

வாக்குமூலம் – அத்தியாயம் 14

எம்.ஜி.ஆர். மன்றத்த ஆரம்பிச்சு வைக்க கே.ஆர். ராமசாமியும், கருணாநிதியும் வந்திருந்தாங்க. ரொம்ப ஒண்ணும் பெரிய கூட்டம் இல்ல. ஏழெட்டுப் பேரு நின்னுருப்பாங்க. கோனாக்கமார் தெருக்கார திருவை அண்ணாமலைதான் அந்த மன்றத்தை நடத்துனாரு. கீழ, தெருவுல ரெண்டு நாற்காலியப் போட்டு கே.ஆர். ராமசாமியவும், கருணாநிதியவும் உட்காத்தி வச்சிருந்தாங்க. கருணாநிதியும், ராமசாமியும் தோள்கள்ல நீளமா நேரியல் மாதிரி துண்டைத் தொங்க விட்டிருந்தாங்க. அயர்ன் கடைக்காரர் அவா பாட்டுக்கு துணிகளைத் தேய்ச்சுக்கிட்டிருந்தாரு. பெரிசா எந்தப் பரபரப்பும் இல்ல. கொஞ்ச நேரம் இருந்துட்டு ரெண்டு பேரும் பொறப்பட்டுப் போயிட்டாங்க.

டாக்டரும், முனைவரும்

திருமணம் முடிந்து கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்ல தயாராகிக் கொண்டிருந்த சில நாட்களில்  அந்த கிராமத்து புகுந்த வீட்டில் புதுப்பெண்ணான என்னை  கும்பல் கும்பலாக வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு நாளில்  என் மாமியார்  அவர் வயதில் இருந்த இரு பெண்களுடன் வந்தார். அவர்கள் என்னருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் அவர்களில் ஒருவரைக்காட்டி என் மாமியார் என்னிடம் ’’இவளுக்கு ரெண்டு நாளா காய்ச்சலடிக்குது’’ என்றார்.நான் ஆதுரமாக அவர் கையை பற்றிக்கொண்டு ’’அப்படியா நல்ல ஓய்வில் இருந்து உடம்பை பார்த்துக்குங்க’’ என்றதும் என் மாமியாருக்கு வந்ததே கோபம், ’’ஆமா, இதை சொல்லத்தான் நீ இருக்கியா? ஒரு ஊசி போடு சரியா போகும்’’ என்றர். எனக்கு தூக்கிவாரி போட்டது.’’’ஊசியா என்னத்தை சொல்லறீங்க?”’ என்றேன்.

மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 2

This entry is part 2 of 9 in the series மித்ரோ மர்ஜானி

மித்ரோ பதில் சொல்ல வாய் எடுப்பதற்கு முன்பாகவே அறை வாசலில் மூத்த கொழுந்தனாரின் நீண்ட நிழல் விழுந்ததை பார்த்து கூச்சமடைந்தாள். முந்தைய இரவின் சம்பவங்கள் நினைவுக்கு வர, கொழுந்தனாரை சீண்டும் விதமாக, துப்பட்டாவை தலையை மறைத்தும் மறைக்காமலும் இழுத்துவிட்டுக் கொண்டு, ” கொழுந்தனாரே! என் ஓரகத்திக்கு நான் ஒருபோதும் சமமாக மாட்டேன் என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும்… கொஞ்சம் இந்தப் பக்கமும் உங்கள் பார்வை பட்டால்…..”

ஜன கண மன எவ்வகையை சேர்ந்தது? அதன் பொருள் என்னவாக இருந்தது?

தாகூர் பிரம்ம சமாஜத்தின் வாரிசு. இம்மார்க்கம், உபநிடத சித்தாந்தத்தை மட்டுமே துணையாகக் கொண்டுள்ள, பலருக்குப் புலப்படாத ஹிந்துயிச வழி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது. பல்வேறு வண்ணங்களை உடைய கடவுள்களை கொண்ட பக்தி மார்க்க ஹிந்துயிசத்தை பார்த்து முகம் சுளிக்கக் கூடியது அந்த சமாஜம். எனவே தாகூர் யாரந்த இறைவன் என நேரடியாகக் கூறவில்லை. ஆனால், எண்ணிலடங்காக் காலமாக, மனித வரலாற்றில் யாத்திரீகர்களை அவர்களது பயணத்தில் முன் நடத்திச் செல்லும் நித்தியத் தேரோட்டி யாரென்பதை எவருமே சந்தேகமின்றி அனுமானம் செய்ய இயலும். அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்து கீதோபதேசம் செய்த கண்ணனையே தாகூர் இங்கு குறிப்பிடுகிறார்.

அயிதம் இந்திரா, பாரதி தேவி, காவேரிபாய், தேவமணி சத்யநாதன்

சாரதா விஜயம் வரலாற்று நாவல். 14 ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சங்கம வம்சத்தைச் சேர்ந்தவரான ஹரிஹராயரின் வாரிசுகள் ஆட்சி செய்த காலத்தில் பாமினி அரசர்களோடு நடந்த போர்கள், அரசாங்க விரிவாக்கம் ஆகியவற்றின் பின்னணியில் இந்த நாவலின் கதையம்சம் நடக்கிறது. வரலாற்றுப்படி பார்த்தால் தேவராய விஜயம் என்று இருக்க வேண்டிய நாவலின் பெயர் சாரதா விஜயம் என்றுள்ளதால் இந்த நாவலின் கதை முழுமையாக கற்பனை என்பது தெளிவு .

திருக்கூத்து

அந்த கோயில்ல பூசன பண்ணின பண்டாரங்களால வாய்மொழியா சொல்லப்பட்ட கதைகளும் பாடல்களும்தான் பண்டார நூலா இன்னக்கி இருக்கு. அந்த நூல தொகுத்தவர் சின்னப் பண்டாரம். அவர் அந்த நூலுக்கு இட்ட பெயர் திருநடம். ஆனா பண்டார நூலுங்குற பெயர்தான் நெலச்சிருக்கு. அந்த நூல் பெருவெள்ளங்களப் பத்தி பேசுது. மொத்தம் நூற்றியெட்டு தடவ அங்க வெள்ளம் வந்து ஊர நீர் சூழ்ந்திருக்கு. ஒவ்வொரு முறையும் உச்சிகால பூஜையோட மழை வலுத்து வாரங்களுக்கு தொடர்ந்திருக்கு.

ஆமிரா கவிதைகள்

எட்டுக்கால் பூச்சிகளாக
சுவற்றில் ஊரத் துவங்குகின்றன பகல் பொழுதுகள்
பயம்
கருகிய சர்க்கரைப் பாகின் நெடியாக
அறையெங்கும் விரவுகிறது

 மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு

பெத்ரோ அவர்களே, உத்தரவு எல்லாம் யாரும் யாருக்கும் தரவோ பெறவோ வேண்டியதில்லை. எங்கள் அரசியல் அமைப்பில் பாதுகாப்புப் பணியை அதற்கான கட்டணம் பெற்றுக்கொண்டு விஜயநகரம் செய்து வருகிறது. நாடுகளின் தொகுப்பு அவர்களால் நிர்வகிக்கப்பட்டு பரஸ்பர ’விற்பனை – வாங்குதல்’ சார்ந்த பணம் ’கொடுத்தல் – வாங்குதல்’ அவர்களால் சீராகத் தீர்வு செய்யப்படுகிறது. பார்த்திருப்பீர்களே, இங்கே உத்தர கன்னடத்திலும், அடுத்த பிரதேசங்களில் அத்தனை நாடுகளிலும் விஜயநகர் காசு பணம் தான் புழங்குகிறது. வராகன், பணம், காசு, விசா. அவற்றின் மதிப்பு எல்லா இடங்களிலும் ஒன்றுதான். அந்த நிதி மதிப்பு நிர்வாகம் விஜயநகரம் செய்வது”

நீர்ப்பறவைகளின் தியானம்

This entry is part 47 of 48 in the series நூறு நூல்கள்

பத்து வருடங்களுக்கு முன்பு “நீர்ப்பறவைகளின் தியானம்” கதை தொகுப்பை வாங்கினேன்.  அப்போது என்னை கவர்ந்த முதல் அம்சம் என்பது இதில் உள்ள கதைகள் எல்லாமே படிப்பதற்கு “ஜாலி”யாக இருந்தது என்பதுதான். “ஜாலி” என்பது வாசிப்பின்பம் / சுவாரஸ்யம் / சலிப்பின்மை என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்.  “இடம் பெயர்தல்” பேய்கதை பாணி, “காணாமல் போனவனின் கடிதங்கள்” என்பது துப்பறியும் பாணி கதை என விதிவிதமான கதை கலவையாக இருந்த யுவனுடைய கதைகள் எனக்கு பிடித்திருந்தன.

மூத்தோர்கள்

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் 2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் உருவானார்கள் என்று இன்றைய அறிவியல் கருதுகிறது. இன்றைய மனிதர்களுக்கு ஒப்புமை சொல்லும் வகையில் ஒத்த, உடல் எழும்பி நேராக நிற்கும் (Homo Erectus) விரைப்பானத் தன்மை கொண்ட வகையினர் அவர்கள். தொன்மையான மனிதர்களின் அழிந்து பட்ட உயிரினம் இந்த ‘ஹோமோ எரெக்டக்ஸ்.’ கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து  உலகின் பல பாகங்களுக்குப் பயணம் செய்து அவர்கள் பல்வேறு வகையில் ஒத்த இனங்களாக, ஆசியாவில் நியண்டர்தால்களைப் போல் பரிணாம வளர்ச்சி பெற்றார்கள். இன்றைக்கு மூன்று இலட்சம் வருடங்களுக்கு முன் வரை ஹோமோ சேபியன்ஸ் அல்லது இன்றைய நவீன மனிதன் தோன்றியிருக்கவில்லை.

ஏகபோகம்

This entry is part 3 of 4 in the series 1950 களின் கதைகள்

மறுநாள் அப்பாவின் வருகைக்கு ஆவலுடன் காத்திருந்தான். ஐந்து மணியில் இருந்தே வாசற்படிக்கட்டு அவனை ஒட்டிக்கொண்டது.
சைக்கிளின் பின்னால் செய்தித்தாளில் சுற்றிய பெட்டி.
“ஆகா!”
“சௌந்தரம்! ஜாக்கிரதையாப் பிரி!”
உள்ளே. செக்கர்ஸ்-பாக்கேமன். மடிக்கும் அட்டையின் இரு பக்கங்களில் இரண்டு ஆட்டங்கள். தேவையான காய்கள், பகடைகள்.
குமரநாதனுக்கு அழுகை வரும்போல இருந்தது.
“இதை ஆடினா மூளைக்கு நல்லதுன்னு சொல்லிக்கொடுத்தான். செஸ் மாதிரி அவ்வளவு கஷ்டமா இருக்காதாம்.”

அதிரியன் நினைவுகள்-2

This entry is part 2 of 21 in the series அதிரியன் நினைவுகள்

காதலென்கிற வியத்தகு மனித உறவிற்கு முன்பாக, அதிலும் குறிப்பாக மற்றொரு உடல் மீதான அதன் அவாவிற்குச் சொல்லப்படும் நியாயங்கள் குழப்பமானவை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்புதிய மற்றொரு உடலும் குளிப்பாட்டுவது, உணவு தருவது, முடிந்தவரை அதன் இன்னல்களை தவிர்ப்பது இவற்றைத் தவிர பெரிதாக அக்கறைகாட்டாத நமது சொந்த உடலைப் போன்றதுதான், இருந்தும் புதிய உடலின் ஸ்பரிஸத்திற்குத் தவிக்கிறோம். ஏனெனில் இப்புதிய உடல் வேறொர நபரால் இயக்கப்படுகிறதென்கிற எளிமையான காரணம் ஒருபுறம், இன்னொருபுறம் அவ்வுடலில் நாம் காண்கிற வசீகர அம்சங்கள்.

கையில் கேமிரா இருந்தால் வங்கியில் கோடிகள்! எப்படி?

நானும் அப்படித்தான் 2018 -ல், நினைத்தேன். இன்னும் சில ஆண்டுகளில், நம்முடைய வண்ணப்படங்களை உலகெங்கும் தரவிறக்கம் செய்து, இந்தத் தொழிலில் நாம் பெரிதாக கவனம் செலுத்தலாமே! குறைந்தபட்சம், விலையுயர்ந்த லென்சுகள் மற்றும் காமிரா உபகரணங்களை வாங்கலாமே! இப்படி கனவுகளோடு ஆரம்பித்ததுதான் என் வண்ணப்பட வியாபாரப் பயணம். நடுவில் தெரியாமல் இருந்த பல விஷயங்கள் பற்றியதே இக்கட்டுரைத் தொடர்.

கங்கா தேசத்தை நோக்கி

This entry is part 1 of 12 in the series கங்கா தேசத்தை நோக்கி

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தாய்மண்ணில் கால் பதித்து உற்றார், உறவினர்களையும், கோவில் குளங்களையும் பார்த்து விட்டு வந்தால் தான் அடுத்த இரு வருடங்களை நிம்மதியாக கழிக்க முடியும் என்ற மனநிலையிலேயே இருந்து பழகி விட்டதால் 2018 மதுரை விசிட்டிற்குப் பிறகு 2020 கோடை விடுமுறைக்காக ஆவலாக காத்திருந்தோம். “கங்கா தேசத்தை நோக்கி”

சில்லறைகள்

நான் தெரியும் என்று தலையாட்டினேன். அவள் தொடர்ந்தாள், “துர்கா பூஜைக்கு கொல்கத்தா எங்கும் வெச்சு வணங்கும் துர்காமாவோட மண் சிலை இருக்கே? எங்களை மாதிரி ஒரு பொண்ணு வீட்டுக்கு பூசாரி வந்து வேசி வீட்டுவாசல் மண் வாங்கி கலக்காமல் எந்த துர்கா சிலையும் செய்ய மாட்டாங்க. மரியாதையைப் பத்தி நீ எங்ககிட்ட பேசறயா? கிளம்பு இங்க இருந்து.”
பேசிவிட்டு அவள் நகர்ந்துவிட்டாள்.

நண்பனே பகைவனாய்

அவர் அணியும் டி ஷர்ட், கலைந்த தலை, எளிமையான தோற்றம், வீகன் (Vegan) உணவுப் பழக்கம் அனைத்தையும் சொன்னவர்கள், சொல்ல வேண்டிய முக்கியமான ஒன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள்- அது அவரது நிறுவனம் நிலைத்து, நேர்மையாக நடை பெறுமா என்பது. அட்டையை வைத்து புத்தகத்தை மதிப்பிடுவது, குறிப்பிட்ட மார்பு, இடை, தொடை அளவுள்ளவர்கள் மட்டுமே பெண்களில் பொருட்படுத்தத் தக்கவர்கள் என்பது, ஆண் என்பவன் அறிவுஜீவி என நினைப்பது மனித இனத்தின் குணம் போலும்; பல பத்திரிக்கையாளர்களுக்கு இதையும் மீறிய ஒன்று இருக்கிறது- அது தாங்கள் விரும்பும் விதத்தில் செய்திகளை வளைப்பது, பெரும் கௌரவங்களை இந்தத் தொடர்புகளின் மூலம் அடைவது, பரபரப்பை அள்ளித் தெளிப்பது.

மருந்து

பரிசோதனை அறைக்கு சீக்கிரமாகவே போயாகிவிட்டது. அங்கு கரடி ஒவியம் ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. நாலு பேருடைய உள்ளங்கைகளை பெயிண்டால் அச்செடுத்து கரடியின் கால்களாக மாற்றியிருந்தனர். இரண்டு பெரிய கை, இரண்டு சிறிய கை. Kate, Avery, Robert, Kelly என்று ஒவ்வொரு பாதத்திலும் பெயர் எழுதப்பட்டிருந்தது. சிறுசு அதனுடைய கையை ஒவ்வொரு கரடியின் காலிலும் பொருத்திப் பார்த்தது. படம் கழன்று விழுவது போன்று ஸ்திரமற்று இருந்தது. உடனே கையை எடுத்து விட்டு அம்மாவின் மடிக்கு ஓடிவிட்டாள்.

காணும் பேறைத் தாரீரோ?

இயற்கையை வியக்கும் இன்னோர் எளிய பாடல். பேரரசர் உதா அரசபதவியைத் துறந்த பின்னர் ஓய் ஆறு ஓடிக்கொண்டிருக்கும் ஒகுரா மலைக்குப் பயணம் செல்கிறார். அவரது உடன்கூட்டத்தில் ஒருவராக இப்பாடலின் ஆசிரியரும் செல்கிறார். இலையுதிர்காலத்தில் ஜப்பானில் மேப்பிள் மரங்களின் இலைகள் அடர்சிவப்பு நிறத்தில் அழகாகக் காட்சியளித்துப் பருவ முடிவில் உதிர்ந்து பனிக்காலம் தொடங்கும்.

அழலேர் வாளின் ஒப்ப

ஆற்றங்கரைக்கு வந்தவர்கள் கண்டு விட்டனர்.இதனால் பற்றிக்கொண்ட அந்த ஊர்ப்பழி எனும் அலர் மெல்லிய சிறு சிறு பூக்கள் காற்றில் இறைவது போல் பரவிவிட்டது.