இளங்கலையில் முதல் இடம் பிடித்ததற்காக அந்த ஆண்டு கல்லூரி விழாவில் பரிசு கொடுப்பார்கள். மீனாட்சி புத்தக நிலையம் சென்று 30 ரூபாய்க்குள் நூல்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுப் போனார் பேரா.கி.இளங்கோ. அதற்கான ஒரு சீட்டும் கொடுத்தார். அதனை எடுத்துக் கொண்டுபோய் கிராவின் கிடை, பூமணியின் ரீதி, ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் வாங்கிக் கொண்டுவந்தேன். எனக்கேயான புத்தகங்கள் என்று வாங்கிய முதல் மூன்று புத்தகங்கள் அவை
Category: இதழ்-257
உண்மைகள் எளிதானவை- பாவண்ணன்
தாய்மொழிப்பயிற்சி உள்ள ஏராளமான பள்ளிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன. ஒரு மாநிலத்தில் இயங்கக்கூடிய தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையையும் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலேயே இதைப் புரிந்துகொள்ளமுடியும். அங்கெல்லாம் மாணவமாணவிகள் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள். எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்தைத் துறந்துவிட்டு தாய்மொழியில் படிக்கும் அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான தூண்கள். அவர்கள் வழியாக தாய்மொழிகள் கண்டிப்பாக வாழும்.
செருப்பிடைச் சிறுபரல்!
பாதுகம் என்றாலும், பாதுகை என்றாலும் ஐயம் திரிபற செருப்பேதான். தேவர்களும் தேவகுமாரர்களும் அணிந்தால் பாதரட்சை, பாதுகை, பாதுகம்; சாமான்யரான நாமணிந்தால் செருப்பு என்றும் பொருள் கொண்டால் அது மொழியின் குறைபாடு அல்ல. சொற்களை மேநிலையாக்கும் மானுடப் பண்பு. நிலக்கிழார் அணிந்தால் உத்தரீயம், அங்கவஸ்திரம், நேரியல்; சாமான்யன் போட்டிருந்தால் துண்டு, துவர்த்து என்பதைப்போலவே அதுவும்.
மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
நாராயண பிஷாரடி வைத்தியர் ஒரு கனவு கண்டார். பேராசிரியர் பிஷாரடி. பிஷாரடி வைத்தியர். எல்லாம் அவர் பெயர் தான். அவர் கண்டது தூசு அடர்ந்த சிறிய ஊரின் வீதிகளில் சைக்கிள் ஓட்டிப் போகும் கனவு. சைக்கிளை அதி வேகமாகப் பின் தொடர்ந்து கனைத்தபடி ஒரு செந்நாயோ, கடுவன் பூனையோ, “மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்”
தோண்டிக்கு செல்லும் பெருந்து
எனக்கு தமிழ் மீது தீராத காதல் உண்டு. அதனால்தானோ என்னவோ நான் எப்பொழுதும் கொம்புகளாலும் கால்களாலும் தமிழை துவைத்துவிடுவேன். என் புலமை கே.ஜி. வகுப்பில் என்னை சேர்த்தபோதே துவங்கிவிட்டது. விஜயதசமியன்று பள்ளியில் சேர்த்து ஒன்றரை மாதத்தில் அரையாண்டுத் தேர்வு. தமிழ் எழுத்துகள் டிக்டேஷனில் அனைத்து எழுத்துகளுக்கும் o o “தோண்டிக்கு செல்லும் பெருந்து”
மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும்
‘மகாத்மா காந்தியின் பெருமை அவர் நடத்திய தீரமான போராட்டங்களைக் காட்டிலும் அவர் வாழ்ந்த தூய்மையான வாழ்க்கையிலேயே தான் இருக்கிறது’ என்பார் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் சர்.எஸ்.ராதாகிருஷ்ணன். அந்த அளவுக்கு அவரது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் தூய்மையானதாக இருந்தது. பிரச்சனைகளை அவர் அணுகிய விதம்-அவற்றிற்கு தீர்வு காண “மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும்”
விலக்கம்
பிறந்தநாளன்று சாயுங்காலம் விடுதியின் தொலைபேசியிலிருந்து அவள் பேசும்போது அண்ணன், “ஆஃபீஸ்ல சர்ட் நல்லாருக்குன்னு சொன்னாங்க…எங்கடா வாங்கின,” என்றான்.
“ஏழு கடல்தாண்டி….ஏழுமலைத்தாண்டி…ஒரு கிளிக்கிட்ட இருந்து,” என்றாள். அவன் வேகமாகச் சிரித்தான்.
ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்
இலங்கையில் இனப் பிரச்சினை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த பின்னர் அது ஈழ இலக்கியத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் நாடகம் என இலக்கியத்தின் எல்லா வடிவங்களுமே இன முரண்பாட்டையும், போர் அரசியலையும் பற்றியே அதிகம் பேசத் தொடங்கின. அந்தப் பண்பேற்றம், குறித்த “ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்”
நீலி
வேட்டைக்காரன் புதூர் கிராமத்தில் தாத்தா வீட்டில் இருக்கையில், அதாவது சுமார் 40 வருடங்களுக்கு முன்னர், ஒவ்வொரு வாரமும் வீட்டின் மண் தரையை பாட்டி பசுஞ்சாணமிட்டு மெழுகுவார். முந்தின நாளே பறித்து வந்து, நீரில் ஊறிக் கொண்டிருக்கும் நீலி அல்லது அவுரி எனப்படும் சிறுசெடியை அம்மியில் மைபோல அரைத்து, மெல்லிய “நீலி”
மைலோ – இவர்கள் இல்லையேல்
அந்நாட்களில், மைலோ என்கிற பெண்மணி, வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய வருவாள். மாநிறம். மிகவும் சுறுசுறுப்பானவள். புகையிலை போடுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஃபினாயில் மணத்தோடு கலந்த புகையிலையின் மனம், அவள் போகுமிடமெல்லாம் அவளைத் தொடர்ந்து போகும். விட்டுத் தொலையேன் இந்த பழக்கத்தை என்றால், புகையிலை போடாமல் என்னால் வேலை செய்ய முடிவதில்லை என்பாள்
வெண்முரசு பிள்ளைத்தமிழ்
”ஞாலப்பெருவிசையே, ஞானப்பெருவெளியே, யோகப்பெருநிலையே இங்கெழுந்தருள்வாயே” என விண்ணிலிருந்து உடலிலியாக எழும் கமலஹாசனின் குரல்; மடியில் முலையுண்ணும் சிசுவின் உடலில் விதிர்க்கும் அசைவை ஒரு அன்னை மட்டுமே அண்மையில் அறியக்கூடிய அவதானமாக ’விரிமலர் முதலிதழோ எனத்தோன்றும் பெருவிரலே’ என சைந்தவியின் குரலில் வரும் சரணம்; ‘சொல்லுரைத்து செயல் காட்டி சென்ற அரசே’ ‘இப்புடவியின் மேல் உன் நோக்கு ஒரு கணமும் அணையாதாகுக – என ஆணையும் விழைவும் வேண்டலுமான உச்ச ஸ்தாயில் உயர்ந்து ஒலிக்கும் சரணத்திற்கு ஸ்ரீராமின் குரல்…
விலைக்குமேல் விலை
அப்படி மூன்று மாதம் செய்ததின் முடிவு, வாங்குகிறவர்களின் கையோங்கி இருந்ததால் அதன் மதிப்புக்கு பதினைந்து இருபது சதம் குறைவாகத்தான் வீடு விலைபோகும். எதற்கு நஷ்டப்பட வேண்டும்? வெளிப்புறத்தில் புல்வெட்டவும் இலை வாரவும் ஒரு பணியாளன். வீட்டிற்குள் அவள் புழங்கும் இடத்தை அவளால் சுத்தமாக வைக்க முடியும்.
“வேலைக்குப் போற வரைக்கும் இங்கியே தனியா இருந்துடறேன்.”
அதுல பாருங்க தம்பி…I
‘நம்ம கம்பெனி நாடகத்தில் பாகவதர் நடிக்கப் போகிறார்’ என்று ஒரே பரபரப்பாக இருந்தது யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் நாடகக் கம்பெனியில். எதற்காக பாகவதர் நடிக்கவேண்டும்? என்னென்ன வேஷங்கள் செய்வார்?’ என்றென்று அடுக்கடுக்காகக் கேள்விகேட்டுத் துளைத்த அந்தச் சிறுவனுக்கு விளக்கினார் சகநடிகர். ‘ அடே பையா, ‘ஆனையைக் கட்டித் தீனி போடுவது’ என்று கேள்விப்பட்டிருக்கிறாயா? அதுதான் “அதுல பாருங்க தம்பி…I”
அக்டோபர் கவிதைகள்
சிறு அகலின் சுடர் தாங்கும் நேசத்தின் நினைவென
கனவின் தலைகீழ் உலகில்
தலை இல்லா மனிதனாக
இத்தனை பெரிய உலகையும் அணைத்துக் கொண்டு நடந்து போகும்
குருவியின் கால்கள் கொண்ட ஒருவனாக
ஜீ பூம்பா
பரவலாக்கப்பட்ட, மைய அதிகாரமற்ற ஒன்று என்று சொல்லலாம். இடைநிலை அமைப்பாக(Intermediary), இடைத்தரகர்கள் எவருமே இல்லாமல், அதாவது, அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் வால்ஸ்டீர்ட் நிதி நிறுவனங்கள் போலில்லாமல், இணையப் பணச் சேமிப்பு, கடன் வழங்குதல், வணிக வர்த்த்கத்தை எளிதாக்குதல் போன்றவற்றை கணினிக் குறி மொழி கொண்டு நடத்துவது டிஃபை எனப்படுகிறது.
நீக்(ங்)குதல்
தியாகராஜன் அவர் கைபேசியை அணைத்து வைத்திருந்தார். யாருடனும் பேசப் பிடிக்கவில்லை அவருக்கு. என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது? என்றிருந்தது. வேண்டாத அழைப்புகள் நிறைய வருகின்றன என்று எரிச்சல்பட்டு அணைத்து வைக்க ஆரம்பித்தவர் இப்பொழுது வேணும் அழைப்புகளும் தேவையில்லை என்று தோன்ற அது அணைந்தே கிடந்தது. உலகமே அதை அணைத்துக்கொண்டு “நீக்(ங்)குதல்”
பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்
காற்றுமண்டலத்தின் ஒவ்வொரு அடுக்கையும் வைத்துப் பார்த்தால், நம்முடைய நிலத்தளவு வெப்பம் சராசரி -15 டிகிரியாக இருக்க வேண்டும். எப்படி 15 டிகிரியானது? இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணம், உலகின் மிக முக்கிய சூடேற்றும் வாயுவான நீராவி. மேகங்கள் (நீராவி) நம் பூமி, உறையாமல் இருக்க முக்கிய காரணம்.
ரஜத்
அடுத்த நாள், கீதா கஃபே ஓரமாக உட்கார்ந்து பீடியைப் பற்ற வைத்த போது, ரஜத் கம்பளியை எண்ணி எண்ணி பார்ப்பதும், சுற்றும் முற்றும் பார்ப்பதுவுமாக விடுபட்ட கம்பளிக்கு என்ன என்னவோ கணக்கு போட்டு பார்ப்பதை பார்த்தேன். எனக்கு அன்னக்கி சோறே இறங்கவில்லை.
பேசாம குப்பை தொட்டிக்கு பக்கத்துலேயே கொண்டு வந்து போட்டுவிடலாமா என்றும் ஒரு யோசனை.
சந்ததிகளை உருவாக்கும் உழைப்பு
இனவிருத்திக்களம் பரம்பரைப் பழக்கமாக பொதுமங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. அடிப்படையாகவே அது உயிரைப் பேணிப் பாதுகாக்கும் பணி. எனவே சந்ததிகள் உருவாக்க உழைப்பிற்குத் (reproductive labour) தலையாயவர் என்கிற வகையில் பெண்ணுக்கு பொதுமங்களுடன் திடமான இணைப்பு நிலவுகிறது; வரலாற்றில் பெண்கள் பெரும்பாலும் பொதுமங்களின் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். பின்னர் அந்த இணைப்பு பறிபோனதால் மிகுந்த வேதனைக்குள்ளானார்கள்.
ஜெயந்தி டீச்சர்
டீச்சராக மாறிய ஜெயந்தி மாரியிடம் நிறைய பேசினாள். பேச்சு வளர்ந்து அந்த’ நாட்கள் பற்றிப் போனது. வீட்டுப்பாடம் எழுதும்போது டீச்சர் ரோல் ஒரே முறை மாரிக்கு போனது. மாரி தன் மாதாந்திரப் பிரச்சனைகளைப் பேசினாள். கிளாசிலிருந்து பேக் எடுத்துக் கொண்டு நாப்கீன் வாங்க போகும் போது மாரியின் டீச்சர் ரோல் தொடர்ந்தது. நைன்த், டென்த் அக்காக்கள் வழி அறிந்தவைகளைப் பகிர்ந்து கொண்டாள். மாரி வழியாக பொம்பளப் பிள்ளைகள் படும் கஷ்டங்களை நிறையவே தெரிந்து கொள்ள முடிந்தது; திகைப்பாகவும், பயமாகவும் இருந்தது.
நெருப்பு & நீர்
யாவரும் அஞ்சுவர் நெருப்பை
ஓ ஆம்! முற்றிலும்!
எதையும் இரையாக்கும்
அடியோடு அழித்துவிடும்
முதல் அற்புதம்
நாளை கி.பி முதலாம் ஆண்டு ஆரம்பிக்கிறது, ஆனால் அவனிடம் யாரும் சொல்லவில்லை. அப்படி யாரும் சொல்லியிருந்தாலும் அவனுக்கு அது புரிந்திருக்கபோவதில்லை, ஏனெனில் அவன் அது பேரரரசரின் ஆட்சியில் நாற்பத்து மூன்றாம் வருடம் என எண்ணிக்கொண்டிருந்தான், அதை விட, அவனது எண்ணங்களில் வேறு விடயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவனது தாயாருக்கு இன்னும் அவன் மீது கோபம் இருந்தது. ஒரு சராசரி பதின்மூன்று வயது சிறுவனை விடவும் தான் அன்று அதிக குறும்புத்தனம் செய்துவிட்டதை அவனும் ஒத்துக்கொள்ளத்தான் செய்தான். அவனது தாயார் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க கொடுத்தனுப்பிய குடத்தை உடைக்கவேண்டும் என அவன் நினைக்கவில்லை. காலில் கல் தடுக்கியது தன் தவறு அல்ல என…
விடியல்
தெக்குப்பண்ணையின் வயலில் அறுவடைக்கு பின்னாக எஞ்சும் வைக்கோலை தனது மாடுகளுக்காக கேட்பதற்கு வந்த பெரியசாமி, “வைக்கல் எப்போ கெடைக்கும்?” என்றார். தெக்குப்பண்ணை “இப்போதான் பயறு மூடையல்லாம் லோடு போயிருக்கு, ஆள் ஒன்னும் கிடைக்கல, எடுத்துக் கட்ட இன்னும் ரெண்டு நாள் ஆகும் பெரியசாமி, ஆள் இருந்தா நீயே பாத்து “விடியல்”
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
இந்திய அரசு ‘போஷன் அபியான்’(Poshan Abhiyan) மூலம் குழந்தைகள் நலம், ஊட்டச்சத்து, இளம் தாய்மார்களின் உடல் நலம், அவர்களுக்குத் தேவையான போஷாக்கு போன்றவற்றிற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ‘கிராம நல சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நாட்கள்’ தேசியக் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலை நிற்கும் வளர்ச்சி(Sustainable Development Goals) அதன் குறிக்கோள். சுய உதவிக் குழுக்கள், சமூக நல அமைப்புகள், கிராம முன்னேற்ற அமைப்பு, தாய் சேய் நல கேந்திரங்கள், குடும்ப நலம் மற்றும் வளர்ச்சி, பஞ்சாயத்து சபைகள், நல்ல குடி நீர், சுகாதாரம் மற்றும் கழிவகற்றும் அமைப்புகள்…