தேர்தல் திருவிழா

தேர்தல் பணிக்கு வந்த நான் உள்ளிட்ட பல பெண்கள் அலைபேசியில் வீட்டை நிர்வகித்துக் கொண்டு இருந்தோம். ’’அரைமணிநேரம் மோட்டாரை போடு, அப்பாவுக்கு பரிமாறிடு, வாசற்கதவை நல்லா பூட்டிக்கோ, சாமி விளக்கேற்று,’’ என்றெல்லாம்.
ஒரு இளம் தாய் தன் கணவரிடம்’’ ஏங்க, பாப்பா உந்தி உந்தி கட்டிலிலிருந்து நகர்ந்து ஃபேனுக்குள்ள கையை விட்டுருவா,கொஞ்சம் பாத்துக்கங்க ’’என்ற பின்னர் தாழ்ந்த குரலில்’ “ இன்னைக்கும் குடிச்சிட்டு வந்துடாதீங்க. பாப்பா பாவம்,’’ என்றார்.

மின்னல் சங்கேதம் – 5

This entry is part 05 of 12 in the series மின்னல் சங்கேதம்

ராதிகாப்பூர் சந்தையில், நிறைய மக்களின் கண் முன்னாலேயே, பாஞ்சு குண்டுவின் கடை கொள்ளையடிக்கப்பட்டது. இப்படி பட்டப்பகலில் இது போன்றதொரு சம்பவம் இதற்கு முன் இப்பகுதியில் நிகழ்ந்ததில்லை. கங்காசரணும் அப்போது அக்கடையில் பொருட்கள் வாங்கச் சென்றிருந்தான். கூரை வேயப்பட்ட அந்தக் கடை பெரியது. ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் நின்றிருந்தது. மக்கள் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்த சம்பவம் நிகழ்ந்தது. கடையைச் சுற்றி கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை என்னவென்று புரியாமல் திகைப்போடு கங்காசரண் பார்த்தான். மக்கள் ஓலமிட்டுக்கொண்டு கடைக்கு உள்ளேயும் வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பலர் திருட்டுப் பொருட்கள் நிறைந்த மூட்டைகளையும், கூடைகளையும் எடுத்துக்கொண்டு வயல்வெளிகளைத் தாண்டி ஆற்றங்கரையோரமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.

ஆடல்

“தென்னாப்பிரிக்காவில நாம பீனிக்ஸ் குடியிருப்பில இருந்தப்ப நீங்க, இன்னும் கொஞ்சம் நாள்ல நான் மனைவிங்கிற அந்தஸ்தை இழக்கப்போறேன்னு சொன்னவுடனே நான் பயந்தே போயிட்டேன். கிறிஸ்துவ முறைப்படி பண்ற கல்யாணம்தான் செல்லும்னு அரசாங்கம் சொல்லிடுச்சாம். அய்யோ.. இதென்ன கூத்து. சட்டத்துக்கு முன்னாடி வைப்பாட்டின்னு பேர் வாங்கறதை விட போராட்டத்தில கலந்துக்கிட்டு சிறைக்கு போனாலும் தப்பில்லேன்னு தோணுச்சு எனக்கு. நான் சிறையிலயே செத்துப் போயிட்டா எனக்கு சிலை வச்சு வழிப்படறதா சொல்லி சிரிச்சீங்க நீங்க”

கதவுகளின் ரகசியக் கதைகள்

அவர் தன் தினசரி வழக்கத்தை மாற்றக் கூடாது. அந்த முடிவெடுத்த பின்னர், அவர் கொஞ்சம் நிம்மதியானார். தான் உருவாக்கி, ஸ்கான் செய்து முடித்த போலி ஆவணங்களை அழிப்பது பற்றி அவர் மிகவும் எச்சரிக்கையாக இருந்திருக்கிறார். போலிச் செய்திகளை உருவாக்கிப் பொய்யைப் பரப்புவதற்கே வாழ்வைச் செலவழிக்கும் அவர் தன் மனதுக்குள் திரும்பத் திரும்ப ஒரு இசைத் தொனி போலச் சொல்லிக் கொள்வது இதுதான், ஏதோ ஒன்று நடந்ததென்று செய்தியாக ஒரு முறை அறிவித்து விட்டால், அது நடக்கவில்லை என்று நிரூபிப்பது மிகக் கடினம். குறிப்பாக பெரும்பாலான வரலாற்று ஆவணக் கிடங்குகளும், செய்தித்தாள் நூலகங்களும் நகரத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கையில், சில நேரம் உவெஸ்கா அல்லது காஸ்டெயோன் போன்ற தொலை தூர இடங்களில் வைக்கப்பட்டிருக்கையில், நிரூபணம் தேடுவது கடினம்.

காருகுறிச்சியைத் தேடி… (3)

This entry is part 3 of 3 in the series காருகுறிச்சி

செவல்ல நடந்த கல்யாணக் கச்சேரி நினைவுக்கு வருது. அண்ணாச்சி கல்யாணத்துல வாசிக்கறாங்கன்னா முதல்லையே அதை நடத்தறவங்ககிட்ட கேட்டுக்குவாங்க. தூரத்துல இருந்து வரவங்களுக்கு சாப்பாடு போட முடியுமா-னு தெரிஞ்சுகிட்டு, முடியாத சூழல்ல அவாளே ஏற்பாடு பண்ணிடுவாங்க. செவல்ல நடந்த கல்யாணத்துல, “அதெல்லாம் யாரு வந்தாலும் பார்த்துக்கலாம்”-னு கல்யாண வீட்டுக்காரங்க சொல்லி இருக்காங்க. கச்சேரி முடிஞ்சதும் அவங்க சொன்ன மாதிரி நடந்துக்கலை. ரசிகர்களைக் கொஞ்சம் மரியாதைக் குறைவா நடத்திட்டாங்க. அண்ணாச்சிக்கு அதைப் பார்த்துட்டு சரியான கோவம். உடனே சந்திர விலாஸுக்குச் சொல்லி அத்தனை பேருக்கும் தன் செலவுல சாப்பாடு ஏற்பாடு செஞ்சாங்க. அப்புறம் எவ்வளவு கெஞ்சியும் கல்யாண வீட்டுல சாப்பிட மறுத்துட்டாங்க.

வில்வபுரத்து வீடு

சுண்ணாம்புச் சுவர், நாட்டு ஓடு இதமாய் தரும் குளிர்ச்சியை விட ஒரு காற்றுப் பதனாக்கி தரும் அதீத குளிர்ச்சிக்கு பழக்கப்பட்டவர்கள் வேறு என்ன செய்வார்கள். பழக்கூழில் கூட சர்க்கரையும் பனிச் சீவலும் சேர்த்து உண்ணப் பழகியவர்கள் வேறெப்படி யோசிப்பார்கள். எனக்குத்தான் ஒவ்வவில்லை. சந்தனக்கட்டைக்கு எதற்கு சவ்வாது பூச்சு? செந்தாழம்பூவுக்கு எதற்கு வாசனைத் திரவிய குளியல்?

பள்ளத்தாக்கு மனிதர்கள்

மிக் அந்தக் கரி எண்ணெயைக் காயத்தின் மேல் ஊற்றி காயத்தைச் சுத்தம் செய்தார், பிறகு தன் மேல் சட்டையால் முன்னங்கையைச் சுற்றினார், அதை ஒட்டும் நாடாவால் சுற்றிக் கட்டினார். ஏதோ, தையல் போடத் தேவை இருக்கவில்லை. மிக் இதற்கு முன்பு ஒரு தரம் சுடப்பட்டிருக்கிறார், மூக்கு உடைபட்டிருக்கிறது, விலா எலும்புகள் உடைந்திருக்கின்றன, காலில் ஒரு வெடிகுண்டின் உலோகத் துண்டு எங்கோ புதைந்திருக்கிறது, ஆனால் கழுதைக் கடி இப்போதுதான் முதல் தடவை.

மருந்தில்லா மருத்துவத்தின் மயக்கும் கதை

மயக்கம் தெளியும் சமயம் இரு தரப்பினரின் காதிலும் கேட்கும்படி உண்மையான அறுவை சிகிச்சையில் என்ன செய்யப்பட்டதோ அதை மருத்துவர்களும் உதவி செய்த செவிலியர்களும் கூறுவர். போலி அறுவை சிகிச்சையும் நிஜ அறுவை சிகிச்சையும் ஒரே அளவு குணத்தை உண்டு பண்ணியது என்ற ஆச்சரியமான முடிவு இந்த ஆய்வின் மூலமாகத் தெரியவந்தது.

மின்சக்தி விமானங்கள்

ஏறத்தாழ உலகில் பறக்கும் விமானங்களில் பாதி விமானங்கள், 800 கி.மீ.க்கும் குறைவான போக்குவரத்தில்தான் பயன்படுத்தப்படுகின்றன. மின்கலன்கள் 2025க்குள் இந்த ஆற்றலை அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமை

அம்மா, குழந்தையை கவிதாவிடம் தந்து விட்டு எழுந்தாள். கால்கள் மரத்துப் போயிருந்தன. அடியெடுத்து வைக்க சிரமமாயிருந்தது. நின்று சுவரைப் பிடித்துக் கொண்டு கொல்லைப்புறம் போனாள்.

வயிறு முட்டிற்று. தாமதித்தால் புடவை நனைந்துவிடும் அபாயத்திலிருந்தது. அப்படியே சாக்கடையருகில் ஒதுங்கி கால் கழுவிக் கொண்டு உள்ளே வந்தாள். மறுநாள் கவிதாவின் ஒன்றுவிட்ட நாத்தனார் குழந்தையைப் பார்க்க வருவதாக இருந்தாள்.

அவளுக்குப் பாயசத்துடன் சாப்பாடு போட வேண்டும். மறுநாளைக்கான வேலைகள் நினைவில் வந்து உடம்பை அசத்தின.

அவள், அழிவற்றவள்

‘ஒரு கதையை எனக்கு முடிக்கத் தெரியவில்லை என்ற எண்ணம் வந்தால் இதைத்தான் நான் செய்கிறேன். முடிவில்லாத எதுவும், தொடர்ந்து இருக்க அனுமதிக்கக் கூடாது.எது முடிவற்றதோ அது தன்னைத் தானே கொன்று கொள்ளும். அக்கா, வாழ்க்கை முடிவற்ற சோகம்! உலகம் கூட ஒரு சோகம்தான்.சோகம் மட்டும்தான் உண்மை.உண்மையின் முகம் பார்க்கப் பயப்படுபவர்கள் பேனாவைக் கையிலெடுக்கக் கூடாது.

வ. அதியமான் கவிதைகள்

ஒளிவிடும்
சின்னஞ்சிறு
கூழாங்கல்லும்
இருள் விழுங்கும்
பெருங்குன்றும்
குளிரக் குளிர
புனலாடி
அமர்ந்திருப்பது
ஒரே கரையில் தான்

ஆக்கா

ஓரக் கண்ணால் ஒவ்வொரு நிரையாகப் பார்த்து வரும் போதே ஒரு நிரையில் இருந்து சற்றுப் பிரிந்து அவனைப் பார்த்து மெல்லிய சிரிப்போடு ஆக்கா கடந்து சென்றாள். அது வெள்ளை நிறம் கொண்ட ஆட்டுப்பட்டியில் ஒரு ஆடு தலையை உயர்த்திப் பார்ப்பதுபோல் இருந்தது.
கடிதங்கள் வாசித்து புரிந்து கொள்வதை விட புன்னகைகள் மூலம் அவள் பேச நினைப்பதை விரைவாகப் புரிந்து கொள்ளும் திறன் அவனுக்கு புதிதாக வாய்த்திருப்பதாக உணர்ந்தான். ஒவ்வொரு சந்திப்பிலும் அது புதுப்புது அர்த்தங்களை அவனுக்குத் தந்து கொண்டிருந்தது. வேகமானதும், மூன்றாம் நபரின் உதவி இல்லாத ஒன்றாகவும் அவனுக்கு வாலயமானது.

தாச்சி

விதிச்சத மாத்தணும்… ஆம்பளைங்க போல பொம்மனாட்டிகளும் எல்லா வேலையும் செய்யணும்… – உள்ளுக்குள் ஊறிய ஆளுமை உணர்வோடு கிசுகிசுத்தாள் செண்பகத்தம்மா.

ஆம்பளைங்க செய்யுற வேலையெல்லாம் செய்யுறது பொறவும்மா… மொதல்ல இப்ப ஆம்பிளைங்க போனது மாதிரி, வெட்ட வெளியில பொம்பளைங்களால ஒண்ணுக்கு போக முடியலையே… முடிஞ்சா அதுக்கு ஏதாவது பண்ணுங்க … – உடல் அனுபவிக்கும் துயரம் என் வாயின் வழி வார்த்தைகளாய் வெளியேறியது.

புவிக்கோளின் அடுக்குகளும் ஆய்வு முறைகளும்

This entry is part 2 of 7 in the series பூமிக்கோள்

மேரிலண்ட் பல்கலையின் நில அதிர்வு ஆய்வாளரான வேத்ரன் லேகிச் (Vedran Lekic) கூறுவது: “நாம் கோள்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் பூமிக்குள் சென்று தொழில் நுட்ப ரீதியாக அதன் உள்ளமைப்பை புரிந்து கொள்வது, விண்வெளிக்கு செல்வதை விட, உண்மையில் பன்மடங்கு கடினமானது.”

கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’

அயோத்யா சர்ச்சை பலமுறை எழுப்பப்பட்டாலும் முடிவான விவரத்தைச் சொல்ல மறுக்கிறது இப்புத்தகம். ஒருகாலத்தில் இது இந்துக்களின் கோவில் என்ற பாத்தியதைக்குச் சட்டபூர்வமான ஆதாரங்கள் உள்ளன என்ற புதிய விவரம் எங்குமே தலைகாட்டவில்லை.

பய வியாபாரியா ஹிட்ச்காக்?

ஆனால் நியாயமாகப் பார்த்தால், கேலிக்கு உள்ளாக்கும் சம்பவங்களை நோக்கினால் அவற்றிலிருந்து ஹிட்ச்காக் தன்னையும் விட்டு வைக்கவில்லை. ஹிட்ச்காக்கின் கோமாளித்தனம் பற்றி விளக்கம் தேடுவதானால், அது உலகம் அவரைக் கேலி செய்வதற்கு எதிரான ஒரு தற்காப்பு உத்தி என்று சொல்லலாம் என்கிறார் பான்வில். அவருக்குத் தன் பெரும் இடுப்பின் அளவு, உருண்டைத் தலை, மூன்று மடிப்புடன் தொங்கும் தாடை ஆகியன குறித்துச் சுயக் கூச்சம் நிறைய இருந்தது.

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

அந்த அறையில் இருந்தவனை
புத்தகத்தின் வழியே
வெளி உலகிற்கு
அழைத்துச் சென்ற அது
அவனை மீண்டும்
அவ்வறைக்கே அழைத்து வந்து
எழுதச் சொல்லியது

குங்குமப்பூவே!

கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் சிறு  நகர்களில், மகப்பேறு  மருத்துவமனைகளுக்கும் கிளினிக்குகள்  அருகிலிருக்கும் சின்னச் சின்ன மருந்தகங்களில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமச்சிமிழ்  போன்ற  சிறு   பெட்டிகளில்  700 லிருந்து 1000 ரூபாய்கள் வரை கொடுத்து சில கிராம்  குங்குமப்பூ வாங்கி செல்லுவதை  சாதாரணமாகக்  காணலாம். உண்மையில்  இந்த ஏழை எளியவர்கள் வாங்கிச் “குங்குமப்பூவே!”

மொபைல் தொடர்பாடல் வரலாறு-2G

2G இலக்க முறை செல்லுலார் தர நிலைகளைப் பொருத்தவரை, ஒவ்வொரு பெரிய பொருளாதாரமும் தனித்தனி தர நிலைகளை உருவாக்கிக் கொண்டன. உலகின் பெரும்பாலான மொபைல் செல்லுலார் இலக்கமுறை 2G அமைப்புகள் கீழ்க்கண்ட தரநிலைகளில் ஒன்றைப் பயன்படுத்துகின்றன:
ஐரோப்பாவின் GSM 900, GSM1800; TDMA தொழில்நுட்பம்
வட அமெரிக்காவின் IS-95A CDMA சிஸ்டம் ; CDMA தொழில் நுட்பம்
வட அமெரிக்காவின் IS-136(D-AMPS) சிஸ்டம் ;TDMA தொழில் நுட்பம்
ஜப்பானின் PDC (Personal Digital Cellular) சிஸ்டம்

விஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து

This entry is part 21 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

டிடிடி எப்படி வேலை செய்கிறது? தெளிக்கப்பட்ட பூச்சியின் மூளையில் உள்ள நரம்பணுவின் சோடியம் சானல்களை, சகட்டு மேனிக்குத் திறந்துவிடும். இதனால், பூச்சியின் பல கோடி நரம்பணுக்கள் ஒரே சமயத்தில் இயங்கத் தொடங்க, அதன் விளைவாக வலிப்பு ஏற்பட்டுப் பூச்சி இறந்துவிடும்.

திரை விலகிய அறையின் அதிசயங்கள்

கண்ணாடி இழைகளின் நெடுஞ்சாலைகளில்
முட்டி மோதிக்கொண்டு
முடிவற்று அலைந்த
பதில் வரப்பெறாத
அஞ்சல்களின் சமிக்ஞைகள்,
உருவம் பெற்று
பேச ஆரம்பித்து விட்டன
ஒலிபெருக்கியில்.

சரவணன் அபி கவிதைகள்

சலசலத்து விரையும் ஆற்றின் போக்கில்
ஓரிடம் சிக்குண்டு
மேனியுரு மாறும் கல்லின்
போக்கற்ற தீர்வில்
அமைந்திருக்கிறது
நகர்ந்து செல்வதும்
நிலைகொண்டு எதிர்நிற்பதற்குமான
தெளிவு

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே

1970ஆம் ஆண்டிலிருந்து 21 மாதிரி நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளின்படி, ஆக்கிரமிக்கும் இனங்கள் 70% அதிகரித்துள்ளன என்ற கவலைக்குரிய செய்தியை IPBES சொல்கிறது. ஃப்ராங்க் கோர்ஷாம் சொல்கிறார்: “உலக வர்த்தகம் இத்தகைய ஆக்கிரமிக்கும் இனங்களை புதிதாகக் கொண்டு வருகிறது. மாசு மிகுந்த சுற்றுச் சூழலோ, அவைகள் நன்கு செழித்து வளரக் களம் அமைக்கிறது.’ அவர் மேலும் சொல்கிறார்: “செல்லப் பிராணிகளான பூனைகள் செய்யும் அழிப்பும் அதிகம்; பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் இருக்கும் இவை, பறவைகள், ஊர்வன போன்றவற்றிற்குப் பெரும் யமனாக உருவெடுத்துள்ளன.”