என் தலைக்கான கொன்றை

நடந்து முடிந்திருந்த இறுதிச் சடங்குகள் அங்கிருந்த எல்லாரையுமே அசதிக்கு ஆளாக்கி இருந்தன. அந்த வீட்டிலிருந்த மிகவும் வயது குறைவான பெண்ணும் கூட சீக்கிரம் தூங்கப் போகலாமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் படுக்கையில் படுத்திருந்தபடி நல்ல முழு விழிப்போடு இருந்த லெண்டினாவோ, தான் செய்ய வேண்டிய அடுத்த காரியத்தைப் பற்றித் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். புதைகுழிக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தில் ஒரு கொன்றை மரத்தை நடவேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள்.

மேரி வோல்ஸ்ரன்கிராப்ட்: பெண்களின் உரிமைக்கான நியாயப்பாடுகள்

திருமணத்தில் மூலமாக நல்லதொரு கணவனைப் பெற்று அவனை மகிழ்விப்பதும், அவனுக்கான வாரிசை பெற்றுக்கொடுப்பதுமே பெண்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதற்கு உகந்த விதத்தில் அழகானவர்களாக, அடக்கமானவர்களாக, கீழ்ப்படிவானவர்களாக, கவரச்சியானவர்களாக உருவாகும் விதத்தில் பெண்களை சிறுவயதில் இருந்தே பயிற்றுவிக்கப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.18 ம் நூற்றாண்டின் சட்டத்தின் பார்வையில் திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை, வாக்குரிமை, சுதந்திரமாக செயற்படும் உரிமை என எல்லா வகையான உரிமைகளும்  மறுக்கப்பட்டதுடன், அவர்கள் கணவரின் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டவராகவும் இருக்கும் நிலையே காணப்பட்டது.

டேய் தரங்கெட்டவனே!

‘பஞ்சாபிகளாகிய நாங்கள் கடுகுக் கீரை சப்ஜிக்காக ஏங்குவோம். இன்று கிடைத்தவுடன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என நினைத்தேன். உனக்கு எப்படி இருந்தது ?’
‘இதோ பாருங்க, நான் திரும்பிப் போகலாம்னு நினைக்கிறேன். உங்களுக்கு எப்ப விருப்பமோ வந்து சேருங்க.’
‘என்ன சொல்கிறாய் ஹெலன். உனக்கு இந்த மக்களை பிடிக்கவில்லையா?’

மரபணு திருத்தங்களும் மனமாற்றங்களும்

ஏதோ BT-பருத்தியும், Terminator ஜீன்களை கொண்டுள்ள விதைகளிலும் மட்டும்தான் மரபணு மாற்றப்பட்டுள்ளது, மற்றபடி வேறு எங்கும் மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்கள் கிடையாது என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. உலகிலுள்ள ஒவ்வொரு ஆய்வகத்திலிருந்தும் மரபணு ஆராய்ச்சியில் உபயோக்கிப்படும் பாக்டீரீயங்கள் சுற்றுப்புறச் சூழலை நோக்கி தினமும் அனுப்பபடுகின்றன. ஆய்வக உபகரணங்களைச் சுத்தம் செய்யும் பொழுதுகளில் இது அவர்களுக்குத் தெரியாமலே நடைபெறும். ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவற்றில் இத்தகைய மரபணு மாற்றம் செய்யப்பெற்ற பாக்டீரியாக்களின் எதிர்பாராத வெளியேற்றம் (inadvertent release) என்பது கடுமையான விதிமுறைகளால் குறைக்கப்படுகிறது, ஆனால் தடுக்கப் படமுடியாதது. 

மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை

சின்ன முள், பெரிய முள், வினாடி முள், மணி நேரத்துக்கான அரேபிய எண்கள், மணி பார்ப்பது என்ற இரண்டே நிமிடத்தில் கற்றுக்கொண்டாள் அரசி. சங்கிலிக் கடியாரத்தை முள் முன்னே பின்னே போக வைத்து நேரம் என்ன என்று சொல்ல இன்னும் இரண்டு நிமிடம் பயிற்சியும் ஆனது.
மகாராணியிடம் கிராம்பும் ஏலமும் பச்சைக் கற்பூரமும் கலந்த வாசனையும் அதை மீறி மெல்லிய வெங்காய வாசனையும் அடித்தது கவனிக்க பெத்ரோவுக்கு ஆசுவாசமாக இருந்தது. மிளகை கொடுத்துவிட்டு சபோலா, என்றால் வெங்காயம், மற்றும் மிளகாயை இங்கே கொண்டு வர எல்லோரும் ஆர்வம் காட்டுகிறதாக அவருக்குத் தோன்றுவது சரிதான் என்று இப்போது புலப்பட்டது.

”பிராமணர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கில்ல”

This entry is part 3 of 10 in the series கி.ரா. - அ.ரா.

நாங்கள் செய்யும் தலித் நாடகங்கள் பற்றிக் கேட்கத் தொடங்கினார். இதெல்லாம் தமிழ்நாட்ல இப்பத்தானே பேசத் தொடங்கிறோம். இலங்கையிலெ எப்பையோ ஆரம்ப்பிச்சுப் பேசிட்டாங்க. மல்லிகையின்னு ஒரு பத்திரிகை; அதன் ஆசிரிய டொமினிக் ஜீவாதான் அதில் முன்னோடி. அப்புறம் கே.டேனியல். அவர்களோடு நட்புடன் இருந்து பேசிய தளையசிங்கம் என அரைமணி நேரம் தொடர்ந்தார். தலித் இலக்கியம், தலித் நாடகம் என்ற சொல்லாட்சி மட்டும் தான் நம்முடையது. தொடக்கமும் செயல்பாடுகளும் அங்கதான்

ஒரு முடிவிலாக் குறிப்பு

நல்ல நிறுவனத்தில், நல்ல பதவி, நல்ல சம்பளத்தோடு வேறு வேலை உடனே கிடைத்தது. என் திறமையின் காரணமாக எனக்கு கிடைத்த வேலை என்பதான என் நம்பிக்கையை – “பெருந்தொற்றுக் காலத்தில் வேலை கிடைப்பதே கடினம் ; நீ அதிர்ஷ்டக் காரன்” என்று கூறி – லேசாகக் கீறினார்கள் சில நண்பர்கள். வாயு வெளியேறியது. பெருந்தொற்றுக் காலத்தில் நிறுவனங்களின் மோசமான நிதி நிலைமை காரணத்தால் வேலையை இழந்த சில நண்பர்கள் வாயிலிருந்தும் வேறு சில துவாரங்களிலிருந்தும் உஷ்ணப்புகை.

சோள பாப்பியும் ஓபியம் பாப்பியும்

இரத்தப்பாப்பிகளும் (Bloodroot -Sanguinaria canadensis) பாப்பிச்செடிவகைதான் என்பதே வியப்பளிக்கும், தண்டுகளில்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக இலைகளும் மலர் காம்புகளும் உண்டாகும் இந்த செடியில் இளஞ்சிவப்பு தீற்றல்களுடன் வெண்ணிற மலர்கள் இருக்கும். இச்செடியின் வேர்களை நறுக்குகையில் செந்நிறச்சாறு வருவதால் இதற்கு இரத்தச்செடி என்று பெயர்.

உருவன்று அருவன்று

NFTவலைத் தளங்களில் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் பல முயற்சிகள்- அப்பங்கள் நாய்களாகின்றன, இலான் மஸ்கைக் கலாய்க்கும் மனப்பிறழ்வுப் படங்கள், நிர்வாணமாக உலா வரும் கவர்ச்சிகள். தேவை என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, வாங்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டப்படுவதுதானே விளம்பரத்தின் நோக்கம்! கலை விமர்சகர் டீன் கிஸ்ஸெஸ்,(Dean Kissick) ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த NFTஉலகை ‘இளைஞர்களின் பரவசம்’ என்று சொல்கிறார்.

கரவுப் பழி

வானம் நீல நிறத்திலிருந்து   கருமையாக மாற ஆரம்பித்த மாலை நேரத்தில் மூன்று பெண்களும் வேணியம்மை கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். இரு புறமும் வேலிக்கிலுவைகளும் கழியந்தட்டையும் வளர்ந்து எல்லையமைக்க, நீண்டு சென்ற  ஒழுங்கையில் ஊருணியைக் கடந்து நடந்தார்கள்.   ஊருணிக் கரையிலிருந்த ஆலமரத்தில் சாக்குகளில் கட்டப்பட்டிருந்த ஈன்ற “கரவுப் பழி”

வீ. வைகை சுரேஷ் கவிதைகள்

பக்கத்து தோட்டத்தில் இருந்த
பசும் பயிர்களை நாவால் லாவி கடித்த மாட்டை அடித்த இடங்களில்
தடித்த தழும்புகளை தடவி பார்க்கும்
அண்ணன்…
மடிமுட்டி பால் குடித்த கன்று குட்டியின் வயிறு நெறஞ்சுருச்சானு
பார்க்கிறேன் என்ற படி
கன்றுக்குட்டியின்வயிற்றில் காது வைக்கும் குட்டி தம்பி…

மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்

This entry is part 6 of 23 in the series புவிச் சூடேற்றம்

கடலில் வாழும் உயிரினங்கள், இந்தச் சூடான கடலில் வாழப் பழக்கப்படுத்திக் கொள்கின்றன. இல்லையேல் மடிய வேண்டியது தான். சில சின்ன உயிரனங்கள், பெரியவற்றை விட, மிகவும் பாதிக்கப்படுகின்றன. துருவப் பகுதிகளில் வாழும் krill போன்ற சின்ன உயிரினங்கள், இந்தச் சூடேற்றத்தால், 80% வரை மறைந்து வருகின்றன. இந்தக் கடல் உணவுச் சங்கிலியின் ஆரம்பத்தை, மனிதன், வெற்றிகரமாக அதனருகே கூடப் போகாமல், அறுத்து விட்டான்

ராம் பிரசாதின் உலகம்

அதற்கு அவன்,  ’நீங்கள் மணி அடித்தது,  என்னைத்  தேடியது எல்லாமே எனக்கு நன்றாகத் தெரியும். நான் தான் இருக்கட்டும் என்று உறங்கி விட்டேன். நீங்களும் எப்போதாவது கையை காலை அசைத்து வேலை செய்ய வேண்டாமா? அது உங்கள் ஆரோக்கியத்துக்கு  நல்லது  என்றுதான் மௌனமாக இருந்தேன்’ என்றான். நான் டீக்கடையில் வேலை செய்யும் போதும் இப்படி பகலில் தூங்குவது வழக்கம்.  வேண்டுமானால்,  அந்த டீக்கடைக்காரனைப் போல, நீங்களும் என்னை அடித்து விடுங்கள். நான் கட்டாயம் மூன்றிலிருந்து ஐந்து மணிவரை ஓய்வெடுப்பேன். அது என் உரிமை’ என்றான்.

புண்ணியம்

ஆனா, பள்ளிக்கூட வேலை போனபிறகு ரெண்டு மாசம் ரொம்ப கஷ்டப்பட்டேன். எந்த ஸ்கூலிலும் பணிநியமனம் என்பதே கிடையாது. இருக்கும் வாத்தியார்களுக்கே அரை சம்பளம்; சில ஸ்கூல்களில் அந்த அரை சம்பளம்கூட ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை. அப்படி இருக்கச்சே, புதுசா வாத்தியார்களை ஏன் நியமிக்கப்போறா? அஞ்சுபேரு — அம்மா, ஆம்படையா, ரெண்டு குழந்தைகள், நான் — ரெண்டு வேளையாவது சாப்பிடணும் இல்லையா?’

அவனும் நானும்

தமிழில்: சஞ்ஜெயன் சண்முகநாதன் அவனுக்கு முன்பாகவே நான் விழித்துவிடடேன். இமைகளை சிமிட்டி அரை வெளிச்சத்திற்கு கண்களை உடனடியாக பழக்கப்படுத்தி கொண்டேன். தலையை மெதுவாக உயர்த்தி என் பக்கத்தில் அசைவற்று கிடைக்கும் அந்த பெருத்த வெள்ளை உடலை நோடடம் விடடேன். நான் செய்யும் அளவு உடற்பயிசியை அவனும் செய்தால் இந்த எக்ஸ்ட்ரா “அவனும் நானும்”

மதியம்: குளம், பறவை, ராதை

வண்ணங்களென அவனைத்
தொட்டுத்தொட்டு கலைப்பது
மதியமேதான்.

தொலைவில் நிறம்மாற்றி
இதழ்விரிக்கும் மதியமே

விரோதிகள்

“ இது ஒரு வேதனைமிக்க சூழ்நிலை! நமக்குப்பிடித்தமானவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போய்விடுவார்கள் என்ற அபாயத்தில் இருக்கும்போது அவர்களை நாம் நேசிப்பதைப்போல நாம் அவர்களை ஒருபோதும் அதிகமாக நேசிப்பதே இல்லை.”
ஆற்றுக்குக் குறுக்காக வண்டி சென்று கொண்டிருந்தது. தெறித்த தண்ணீரால் தான் பயப்படுவதைப்போல அப்படியும் இப்படியுமாக நெளிந்தான் அபாஜின்.
“கொஞ்சம் பார்— என்னை விட்டுவிடேன்…” என்று பரிதாபமாகச் சொன்னார் கிரிலோவ்.

நவம்பர் கவிதைகள்

பூக்கள் உதிரா சமவெளியில்
வெயில் மேயும் கோடையில்
யாருக்கும் தெரியாமல்
சருகை மென்று

வசூல்

ஆட்டை கொடுத்து விடலாம் என முடிவு செய்த அருணகிரி “இதுவரை என்னோட கண்ணான புள்ளைங்களுக்கு ஒரு நாளாவது, ஒரு நூறு மில்லி பால் வாங்கிக் கொடுத்ததில்ல. ஒரு பொறந்த ஆட்டுக்குட்டியின் மேல இருக்கற ஐயகூட அதோட தாய் ஆடு சரியாக நக்கிறாத நிலையிலதான் இந்த ஆடு என்னோட வீட்டுக்கு “வசூல்”

அமெரிக்க பாரம்பரிய மீட்டெடுப்பு

மாண்டேல், அவர் எடுத்துக் கொண்டுள்ள காலத்தை அலசும்போது வழக்கமான ஊகவணிகர்களை (Speculators) கண்டனம் செய்வதை பார்க்கிறோம். உதாரணமாக, இப்புத்தகத்தின் 107ம் பக்கத்தில், எல்ஹானன் வின்செஸ்டர் (Elhanan Winchester) எனும் நியூ இங்கிலாந்து சமய போதகர் தனது “The Plain Political Catechism” என்ற புத்தகத்தின் மூலம் பள்ளிமாணவர்களிடம் ‘பொது நிலங்கள் அங்கு குடியேறியவர்களுக்கு மட்டுமே விற்கப்படவேண்டும். நிலவர்த்தகங்களுக்கும் ஊகவணிகர்களுக்கும் விற்கக் கூடாது’ என போதித்ததை பதிப்பித்துள்ளார்….இவரது புத்தகமும் எவ்வாறு இடத்திற்கேற்ற விலை பிற சமுதாய பிரச்சினைகளை தீர்க்க உதவும் போன்ற கருத்துகளுடன் மல்லாடவில்லை. மேலும்,  நிலத்தை அதிக விலை கொடுப்பவருக்கு விற்பது வின்செஸ்டர் போன்றவர்கள் அக்கறை காண்பிக்கும் நபர்களுக்கு  உதவக்கூடியதாகவும்  இருக்கலாம்  என்பது போன்ற  கருத்திலும் ஆர்வம் காட்டவில்லை. 

சிறுகோள் வடிவங்கள்

This entry is part 6 of 7 in the series பூமிக்கோள்

பெரிய வான்கோள்கள் ஏன் கோள வடிவத்தில் இருக்கின்றன என்பதற்கான எளிய விடை ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் அவை இருப்பதால் தான் என்பதே. ஒரு பொருளின் ஈர்ப்பு இழுவிசை எப்போதும் அதன் பொருள் திணிவின் மையத்தை நோக்கியே இருக்கும். பெருத்து இருக்கும் பொருட்கள் பேரளவு பொருள் திணிவைக் கொண்டிருக்கும்; அதேபோல் அதன் ஈர்ப்பு விசையும் மாபெரும் அளவினதாகவே இருக்கும்.

வென்றது புழு

கடவுளுக்கும் புழுவுக்கும் இடையிலான போரில்
புழு கடவுளை கொன்றுவிட்டது.
உன்னதமான மனிதன்
கடவுளாகவே உணர்ந்து கொள்கிறான்.

ஒற்றன் – அசோகமித்திரன்

This entry is part 4 of 48 in the series நூறு நூல்கள்

“மனமிருந்தால் யாவரும் கேளிர் என்பதுதான் எவ்வளவு சத்தியமானது!” இது அசோகமித்திரன் நாவல் அறிமுகத்தில் வியக்கும் வரிகள். தமிழில் எழுதுபவர்கள் அனைவரும் பெருமிதமாக சொல்லும் ஒரு சொற்றொடர் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”. தேய்வழக்காகி, அர்த்தமில்லாததாக ஆன ஒரு சொல்லை நவீனத் தமிழிலக்கியத்தில் அழியாத் தடம் பதித்தவர் உபயோகிக்கும்போது பொருள் “ஒற்றன் – அசோகமித்திரன்”