ஒரு கருப்பினப் பெண்ணாக, வழக்கமாக இத்தகைய மாநாடுகளில் செய்வதைப் போலவே, நீங்கள், அங்கு வந்திருக்கும் நீக்ரோக்களை எண்ணும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நூறு பேர்களுக்கும் மேலானவர்கள் குழுமியிருக்கும் அந்த மாநாட்டில், அவர் பன்னிரண்டாம் நபர். மாநாட்டின் முதல் நாளன்று, நகரும் படிப் பாதையில் நீங்கள் மேலேறிச் சென்று கொண்டிருக்கும் போது, அவர் கீழே இறங்கிக் கொண்டிருப்பதை கவனிக்கிறீர்கள். எந்த சுருக்கப் பெயரால் அவரை அடையாளப் படுத்தலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். அவரது சிறிய குச்சி முடி, “கவிஞர்” அல்லது “உயர்நிலைப்பள்ளி கணக்காசிரியர்” என்னும் இரு அடையாளங்களுமே, அவருக்கு சமமாக பொருந்துவதாக எண்ண வைக்கிறது.
Category: இதழ்-271
வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்
அவளுக்கு ஊரோடயே இருக்கணும், நல்லது பொல்லாததுக்கு சொந்த ஜனங்களோட இருக்கணும்னு ஆசை. ஊர்தான் இருக்க விடலியே? பொழைக்க வழி இல்லாமே விரட்டில்லா விட்டுடுத்து. அப்பிடியே வேலை வெட்டி ஏதாவது கெடச்சாலும் படிச்ச படிப்புக்கு கவர்னர் உத்தியோகமா கெடைச்சிரும்?
சிதைந்த நகரமும் சிதையாத் தொன்மங்களும்
கிருஷ்ண தேவ ராயர் காலத்திலேயே ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் வாழ்ந்த தலைநகரம் சில நாட்களிலேயே இடுகாடானது; போர்துகீச யாத்ரி டாமிங்கோ பேஸ் விஜயநகரில் நாட்டியம் ஆடும் பெண்கள் கூட செல்வ செழிப்போடு இருந்தனர் என்று குறிப்பிட்ட அளவிட இயலாத செல்வம் சூறையாடப்பட்டது; சிற்பங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டதோ என்று ஐயப்படும் அளவிற்கு செதுக்கப்பட்ட பல கோவில்கள் இடித்து நொறுக்கப்பட்டன. இருநூற்று ஐம்பது வருட காலம் தென் இந்தியாவிற்கு ஒரு அரணாய் இருந்த சாம்ராஜ்யத்தை பேரிருள் கவ்வியது.
மொழிபெயர்ப்புகளின் கூட்டு நடனம்
என் மொழிபெயர்ப்புகளில் நான் மூலத்தின் பொருளையும் அதன் வடிவத்தையும் எத்தனைக்கு மாற்றமில்லாமல் கொடுக்க முடியும் என்று பார்க்கிற அணுகல் கொண்டவன். இந்த அணுகல்தான் உயர்ந்தது என்றில்லை. அது எனக்குப் பிடித்த முறை என்பதைத் தாண்டி அதை முன்னிறுத்தத் தனி வாதம் ஏதும் இல்லை.நம்பி, தமிழ் வாசகருக்குக் கவிதை இடறலின்றி சரளமாக வாசிக்கக் கிட்ட வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிலைப்படுத்தி மொழி பெயர்ப்பவர். அதனால் மூலத்தின் பொருளை அவருடைய மொழிபெயர்ப்பு இழக்குமா என்றால், இல்லை என்பதுதான் பதில்.
குருதிப் பலி
ஆர்ப்பரித்தபடி அதைச் சுற்றிலும் இளம்பெண்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் தங்கள் கருவுற்ற வயிற்றில் ஒரு கையை அவ்வப்போது வைத்து ஏதோ சொல்லிக் கொள்கிறார்கள். பீடத்தில் இருந்த குழிவில் தலை வைத்து அசைவற்றுக் கிடக்கிறேன் நான். கூட்டத்தின் ஓசை உச்சமாகிறது. முள்முடி தரித்த நீண்ட அங்கியணிந்த ஒருவர் ஒரு பெரிய வாளேந்தி அப்பீடத்தில் ஏறுகிறார். கூட்டத்தில் அவரை வாழ்த்திப் பேரொலி எழுகிறது. எனக்கும் திரும்பி அவரை ஒருமுறையேனும் பார்த்து விடவேண்டும் என்று இருக்கிறது. களிப்பின் உச்சத்தில் சில பெண்கள் தங்கள் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு இரத்தத்தைப் பீச்சியடித்து ஆடுகிறார்கள்.
வானத்து அமரரே!
உலகின் முதன் மொழி எமது
பல்லாயிரம் ஆண்டு தொன்மையானது!
ஆலகாலம் உண்ட சிவன் அருளினான்
நாமகள் உவந்து நாவில் எழுதினாள்
மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
அவர் விமானம் ஏறும்போது கல்பா, மருது இன்னும் மருதுவின் ஆப்பிரிக்க நண்பர்கள், தோழிகள் என்று ஒரு கூட்டமே ஹீத்ரோவ் விமான நிலையத்துக்கு அவரை வழியனுப்ப வந்தது. “போய்த்தான் ஆகணுமா, அதுவும் இந்த சங்கடமான நேரத்திலே?” என்று கல்பா கேட்டாலும், அவளுடைய அப்பா திலீப் ராவ்ஜிக்கும், தம்பி அனந்தனுக்கும் சிறுசிறு பரிசுகள் அடுத்த வாரம் வரும் புத்தாண்டுக்காக பிஷாரடி வைத்தியர் மூலம் தான் அனுப்பி வைக்கிறாள்.
காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்
சோமுவின் முதல் அகாடமி கச்சேரியைப் பற்றிய குறிப்பு, ”ஸ்ரீ சோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது”, என்கிறது. 1960-களிலும் 1970-களிலும் சோமு பாடியுள்ள பல பதிவுகள் இன்றும் கேட்கக் கிடைக்கின்றன. அவற்றைக் கேட்கும் போது சோமுவுக்கு இயற்கையில் சாரீரம் கனமாகவும் அதே சமயம் எளிதில் வளையும் (pliant) தன்மை கொண்டதாகவும், அதி துரித சஞ்சாரங்களை அநாசாயமாக வெளிப்படுத்தக்கூடியதாகவும் அமைந்திருந்தது. பொதுவாக கேட்கக் கூடிய குரல்களில் மந்த்ர ஸ்தாயி பஞ்சமத்திலிருந்து …
காலக் கணிதம்
உலகின் மிகப் பெரிய கல்கட்டுமான சூரியக்கடிகாரம் ஜெய்ப்பூரில் உள்ளது. இது யுனெஸ்கோவால் உலகக் கலாசாரச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. ஜந்தர் மந்தர் என்ற அழகான பெயரில் இயங்கும் இது, முன்- நவீன வானக்கண்காணிப்பகங்களில், துல்லியமாகக் கிரகங்கள் மற்றும், விண்ணகப் பொருட்களின் இயக்கங்களை கணிப்பதற்கும், அறிவதற்கும் உலகத்தில் சிறந்த ஒன்று என யுனெஸ்கோவும், மற்ற வானியலாளர்களும் பாராட்டுகின்றனர். 4609 ஏக்கரில் 19 வானியல் கண்காணிப்புக் கருவிகள் உள்ள ஜந்தர் மந்தர் 1729-ல் கட்டப்பட்டது.
எரியும் காடுகள்-3
என் துப்பாக்கி ரவைகளை நான் திரும்ப அடைந்து விட்டேன். என்ன பெரிய சாதனை இது? என்னிடம் துப்பாக்கி கூட இல்லை.
கதவருகே நான் போக சில எட்டுகள் இருந்தன, அப்போது ஏதோ ஒன்று என் கண்களில் தென்பட்டது. அது கணப்பிடத்தின் மேலே இருந்த மேல் மூடியின் மீதிருந்தது. அந்த கணப்படுப்பிலிருந்து நேற்றைய சாம்பல்கள் சுத்தமாக அகற்றப்பட்டிருந்தன.
நான் அதை உற்றுப் பார்த்தேன், அப்படியானால், ரால்ஃபின் நடத்தை நேற்று திடீரென்று மாறியதற்கும், அந்தத் துப்பாக்கி ரவைகளிருந்த பைக்கும் ஒரு தொடர்பும் இருக்கவில்லை.
குறுங்கவிதைகள்
உன் நிலவைத் தூக்கிக் கொண்டு
நள்யாமம், என் வானைத் தேடுகிறேன்
என் நிலவு காணாமல்.
ஏழாவது மலர்
இளம்பருவத்தில் ஒரு கன்று குட்டியின் மீதேறி சவாரி செய்த கதையைச் சொன்ன போது அவள் சிரிப்பில் குலுங்கினாள். வெளிநாட்டில் வேலை தேடிய போது அடைந்த துயரங்களைச் சொன்ன போது அவள் கண்கள் கலங்கின.தன் பத்திரிக்கை துறை அலுவலகத்திலுள்ள நீண்ட கூந்தலை உடைய இளம்பெண்ணின் மீதான காதலைச் சொன்ன போது கீழுதட்டைக் உதட்டை கடித்துக் கொண்டாள்.லேசாக இரத்தம் வந்தது.
அகிலம் அண்டம்
இவ்விரு சொற்களும் ஒன்றையே சுட்டுவதா? அல்லது அகில அண்டங்களையா? திருவானைக்காவின் அரசி, தாடங்கம் அணிந்த தேவி, அகிலாண்டேஸ்வரி என்ற திரு நாமத்தால் வணங்கப்படுகிறார். அனைத்து அண்டங்களையும் உள்ளடக்கிய அகில நாயகி அன்னை என்ற பொருள் அந்த ஒரு நாமத்தால் உணர்த்தப்படுகிறது. அறிவியலாளர்களின் கூற்றுப்படி இந்த உலகில் 68% கரும் “அகிலம் அண்டம்”
ஃபெனி – முந்திரிக்கனிச்சாறு
போர்த்துகீசியர்களால் 16 ம் நூற்றண்டில் முந்திரி இந்தியாவிற்கு அறிமுகமானதாகப் பொதுவாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் குறிப்பாக தமிழக்தில் முந்திரி இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன.மேலும் திருச்சிராப்பள்ளியின் 2500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலின் கல் தூண்களில் முந்திரிபழங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
அன்னம்
அழுகை இல்லை.. பத்து பன்னிரண்டு வருடம் முன்னால் விட்டுவிட்டுப் போன கணவனை இப்போது துக்கித்து அழ என்ன இருக்கிறது? அவர் விட்டுவிட்டுப் போன அன்றே அழுகை வரவில்லை அவளுக்கு. அவளே தன் கணவனையிட்டு எரிச்சல் ஆகியிருந்தாள். கணவன் என்று இல்லை. வாழவே பேரலுப்பு வந்திருந்தது அவளுக்கு. யாரையுமே எதையுமே பிடிக்கவில்லை. வலிகளூடே ஒரு வாழ்க்கைப் பயணம்.
உனக்காக உறைபனியில்
அரசவையில் உள்ளோர் மற்றும் உடலுழைப்பு அவ்வளவாகத் தேவைப்படாத பணியைச் செய்து வந்தவர்கள் முழுக்கை கொண்ட உடையையும் விவசாயம், தச்சுவேலை போன்ற பணிபுரிவோர் அரைக்கை ஆடைகளையும் போர்வீரர்கள் போன்ற சண்டையிடுவோர் கைப்பகுதி அற்ற ஆடைகளையும் செய்தொழில் வசதிக்காக அணிந்தனர். அரசவையில் இருந்த முழுக்கை ஆடையோர்க்கு அவர்களின் கைப்பகுதியின் தூய்மை முக்கியத்துவம் பெற்றது. அழுக்காகும் வாய்ப்புகள் குறைவு என்பதால் தனக்கு விதிக்கப்படாத ஒரு பணியைச் செய்தாலொழியக் கைப்பகுதியின் தூய்மை கெடாது எனக் கருதப்பட்டது.
மௌலானா ஸஃபர் அலி கான்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், பிறகு முஸ்லிம் லீக் ஆதரவாளராகவும் இருந்தவர் மௌலானா ஸஃபர் அலி கான். தன்னுடைய பத்திரிகை ஜமீன்தாரில் விடுதலை வேட்கைக் கருத்துகளை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழுதியதால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர். இஸ்லாமிய அடையாளங்களுடன், கொள்கைகளுடன் வாழ்ந்த ஸஃபர் அலி கான் இராமனின் புகழ் பாடும் கவிதைகளை எழுதியுள்ளார். அக்கவிதைகள் இஸ்லாத்துக்கு முரண்பட்டவை அல்ல என்னும் கருத்து கொண்டவர்.
மூத்துத்தி மாமி
ரேழியின் வலதுபக்க அறை. அது தான் சமையல் அறையும், பூஜை அறையும். அதோடு ஒட்டிய மற்றொரு அறையில் படுக்கை, அலமாரி இத்யாதிகள். உத்திரத்திற்கு மேலே கொடுக்கப்பட்டிருந்த மர சட்டங்களுக்கு இடையே, வெளிச்சத்திற்காக வைக்கப்பட்டிருந்த கண்ணாடி சதுரத்தின் வழி, சூரிய ஒளி, பல துகள்களின் கலவையாய், நீண்ட வெளிர்மஞ்சள் நிறப்பின்னல் போல, தரைவரை நீண்டது. அந்த வெளிச்சத்தில், மின்னிய இருபுற மூக்குத்திகளோடு மதுரா மாமி, வெண்டைக்காயைத் தரையில் உட்கார்ந்து திருத்திக்கொண்டிருந்தாள். மண்ணெண்ணெய் அடுப்பில், உலை கொதித்தது. மத்தியான சாப்பாடு மாமாவிற்கு எப்போதும் ஆத்தில் தான்.
பாற்கடல்
கோத்தாஸ் காப்பியைத் தவிர ரகு வேறு எதையும் தொட மாட்டான். ‘காலங்காத்தால அதிலே கிடைக்கிற கிக் மாக்டவெல் விஸ்கி கூடக் கொடுக்காது’ என்பான். அந்த விஸ்கியும் ஒரு சிநேகிதனின் பிறந்த நாள் பார்ட்டியில் அல்லது ஆபீசில் யாராவது ரிட்டையராகிப் போனால் நடக்கும் பிரிவு உபசார விருந்தில் கிடைப்பதுதான். என்னமோ தினம் தினம் மாலையில் கைக்காசு செலவழித்து குடித்து வருபவனைப் போலப் பேசுவான். இந்தப் பேச்சு மட்டும் இல்லா விட்டால் உன்னை ஒருத்தன் கூட மதிக்க மாட்டான் என்று அவள் நினைத்துக் கொள்வாள்
குரங்குகளுக்குத் தீனி அளித்தால் வனங்கள் அழியுமா?
இருப்பினும் தாய்லாந்தின் லோப்புரியில் (lopbury ) இருந்து வந்த ஒரு காணொளிப் பதிவு பிரளயத்தைப் போன்ற காட்சியை சித்தரித்தது. நூற்றுக் கணக்கில் மக்காக் எனப்படும் நீண்ட வால் குரங்குகள் தெருக்களில் தெரிவதையும் ,அவற்றின் கண்ணில் பட்ட துர்பாக்கியசாலியிடமிருந்து ஏதாவது உணவுப் பொருள் துணுக்குகளைப் பறித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு அவனை விடாமல் தூரத்துவதையும் காணொளி காட்டியது. இக்குரங்குகள் சுற்றுலாப் பயணிகளிடம் உணவுப் பொருள் பெறுவதைப் பழக்கமாகக் கொண்டவை. அதன் விளைவாக கோயில் இடிபாடுகளைச் சுற்றி ஒரு வெற்றிகரமான விலங்கு உணவளிப்புத் தொழில் உருவாகி இருந்தது. பெருந்தொற்று உண்டாக்கிய லாக்டௌன்கள் மற்றும் பயணத் தடைகளால் இது போன்ற சுலப உணவு ஆதாரங்கள் காணாமல் போய்விட்டன. மனிதரைச் சார்ந்து வாழும் குரங்குகள் வேறு வழியின்றி தெருக்களை ஆக்கிரமித்தன..
உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன?
இன்று தயாரிக்கும் சிடிக்கள் எங்கு போகும்? இன்றைய செல்பேசிகள் எங்கு போகும்? இந்தச் சிந்தனை அவசியம் எழ வேண்டும். ஒரு தயாரிப்பை வடிவமைக்கும் பொழுது, அதன் வாழ்நாள் முடிந்தவுடன், எப்படி மறுபயன்பாட்டிற்கு உதவும் என்பதையும் தயாரிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் அவசியம் சிந்திக்க வேண்டும். கடந்த 300 வருடங்களாக நாம் இதைச் செய்யத் தவறி விட்டோம். இன்று, ப்ளாஸ்டிக், அனல் மின் நிலையம், மின்னணுவியல் சாதனங்கள், அணுமின் நிலையம் என்று எல்லாவற்றிலும், இந்தக் கழிவுப் பிரச்சினை, நம்மை கதிகலங்க வைக்கிறது.