ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு

தமிழில்: வே. சுவேக்பாலா Ph.D வைரஸ் இயற்கையிலிருந்தா? அல்லது மனிதனின் தவறால் தோன்றியதா? நியூயார்க்கர் என்ற அமெரிக்க இதழில் (12/10/2021) வந்த கட்டுரையின் தமிழாக்கம் – புரிதலுக்காக மிகச்சிறிய அளவில் (கருத்தாக்கம் மாறாமல்) மாறுதல் செய்யப் பெற்றுள்ளது.  2019 ஆம் ஆண்டின் இறுதியில், முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியதாக “ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு”

மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு

என் அப்பா அப்படிப்பட்டவரில்லை. பெரிய நகரங்களிலிருந்து வரும் தொழில் வல்லுனர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உண்டியலில் போடும் பணத்தை ஒவ்வொரு காசாக எண்ணி, சரிபார்த்து கோயில்
நிர்வாகிகளிடம் ஒப்படைத்து விடுவார். நிர்வாகிகள் அந்தப் பணத்தில்விளைச்சல் நிலங்களும், பெரிய பங்களாக்களும் வாங்கிச் செல்வந்தர் ஆனார்கள். பணத்தைக் கண்டு எரிச்சலடையும் என் அப்பா வறுமையான பூசாரியாகவே இருந்து விட்டார். தான் இறக்கும் கடைசி நாள்வரைஅவர் பூஜை செய்தார்.

கி.ரா – நினைவுக் குறிப்புகள்

This entry is part 2 of 10 in the series கி.ரா. - அ.ரா.

இதே தன்மையில் உருவானதல்ல கதைசொல்லி என்னும் கலைச்சொல். Performance, Narrative என்ற இரண்டு ஆங்கிலச் சொற்களை அரங்கியல் பலவிதமாகப் பயன்படுத்தத் தொடங்கிய நவீனத்துவ காலகட்டத்துக் கலைச்சொல் சொல்லுதலை நிகழ்த்துதலாக மாற்றிய காலகட்டத்தின் தேவையை உணர்த்தும் சொல். நிகழ்த்துதல் கோட்பாடு..
என்னும் அரங்கியல் சிந்தனையின் வழியாக இலக்கியவியலுக்குள் நுழைந்த அச்சொல்லுதலின் தீவிரம் எல்லாவற்றையும் நிகழ்த்துதலாக்க நோக்கத்தோடு இணைத்தது. நிகழ்த்துதலுக்கேற்ப சொல்லப்படும் மொழியின் பண்புகளும் அடுக்குகளும் மாறவேண்டும் என்று வலியுறுத்தியது.  

மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்

கமோடிட்டீஸ், ஃப்யூச்சர்ஸ், ஃபார்வேர்ட்ஸ், ஆப்ஷன்ஸ் அண்ட் ஸ்வாப்ஸ் (COMMODITY FUTURES, FORWARDS, OPTIONS & SWAPS) வர்த்தகம் அது. தானியங்களுக்கும், வாசனை திரவியங்களுக்கும், முக்கியமாக மிளகுக்கும், அபூர்வமான மலர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் விலை என்னவாக இருக்கும் என ஊகித்து நடத்தும் வர்த்தகத்தில் வேலை நேரம் தவிர மூழ்கியிருப்பான். மிளகு விலைப் போக்கை கணித்து நடத்தும் ’ஊக கச்சவடம்’ (ஊக வர்த்தகம்) மருது செய்வது.

மணற்காடர் கவிதைகள்

ஒரு கடுகைத் துளைத்து எப்படி
ஏழு கடலைப் புகட்ட முடிந்தது?
ஒரு கடுகைத் துளைக்க முடிந்ததென்றால்
ஏழு கடலைப் புகட்டுவதா பிரமாதம்?

தையல்

“சொல்லத் தெரியாம இல்ல லோகு…நம்ம செல்லம் முருங்கமரக்கிளையாட்டம். ஒருமுறியில் ஒடிச்சு நம்மப்பக்கம் வச்சிக்கலாம்…அப்பிடி செஞ்சுட்டு எங்குலசாமி முன்னாடி எப்பிடி போய் நிப்பேன்…”
“குலசாமி எது?”
“பெருமா மல அடிவாரத்து பிச்சாயி…”
“பச்சப்பிள்ளைய கையில வச்சுக்கிட்டு இருக்கறவளா…அதான் நீ இப்படி இருக்குற. எங்கமாறி மருதவீரனா இருக்கனும். குதிரையில தூக்கிப்போட்டுட்டு பறக்கற ஆளு…”என்று சிரித்தாள்.

சமேலி, சுந்தரி, சீனா

சமேலிக்கு திருமணமாகி, அவள் தன் சிறு சாம்ராஜ்யத்தை நிர்வாகிக்கச் சென்றபிறகு வந்தவள் சுந்தரி. பெயருக்கேற்ற அழகி. அம்மன் சிலை போல கருப்பாக இருந்தாலும், வாட்ட சாட்டமான உடல் வாகு கொண்ட அழகி. …தேர்தல் சமயத்தில், ராஜேஷ் கன்னா வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்த போது, இவளது கணவன், நீ வெளியே போகக்கூடாது என்று இவளிடம் சத்தியம் வாங்கிக்கொண்டானாம். எங்காவது ராஜேஷ் கன்னா என்னை பம்பாய் அழைத்துக்கொண்டு போய்விட்டால், தானும் குழந்தைகளும் என்ன செய்வது என்கிற பயம்தான் பீஜி என்றாள் சிரித்தவாறு.

அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்பு

மாக்ஸ் வேபரின் எழுத்தில் பல பிழைகள் நுழைந்துள்ளன. ஒரு பிழை, இந்தியாவில் இஸ்லாமிய மதத்தின் இருப்பையும் சீனாவில் புத்த மதத்தின் இருப்பையும் முழுவதுமாக புறக்கணித்ததாகும். ஏனென்றால், இவ்விரு மதங்களின் அந்நியத்தன்மை, இந்தியாவின் பொருளாதார செயலாக்கம் இந்திய மதங்களிலிருந்து கிளம்பியதே எனும் விளக்கத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. எல்லா மதங்களையும் ஓட்டைகள் இல்லாத டப்பியில் அடைந்துள்ளதாக காட்டியுள்ளார்.

தேள் கொட்டிய இரவில் – நிஸ்ஸிம் எஸிகியொல்

‘உன் கடந்த பிறவிப் பாவங்கள்
இன்றிரவு தொலைந்து போய்விடும்’ என்றனர்.
‘இன்று நீ படும் துன்பம்
அடுத்த பிறவியின் துயரை குறைக்கும்’ என்றனர்.
‘நீ அனுபவிக்கும் வலி
இந்த மாய உலகில்
உன் தீய செயல்களுக்கும்
நற் செயல்களுக்கும் இடையேயான
சமன்பாட்டை குறைக்கலாம்.’ என்றனர்.

பௌர்ணமி

“சொல்லப்போனா நாங்க ரயில்வே கேட்டுக்கே வரலாம்னு தான் பாத்தோம். அம்மா தான் லேட்டாக்கீட்டா”
“அதுலாம் ஒன்னும் வேணாம்.நானே வந்துருவேன்”
“இத்தன வருஷம் நீங்க வந்தது தெரியாதா? கேட்டா இந்த கருப்பந்துறையக் கடந்து வர பயமா இருக்குறதுனாலதான் குடிக்கேன்னு சொல்லுவீங்க. ஏதோ இன்னைக்கு தான் மொத தடவையா அந்த கழுத மூத்திரத்த குடிக்காம வந்துருக்கீங்க”
“அதான் இனிமே குடிக்க மாட்டேன்னு சொல்றம்லா”

போன்ஸாய் – குறைவே மிகுதி!

போன்ஸாய் உருவாக்கத்தில் பொதுவான விதிகள் சிலவுண்டு. ஒரு போன்ஸாயின் எந்த இடத்திலும் அதை உருவாக்கியவரை பார்க்க கூடாது என்பது முதன்மையான விதி, அதாவது கிளைகளை வெட்டிய தழும்போ இலைகளை கத்தரித்த தடமோ கம்பிகளோ எதுவுமே பார்வையாளர்களுக்கு தெரியக்கூடாது. போன்ஸாய்கள் ஒரு மெல்லிய துயரை பார்ப்போரின் மனதில் உருவாக்கவேண்டும் என்பதும் இதன் விதிகளில் ஒன்று .

மழையில் நனையும் அலைகள்

அப்பா “நான் இல்லாட்டா என்ன செய்வீங்க” என்றார். அவர் முகம் பட்டினியால் வெளுத்ததை போலிருந்தது.

“அம்மா , அக்கா இருக்காங்கல்ல” என்றவன் சிரித்தது அப்பாவிற்கு நிம்மதியைக்கொடுத்ததா என அவனால் புரிந்துகொள்ளமுடியாமல் “நான் அழுவேன்” என்றான்.

“அம்மா , அக்கா என்னப்பத்தி என்ன சொல்றாங்க ?”

“அம்மாக்கு உன்ன புடிக்கல. அக்கா உன்னப்பத்தி பேசுனதேயில்லயே”

நம்பிக்கை, நாணயம், நடப்பு

டேவிட் பாஸ்டர் வாலசின் (David Foster Wallace) நீர் அறியா மீன்களைப் போல இன்றைய நவீனப் பொருளாதரத்தில் மக்களின் நம்பிக்கை இருக்கிறது. எதுவுமே இருப்பில் கணிக்கப்படுகிறது. ‘ஒரு எலும்புத் துண்டை தன் இனத்திடம் எந்த நாயும் நியாயமான முறையில் பங்கிட்டுக் கொள்வதை நாம் யாரும் பார்த்ததில்லை’ என்று சொன்ன ஆடம் ஸ்மித் ‘நம்பிக்கை என்பது மனிதத்தன்மையின் சிறப்பான அம்சம்’ என்று சொன்னார். நோபெல் பரிசு வெல்வதற்கு சற்று முன்னால் கென்னத் ஆரோ (Kenneth Arrow) நம்பிக்கை என்பது போற்றுதலுக்குரியது, அது சமூகச் சக்கரங்களின் மசகெண்ணய், நல் வளர்ச்சிக்கும், வர்த்தகத்திற்கும் அது இன்றியமையாதது என்றார்.

உச்சி

” இந்தா பாரும்மா, உனக்கு அந்த certificate கிடைக்காது. வீணா அலையாதே. கேட்டியா?” என்றார் பாஸ்கரன்.
தலையாரியின் கண்கள் கலங்கின.
வேதி எப்போதும் அது கிடைக்கும் என் நம்பியதில்லை. தலையாரி வலிந்து உதவியதால் மட்டுமே விண்ணப்பித்திருந்தாள். வேதி வெறித்த கண்களுடன் அலுவலரை பார்த்துக்கொண்டிருந்தாள். எதுவும் பேசவில்லை.
தலையாரி “ஐயா இது மகா பாவமுங்க” என்றார்.
பாஸ்கரன் “எனக்கு பாவ புண்ணியம் லாம் கணக்கில்ல பாத்துக்க?, என் கையெழுத்து இல்லாம ஒன்னும் முடியாது” என்றார்.

பொதுமங்களும் அரசாங்கமும்

சுற்றுச் சூழல் பேரழிவுகளின் காரணமாக சர்வாதிகார அரசுகள் தங்கள் மக்களுக்கு இயற்கை வளங்களின் கடைசி துண்டங்களைப் போராடிப் பெற்றுத் தர வேண்டிய அவசியம் உருவாகி ஒரு வித சூழல் பாசிசத்துக்குக் (ecofacism) கூட வழி நடத்தப்படலாம்; உண்மையில் சமனற்ற கொரோனா தடுப்பூசி விநியோகம் இதை முன் கூட்டியே உலகுக்கு உணர்த்தி விட்டது….எனினும் இதே காரணங்களுக்காகத்தான் அரசியல் மற்றும் கொள்கைகள் சார்ந்த போராட்டம் நிகழ்த்தும் ஒரு முக்கிய செயற்களமாக அரசு நிலைத்திருக்கிறது. எனவே அரசு ஒரு மிகையான அமைப்பு அல்லது இயல்பாகவே அது ஒரு மக்கள் விரோத அமைப்பு என்று காட்டுவது விவேகமற்ற நடத்தை என்று உணர்ந்து பொதும உந்தம் (momentum) செயல்பாட்டாளர்கள் அரசு எதிர்ப்பைக் கைவிட வேண்டும்.

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

எனது நிலையற்ற
நியாயத்தின் உண்மை
நிரூபிக்கப்பட்ட போது
அப்பொழுதுக்கு அப்பொழுதென
சாத்தியத்தில் என் மனம்
வழியை விட
நான் காத்திருக்கும் போது
யாருக்கும் தெரியாமல்
என் மனம் கரைவதை
நான் பார்த்தேன்

நடிகன்

அந்தக் கிளப்பில் விளையாடும் ஒரே விளையாட்டு சீட்டாட்டம்தான். அலுவலக நாள்களில் மட்டுமே மாலையில் நடக்கும் கிளப்பில் …. பல்வேறு விற்பனை வரிக் கிளை அலுவகங்களில் வேலை பார்த்தவர்கள்தாம் விளையாட அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் இடது கையிலும், மேஜைக்கு அடியிலுமாக வருவதை வீட்டுக்கு கொண்டு செல்லும் விருப்பம் இல்லாதவர்களாக அலுவலக வளாகத்துக்குள்ளேயே அதைத் தொலைத்து விட வேண்டும் என்று கிளப்புக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5

This entry is part 5 of 23 in the series புவிச் சூடேற்றம்

மனிதனின் மிகப் பெரிய தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜனத் தொகைக்கு உணவு உற்பத்தி செய்வது. நிலத்தில் உள்ள நீரில் 70% விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் உணவில் 25% முதல் 30% வரை, பயனில்லாமல் போகிறது. குறிப்பாக, சமைத்த உணவு, பயனில்லாமல் போவது சுற்றுச்சூழலுக்கு நல்லது அல்ல. அதிலிருந்து உருவாகும் மீதேன் போன்ற வாயுக்கள் மேலும், புவி சூடேற உந்துகின்றன

ஆறாம் அறிவின் துணை அறிவு

உலகெங்கும் கணிதத்திற்கும், சங்கீதத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகள் ஆராயப்பட்டு வருகின்றன. நமது சி வி இராமன் அவர்கள் மிருதங்கத்திற்கும் இயற்கையின் தாள ஒத்திசைவுகளுக்கும் இடையே நிலவும் ஒற்றுமைகளைப் பற்றி ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. நம்முடைய சம்ஸ்க்ருத சந்தங்களும், தாள லயங்களும், சூத்திரங்களும் கணினியின் மொழிக்கு ஏற்ற ஒன்றாக இருப்பதாக ஆய்வுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

வல்லூழின் யந்திரத் துப்பாக்கி

தன் ரகசியங்களை
வாழ்க்கை வெளிப்படுத்துவதில்லை.
ஆச்சரியமோ அதிர்ச்சியோ
காலம் முன்னறிவிப்பு செய்வதில்லை.