காருகுறிச்சியைத் தேடி…

This entry is part 1 of 3 in the series காருகுறிச்சி

“ஏழாம் திருநாளைக்கு…”, என்று சொல்ல ஆரம்பித்துப் பேசமுடியாமல் திக்கி நிறுத்தினார் அந்தப் பெரியவர். அவர் வாயிலிருந்து வார்த்தை வராமல் நின்றதும் அவர் உடலில் ஓர் அலை எழுந்தது. வயிற்றிலிருந்து எழுந்த அந்த அலை, மார்பில் படர்ந்து, கழுத்தில் ஏறி, அவர் தலையைச் சிலுப்பி இறுதியாய் அவர் கைகள் இரண்டையும் உதறச் செய்யவைத்து அடங்கியது.

குதிரை மரம்

திருமணமான புதிதில் பூசினாற் போலிருந்தாள். உப்பிய கன்னங்கள். எடுப்பான பற்கள் பார்க்க லட்சணமாகவே இருந்தாள். சரக்குகளை வாங்கிவரும் மாலை வேளைகளில் சிறிய இடை நெளிய புன்னகையுடன் உள்ளிருந்து ஓடிவந்து கைகளில் வாங்கிக் கொள்வாள்.

பரோபகாரம் – நாட்டுக்கு நாடு

This entry is part 5 of 5 in the series பரோபகாரம்

தனி குடிமக்கள், நிறுவனங்கள், மஹா கோடீஸ்வரர்கள் போன்றவர்களை எல்லாம் தாண்டி, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு உதவுவது உருப்படியான செயல்முறையா? அந்த உதவிகளால் நாடுகள் பெரிதாக முன்னேறுகின்றனவா அல்லது அந்த உதவும் கரங்களையே நம்பி உருப்படாமல் போகின்றனவா என்றொரு பூதாகாரமான கேள்வி பரோபகார திட்டங்களை அலசும் வட்டங்களில் உலாவிக்கொண்டே இருக்கும்.

முகமூடி

‘’ஏங்க்கா இப்படி அலட்டிக்கறே? அதுதான் உன்னோட செல்லப் பிள்ளை – அந்த ’முகமூடி’ கிட்டே குசுகுசுன்னு இந்தியிலே பேசி பக்காவா ஏதோ ஏற்பாடு பண்ணி வச்சிருக்கே போல இருக்கே.”

வேணு தயாநிதி கவிதைகள்

பனி பூத்து 
பனி கொழித்து
உப்பளம் போல் 
நிறைந்து விட்ட
நடைபாதையை தாண்டி
சாலையின் ஓரத்தில்
தியானித்து நிற்கும், 
பிடுங்கி 
தலைகீழாய் நட்டது போல் 
இலையின்றி நிற்கும் 
பிர்ச் மரம்.

கோவிட்-19 கால மனநலமும் இனநலமும்

தீநுண்மித் தொற்று காலத்தைப் பொருத்தவரை, அதுவரை என்ன மன நலனில் மூத்தோர் இருந்தார்களோ, அதைக் காப்பாற்றிக்கொள்ளவே அரும்பாடுபட வேண்டியதாக இருக்கிறது.

காடு

This entry is part 1 of 2 in the series காடு

பொங்கல் விடுமுறை 5 நாட்கள் என்று அறிவிக்கப்பட்டதும், கர்நாடகாவின் கபினி வனப்பகுதியின் ‘’Ghost’’ என அழைக்கப்படும் கருஞ்சிறுத்தையை காண வேண்டுமென பலநாட்களாக காத்துக்கொண்டிருக்கும்  கானுயிர் புகைப்படக்காரனான இளைய மகன் தருணின் பொருட்டும் அங்கிருக்கும் காட்டுமரங்களின் முதலைமரப்பட்டைகளையும் ( Crocodile bark ), அங்கு அதிகமாக வளரும் தந்தப்பாலை செடிகளையும் “காடு”

நேனெந்து வெதுகுதுரா

அருணாசலத்துக்கு வேம்புவின்மேல் இருந்த அபிமானத்தால் சம்பாவனையே இல்லாமல் கச்சேரி செய்வான். ஆனால் கச்சேரி நடக்க இன்னும் எத்தனையோ செலவுகள் உண்டே. மேடை போட வேண்டும். ஜனங்கள் உட்கார்ந்து கேட்க பந்தல் போட வேண்டும். ஒலிப்பெருக்கிகளுக்குச் சொல்லவேண்டும்.

ஒரு பெண் பற்றிய சொற்சித்திரம்

பின் காலைமுதல் அந்திவரை அவருடைய கைராட்டினத்தின் அருகில் அமர்ந்து எந்நேரமும் பாட்டி, உதடுகள் முணுமுணுக்க நூல் நூற்றுக்கொண்டே இருப்பார். மதியம் சிட்டுகுருவிகளுக்கு உணவிடுவதற்காக மட்டுந்தான் நூல் நூற்கும் வேலையிலிருந்து சற்று விலகியிருப்பார்.

மின்னல் சங்கேதம் – 3

This entry is part 3 of 12 in the series மின்னல் சங்கேதம்

கங்காசரண் இதுபோன்ற வர்த்தமானங்களில் நிபுணன். இதுபோன்ற மறைமுக உத்தி அதிகம் பயன் தரக்கூடியது என்று அவனுக்குத் தெரியும். அதனால்தான், அனங்கா, “அவங்களே முடிவு செஞ்சுக்கட்டும்னு ஏன் விட்டீங்க?” என்று கேட்டபோது அர்த்தபூர்வமாகப் புன்னகை செய்தபடி, “தெரிஞ்சுதான் சொன்னேன். நானா கேட்டிருந்தா நாலு அணா கேட்டிருப்பேன். இப்போ அவங்களாத் தரும்போது எட்டணா தருவாங்க. பொறுத்திருந்து பார்.” என்றான்.

ஏழு கடல், ஏழு மலை தாண்டி

அதுமட்டுமல்லாமல், சாபோர் இனம் உருவாகும் முன், ஒரு இடைப்பட்ட நிலைப்பாட்டில் குகா என்றொரு இனம் இருந்தது என்றும் பதிந்திருக்கிறார். அந்தப்பதிவில், சாபோர் இனத்திற்கு முந்தைய இனமான குகாவின் மரபணுவில் அந்த வைரஸுக்கான எதிர்ப்பு சக்தி இருந்ததாகவும், குறித்திருக்கிறார். ஆனால், அந்த குகா இனத்தை அழித்ததே இப்போது வழக்கிலிருக்கும் சாபோர் இனம் தான் என்று சரித்திரம் சொல்கிறது. இந்தப் பின்னணியில், அந்த முந்தைய இனத்தை தற்போதைய சாபோர் இனமான நாம் அழித்திருக்கவே கூடாது

வ. அதியமான் கவிதைகள்

ஒவ்வொரு
அதிகாலையிலும்
அதிசுத்தமாய்
கழுவி முடிக்கும்
என் கப்பரைக்கு
ஒவ்வொரு
அதிகாலையிலும்
எங்கோ ஓர் உலை
கொதிக்கிறது

யார் பைத்தியம்?

அருளானந்தம் யோசனை செய்தார். ஒரு வாரத்தில் இந்த மனிதர் வேறு எதாவது நியமன அழைப்பை ஒப்புக்கொண்டுவிட்டால்? தேர்வுக்குழுவை இன்று மதியமே கூட்டிவிட வேண்டியதுதான்.

கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – ஏழாம் அத்தியாயம்

என் பார்வையில், பா.ஜ.க. இந்தியத்தை ஆதரிக்கும் அடிமட்டக் கட்சிக்காரர்களைத் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டும் உபயோகப்படுத்திக்கொண்டு, பதவியேற்றபின், அவர்களை எச்சில் இலையைப்போல் தள்ளி வைத்துவிடுகின்றது. பொருளாதார முன்னேற்றங்களைப் பிரபலப்படுத்துவதிலும் நிறைவேற்றுவதிலும் மதச்சார்பற்றவர்களைக் குஷிப்படுத்துவதிலுமே குறியாக இருக்கிறது.

அந்த மீன் நடந்தே சென்றது

பூகிக்கு தான் பின்னோக்கி நீந்த கற்றுக்கொடுத்ததாகவும், டூகி இரவு நேரங்களில் நிறம் மாறும் என்றும் கதைகளை நீட்டிக்கொண்டே சென்றாள். நாளாக நாளாக அவள் கதை பரப்பு நீண்டு கொண்டே சென்றது. பெட் ஷாப்களில் தரப்படும் மீன் உணவில், கோல்ட் பிஷ்களுக்கு பச்சை நிற உணவே மிகவும் பிடிக்கும், மற்றதை தொடாது எனவும் பரப்புரை செய்வாள்.

அறிவு

வார்டில் நர்சுக்கு உதவி செய்ய ரம்பா என்று பெயரிட்டு ரோபோவை அமர்த்தினோம். அதுவும் ஒரே வாரத்தில் நிறைய வேலைகளை கற்றுக் கொண்டது. தொடாமலேயே நெற்றியில் டெம்பரேசர் பார்த்தது. எழுதி வைத்த சார்டைப் பார்த்து வேளைக்கு மருந்து எடுத்துக் கொடுத்தது.

டூரிங் டாக்கிஸ்

போஸ்டர் பார்ப்பதென்பது படத்தின் ட்ரெய்லர் பார்ப்பதற்கு சமம். இப்போதுபோல் கண்ணீர் அஞ்சலி, இமயம் சரிந்தது, …போஸ்டரென்றால் அது சினிமா போஸ்டர் மட்டும்தான்.

பூமுள் கதைகள் – கமலதேவியின் குருதியுறவு நூலை முன்வைத்து

இத்தொகுப்பை வாசிக்கத் தொடங்கும்போதே ஈர்ப்பது இதன் மொழி. ஒருவித மாயத்திரை விரிக்கும் புகை மூட்டம்போல. இல்லையில்லை, அது போன்ற வெம்மையில்லை. பனிமூட்டம்போல மென் தண்மையுடன் தழுவி மயக்குகிறது.

இருப்பு

வார்த்தையற்ற மெளனமும்
காட்சியற்ற சூன்யமும்
முற்றிலும் என்னை நிறைத்திருக்க
நினைவற்ற நிலை அது.
அங்கே காலம் ஒரு பொருட்டல்ல.
யுகம் யுகமாய் நானங்கே
இருந்திருக்கிறேன்.

ஆனந்த் குமார் கவிதைகள்

ஒழுங்குபடுத்தினேன்
ஒவ்வொரு பொருளையும்
அதனதன் இடத்தில்.
சிறு இடைவெளி போதும்
ஒவ்வொன்றும்
அதனதன் தனிமையில்.
சரியான இடத்தில் அமர்ந்தவுடன்
ஒவ்வொரு பொருளும்
அமைதி கொள்கிறது.

இடவெளிக் கணினி

அவர் தன் படுக்கை அறையிலிருந்து சமையல்கூடத்திற்குச் செல்கையில் சுற்றுப்புற வெப்பநிலை சீராக்கப்பட்டு, விளக்குகளும் ஒளிர்கின்றன. அவர் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி, பாதையில் குறுக்கிடுகையில் சக்கர நாற்காலியின் வேகம் குறைகிறது. அவர் சமையல் அறைக்கு வந்தவுடன் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து உணவினை எடுத்துக்கொள்ளவும் அடுப்பினை இயக்கத் தகுந்தாற்போலவும், உணவு உண்ண வசதியாகவும் மேஜை இயங்குகிறது.

மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1

This entry is part 19 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

அதாவது, இவருடைய பார்வையில் சிகரெட்டில் உள்ள நிகோடின் தேவை. ஆனால், சிகரெட்டின் ஏனைய ரசாயனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த மற்ற ரசாயனங்கள் நுரையீரல் புற்றுநோய் விளைவிப்பதால், அவற்றிலிருந்து விடுபடவேண்டும். ஹானின் 2001 புரிதலே, இந்த மின் சிகரெட்டின் உருவாக்கப் பின்னணி.

புவிக்கோளின் நான்கு வடமுனைகள்

This entry is part 1 of 7 in the series பூமிக்கோள்

நிலவியல் பதிவுகளின்படி, புவிக்கோளின் நெடு வரலாற்றில் இதுவரை 183 முறை புவியின் காந்தப்புலம் தலைகீழாக மாறியிருக்கிறது; வெகு அண்மைய மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்டது. சூரியனின் காந்தப் புலத்திலும் இதைப்போன்ற தலைகீழ் மாற்றங்கள் நேர்வதுண்டு.