முகத்துவார நதி

கடலோர நிலத்துக்காரனான அவன் காகேசம் கிராமத்தை நோக்கி பயணம் புறப்பட்டிருந்தான்.  அது அவனுடைய படுவூர் கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட பத்து மைல் தொலைவிலிருந்தது. கடற்காற்று லேசாக மணலை கிளப்பிக் கொண்டு வீசியதில் கண்களை சுருக்கிக் கொண்டு நடந்தான். அணிந்திருந்த மேல்சட்டையில் காற்று புகுந்துக் கொண்டு உடலை உப்பலாக்கி காட்டியது. காய்ந்த “முகத்துவார நதி”

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

இப்படித்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் இலக்கியங்கள் மூலமாகவும் இன்று சான்றுரைக்கின்றன. காழ்ப்பற்ற, வஞ்சமும் சூதுமற்ற, வெளிப்படையான, தமிழ்ப்புலவன் வழி நெடு வரலாற்றை, மரபை, புராணங்களை விதைத்துச் செல்கிறான். அவனது அனுபவமும், ஞானமும், தெளிவும், படைப்பு ஆற்றலும் புரிதலும் வியப்பேற்படுத்துகின்றன.
சித்திரையில் பிறக்கும் புத்தாண்டின் வரிசையில் அறுபதனுள், நந்தன என்பது இருபத்தி ஆறாவது. நந்தனன் என்றால் குமரன் என்று பொருள் தருகிறது சூடாமணி நிகண்டு.

கல்ஃப்

“அவனும் பாவந்தானே மகேன். பொறகு எப்பிடி அவன் ரெண்டு தங்கச்சமாரயும் கரைசேக்குற“ என்று அவ சொல்லும் போதெல்லாம் எனக்குத் தொண்டை கமறும்.

தாலிபானின் மறுநுழைவு – பொருளாதார விளக்கம்

கந்தல் துணி அணிந்த, அடிமட்டத்திலுள்ள, இறையியல் பள்ளியினர் கூட்டு சேர்த்த, முறையான போர்ப் பயிற்சி சிறிதளவும் இல்லாத, மத அடிப்படைவாதக் கூட்டம், பிரிட்டன், சோவியத், சமீபத்தில் அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் உலகிலேயே வல்லமை வாய்ந்த படைகளினால் அடக்க முடியாத நிலப்பகுதியை எவ்வாறு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது? ஏன் முன்னிருந்த ஆப்கான் அரசாங்கம் அத்தகைய வேகத்தில் நொறுங்கியது?

பனிப்பாறை உருகல்கள்: உலகம் வெள்ளத்தில் மூழ்குமா?

This entry is part 2 of 23 in the series புவிச் சூடேற்றம்

ஆர்க்டிக் பகுதிகளில் ஜூன் மாதத்தில் கடல், பனிப்பாறைகளால் மூடப்பட்டிருக்கும். செப்டம்பர் மாதம்தான் இங்கு அதிகமாகப் பனி உருகும். மீண்டும் அக்டோபர் கடைசியிலிருந்து உறையத் தொடங்கும். 1967 முதல் 2018 வரை, ஜூன் மாதப் பனியுறைப் பகுதி குறைந்துகொண்டே வந்துள்ளது. 1967–ல் இருந்த உறைந்த பகுதியிலிருந்து, 2018–ல் நாம் இழந்த பனியுறைப் பகுதி 2.5 மில்லியன் சதுர கி.மீ. இது சாதாரண இழப்பன்று. இது இந்தியாவின் நிலப்பரப்பில் 76%-திற்குச் சம்மானது!இந்த இழப்பைப்பற்றி எவரும் கவலைப்படுவதில்லை. ஆனால் ஏன் கவலைப்படுவதில்லை?

இரண்டாம் ஆதாம் – லின்னேயஸ்

தாவரங்களின் இருபெயரீட்டு  விதிகள், விமர்சனங்கள் மற்றும் புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பல தாவரங்களின் பட்டியலுடன் லின்னேயஸின்[i] ””கிரிடிகா பொடானிகா”(Critica Botanica)  நூல் ஜூலை 1737 ல் வெளியான போது, லின்னேயஸின் ஆய்வுகளை, கடுமையாக,  வெளிப்படையாக விமர்சிப்பவரான  யோஹான் சீகஸ்பெக் (johann siegesbeck)    மனமகிழ்ந்து போனார். சிலமாதங்களுக்கு “இரண்டாம் ஆதாம் – லின்னேயஸ்”

மிளகு – அத்தியாயம் 6

ஒரே வயசு, ஒரே மாதிரி பின்னணி. ஒரே மதம், சமணம். பக்கத்து பக்கத்து சிறு நிலப் பரப்புகளை ஆட்சி செய்யும் உரிமை. நல்ல பெயர். இரண்டு பேருக்குமே இதெல்லாம் வாய்ந்திருக்கிறது.
சென்னபைரதேவி மிளகு ராணி. அப்பக்காவுக்கு அபய ராணி என்று பெயர். அ-பய-ராணி பயமென்பதையே அறியாதவள். நாடு பிடிக்க வந்த போர்ச்சுகீஸ் பரங்கிகளை ஒன்றல்ல, பத்து முறை தோற்கடித்துத் திரும்பி ஓட வைத்தவள் அப்பக்கா.
சென்னபைரதேவி ஊர் தோறும் சமணத் தீர்த்தங்கரர் கோவில் அமைப்பது என்று செயல்படுகிறவள். கோகர்ணம் மஹாகணபதி பகவான் மேலும் அளவற்ற பிரியம் கொண்டவள் காணாபத்யம் கொண்டாடும் சென்னா.

இவர்கள் இல்லையேல் – ராம்லால்

அதே சமயம், உள்ளே நுழைந்த தந்தை, எரிகிற கொள்ளியில், தன் பங்குக்கு, இன்னும் கொஞ்சம் எண்ணையை ஊற்றினார். “ராம் வாலின் அம்மா, இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட மகனைப் பெற்றெடுத்திருக்கிறாயே, நான் என்ன சொல்ல? என் முன்னோர்கள் எவரும் பகலில் மனைவியின் முகத்தை கூட பார்த்ததில்லை. மனைவியிடம் பேசுவது என்பதெல்லாம் கற்பனையில் கூட யோசித்துப் பார்க்க முடியாத விஷயம். இந்த மகாராஜாவைப் பார். மனைவிக்கு கடிதம் எழுதுகிறாராம் – என் பிரியமான மனைவியே – வெட்கங்கெட்டவன். கிராமம் முழுவதும் வெளியில் தலை காட்ட முடியாமல் பெயர் கெட்டு போனது தான் மிச்சம்,” என்றார்.

புது ஜோடிச் செருப்புகளை அடக்குவது எப்படி? – கோபால் ஹொன்னல்கரே கவிதை

முதலில் அவற்றை சிறிய தொலைவு நடந்து வர மட்டுமே பயன்படுத்துங்கள்
பிறகு மெதுமெதுவாகத் தூரத்தை அதிகரியுங்கள்
..
இறுக்கமான அவற்றின் வார்களைத் தளர்த்துங்கள்
தாங்கள் வளர்கிறோம் என
அவை குதூகலிக்கட்டும்

தீர யோசித்தல்

This entry is part 1 of 3 in the series தீர யோசித்தல்

இதற்கிடையில், அமெரிக்கர்களில் பாதிப்பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள்; பலர் சதித்திட்டங்கள் பற்றியும், போலி அறிவியல் முடிவுகளையும் நம்புகிறார்கள். நாம் சிந்திப்பதில்லை என்று சொல்ல முடியாது- நாம் தொடர்ந்து படிக்கிறோம், கருத்து சொல்கிறோம், விவாதிக்கிறோம் – ஆனால் நாம் செய்வதை ஓட்டமாய் ஓடியபடி, நம் செல்ஃபோன்களில் வம்புவதந்தி பரப்பித் தொல்லை செய்யும் புன்மதியாளர்களைப் பார்வையைக் குறுக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஜராசந்தர்கள்

உலகக் கணினிக்குற்ற ஆயுதங்களின் வர்த்தகம் பற்றிய பெர்ல்ராத்தின் இப்புத்தகம் தெளிவாகவும், தூண்டும் வகையிலும் புலப்படாத இந்த எதிரிகளைப் பற்றிப் பேசுகிறது. இதன் தலைப்பு சற்று அதீதமோ என்று நினைத்தாலும், இக்கருவிகள் செய்யக் கூடுவன பற்றிய புரிதலினால், அவ்வாறு சொல்ல முடியவில்லை.-முக்கியக் கட்டுமானங்களான அணு ஆலைகள், மின்னாற்றல் நிலையங்கள், தொழிற் சாலைகளிலுள்ள காப்பான்கள், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள், நீர் மேலாண்மை மற்றும் விநியோகம் போன்றவற்றை குறைந்த செலவில் தாக்கவும் அதிக சேதத்தினை ஏற்படுத்தவும் கொந்தற்கருவிகளால் முடியும். பேரழிவு ஆயுதங்களை விட அதிக தாக்கத்தை இவை ஏற்படுத்தும். இவைகளுக்கான சந்தை, துடிப்போடு செயல் படுகிறது- கண்களுக்கு அப்பாற்பட்டு, செல்வம் படைத்தவருக்குத் தேவையெனில் இந்தச் சேவையை இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று சிறப்பாக செய்து கொடுத்து… இவர்களின் சந்தையின் இலக்கணம் இது தான். இதில் சுநீதி, அநீதி என்பதெல்லாம் இல்லை.

பவளமல்லி

கண்மணி சித்தி மகன் ரமேஷ் அண்ணா புதிதாக வாங்கிய பைக்கில் துளசி சித்தியை வைத்து எங்கள் வீட்டுக்கு ஓட்டி வந்தபோதுதானா வள்ளி அத்தை இங்கு இருக்க வேண்டும். “பரவால்ல இனி துளசி வண்டியிலேயே சுத்திக்கலாம்” என்றபோது வெளிப்பட்ட குரூரத்தின் சூடு தாங்காமல் துளசி சித்தி வாடிப்போனாள். இத்தனைக்கும் ரமேஷ் அண்ணாவுக்கும் துளசி சித்தி, சித்தி முறைதான்.

கல்கோனாக்கள் கரைவதில்லை

‘தூங்கு..தூங்கு..பாலா நீ..’ என்ற எருமைக்குரல் காதில் நுழைந்து மூளையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன் நிலக்கோட்டைக்கும் மதுரைக்கும் நடுவே. சரியாக காதுக்கு நேரே ஒலிபெருக்கிக்குழாய். என் தூக்கத்தைக் கெடுத்த அந்தப் பாடகன்(பாதகன்?) யார் என்று பார்ப்பதற்குள் பேருந்து ஊரைக்கடந்து விட்டது. சர்ச்சில் ஒரு விழா. சர்ச்சை வைத்துத்தான் “கல்கோனாக்கள் கரைவதில்லை”

முகநாடகம், மேலெழுந்தபோது

அந்தச் செடியின் ஜீவன்
வானம் பார்க்கும் இளமிலைகளில்
தீரா நடனமாடிக்கொண்டிருந்தது
குருத்தொன்று தலையில்
பொங்கியெழத் தயாராய்.

பழைய கள்ளு, புது கலக்கல்

VO என்கிற ‘வாய்ஸ் ஓவ’ரிலேயே கதையின் போக்கைச்சொல்லி விடுகின்ற உத்தி இந்தப் படத்தால் தான் பிரபலம் ஆயிற்று என்றே சொல்லலாம். சமூகக் கதைகளுக்கு அது ஓகே, ஆனால் ஒரு த்ரில்லர் படத்துக்கு வாய்ஸ் ஓவரை வைத்தே பெரும்பாலான கதை சொல்வது ஒரு புது யுக்தி என்றுதான் சொல்லவேண்டும்.

அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்

This entry is part 3 of 48 in the series நூறு நூல்கள்

தண்டபாணியின் உள் எண்ணங்கள் மிகச் சாதாரண மொழியில் எழுதப்பட்டாலும் அவரின் மன ஆழங்கள் அலசப்படவில்லை. இத்தனைக்கும் அந்தப் பாத்திரம் ஓர் அறிஞராகக் காட்டப்படுகிறது. இதைக் கதாசிரியரின் சுதந்திரம் என்று எடுத்துக்கொண்டாலும் நாவல் முழுமை அடையவில்லை என்று தோன்றுகிறது.

விசிட் விசா

சூசை அந்தத் தெருக்கூத்து பார்க்க வந்த ஒரு பொண்ணைக் காதலிச்சு அவளைக் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிட்டான். இரண்டு வருடத்துக்குப்பின் குடும்பத்தினரோடு சமாதானம் ஏற்பட்டது. அந்தத் திருச்சபையிலேயே ஒண்டி என்கிற பெயரை மாற்றி ‘சூசை’ன்னு ஞானஸ்தானம் வாங்கினான்.

600 மில்லியன் டாலர் செலவு! அதே பழைய முடிவு!!

அரசியலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் கட்சியே நிலைத்த ஆட்சியைத் தர முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபணமாக்கியுள்ளது கனடாவில் நடந்த சமீபத்திய தேர்தல். உலகிலேயே பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடும் மக்கள் தொகையில் அதிகமுள்ள நாடுகளில் 38வது இடத்தை வகிக்கும் கனடாவில் 38 million மக்கள் வசிக்கிறார்கள். “600 மில்லியன் டாலர் செலவு! அதே பழைய முடிவு!!”

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

காடும்..
கூடும்..
பெருந்தேடலானதால்

பறத்தல் மறந்து
போயிருந்தது
நினைவில்
காடுள்ள பறவைக்கு