ஒளியின் நிழல்

“ஆனால் அவர் மகன்களிடம் அடக்குமுறையை மட்டுமே கையாள்கிறார். அவர் நவீன காலத்தின் தொழில்களின் மீது பற்றிழந்து விட்டதால் அவரது மகன்கள் நவீனக்கல்வியை பெற அனுமதி மறுக்கிறார். அவர் பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தலால் அவரது பிள்ளைகளும் அப்படியே செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூட அவருக்கிருக்கலாம். ஹரிலாலும் மணிலாலும் சத்யாகிரகிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். கைதாவதிலிருந்து நிலத்தில் பாடுபடுவது வரை அவர் தந்தை விரும்பியதையே அவர்கள் செய்ய வேண்டும் என்று கருதுவது இந்த காலத்து பிள்ளைகளிடம் அதிகப்படியான எதிர்பார்ப்பு அல்லவா?”

ஏ பெண்ணே 10

This entry is part 10 of 10 in the series ஏ பெண்ணே

அம்மா வாய் திறக்காமல் மௌனமாக படுத்திருக்கிறார். பேச்சின்மை அம்மாவின் மீது கவிழ்ந்திருக்கிறது. கையில் அணிந்திருந்த  வளையல்களை கழற்றி தலையணை அடியில் வைத்து விடுகிறார். போர்த்தியிருந்த போர்வையை பந்தாக சுழற்றி தரையில் வீசி எறிகிறார். தலைக்கு கீழ் இருந்த தலையணையை எடுத்து ஒரு மூலையில் வைத்து விடுகிறார். குஷனை அறையின் வாயிலருகே தூக்கி எறிகிறார். கீழே விரிக்கப்பட்டிருக்கும் படுக்கை விரிப்பை இழுக்க முயற்சித்து,  தலையை இடமும் வலமும் சுழற்றுகிறார்.

அண்ணே, சித்திரமும் நாப்பழக்கமாண்ணே?!

செந்தில் இப்படி ஒரு கேள்வியை கவுண்டமணியிடம் கேட்டால், “ஏண்டா மாங்கா தலையா, உருப்படியான பழமொழிய இப்படியாடா நாசம் பண்ணுவே?” என்று அவர் திரும்பக்கேட்கலாம். அதற்கு செந்தில், “நான் நாசம் பண்ணலைண்ணே. புதுசா வந்திருக்கிற கம்ப்யூட்டர்தான் இப்படி பழமொழியை பாதியாக்கிருச்சாம்”, என்று பதில் சொல்லலாம். கணினி என்றால் ஓரமாய் உட்கார்ந்துகொண்டு “அண்ணே, சித்திரமும் நாப்பழக்கமாண்ணே?!”

சற்றே இனிக்கும் கரும்புகள்

பேசாமல் நிற்க நிற்க அவள் என்னை உரசி உரசி வெட்டுவது போல உடல் முழுவதும் எரிய ஆரம்பித்தது. மீண்டும் அவள் அழ ஆரம்பித்தாள். மூர்ச்சை ஆவது போல விக்கித் திணறினாள். பதற்றத்துடன் அதை பார்த்துக்கொண்டிருந்தேன். சொந்த வீட்டை அப்பாவின் குடியால் விற்றுவிட்டு பிச்சைக்காரியைப்போல இறங்கிய அம்மாவின் முகம் அழுது முடித்ததும் அவளுக்கு வந்துவிட்டிருந்தது. அல்லது அதை அவளாகவே தருவித்துக்கொண்டாள். நானாகவே அந்த பெண்ணின் அப்பாவிற்கு போன் செய்தேன். அம்மா பதறி என் கையிலிருந்து போனை பிடுங்கும் முன். அவர் எடுத்திருந்தார். 

பாப்பாத்தி என்னும் பரமேஸ்வரி

வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் மூத்த மகனாக இருந்த அந்த ஆணின் உள்ளுறைந்திருந்த விலங்கொன்று அப்போதிலிருந்து விழித்துக்கொண்டது. அம்மா ஒருபோதும் அந்த இணை வைத்தலை மனத்திலும் கனவிலும் நினைத்து விடக்கூடாது என்பதை இத்தனை வருட தாம்பத்ய வாழ்வில் அப்பா என்கிற பெரும் வன்முறையாளர் கணம் கணமாக நினைத்துக் கொண்டே தான் இருந்தார். தன் எல்லாச்செயல்களிலும் அதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அம்மாவை வதைத்துக்கொண்டே இருந்தார்.

பிராட்டம்மா எழுதிய நாவல் ‘சோபாவதி’

விண்ணப்பம் என்ற பெயரில் கனுபர்த்தி வரலக்ஷ்மம்மா எழுதிய முன்னுரையில் இந்த நாவலின் கருப்பொருளாக அவருடைய பதினான்காவது வயதில் அவருடைய வீட்டிற்கு வந்த ஒரு முதிய பெண்மணி தன் தாய்க்குக் கூறிய கதையை எடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார். பிற பெண்டிர் மோகத்தில் அலைந்த கணவனிடம் மகள் பட்ட கஷ்டங்களைப் பற்றி அவர் கூறிய விஷயமே தனக்கு நாவல் எழுதுவதற்கு ஊக்கப்படுத்தியது என்று குறிப்பிடுகிறார். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதி அப்படியே விட்டு விட்டதாகவும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிழிந்து போகும் நிலையிலிருந்த பிரதியை மீண்டும் எழுதி அச்சேற்றியதாகவும் கூறுகிறார்.

ஆலமர் அவை – அறிதலின் எல்லைகள்-  நிறைவுப் பகுதி

அறிவார்ந்த கட்டுமானம் ஒன்று, நம்மால் நினைக்க முடியாதது, ஆனால், பௌதிக உண்மைகளை அறிய உதவும் முக்கியமான ஒன்று- இதைத்தான் இந்தக் கட்டுரை வெளிப்படையாகச் சிந்திக்கிறது. நாம் அறியக்கூடிய சாத்தியங்கள் உள்ளன என்றாலும், நாம் அதைச் செய்ய முடியாமல் போவதற்கு, அத்தகு அறிவைப் பற்றிய சிந்தனையே நம்மிடம் இல்லை என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாக்குமூலம் – 12

ஒலகத்திலே எல்லாமே கணக்குத்தான். நாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போலன்னு சிவவாக்கியர் சொல்லுதாரு. சூரியன், பூமி, இந்தக் கெரகங்கள் எல்லாமே ஏதோ ஒரு கணக்குலதான் சுத்திக்கிட்டு இருக்கு. வேகம் கூடினாலும் போச்சு, வேகம் கொறைஞ்சாலும் போச்சு. ஒடம்புச்சூடு கூடிரவும் கூடாது, கொறைஞ்சிரவும் கூடாது. இந்த மாதிரித்தான், எல்லாமே கணக்குதான்.

மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு

அர்ஜுனனான அவர் சந்தேகத்தைத் தீர்த்த கிருஷ்ணன். அதெப்படி கஸ்டமர் கேட்ட அரை மணி நேரத்திலே பாயசம் வந்துடறது என்று கேட்டால், மனைக்கு வரச்சொல்லி அங்கே வரிசையாக வைத்திருந்த நாலு ரெப்ரிஜிரேட்டரில்  பால்  பொடியும், கண்டென்ஸ்ட் மில்க்கும் பொடித்து வைத்த ஏலமும், வேகவைத்த முந்திரியும், ஊற வைத்த குங்குமப்பூவும், பிசினாக வைத்த பச்சைக் கற்பூரமும், வேகவைத்த பாலடையும், பல நிலையில் பாகு வைத்த வெல்லமும், சீனியும் பசும்பாலும், எருமைப் பாலும்,  விதவிதமாக பால்பாயசத்தின் முன்வடிவங்கள் என்று அறிமுகப்படுத்தினார். 

1957 – 1 செம்பருத்தி

This entry is part 1 of 4 in the series 1950 களின் கதைகள்

ஆனால் நகராட்சி பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் சம்பளம் அவள் ஆசையைத் தடுத்திருக்கும். அவள் செய்வது ஜெபநேசனுக்குத் தெரியாமலும் இருக்கலாம். கணவன் மனைவி அந்தரங்கத்தில் தலையிடுவது தவறு. அதே சமயம் இந்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு மனித சட்டம். உலகில் கிறித்துவக் குழந்தைகளைப் பெருக்குவது அதற்கும் மேலான கடவுளின் ஆணை. அதை நிறைவேற்றுவது கடவுளின் பணியாளரான ஆசீர்வாதத்தின் கடமை.

அவனாம் இவனாம் உவனாம்..

இந்த நிறப்புடவை இந்தப் பெட்டியில் இடம் பெற வேண்டுமென்று ‘மறைந்துள்ள மாறிகள்’  நினைக்கின்றன. (இதைத்தான் இந்தப் பிறவியை இங்கே எடுக்க வேண்டுமென்று வினைப் பயன் தீர்மானிப்பதாக நாம் சொல்லி வருகிறோமோ, என்னமோ?) இது முதல் நிலை மாய எண்ணம் என்றால் அவைகளைப் பிரித்து, தொலைதூரத்தில் வைத்தாலும் அவைகளின் தொடர்புகள் அறுபடுவதில்லை, பிரிக்கப்பட்ட பொருட்கள், தங்களுக்குள்  தொடர்பு கொண்டு ஒரே நிலையை அடைய முடியும்  என்பது மிகப் பெரிய மாயம். இதைத்தான் ஐன்ஸ்டெய்ன் ‘தொலைவில் உள்ள பயமுறுத்தும் ஒன்று’ என்று சொல்லி தனது ஐயத்தைச் சொன்னார்.. அது அப்படியல்ல என்று பின்னர் வந்த குவாண்டம் இயக்கவியல் இயற்பியலாளர்கள் காட்டி வருகின்றனர். 

ஜாவீத் அக்தர்

This entry is part 12 of 12 in the series கவிதை காண்பது

‘யுகாந்தர்’, மிதுன் சக்ரபோர்த்தி – சங்கீதா பிஜ்லானி நடித்து, என். சந்த்ரா எழுதி இயக்கிய திரைப்படத்துக்குப் பாடல் எழுத ஜாவீத் அக்தர் அழைக்கப்படுகிறார். இசையமைப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் தயக்கத்துடன் ஒரு பாடலில் கண்ணபிரானின் ‘ஆரத்தி’ படமாக்கப்படும், பாடல் வரிகளும் அதற்கு ஏற்றாற்போல் அமையவேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். இதை ஏன் தயங்கித் தயங்கிச் சொல்கிறீர்கள் எனக் கேட்டுப் பாடலின் மெட்டை வாசிக்கச் சொல்லியிருக்கிறார்.

மங்களாம்பிகை

அவரவர் உடைமைகளை எடுத்துக் கொண்டு அரிபரியாக இறங்கி கொண்டிருந்தனர். சென்னை வந்து இறங்கிய உடனே ஒரு வித பதற்றம் எல்லோருக்கும் தொற்றிக் கொள்கிறது. சென்னையின்  வேகமே அதன் பலம் பலவீனம்.எங்கு தான் எதற்கு தான் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்? என்ற எண்ணம் தோன்றும். நானெல்லாம்  இத்தனை வேகமாக ஓடினால் தலை குப்புற விழுந்துவிடுவேன்.வேகம் என்றாலே எனக்கு ஒரு வித அலர்ஜி. அதற்குச் சில காரணங்கள் உண்டு.

பூனை- வித்தியாசமான பார்வைகளில்

இறத்தல்- நீ அதை ஒரு பூனையிடம் செய்யக் கூடாது.
ஏனெனில், ஒரு காலி அடுக்குமாடி வீட்டில்
ஒரு பூனை என்ன செய்ய முடியும்?
சுவர்களின் மேல் ஏறுவதா?
மேசை நாற்காலிகளை உரசுவதா?
இங்கு எதுவும் வித்தியாசமாய்த் தோன்றவில்லை.
ஆனால் எதுவும் ஒரே மாதிரியாயில்லை.
எதுவும் நகர்த்தப்பட்டிருக்கவில்லை.
ஆனால் அதிக இடமிருக்கிறது.
இரவு நேரத்தில் விளக்குகளும் ஏற்றப்படவில்லை.

பேராசிரியரின் கிளி

நம் ஆராய்ச்சியின் முடிவுகள் நம்மை அதீதமான தன்னம்பிக்கைக்கு இட்டுச் சென்று விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தினால் செனிசெண்ட் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க முடிந்தபோதிலும், நோயாளிக்கு இதனால் உருவாகும் நிரந்தரமான வலியை நீக்குவதில் பல சிக்கல்களை நான் உணர்ந்திருந்தேன். அதனாலேயே அந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் தயக்கம் இருந்தது.

அவளும்

அப்படித் தன்னிடம் எதைப் பார்த்து திருமணம் வரை வந்து விட்டான் இவன் என்று ராணி யோசித்தாள். குமரேசன், கல்லூரியில் கூடப் படித்த சபரி, தன்னோடு வேலை செய்த கௌரிஷங்கர், இவர்களும்தான் காதலித்தார்கள், எவனாவது கல்யாணம் என்று வந்து நின்றானா? …
சந்திரன் வீட்டினர் சந்தோஷமாய் உணவருந்திவிட்டுச்  சென்றதும் ராணி சமையலறையில் அம்மாவுக்கு உதவிக்கொண்டே சொன்னாள் “எல்லாத்துக்கும் சரீன்னு சொல்லறான். டயலாக் வேற பேசறான். அதுதான் சந்தேகமா இருக்கு.” 

குமிழி

“அம்மா….மணி டாகி குட்டி போட்டிருக்கு….” பள்ளி பேருந்து வருவதற்கு காத்திருந்த ஒரு சிறு பெண் என்னைப்பார்த்து கைகொட்டிச் சிரித்தாள். இந்தத் தெரு எனக்குப்பழக்கமானதில்லை. நாங்கள் முன்பு இருந்த வீட்டைக்காலிசெய்துவிட்டு இங்கே வந்திருக்கிறார்கள். மெதுவாகச்சென்று அவர்கள் இருக்கும் வீட்டைக் கண்டு பிடிக்க வேண்டும். அதற்குள் அசந்தர்ப்பமாக அந்த சிறு பெண்ணால் ஆணின் பெயர் சூடப்பட்ட என் அம்மா… அவளிடமிருந்து என்னைக்காக்க வாயில் கவ்வி எடுத்து ஓட்டம் பிடித்தது. 

மூன்று கவிதைகள்

குறியீடு, படிமம், கவித்துவம், கேள்விகள், தார்மீகம்
யாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு
கண் மூடிப் பார்த்து ரசி
அவலங்களின் தெருக்களில்
வானவில் குடை பிடித்து
துள்ளிச் செல்லும் அந்தத் தவளைகளை

உபநிடத சாரம்

அனைத்து உயிர்களையும்
தன் ஆன்மாவுக்குள்ளே காண்பதுவும்
அனைத்து உயிர்களிலும்
தன் ஆன்மாவைக் காண்பதுவும்
ஆத்ம அனுபவம்

பார்வையின் கட்டுமானம்

அம்மா சொன்னாள்: “என்னைப் பெண் பார்க்க டீச்சரையும் அப்பா அழைச்சிட்டு வந்திருந்தாங்க. கூட ஒர்க் பண்ணுறவங்க தானேன்னு நானும் சாதாரணமா எடுத்துக்கிட்டேன். டீச்சர் என்னைப் பார்த்துட்டு, அப்பாகிட்ட போய், பொண்ணு நல்லா இல்லன்னு சொன்னீங்க. ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னாங்க. நான் நல்லா இருக்கேன்னு சொன்னா டீச்சர் வருத்தப்படுவாங்களோன்னு அப்பா அப்படிச் சொல்லியிருப்பாங்க போல.’’ என்றார். எனக்கு அம்மா சொன்னதைவிட பெண் பார்க்க டீச்சரையே அப்பா அழைத்து போனது ஆச்சரியமாக இருந்தது. அப்போது டீச்சரின் மனம் பறவையைப்போல துடித்துக் கொண்டிருந்திருக்குமோ என்றும் வருத்தமாக இருந்தது.