மகோன்னதத்திற்கான ஆயத்தம்: டி.எஸ்.எலியட்டின் ஆரம்பகாலக் கவிதைகள் – 2

அதன் விருப்புறுதியில்லாது தடுமாறும் நாயகன், மிகெலாஞ்சலோவைப் பற்றி கதைத்தபடியே வந்துபோகும் பெண்கள் சூழ்ந்திருக்கும் வரவேற்பறையைத் தவிர்ப்பதற்காகப் புறவுலகு தரிசனங்களை (மலிவான ஹோட்டல்கள், மரத்தூள் பரப்பப்பட்டிருக்கும் உணவகங்கள், நயவஞ்சகமான தெருக்கள், மஞ்சள் மூடுபனி / புகை போக்கிக் கரி படிந்திருக்கும் பூனை போன்றவற்றை) வலுக்கட்டாயமாக நினைத்துப் பார்க்கிறான். மேலும் அப் புறவுலகு ரொமாண்டிசிஸ்ட்களின் வழக்கமான, pathetic fallacy இல்லாது, அதாவது கவிஞரின் உணர்வுகள் கவிதையின் பொருட்களின் மீது திணிக்கப்படாமல் (Art thou pale for weariness… wandering companionless? என்று ஷெல்லியின் பிரசித்தி பெற்ற கவிதையொன்று நிலவைக் கேட்கிறது) நமக்கு அளிக்கப்படுகிறது

வாக்குமூலம் – அத்தியாயம் 8

கடவுளை வழிபட பிரார்த்தனை, மந்திரம், சடங்குகள்னு நெறஞ்சு கிடக்குது. கோவில்களும், தேவாலயங்களும், பள்ளிவாசல்களுமா பெருத்துக் கிடக்கு. எல்லா இடத்திலேயும் பிரார்த்தனையோட முணுமுணுப்பு கேக்குது. பாவம் ஜனங்க. இதிலே செத்துப்போன பிறகு நற்கதி அடையணும், சொர்க்கத்துக்குப் போகணும்னு அதுக்காக வேற கடவுள்கிட்டே மல்லாடுகிறாங்க. இத்தனை பில்லியன் ஜனங்களோட ஆசையையும் அவரு எப்படி நிறைவேற்றி வைப்பாரு? அதனாலேதான் ‘மதம் ஒரு அபின்’னு கார்ல் மார்க்ஸ் சொன்னாரு போலிருக்கு.

சிலையெடுத்தான்  சிலை எடுத்தான்

மகாபாரதத்தில் ஒரு காட்சி- போர் முடிந்து வெற்றி வீர்ர்களாக ஆனால் வருத்தத்துடன், தங்கள் பெரியப்பாவைச் சந்திக்க வருகிறார்கள் பாண்டவர்கள். திருதராஷ்டிரன், தன் புதல்வர்களைக் கொன்ற பீமனைக் கட்டி அணைக்க வருகையில் இரும்பாலான பீம உருவினை கண்ணன் பேரரசரின் முன் நிறுத்துவான்; வெறுங்கைகளாலேயே அதை திருதராஷ்டிரன் நொறுக்கி விடுவான். நிஜ பீமனின் உயிர் இப்படியாகத் தப்பிக்கும்.காமாலைக் கண்ணிற்கு காண்பதெல்லாம் மஞ்சள்.

ஏ பெண்ணே – 6

This entry is part 6 of 10 in the series ஏ பெண்ணே

நீ நிதானமாகவே திரும்பி வா. வீட்டைப் பற்றிய கவலையை விடு. நான் இங்கேயே தான் இருப்பேன். எங்கும் போக மாட்டேன். முடி வெட்டிக் கொள்ள போவதாக இருந்தால்,  எனக்கும் முடி வெட்டிவிடச்சொல். என் முடி கனமாக இருப்பதால்,  மிகவும் கஷ்டமாக இருக்கிறது. முடிவெட்டிக் கொண்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். இனி இந்த முடியை பராமரிப்பது கடினம்.

நீ வருவாயென!

இப்பாடலில் நகாட்சுகி (長月) என்றொரு சொல் வருகிறது. நீண்ட நேரம் இருக்கும் நிலவு என்று பொருள். நிலவு நீண்ட நேரம் இருந்தால் இரவும் நீண்டது என்று பொருள். ஓர் ஆண்டின் நீண்ட இரவு வருவது செப்டம்பர் மாதத்தில். இலையுதிர்காலம் தொடங்கும் நேரம். ட்சுகி (月) என்ற சொல்லுக்கு மாதம் என்றும் ஒரு பொருளுண்டு. தமிழில் திங்கள் என்பதை நிலவுக்கும் மாதத்துக்கும் பொதுவாகச் சொல்கிறோமே, அதுபோல. நீண்ட நிலவு இருக்கும் இரவு என்றும் நீண்ட மாதம் காத்திருந்தேன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்ளலாம்.

பிராணஜீவிதம்

நாம் எப்படி மனம் போன போக்கில் இருக்கிறோமோ, அப்படியே இயற்கையும் நடக்க ஆரம்பித்துவிட்டது. பருவநிலை மாற்றங்களை எல்லா நாட்டினரும் அனுபவிக்கின்றனர். மழை மாதங்களில் மழை பெய்வதில்லை, பெய்தாலும் பெருவெள்ளமாக மாறி கடலில் சென்று சேர்கிறது.ஆல், அரசு, பனை, புன்னை  போன்ற மரங்கள் நெடுங்காலம் வாழக்கூடியவை.மண் அறிப்பைத்தடுப்பவை. காற்றின் மாசைக்கட்டுக்குள் வைப்பவை. பருவ நிலை மாற்றத்தைக்கட்டுக்குள் வைக்க உதவுபவை

கர்மா

முகத்தில் அசடு வழியும் புன்னகையுடன் அமர்ந்திருந்த சாராவையும் பீட்டரையும் நோக்கி, சமாதானத்துக்கான அடையாளமாக ஒரு மெல்லிய புன்னகையைத் தன் கல் முகத்தில் வரவழைக்க முயன்று கொண்டிருந்தாள் திருமதி. ப்ராடி. திரு. ப்ராடி விரைவில் குணமடைய வேண்டும் என்ற அவர்களின் வேண்டுதல்களையும், சிரப்பில் ஊறவைத்த குலாப் ஜாமூன்களையும் இருவரும் மகிழ்ச்சியுடன்  ஏற்றுக்கொண்டனர். சரியாகப் பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு முழுவதும் பீட்டர் தனது இருக்கையில் அசௌகரியமாக நெளிந்தபடியே இருந்தார். 

மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு

கைவேலை காட்டமாட்டாள் அவள் விருந்தாளிகளிடம். சந்தோஷமாக கள்ளும்  பிராந்தியும் கலந்து அருந்தி ஓவென்று குதித்துக் கூக்குரலிட்டு அனுபவிக்கட்டும். நாளை முதல் தள்ளுபடி விலை, இலவச பானம் அவ்வப்போது. நிச்சயம் வந்து விடுவார்கள். கேட்ட மதுவில் ஒரு சிறு நகக்கண் அளவு ஊமத்தைப் பொடி கலந்து விடுவாள். ஒன்றும் புதுசாகத் தெரியாது. கொஞ்சம் தலை கிர்ரென்று சுத்தலாம் என்று வைத்திய செங்கமலம் சொன்னாள். அரிந்தம் வைத்தியரின் சிஷ்யர்களும் அதைத்தான் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். வரும் திங்களுக்குள் இந்த வீரர்கள்   ஹொன்னாவர் வீதிகளில் போதம் கெட்டு அலைவார்கள்

எங்கிருந்தோ—இறுதிப் பகுதி

This entry is part 9 of 9 in the series எங்கிருந்தோ

பாரதத்தில், ஆறு மார்க்கங்கள் முதன்மையாகத் தொகுக்கப்பட்டு சனாதன தர்மத்தின் கீழ் வந்தது. சூர்ய வழிபாடு ‘சௌரா’ என்று அழைக்கப்படுகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் ‘சௌராஷ்ட்ரான மந்த்ராத்மனே! சௌ வர்ண ஸ்வரூபாத்மனே! பாரதீச ஹரிஹராத்மனே! பக்தி முக்தி விதரணாத்மனே!’ என்று சௌராஷ்டிர இராகத்தில் துதிக்கிறார்.

கண்ணாடிப் பரப்பு

அடுத்தநாள் ‘மெகபூபா’ பாடலை மிக மெல்லிய சத்தத்தில் வைத்து தொட்டிக்கு மேலே பிடித்துக்கொண்டேன். வா வா என் அன்பே வாழ்வின் பேரன்பே என்று அலைபேசி அதிர்ந்தது. என்னை போலவே அதற்கும் அந்த ஒலி இனிய அதிர்வாக இருக்குமா என்று தெரியவில்லை. உடனே இந்த மீன் ஆணா பெண்ணா என்று முதன்முதலாக கேள்வி வந்தது. இத்தனை நாள் என்னைப்போலவே அதையும் பெண் என்று நினைத்திருந்தது எத்தனை மடத்தனம் என்று பாடலை நிறுத்தினேன்.

காடு

நனைந்தபோது தான்,
நனைந்ததையே மழை
திருப்பித் திருப்பி நனைப்பதில்
நனைந்தது நனையவில்லையாய்
நனையாதாகிறதென்று
காட்டுக்குப் புரிந்தது
எனக்குப் புரிந்தது.

விடுதலை

குருநிலையை சுற்றி இருக்கும் ஐந்து கிராமங்களுக்கு குரு இரண்டு சீடர்களை கல்விப்பணிக்காகவும் மருத்துவப் பணிக்காகவும் அனுப்பி வைப்பார். யாரேனும் கற்றுக் கொடுக்க சொன்னால் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள். யாரேனும் உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் அவர்களுக்கு என்ன மருத்துவம் என்று சொல்வார்கள். மருத்துவம் என்றால் சிகிச்சை அல்ல. நோயாளியை எதிரில் அமர வைத்து சில நிமிடங்கள் எதிராளியின் கண்களை மட்டும் நோக்குவார்கள். ஐந்து நிமிடம் . அதிகபட்சமாக பத்து நிமிடம். உடல்நிலையில் என்ன கோளாறு என்பதை மட்டும் சொல்லி விட்டு அதற்கு வைத்தியம் பார்க்கச் சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள்.

குங்குமப்பூந் தோட்டம்

வெண் மேகங்கள் கலைந்து பின் கூடி வெவ்வேறு உருவெடுத்து மலை முகடுகளுடன் காதல் பரிமாறிக்கொண்டிருக்கும் காலைப்பொழுது.  ஏதோ இனமறியா இளம் நறுமணத்தில் தடுமாறி அலைந்து கொண்டிருந்தது இளங்காற்று. ஜீலம் நதிக்கரையில் ஜீவனை விடத் தவிக்கும் ஊதாப் பூக்களை நிரப்பிக்கொண்டு, வாய் பேசமுடியாமல் ஊமையாய்ச் சிரித்துக்கொண்டிருந்தன காஷ்மீரின் பாம்பூர் பள்ளத்தாக்குகள். சூரிய ஒளி ஊடுருவுவதற்குள் தங்களைக் கொய்துவிடப் போவதைப் பாவம் அவ்வூதாப் பூக்கள் அறிந்துவைத்திருக்கவில்லை. மண்ணிலிருந்து எட்டிப்பார்த்து இதழ் விரித்துக் கிடந்தன அவைகள். அவ்விதழ்களுக்கிடையில் வளைந்து நெளிந்து துருத்திக்கொண்டிருந்தன அதன் விலையறியாத குங்குமப்பூக்கள். இயற்கையில் பலவையும் அதனின் மதிப்பறியாமலேயே பரவிக்கிடக்கின்றன.

ஸாகே!

ஜப்பானிய தொன்மங்களிலும் ஸாகே இடம்பெற்றிருக்கிறது. ஒரு கிராமத்தில் யமட்டா நோ ஒரோச்சி (Yamata-no-Orochi) என்னும் எட்டுத்தலைகள் கொண்ட நாகமொன்று  ஒவ்வொரு வருடமும்  ஒரு இளம்பெண்ணை  விழுங்க வரும், எட்டாவது வருடம்  அப்படி விழுங்க வருகையில் கிராமத்தினரின் அழுகையை அந்த வழியே வரும் கடலின் கடவுளான  சுசானோ கேட்கிறார். அவர்களுக்கு உதவ முன்வரும் அவர்  அந்த மாநாகத்துக்கு எட்டு மாபெரும் பீப்பாய்களில்  கடும் ஸாகே  மதுவை  நிரப்பி வைக்கிறார். ஸாகே மீது விருப்பம்  கொண்டிருந்த  மாநாகம் எட்டுத்தலைகளையும் பீப்பாய்களுக்குள்   நுழைத்து ஸாகேவை அருந்தி மயங்குகையில் கடவுள் அதன் தலைகளை வெட்டிக்கொல்கிறார் ஜப்பானிய குழந்தைகள் மிக இளமையிலேயே கேட்டு மகிழும் கதைகளில் இதுவும் ஒன்று

பெயர்தல்

காலச்சக்கரத்தில்
பின்னோக்கிப் போவதும் கடினமே.
சர்கோதாவிற்கோ ஜீலத்திற்கோ மியான்வாலிக்கோ
பின்னோக்கிப் போகிறவர்களைக்
கேட்டுப் பாருங்கள்.
பழைய செங்கல் கட்டடிங்களில்
புதிய முகங்கள்.

தமிழ்மணி – கவிதைகள்

தனிமையைப் பற்றிய
உங்களது அளவுகோல்
புகைப்படக்கருவியை எடுத்துக்கொண்டு
காடு, மலை, அருவி தேடிப்போவது